Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மட்டக்களப்பிலிருந்து வெளி மாவட்டங்களுக்கு நெல் கொண்டு செல்லத் தடை !

Featured Replies

மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து வேறு மாவட்டங்களுக்கு நெல் கொண்டு செல்ல இன்றிலிருந்து தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அரிசி ஆலைகள் திறந்து இயங்க வேண்டும் என மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா தெரிவித்தனர்.

அரசினால் அனைத்து அரிசி ஆலைகளும் அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தப்பட்டதையடுத்து மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அனைத்து அரிசி ஆலை உரிமையாளர்களையும் சந்திக்கும் விசேட கூட்டம் இன்று (13) மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா தலைமையில் இடம்பெற்றது.

அரிசி தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் பட்டினியினால் பாதிக்கப்படாமலிருக்க அனைத்து அரிசி ஆலைகளும் திறக்கப்பட்டு இயங்க வேண்டும் எனவும், மாவட்டத்தினுடைய அரிசித் தேவையினைப் பூர்த்தி செய்த பின்னரே பிற மாவட்டங்களுக்கு அரிசி விநியோகிக்க வேண்டும் எனவும், அரசி கட்டுப்பாட்டு விலைக்கே விற்பனை செய்ய வேண்டும் எனவும் அரசாங்க அதிபர் அரிசி ஆலை உரிமையாளர்களைக் கேட்டுக் கொண்டார்.

அத்துடன் மாவட்டத்தின் எந்த இடத்திலிருந்தும் வியாபாரிகள் அரிசியினைக் கொள்வனவு செய்யமுடியும் எனவும் அதற்கான வசதிகள் செய்துதரப்படும் எனவும் அரிசி ஆலை உரிமையாளர்கள் இலாப நோக்கமற்று மக்களுக்கு சேவை வழங்க முன்வரவேண்டுமெனவும் அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இவ்விசேட கூட்டத்தில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. சுதர்சினி ஸ்ரீகாந்த், காணிப் பிரிவு மேலதிக அரசாங்க அதிபர் நவரூபரஞ்சினி முகுந்தன், மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பொலிஸ்மாஅதிபர் லக்ஸ்ரீ விஜயசேன, இரானுவத்தின் 231 ஆவது படைப்பரிவின் கட்டளை அதிகாரி கேனல் ஜனக பல்லேகும்புர, நுகர்வோர் அதிகார சபை மட்டக்களப்பு மாவட்ட பொறுப்பதிகாரியும் கிழக்கு மாகாண உதவிப்பணிப்பாளருமான ஆர்.எப். அன்வர் சதாத் மற்றும் மாவட்டத்தின் அரிசி ஆலை உரிமையாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

https://www.virakesari.lk/article/79896

  • கருத்துக்கள உறவுகள்

சிறிமா காலத்தை நினைவூட்டுது.

  • தொடங்கியவர்
Just now, சுவைப்பிரியன் said:

சிறிமா காலத்தை நினைவூட்டுது.

இது ஒரு நாட்டிற்குள்  பல நாடுகள் உள்ளது போன்று தெரிகிறதே 🙂 

13 hours ago, ampanai said:

அரிசி தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் பட்டினியினால் பாதிக்கப்படாமலிருக்க அனைத்து அரிசி ஆலைகளும் திறக்கப்பட்டு இயங்க வேண்டும் எனவும், மாவட்டத்தினுடைய அரிசித் தேவையினைப் பூர்த்தி செய்த பின்னரே பிற மாவட்டங்களுக்கு அரிசி விநியோகிக்க வேண்டும் எனவும், அரசி கட்டுப்பாட்டு விலைக்கே விற்பனை செய்ய வேண்டும் எனவும் அரசாங்க அதிபர் அரிசி ஆலை உரிமையாளர்களைக் கேட்டுக் கொண்டார்.

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 hours ago, சுவைப்பிரியன் said:

சிறிமா காலத்தை நினைவூட்டுது.

அந்த சீசனிலைதான் சம்பா அரிசி எக்கச்சக்கமாய் யாழ்ப்பாணத்துக்கு கடத்தப்பட்டது.....ஞாபகம் இருக்கோ 😁

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

அந்த சீசனிலைதான் சம்பா அரிசி எக்கச்சக்கமாய் யாழ்ப்பாணத்துக்கு கடத்தப்பட்டது.....ஞாபகம் இருக்கோ 😁

நீங்க வேற அரிசில பியர் தயாரிக்கிறார்களாம் என்ற கதையும் போகுது  எனக்கு அல்ககோல் பற்றி அதிகம் தெரியாது கள்ளை தவிர😀

மட்டக்களப்பிலிருந்து கோட்டாபயவுக்கு பறந்த கடிதம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் மாறி மாறி வரும் அரசாங்க அதிபர்கள் மற்றும் பிரதேச செயலாளர்கள் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வரும் ஊடகவியலாளர்கள் மீது அவதூறு குற்றச்சாட்டுக்களை சுமத்துவதும், ஊடகவியலாளர்களை பொலிஸ் மற்றும் சில மாபியாக்களை, வைத்து அச்சுறுத்தும் செயற்பாடுகளை முன்னெடுப்பதும் நிறுத்தப்பட வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் கோரிக்கை விடுத்துள்ளது,

இது தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தினால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கடந்த 12ம் திகதி ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவில் பிரதேச செயலகத்தினால் வழங்கப்பட்ட அரிசி மூடைகளில் காலாவதியான திகதி இருப்பதாக எமது ஊடகவியலாளர் ஒருவருக்கு கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி அது குறித்து மக்கள் கருத்துக்களை பதிவு செய்ததன் பின்னர் ஏறாவூர் பற்று பிரதேச செயலாளரிடம் அது குறித்து குறிப்பிட்ட ஊடகவியலாளர் கருத்து கேட்டபோது இது குறித்து எனக்கு தெரியாது நீங்கள் அரசாங்க அதிபரிடம் தான் கேட்க வேண்டும் என்று கூறியதற்கு அமைய குறித்த விடயம் தொடர்பாக அரசாங்க அதிபரிடம் நேரில் சென்று பேசிய பின்னர் அவர் குறித்த செய்தி தொடர்பாக ஊடகத்திற்கு கருத்து கூற மறுத்தார்.

பின்னர் குறித்த ஊடகம் ஏறாவூர் பற்று பிரதேச செயலாளரை தொடர்பு கொண்டு கேட்ட போது அவர் இவ்வாறான அரிசி மூடைகள் மாவட்டம் பூராகவும் வழங்கப்பட்டுள்ளது எனவும் இது இரண்டு நாட்களுக்கு முன்னரே பொதி செய்யப்பட்ட புதிய அரிசி என கருத்து கூறியதன் பின்னரே குறித்த செய்தியை குறிப்பிட்ட ஊடக நிறுவனம் வெளியிட்டுள்ளது.

ஆனால் இந்த செய்தி வெளியாகியதன் பின்னர் அரசாங்க அதிபர் உட்பட ஏறாவூர் பற்று பிரதேச செயலாளரின் பினாமிகள் சிலர் ஊடகவியலாளரை அச்சுறுத்தியதுடன் செய்தி சேகரித்து அனுப்பிய ஊடகவியலாளர் குறித்து அவரது ஊடக நிறுவனத்திடம் பல அவதூறான பொய்யான சேறு பூசும் கருத்துக்களை கூறியுள்ளனர்.

இதைவிட செங்கலடி பிரதேச ஐக்கிய தேசியக் கட்சி முக்கியஸ்தர் ஒருவர் ஊடகவியலாளர்கள் வெளிக்கொண்டு வரும் செய்திகளை பொய் என்று கூறி ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் மக்களிடம் சென்று அவர்களை அச்சுறுத்தி நீங்கள் ஏன் அப்படி சொன்னீர்கள்? நீங்கள் ஏன் மீடியாவுக்கு கொடுத்தீர்கள் உங்களுக்கு சமுர்த்தியை வெட்டுவார்கள், அரசாங்க உதவி கிடைக்காது என்று கூறி அவர்களது கருத்தை வாபஸ் பெறச் சொல்லி அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.

இவருக்கு ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் ஆதரவு வழங்கி வருகிறார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக அதிகாரிகளின் அசமந்தப் போக்கு மற்றும் ஊழல் குறித்து செய்திகள் வெளிவரும் போது அது குறித்து கவனம் செலுத்தாத மாவட்ட நிர்வாகம் அந்த செய்திகளை பிரசுரிக்கும் ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீது சேறு பூசுவதும் பாதுகாப்பு தரப்பினரை வைத்து அச்சுறுத்துவதுமாக உள்ளது.

உண்மையில் அரிசி மூடைகளில் காலாவதியான திகதி இடப்பட்டிருந்தமை குற்றமே. ஒரு அவசர கால நிலையில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட அரிசி மூடைகளில் காலாவதியான திகதி இருந்தால் அது குறித்து செய்தி வெளியிட வேண்டிய ஊடகவியலாளர்களின் பொறுப்பு.

அதுவும் பத்து வருடங்களுக்கு முந்திய உரப் பைகளில் புதிய அரிசி பொதி செய்து விநியோகம் செய்துவிட்டு அதனை யாருக்கு கூறாமல் விநியோகம் செய்தது மாவட்ட அரச நிர்வாகத்தின் தவறு.

எனவே அரிசி மூடைகளை வெளியே பார்ப்பவர்களுக்கு அதற்குள் பழைய அரிசி இருக்கிறதா? புதிய அரிசி இருக்கிறதா என்று எப்படி தெரியும்.

இது குறித்து சம்பவ இடத்திற்கு சென்ற அந்த பகுதி பொதுச் சுகாதார பரிசோதகருக்கே தெரியவில்லை. இவ்வாறான நிலையில் மாவட்ட அரச நிர்வாகம் தாங்கள் விட்ட தவறை மறைப்பதற்காக ஊடகவியலாளர்கள் மீது சேறு பூசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இதனை மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் வன்மையாக கண்டிக்கிறது.

குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் அரிசி மூடைகள் பொதி செய்ய உரப் பைகள் இல்லை என்று கூறி சுமார் பத்து வருடங்களுக்கு முந்திய பைகளில் புதிய அரிசிகளை பொதி செய்து யாருக்கும் தெரியாமல் நிவாரணமாக விநியோகம் செய்ததை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

அதைவிட அது குறித்து செய்தி வெளியிட்ட ஊடகவியலாளரை அச்சுறுத்துவதும் அரசாங்க அதிபரின் அனுமதி இல்லாமல் நீங்கள் ஏன் செய்தி எடுத்தீர்கள் என்று ஊடகவியலாளர்களை அடக்க முயற்சிப்பதை ஒரு போதும் ஏற்க முடியாது இதனை நாம் வன்மையாக கண்டிக்கிறோம்.

கடந்த காலங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சில பிரதேச செயலாளர்கள் அரசாங்கம் வழங்கியுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி ஊடகவியலாளர்களை பல்வேறு வகையில் அச்சுறுத்தி வருகின்றனர். இது குறித்து புதிய அரசாங்கம் கண்டுகொள்ளாமல் உள்ளமை இலங்கையின் ஊடக சுதந்திரத்தை மீண்டும் கேள்விக்குறியாக்கியுள்ளது.

குறிப்பாக ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் அவர்களின் நடவடிக்கை காரணமாக பாதிக்கப்படும் பொதுமக்கள் குறித்து எந்த செய்திகளும் வெளியே வரக்கூடாது என்பதற்காக மாவட்டத்தில் அவர் குறித்த கருத்துக்களை வெளியிடும் பொதுமக்கள் அந்த கருத்துக்களை வெளியிடும் ஊடகவியலாளர்கள் ஊடக நிறுவனங்கள் மீது அரசாங்கம் வழங்கிய அதிகாரங்களை தவறாக பொலிசாரை கொண்டு ஊடகவியலாளர்களை அச்சுறுத்தி வருகிறார்.

இவர் ஊடகவியலாளர்களையும் ஊடக நிறுவனங்களையும் மிரட்டுவதற்கு முக நூல்களில் ஊடகவியலாளர்கள் குறித்து அவதூறு பரப்புவதற்கு சில மாபியாக்களையும் அரசியல்வாதிகளையும் வைத்துள்ளார்.

இது குறித்து பல தடவைகள் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்காத அரச நிர்வாகம். ஊடகவியலாளர்கள் மீது சேறு பூசுவதும் அச்சுறுத்துவதும் கண்டிக்கத்தக்கது.

இது குறித்து ஜனாதிபதி கவனம் செலுத்த வேண்டும் என்று மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

https://www.ibctamil.com/srilanka/80/141220?ref=ibctamil-recommendation

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.