Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கோரோனோ ஆபத்தை நீக்கி தேர்தலை பற்றி சிந்திக்குக.!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா ஆபத்தை நீக்கி தேர்தலைப் பற்றி சிந்திக்குக : C.V. விக்னேஸ்வரன்.

VICHI.jpg

கொரோனா ஆபத்தை நீக்கி இயன்றளவு விரைவாக சகஜநிலையை ஏற்படுத்திய பின்னரே தேர்தலைப் பற்றி சிந்திக்க வேண்டும் வட மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் C.V. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

பாரளுமன்றத் தேர்தலை மே 23 ஆம் திகதி நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்திருப்பதாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் விடுத்த அறிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மக்களின் வாழ்வுக்கும் உயிருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் கொரோனா அச்சுறுத்தலை முற்றாக நீக்குவதற்கு முன்பாக தேர்தலை நடத்தக்கூடாது எனவும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் C.V. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற பதவிகளோ, அரசியலோ தற்போது முக்கியமல்லவெனவும் மக்களின் பாதுகாப்பே முக்கியமானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்றத்தில் ஜனாதிபதியின் கட்சி சிறுபான்மையாக இருப்பதாலும் பெரும்பான்மை எதிர்க்கட்சியின் உட்பூசல் காரணமாகவும் தேர்தலை உடனே நடத்த வேண்டும் என்ற அரசியல் காரணங்களே ஜனாதிபதியை வழிநடத்துகின்ற வகையில் காணப்படுவதாகவும் அவரது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவசர அவசரமாக அரசியல் காரணங்களுக்காக தேர்தலை முன்னெடுத்தால் வாக்களிக்கும் மக்களின் தொகை வெகுவாகக் குறைவடைவதுடன் படையினரின் பங்கு தேர்தலின்போது பயங்கரமாக இயங்கும் எனவும் தேர்தல் முடிந்தாலும் அதன் சட்டவலு கேள்விக்குறியாகிவிடும் எனவும் C.V. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

ஒருவருக்கொருவர் தள்ளி நில்லுங்கள் என மக்களுக்கு இதுகாறும் கூறிய அரசாங்கம் வாக்காளர்களை ஆறடி தூரத்தில் இராணுவத்தை கொண்டு நிறுத்தப்போகின்றதா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

அத்துடன், தேர்தலின் பின்னரான பாராளுமன்ற வெற்றியையும் கொரோனா வைரசின் அதியுச்ச பெருக்கத்தையும் ஒரே தருணத்தில் முகம்கொடுக்க அரசாங்கம் ஆயத்தமாகின்றதா எனவும் C.V. விக்னேஸ்வரனின் அறிக்கையில் கேள்வி எழுப்பியுள்ளார்.

http://www.vanakkamlondon.com/கொரோனா-ஆபத்தை-நீக்கி-தேர/

9 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

கொரோனா ஆபத்தை நீக்கி இயன்றளவு விரைவாக சகஜநிலையை ஏற்படுத்திய பின்னரே தேர்தலைப் பற்றி சிந்திக்க வேண்டும் வட மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் C.V. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இது உங்க நிலைப்பாடா? உங்க கட்சியின் நிலைப்பாடா? உங்க கூட்டு அணியின் நிலைப்பாடா?

நாட்டினை நாசமாக்க எம்மால் இடமளிக்க முடியாது – வைத்தியர் ஹரித அழுத்கே

In இலங்கை     April 18, 2020 12:52 pm GMT     0 Comments     1217     by : Benitlas

012-8.jpg

நாட்டினை நாசமாக எம்மால் இடமளிக்க முடியாது என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அழுத்கே தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள விசேட செவ்வி ஒன்றிலேயே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “கொரோனா தோற்றுநோய் குறித்த பரிசோதனைகள் முடிந்த பின்னர் அதன் பெறுபேறுகளின் அடிப்படையிலேயே அடுத்த வாரம் நாட்டில் ஊரடங்கை தளர்க்க முடியுமா அல்லது மேலும் சில நாட்களுக்கு ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட வேண்டுமா என்பதை கூற முடியும்.

இப்போது வரையில் கொரோனா தொற்றாலர்களாக இருக்கலாம் என சந்தேகத்தில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டவர்கள் சகலரும் பரிசோதிக்கப்பட்டு அவர்கள் நோயாளர்கலா அல்லது ஆரோக்கியமான நிலையில் உள்ளவர்களா என கண்டறியப்பட்டு, அவ்வாறு அவர்கள் நோயார்கள் என்றால் அவர்கள் இலங்கையில் எந்தெந்த பகுதிகளில் இருந்தவர்கள், அவர்களுடன் நெருக்கமான தொடர்புகளை பேணிய நபர்கள் யார் என்பதை கண்டறிந்து, படிப்படியாக நாட்டினை விடுவிக்க நடவடிக்கை எடுக்க முடியும்.

நாளாந்தம் செய்யும் பரிசோதனைகளில் தொற்றுநோயாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர். ஆகவே பரிசோதனைகளை ஒருபோதும் கைவிட முடியாத நிலைமை உள்ளது.

ஆகவே உடனடியாக நாட்டில் ஊரடங்கு சட்டத்தை நீக்கி மக்களை ஒன்றுகூட இடமளிக்க கூடாது என்பதே எமது நிலைப்பாடாக உள்ளது. இதனை நாம் அரசாங்கத்திற்கு தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றோம். நாட்டினை நாசமாக்க எம்மால் இடமளிக்க முடியாது

http://athavannews.com/நாட்டினை-நாசமாக்க-எம்மால/

ஐயா இரவு பகலாக அந்த கதிரையை பற்றித்தான் சிந்திக்கிறார் போல। பாவம் கடைசி காலத்திலாவது சந்தோசமா இருந்துவிட்டு போகட்டும்।

தேர்தல் நடத்தப்படுவது தொடர்பில் மகிந்தவுக்கு சம்பந்தன் அனுப்பிய முக்கிய கடிதம்

தேசிய மற்றும் சர்வதேச சுகாதார நிபுணர்கள் நிலைமை பாதுகாப்பான நிலையை அடைந்திருக்கிறது என்பதை உறுதிசெய்யும் வரை தேர்தலை நடாத்துவது ஆபத்தானதும், பொறுப்பற்றதுமான செயலாகும் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, சாடியிருக்கிறது.

கொவிட் - 19 கொரோனா வைரஸ் பரவல் நெருக்கடி நிலையில் பொதுத்தேர்தலை நடாத்துவது தொடர்பில் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் வகையிலான கடிதமொன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனால் நேற்றைய தினம் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அந்த கடிதத்திலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

தற்போதைய சூழ்நிலையில் பொதுத்தேர்தலை நடத்துவதில் மிக முக்கியமாக அவதானம் செலுத்தப்பட வேண்டிய விடயங்கள் குறித்து சுட்டிக்காட்ட விரும்புகிறோம். நாடொன்றில் ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதற்கு உரிய வேளையில் தேர்தலை நடாத்துவது மிகவும் அவசியமாகும். ஆனால் மிகவும் நெருக்கடிமிக்க சில சந்தர்ப்பங்களில் மாத்திரம் இது விதிவிலக்காக அமையலாம்.

முழு உலகையும் போன்று இலங்கையும் அத்தகையதொரு நெருக்கடி மிக்க, தவிர்க்க முடியாத சூழ்நிலையையே எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறது. உலகலாவிய வைரஸ் தொற்றுநோய் மக்கள் சுகாதாரம், பாதுகாப்பு ஆகியவற்றில் மாத்திரமன்றி, உலகப்பொருளாதாரத்திலும் பாரிய நெருக்கடியைத் தோற்றுவித்திருக்கிறது.

மக்கள் அதிகமாக ஒன்றுகூடும் இடங்களில் கொரோனா வைரஸ் பரவும் சாத்தியப்பாடு இருப்பதாகவும், அவற்றைத் தவிர்க்குமாறும் சுகாதார நிபுணர்கள் தொடர்ந்து எச்சரிக்கின்றனர்.

இதனைக் கட்டுப்படுத்துவதற்காக ஏற்கனவே பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட நிலையில், அதனைத் தொடர வேண்டிய தேவையுள்ளது. தற்போதைய சூழ்நிலையில் நாட்டுமக்களில் சுகாதார நலனும், பாதுகாப்புமே முன்னிலைப்படுத்தப்பட வேண்டும்.

எதிர்வரும் சில மாதங்களுக்கு வைரஸ் பரவல் அச்சுறுத்தல் நிலை தொடரலாம் என எச்சரிக்கப்பட்டிருக்கும் நிலையிலும், இத்தகைய பாரிய தொற்றுநோய்க்கு மத்தியில் தேர்தலை நடாத்துவது ஒரு செயற்திறனான ஜனநாயக நடவடிக்கையாக அமையாது.

இப்போது தேர்தலை நடாத்துவது பல்வேறு வகையிலும் மக்களின் நலனுக்குப் பாதிப்பாகவே அமையும்.

தேசிய மற்றும் சர்வதேச சுகாதார நிபுணர்கள் நிலைமை சுமுகமானதும், பாதுகாப்பானதுமான நிலையை அடைந்திருக்கிறது என்பதை உறுதிசெய்யும் வரை தேர்தலை நடாத்துவது ஆபத்தானதும், பொறுப்பற்றதுமான செயலாகும். எனவே அத்தகைய உறுதிப்பாட்டின் பின்னரே தேர்தலுக்கான திகதி நிர்ணயிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://www.ibctamil.com/srilanka/80/141479?ref=home-imp-flag

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் வெளியிடப்பட்ட கருத்து தவறானது ஸ்ரீகாந்தா

‘திகதி குறிப்பிடாமல் தேர்தலை ஒத்தி வைக்கும் அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு இல்லை’ என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் வெளியிடப்பட்ட கருத்து தவறானது என தமிழ் தேசிய கட்சியின் தலைவர் ஸ்ரீகாந்தா சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “பொதுத்தேர்தலினை விரைவில் நடாத்தியாக வேண்டும் என்ற நிலைப்பாட்டிற்கு ஆதரவாக, பொதுத்தேர்தலினை ஒத்திவைக்கின்ற அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவிற்கு இல்லை என்கிற கருத்து அரசாங்க தரப்பிலே நேற்றைய தினம் முன்வைக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல்கள் சட்டத்தின் 24 வது பிரிவின் மூன்றாவது உப பிரிவு இதற்கு ஆதரவாக சுட்டிக்காட்டப்பட்டிருகின்றது. நாடாளுமன்ற தேர்தல் சட்டத்தின் 24வது பிரிவின் மூன்றாவது உப பிரிவினை எடுத்துப்பார்த்தால் தேர்தலுக்கு திகதி குறிப்பிடப்பட்டு நெருக்கடி நிலைமை அல்லது எதிர்பார்க்கப்பட்டிராத சூழ்நிலைகள் காரணமாக திட்டமிடப்பட்ட படி அறிவிக்கப்பட்ட திகதியில் தேர்தலினை நடாத்த முடியவில்லை என்றால் தேர்தல் ஆணையாளர் மீண்டும் பிரகடனத்தின் மூலம் தேர்தலுக்கு இன்னுமொரு திகதியினை நியமிக்க முடியும் என்றுதான் கூறப்பட்டிருக்கின்றது.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

http://athavannews.com/பிரதமர்-மஹிந்த-ராஜபக்ஷவி/

1 hour ago, போல் said:

நாடாளுமன்ற தேர்தல்கள் சட்டத்தின் 24 வது பிரிவின் மூன்றாவது உப பிரிவு இதற்கு ஆதரவாக சுட்டிக்காட்டப்பட்டிருகின்றது. நாடாளுமன்ற தேர்தல் சட்டத்தின் 24வது பிரிவின் மூன்றாவது உப பிரிவினை எடுத்துப்பார்த்தால் தேர்தலுக்கு திகதி குறிப்பிடப்பட்டு நெருக்கடி நிலைமை அல்லது எதிர்பார்க்கப்பட்டிராத சூழ்நிலைகள் காரணமாக திட்டமிடப்பட்ட படி அறிவிக்கப்பட்ட திகதியில் தேர்தலினை நடாத்த முடியவில்லை என்றால் தேர்தல் ஆணையாளர் மீண்டும் பிரகடனத்தின் மூலம் தேர்தலுக்கு இன்னுமொரு திகதியினை நியமிக்க முடியும் என்றுதான் கூறப்பட்டிருக்கின்றது.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

வரும் நாட்களில் கொரோனாவின் தாக்கம், பட்டினி அதிகரித்து மக்கள் வெறுப்பு அதிகரிக்கும்.

மகிந்த அண்ட் கோ இதை நன்கு அறியும். பின்னர் அது தேர்தல் வெற்றியையும் பாதிக்கும்.

எனவே தான், இந்த அவசரம். தேர்தலை நடாத்தி அதனால் தொற்று அதிகரித்தால்? என்பதை விட ஆட்சியும்  பாராளுமன்றத்தில் 3/2 பெரும்பான்மையுமே அவசியம் என கருதுகிறார்கள்.  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.