Jump to content
  • 0

சர்வதேச சாரதி அனுமதி பத்திரத்துடன் இலங்கையில் வாகனம்,மோட்டார்சைக்கள் ஓட்டி இருக்கிறீர்களா?


ஈழப்பிரியன்

Question

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் கள உறவுகளே
2015  2017 களில் இலங்கை போனபோது கார் மோட்டார்சைக்கிள் ஓடுவதற்கு என்று சர்வதேச அனுமதிப்பத்திரமாக AAA க்கு 15$ கட்டி எடுத்துப் போயிருந்தேன்.

இலங்கையிலும் வீட்டில் இரண்டு மோட்டார் சைக்கிள் நிற்பதால் எனக்கு தேவையான நேரங்களில் எங்கும் போகவரக் கூடியவாறு இருந்தது.
அனேகமாக அங்கு நின்ற நாட்களில் ஒவ்வொரு நாளும் ஓடித் திரிந்திருக்கறேன்.
ஒரேஒரு நாள் கோப்பாய் மானிப்பாய் ஊடாக பண்டத்தரிப்பு போகும் போது சங்கானையில் பொலிஸ் மறித்தார்கள்.ஏற்கனவே பலரையும் மறித்து வைத்து சோதனை செய்து கொண்டிருந்தார்கள்.
என்னை மறித்ததும் ஓரமாக நிற்பாட்டி தலைக் கவசத்தை கழற்றி மனைவியிடம் கொடுத்துவிட்டு ஆவணங்களை எடுக்க தயாராகும் போது ஐயா ஐயா நீங்கள் போங்கோ என்றார்கள்.புறப்பட்டு போகும் போது தான் மனைவி கெல்மட்டைக் கழற்றியதால் தலையைப் பார்த்துட்டு போகச் சொல்லியிருக்கிறாங்கள் என்றா.எனக்கும் அப்பதான் என்நிலை விளங்கியது.அதுவும் நல்லதாகவே இருந்தது.


அண்மையில் ஒரு நண்பருடன் பேசும்போது இலங்கை போய்வந்த விடயங்கள் பற்றி பேசும்போது அங்குள்ள போக்குவரத்து பிரச்சனை பற்றியும் பேசினார்.எனக்கு சாரதிபத்திரம் மாற்றிக் கொண்டு வந்தபடியால் பிரச்சனை இல்லை என்றேன்.ஆ அது எப்படி செய்தநீ?நியூயோர்க்கில் உள்ள அலுவலகத்தில் 2 படமும் கொண்டு போக உடனேயே மாற்றித் தருகிறார்கள் என்றேன்.அட மடையா எனக்கு அது தெரியாதா?

கொழும்பில கொண்டு போய் மாற்றிநியா என்றார்.இல்லை என்றதும் நல்லகாலம் தப்பிவிட்டாய் கொழும்பில கொண்டு போய் மாற்றினால்த் தான் அங்கு வாகனமோ மோட்டார்சைக்கிளோ ஓடலாம் என்றார்.எனக்கு அடிநுனி விழங்கவில்லை.அவருக்கும் சரியான விழக்கம் இல்லை.ஆனாலும் கொழும்பில் இந்த சாரதிப்பத்திரம் காட்டி அவர்கள் தரும் சாரதிப்பத்திரத்துடன் ஓடி திரும்பவும் அதை அவர்களிடமே ஒப்படைத்துவிட்டே வரவேண்டும் என்றார்.

இதுவரை இதைப்பற்றி எதுவுமே அறிந்திருக்கவில்லை என்பதால் இங்கு யாராவது இப்படி சாரதிபத்திரம் மாற்றியிருக்கிறீர்களா?
எனது நண்பன் சொன்னது சரியான தகவல் என்றால் எப்படி எங்கு மாற்ற வேண்டும் என்பதை விளக்கமாக யாரும் எழுத முடியுமா?

Link to comment
Share on other sites

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இங்கு எழுதியிருப்பது பெரிதாக விழங்கவில்லை.நான் எனது சுவிஸ் சாரதிப்பத்திரத்தை வைத்து இலங்கை சாரதிப்பத்திரம் எடுத்துள்ளேன் .அதற்க்கு மெடிக்கல் எடுக்க வேணும்.8 வருடம் இலகு ரக வாகணங்களுக்கு மட்டும் தருவார்கள்.8 வருடம் முடிய மீண்டும் மெடிக்கல் எடுத்தால் அடுத்த 8வருடம்.இதெல்லாம் இலங்கை குடியுரிமை உள்ளவரகளுக்கு என்று நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மன்னார் - நானாட்டான் கமநல சேவைகள் பிரிவில் உள்ள வஞ்சியன்குளம் கமக்காரர் அமைப்புக்கு உட்பட்ட வஞ்சியக் குளக்கண்டத்தில் இன்று வெள்ளிக்கிழமை (26) காலை பயிர்களுக்கு ட்ரோன் மூலம் திரவ உரம் விசிறும் பணிகள் இடம்பெற்றன. அந்த வகையில், MI 07 இனத்தைச் சேர்ந்த பயறு செய்கைக்கான திரவ உரம் ட்ரோன் மூலம் விசிறப்பட்டது.  ட்ரோன் மூலம் திரவ உரம் விசிறும் பணிகள் இடம்பெற்றபோது மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன், கமநல அபிவிருத்தி  உதவி ஆணையர், விவசாய மாகாண பிரதி பணிப்பாளர், கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர், கமநல மற்றும் விவசாய திணைக்கள உத்தியோகத்தர்கள், விவசாயிகள் என பலர் களத்தில் இருந்தனர். மன்னார் - நானாட்டானில் பயிர்களுக்கு ட்ரோன் மூலம் திரவ உரம் விசிறப்பட்டது!  | Virakesari.lk
    • நெடுமாறன் அய்யா எமக்காக செய்தவற்றில் சில 1982ஆம் ஆண்டு இலங்கையில் தமிழ் நூல்கள் அதிகம் இருந்த யாழ் நூலகம் தீக்கிரையாக்கப்பட்டபோது, அவ்விடம் சென்று அதனை ஆவணப்படுத்தி, அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆரிடம் அறிக்கை சமர்ப்பித்தார். அதன்பின், எம்.ஜி.ஆர், இலங்கையில் தமிழர் போராட்டம் குறித்து அன்றைய பிரதமர் இந்திரா காந்தியிடம் பேசினார் என்பது வரலாறு. மேலும், 1985ஆம் ஆண்டு, சிங்களப் படைகளால் பாதிக்கப்பட்ட இலங்கை தமிழ்ப்பகுதிகளை, ரகசியமாக பயணம் செய்து காணொலியாகப் பதிந்து, உலகம் முழுக்க தெரியப்படுத்தினார். அதேபோல், 1991ஆம் ஆண்டு இந்திய அமைதிப்படை இலங்கையில் செய்த கொடூரங்களை, ஆவணப்படுத்தி, அன்றைய பிரதமர் வி.பி.சிங்கிடம் இதுகுறித்து பேசி,அவரை திரும்பப்பெற வலியுறுத்தினார். இப்படி தொடர்ந்து ஈழ ஆதரவுப் போராட்டங்களில் ஈடுபட்டார், பழநெடுமாறன்.  நாங்கள் என்ன செய்தோம்.  போராடமால் வெளிநாடு சென்று இணையத்தில் மட்டுமே போராடுகிறோம்.  2010 தேர்தலில் எம்மை அழித்த சரத் பொன்சேகாவுக்கு யாழில் எம்மவர்கள் வழங்கிய அதிக வாக்குகள்.  ஆனால் நாங்கள் தமிழக அரசியல்வாதிகளைப் பார்த்து துரோகிகள் என்கிறோம். இது வேடிக்கை இல்லையா?
    • இப்படி உறைக்க சொல்லுங்கோ பாஸ். அப்பதான் எனக்கும் உறைக்கும். ஏனென்றால், நானும் இப்படித்தான் நினைச்சுக் கொண்டு இருக்கின்றேன். என் மகள் உறைப்பு சாப்பிடவே மாட்டார், ஆனால் மகன் மகளுக்கு நேர் எதிர். இதனால், அவனுக்கு "எந்த சாப்பாட்டைக் கொடுத்தாலும், சாப்பிடுவான்' என்று ஒரே நற்சான்றிதழ் கொடுப்பதுடன், அவன் விரும்பிச் சாப்பிடும் சாப்பாடுகளில், உறைப்பை தூக்கலாக போட்டுத்தான் சமைப்பது. நானும் கடும் உறைப்பு சாப்பிட்டுக் கொண்டு இருந்தனார் - இந்த வருடம் பெப்ரவரி வரைக்கும். பெப் இல் வந்த நிமோனியாவுக்கு எடுத்த  நுண்ணுயிர் எதிர்ப்பியால் / Antibiotics , மிளகாய்த் தூள் கொஞ்சம் கூடப் போட்டு சமைத்தால்.... பிச்சுக் கொண்டு போகுது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.