Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் ஊரடங்கு கடுமையாக்கப்பட்ட போதும் வீடு புகுந்த கொள்ளையர்கள்! மோப்ப நாய்களுடன் களத்தில் பொலிஸார்

Featured Replies

ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள வேளையிலும் வீடு புகுந்து கொள்ளையிட்ட சம்பவம் யாழ்.சாவகச்சேரியில் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

யாழ்.சாவகச்சேரி மண்டுவில் பிரதேசத்தில் இன்று அதிகாலை 2மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.

வீட்டை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள் வயோதிபர்களான கணவன்- மனைவியை தாக்கி அவர்கள் அணிந்திருந்த 5 பவுண் நகைகள் மற்றும் வீட்டிலிருந்த 16 ஆயிரம் ரூபா பணம் ஆகியவற்றைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.

படுகாயமடைந்த வயோதிபர்கள் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் சாவகச்சேரி போலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

https://www.ibctamil.com/srilanka/80/140937

  • தொடங்கியவர்

திருகோணமலையில் அபிவிருத்தி வங்கியில் திருட்டு: ஊரடங்கு வேளையில் கைவரிசை!

In இலங்கை     April 10, 2020 10:24 am GMT     0 Comments     1163     by : Litharsan

திருகோணமலை சிங்கபுரவில் அமைந்துள்ள சமுர்த்தி வங்கி உடைக்கப்பட்டு அங்கிருந்த உடமைகள் திருடப்பட்டுள்ளன.

நடவடிக்கைகளுக்காக வங்கி இன்று (வெள்ளிக்கிழமை) திறக்கவந்தபோது வங்கியின் வாசல் கதவு மற்றும் பின்புற ஜன்னல் கண்ணாடி உடைக்கைப்பட்டிருந்ததை அடுத்து பொலிஸாரிடம் முறையிட்டதாக வங்கி முகாமையாளர் தெரிவித்தார்.

வங்கியில் இருந்த மின்விசிறி மற்றும் வைக்கப்பட்டிருந்த பரிசுப் பொருட்கள் என்பன களவாடப்பட்டதுடன் பணம் வைக்கும் பாதுகாப்புப் பெட்டகமும் சேதப்படுத்தப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.

மேலும், இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை உப்புவெளி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை, திருகோணமலை 5ஆம் கட்டைப் பகுதியில் சிறு கடையொன்றும் உடைக்கப்பட்டு களவாடப்பட்டுள்ளதுடன் பிரபல சிங்கள பாடசாலை ஒன்றிலும் திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரிடம் முறைப்பாடு பதிவாகியுள்ளது.

http://athavannews.com/திருகோணமலையில்-அபிவிருத/

  • கருத்துக்கள உறவுகள்

கள்ளரே காவல் காக்கினம் போல. அவங்களை  கொரோனவும் ஒண்டும் செய்யாது. 

  • கருத்துக்கள உறவுகள்

எனக்குத்தெரிந்த ஒரு யாழ் வைத்தியர் தற்போது கொழும்பு வைத்தியசாலையில் பனி புரிகிறார். அவரது அப்பா யாழ் வீட்டில் தனியாக வசிக்கிறார் . மனைவி சில வருடங்களுக்கு முன் இறந்து போய்விட்டா. ஊரடங்கு தளர்த்திய வேளை 30 நிமிடம் கடைக்கு போய் சாமான்கள் வாங்கி கொண்டு வராமல் கள்ளர் வீட்டுக்குள் புகுந்து குறிப்பிட்ட அளவு பணம் மற்றும் சில விலை உயர்ந்த பொருட்களை திருடிக்கொண்டு போய்  விட்டார்கள். நடுத்தர குடும்பம். கஸ்டப்பட்டு உழைத்து சேமித்த பணம் பொருள் எல்லாம் 30 நிமிடத்தில் போனதையிட்டு மிகவும் மனமுடைந்து இருக்கிறார் பெரியவர். 

மானிப்பாயில் அதிகாலை வேளை மர்ம நபர்களின் அராஜகம்!

மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மானிப்பாய் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தனிமையில் வசித்து வந்த 70 வயதுடைய மூதாட்டியின் வீட்டினுள்ளேயே இன்று அதிகாலை 2.00 மணியளவில் கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

தனிமையில் இருந்த மூதாட்டியின் வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள் அவரது வாயை மூடி காதில் இருந்த தோடு மற்றும் கையில் அணிந்திருந்த வளையல்கள் என்பவற்றை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.

இவ்வாறு கொள்ளையிடப்பட்ட நகை 06 பவுண் என மூதாட்டி தெரிவித்துள்ளார். இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மானிப்பாய் பொலிசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://www.ibctamil.com/srilanka/80/140996

யாழில் ஊரடங்கு வேளையில் தொடரும் பாரிய குற்றச்செயல்! பொலிஸாரிடம் சிக்கிய பல லட்சம் பெறுமதி

யாழ்ப்பாணத்தில் ஊரடங்கு வேளையில் திருட்டில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் ஏழு பேர் யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பிரிவினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களிடமிருந்து 6 லட்சம் ரூபாய் மதிக்கத்தக்க திருடப்பட்ட பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

ஊரடங்கு சட்டம் நடைமுறையில் உள்ள வேளையில் யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றுக்குள் கடந்த வாரம் புகுந்த திருடர்கள், அங்கு பொருத்தப்பட்டிருந்த சி.சி.ரிவி கமராக்கள், மின்பம்பி மற்றும் இலத்திரனியல் பொருள்களை திருடிச் சென்றுள்ளனர்.

இந்தத் திருட்டுச் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. யாழ்ப்பான குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் ஆய்வாளர் முனசிங்க தலைமையிலான அணியினர் நடாத்திய விசாரணையின் போது நாவற்குழி பகுதியைச் சேர்ந்த 25 வயது மதிக்கத்தக்க ஒருவர் கைது செய்யப்பட்டார்.

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட தொடர் விசாரணையின் அடிப்படையில் கடந்த வாரம் யாழ்ப்பாணம் சோமசுந்தரம் வீதியில் வயோதிபர் ஒருவர் தனது ஓய்வூதிய பணத்தை எடுப்பதற்காக யாழ்ப்பாணம் நகரத்துக்கு வருகை தந்த போது அவரின் வீட்டுக்குள் புகுந்து தொலைபேசி மற்றும் அவருடைய கடன் அட்டை போன்ற பெறுமதியான பொருள்களை திருடிய குற்றச்சாட்டில் மேலும் மூவர் கைது செய்யப்பட்டனர்.

தொடர் விசாரணைகளில் 7 பேர் யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் நாவற்குழியைச் சேர்ந்தவர்கள். களவாடப்பட்ட 6 லட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் சந்தேக நபர்களிடமிருந்து யாழ்ப்பாணம் குற்றத் தடுப்பு பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.

சந்தேக நபர்கள் விசாரணைகளின் பின்னர் நீதிவான் முன்னிலையில் முற்படுத்தப்படுவர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

https://www.ibctamil.com/srilanka/80/141181

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.