Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொரோனாவின் பிடியில் சிக்கி போராடி உயிர்நீர்த்த தமிழர்;பிரித்தானியாவில் அரங்கேறிய சோகம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ben.jpg

 

டாக்ஸி சாரதிகள் கொரோனாவினால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிவித்து, வீட்டு உரிமையாளர் வீட்டை விட்டு வெளியேற்றியிருந்த நிலையில், கொரொனா தாக்கத்துடன் காருக்குள் தங்கியிருந்து,தன்னுடைய இறுதிநேரத்தை மிகவும் மோசமான நிலையில் கழித்து உயிரிழந்த தமிழர் ஒருவரின் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்தியாவின் பெங்களூரை பூர்வீகமாக கொண்ட ராஜேஷ் ஜெயசீலன் என்பவரே கடந்த 11ஆம் திகதி உயிரிழந்துள்ளார். மேற்கு லண்டன் பகுதியில் வசித்த இவர், உபேர் டக்ஸி ஓட்டுனராக பணிபுரிந்து வந்துள்ளார்.

அவர் ஹீத்ரோ விமான நிலையத்திற்கு பயணிகளை அழைத்துச் சென்ற சிறிது நேரத்திலேயே கொரோனா வைரஸின் அறிகுறிகளை உணர்ந்துள்ளார். பின்னர், 11ஆம் திகதி நோர்த்விக் பார்க் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.

அவரது மனைவி, இரண்டு பிள்ளைகள் பெங்களூரிலேயே வசித்து வருகிறார்கள். சுமார் 10 வருடங்களுக்கு முன்பு இங்கிலாந்திற்கு குடிபெயர்ந்தார்.

அவர் இறப்பதற்கு நான்கு மணி நேரத்திற்கு முன்பு மருத்துவமனை படுக்கையில் இருந்தபடி தனது குடும்பம் மற்றும் நண்பர்களுடன் பேசியுள்ளார்.

அவரது நண்பரான சுனில் குமார் தெரிவித்தபோது,

“அந்த பயணத்திற்கு அடுத்தடுத்த நாட்களில் கொரோனா அறிகுறிகளை ஜெயசீலன் உணர்ந்தார். ஏப்ரல் 3 ஆம் திகதி அவர் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.டாக்ஸி சாரதியாக ஜெயசீலன் பணிபுரிவதால், வைரஸால் பாதிக்கப்படுவதற்கான அதிக வாய்ப்பு இருப்பதாக அவர் குடியிருந்த வீட்டின் உரிமையாளர் தெரிவித்து, அவரை வீட்டை விட்டு வெளியேற்றியுள்ளார். இறப்பதற்கு இரண்டு வாரங்களின் முன்னர்தான் அவர் தனது பிளாட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.

உடனடியாக புதிய வீட்டைக் கண்டுபிடிக்க முடியாமல் ஓரிரு நாட்கள் அவர் தனது காரில் தூங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அது ஹாரோவிலும் தங்கியிருந்தார்“ என்றார்.

 

கோவிட் -19 இன் அறிகுறிகளைக் காட்டிய பின்னர், ஜெயசீலன் வேலைக்குத் திரும்பவில்லை. சுயமாக தனிமைப்படுத்தப்பட்டார். பிரித்தானிய சுகாதார சேவைகள் இந்த நடைமுறையைத்தான் பரிந்துரைக்கிறது.

“ஜெயசீலனின் நிலை மோசமடைந்தது. அவரது வாழ்க்கையின் கடைசி வாரங்களில் நிறைய போராடினார். சமைக்கவோ அல்லது வெளியே செல்லவோ அவருக்கு சக்தியிருக்கவில்லை“ என்று குமார் கூறினார்.

அவர் உண்மையில் ஒரு வாரம் பட்டினி கிடந்தார். அவர் கஷ்டப்பட்டார். ஏப்ரல் 3 ஆம் திகதி, அவர் சிரமப்பட்டு மூச்சு விடுவதில் சிரமம் இருந்ததால் நோர்த்விக் பார்க் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அனுமதிக்கப்பட்டார். அவர் குணமடைந்து விடுவார் என்று நம்பினார். ஆனால் ஏப்ரல் 11 அன்று மருத்துவர்கள் நம்பிக்கையை இழந்து வருவதாக மருத்துவமனையால் எனக்குத் தெரிவிக்கப்பட்டது.

அவர் மருத்துவமனை படுக்கையிலிருந்து தனது மனைவியுடன் பேசினார். நானும் அவருடன் பேசினேன். ஆனால் நான்கு மணி நேரம் கழித்து அவர் இறந்துவிட்டார் என்பதை தெரிவிக்க மருத்துவமனையிலிருந்து எனக்கு அழைப்பு வந்தது

http://thinakkural.lk/article/38957

 

Edited by உடையார்

தமிழனுக்கு என ஒரு நாடு இல்லை. ஊரெல்லாம் உலகெல்லாம் கோவிட் 19னால் இறக்கும் ஒரே இனம் நாமாகத்தான் இருக்கின்றோம்.  

ஆழ்ந்த அனுதாபங்கள் !

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்

 

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்.....!

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, ampanai said:

தமிழனுக்கு என ஒரு நாடு இல்லை. ஊரெல்லாம் உலகெல்லாம் கோவிட் 19னால் இறக்கும் ஒரே இனம் நாமாகத்தான் இருக்கின்றோம்.  

ஒருவர் தமிழராக இருப்பதற்கும், இதுக்கும் என்ன சம்பந்தம், அம்பனை? மேலும் இவர் பெங்களூருகாரர்!

கர்நாடகர் இல்லை, தமிழர் என்று எப்படி கண்டுபிடித்தீர்கள்? (கர்நாடகர் என்றால் மரணிக்கலாம் என்று சொல்லவில்லை. நீங்கள் சொன்ன காரணம் புரியவில்லை.)

அவர் மிக தாமதமாக வைத்திய சாலைக்கு போயுள்ளார் என தெரிகின்றது.

போதாக்குறைக்கு, குளிரில், காரினுள்ளேயே இருந்துள்ளார். 

வீட்டினுள் தனிமை படுத்திக்க கொள்ளுங்கள் என்று சொல்வது வீடு இருப்பவர்களுக்கு.

வீடு இல்லாத இவர் வைத்தியசாலைக்குக் போய் நிலைமையினை சொல்லி இருந்தால், அங்கேயே தங்கி, தப்பி இருப்பார்.

Edited by Nathamuni

1 hour ago, Nathamuni said:

ஒருவர் தமிழராக இருப்பதற்கும், இதுக்கும் என்ன சம்பந்தம், அம்பனை? மேலும் இவர் பெங்களூருகாரர்!

கர்நாடகர் இல்லை, தமிழர் என்று எப்படி கண்டுபிடித்தீர்கள்? (கர்நாடகர் என்றால் மரணிக்கலாம் என்று சொல்லவில்லை. நீங்கள் சொன்ன காரணம் புரியவில்லை.)

இணைக்கப்பட்ட செய்தியில் இவர் தமிழர் என்று உள்ளது : "டாக்ஸி சாரதிகள் கொரோனாவினால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிவித்து, வீட்டு உரிமையாளர் வீட்டை விட்டு வெளியேற்றியிருந்த நிலையில், கொரொனா தாக்கத்துடன் காருக்குள் தங்கியிருந்து,தன்னுடைய இறுதிநேரத்தை மிகவும் மோசமான நிலையில் கழித்து உயிரிழந்த தமிழர் ஒருவரின் தகவல்கள் வெளியாகியுள்ளது" . 

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, ampanai said:

இணைக்கப்பட்ட செய்தியில் இவர் தமிழர் என்று உள்ளது : "டாக்ஸி சாரதிகள் கொரோனாவினால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிவித்து, வீட்டு உரிமையாளர் வீட்டை விட்டு வெளியேற்றியிருந்த நிலையில், கொரொனா தாக்கத்துடன் காருக்குள் தங்கியிருந்து,தன்னுடைய இறுதிநேரத்தை மிகவும் மோசமான நிலையில் கழித்து உயிரிழந்த தமிழர் ஒருவரின் தகவல்கள் வெளியாகியுள்ளது" . 

அதுதான் சொல்கிறேன்.

வீட்டுக்காரர் ஆதங்கம் புரிகிறது.... ஏனைய வாடகைக்காரர்களையும், தனது குடும்பத்தினையும் பாதுகாக்க அவர் அவ்வாறு செய்திருக்கலாம்.

இவருக்கு போக இடமில்லை, உடல்நலமும் இல்லை என்றால், நேரே வைத்தியசாலைக்குக் போய் இருக்க வேண்டுமல்லவா. ஒரு வாரம் வேறு பசியாய் இருந்திருக்கிறார்...  குடும்பம் வேறு.... என்ன ஒரு முட்டாள் தனம்.

அதுக்கும் தமிழராக இருப்பதற்கும் சம்பந்தம் இல்லை என்று சொல்லவந்தேன்.

நான் இங்கே இதனை பதிவு செய்ய காரணம், இன்னுமொருவர் இத்தகைய முடாள்தனத்தினை செய்யக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு தான் அன்றி, உங்கள் கருத்தை மறுப்பதற்காக அல்ல. 

3 minutes ago, Nathamuni said:

அதுதான் சொல்கிறேன்.

வீட்டுக்காரர் ஆதங்கம் புரிகிறது.... ஏனைய வாடகைக்காரர்களையும், தனது குடும்பத்தினையும் பாதுகாக்க அவர் அவ்வாறு செய்திருக்கலாம்.

இவருக்கு போக இடமில்லை, உடல்நலமும் இல்லை என்றால், நேரே வைத்தியசாலைக்குக் போய் இருக்க வேண்டுமல்லவா. ஒரு வாரம் வேறு பசியாய் இருந்திருக்கிறார்...  குடும்பம் வேறு.... என்ன ஒரு முட்டாள் தனம்.

அதுக்கும் தமிழராக இருப்பதற்கும் சம்பந்தம் இல்லை என்று சொல்லவந்தேன்.

நான் இங்கே இதனை பதிவு செய்ய காரணம், இன்னுமொருவர் இத்தகைய முடாள்தனத்தினை செய்யக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு தான் அன்றி, உங்கள் கருத்தை மறுப்பதற்காக அல்ல. 

தனிமையில் இருக்கும் பலரும் உழைப்பில் அதீத கவனம் எடுப்பதால், தமது சொந்த நலனை அதிகம் கவனிப்பதில்லை. 

இதனால், அவர்களில் பலர் வைத்தியசாலையை நாடுவதே இறுதிக்கட்டத்தில். 

நாட்டில் குடும்பமாக வாழ்பவர்களுக்கு அந்த நிலை இருக்காது, அவர்களுக்கு குடும்பம் நண்பர்கள் என ஒரு வட்டம் இருக்கும்.  

தமிழர்கள் இவ்வாறு தனிமையில் உலகம் முழுவதும் பல ஆயிரங்கள் வாழுகின்றனர். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.