Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தியாக தீபம் அன்னை பூபதியின் 32 வது நினைவு தினம்

Featured Replies

In இலங்கை     April 19, 2020 7:19 am GMT     0 Comments     1076     by : Benitlas

IMG_0023.jpg

இந்திய இராணுவத்தினை இலங்கையில் இருந்து வெளியேறுமாறு கோரி உண்ணாவிரத போராட்டம் இருந்து உயிர்நீத்த அன்னை பூபதியின் 32 வது நினைவு தினம் இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை உணர்வு பூர்வமாக வடக்கு கிழக்கு எங்கும் அனுஷ்டிக்கப்பட்டது.

மட்டக்களப்பு, நாவலடியில் உள்ள அன்னை பூபதியின் சமாதியருகில் இன்று காலை 9.30 மணி அளவில் நினைவு தின நிகழ்வு நடைபெற்றது.

ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையிலும் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியிலும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு உணர்வுபூர்வமாக நடைபெற்றது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட நிர்வாக செயலாளர் இருதயம் செல்வகுமார் உட்பட கட்சி இளைஞரணி உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

இதன்போது ஈகச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டதை தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டது.

இந்திய இராணுவ அடக்குமுறைகளுக்கு எதிராகவும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தும் 1988.03.19 ஆம் திகதியிருந்து 1988.04.19 வரையில் உண்ணா விரதமிருந்து அன்னை பூபதி உயிர்நீர்த்தமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/தியாக-தீபம்-அன்னை-பூபதிய/

 

வடக்கு, கிழக்கில் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது அன்னை பூபதியின் 32 ஆவது நினைவு தினம்!

In இலங்கை     April 19, 2020 7:46 am GMT     0 Comments     1012     by : Benitlas

IMG_2816.jpg

இந்திய இராணுவத்தினை இலங்கையில் இருந்து வெளியேறக்கோரி உண்ணாவிரத போராட்டம் இருந்து உயிர்நீத்த ‘தியாக தீபம்’ அன்னை பூபதியின் 32 ஆவது நினைவு தினம் இன்று காலை வடக்கு, கிழக்கில் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

மட்டக்களப்பு, நாவலடியில் உள்ள அன்னை பூபதியின் சமாதியருகில் இன்று காலை 9.30 மணி அளவில் நினைவு தின நிகழ்வு இடம்பெற்றது.

ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையிலும் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியிலும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு உணர்வுபூர்வமாக நடைபெற்றது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட நிர்வாக செயலாளர் இருதயம் செல்வகுமார் உட்பட கட்சி இளைஞரணி உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

இதன்போது ஈகச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டதை தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டது.

இதேவேளை, அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்;வை அவரது சமாதியில் நினைவு கூருவதற்கு அவரது மகள் லோகேஸ்வரன் சாந்தி, பொலிசாரிடம் அனுமதி கோரிய நிலையில் அவர்களது குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டது

இதனையடுத்து இன்று காலை மாமாங்கத்திலுள்ள அன்னை பூபதியின் மகளின் வீட்டிற்கு சென்ற பொலிசார் வழங்கிய அனுமதியை நாட்டின் சூழ்நிலை காரணமாக ரத்துச் செய்துள்ளதாக தெரிவித்தனர்.

இந்த நிலையில் தனது வீட்டில் அன்னையின் உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து ஈகைச்சுடர் ஏற்றி மகள் நினைவு கூர்ந்துள்ளார்.

இதேபோல், வவுனியாவில் 1150 நாட்கள் கடந்தும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தை, காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடிக் கண்டறியும் குடும்பங்களின் சங்கத்தினர் நடத்தி வருகின்றனர்.

அவர்கள், ஏ-9 வீதிக்கு அருகே அமையப்பெற்றுள்ள தமது போராட்டப் பந்தலில் இன்று தமிழினத்தின் தாய் பூபதி அம்மா அவர்களின் உருவப்படத்தை காட்சிப்படுத்தி மெழுகுவர்த்திகள் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

இந்திய இராணுவ அடக்குமுறைகளுக்கு எதிராகவும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தும் 1988ஆம் ஆண்டு மார்ச் மாதம் 19 ஆம் திகதியிருந்து ஏப்ரல் மாதம் 19 ஆம் திகதி வரையில் உண்ணாவிரதமிருந்து அன்னை பூபதி உயிர்நீர்த்தமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/வடக்கு-கிழக்கில்-உணர்வு/

  • தொடங்கியவர்

அன்னை பூபதியை நினைவில் கொள்வோம் – யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்

In இலங்கை     April 19, 2020 4:46 am GMT     0 Comments     1183     by : Benitlas

01333.jpg

அன்னை பூபதியை நினைவில் கொள்வோம் என யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள என யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் குறித்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளது.

வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “அன்னை பூபதியின் 32வது நினைவு தினம் இன்றாகும். தமிழ் மக்களின் விடுதலை யாகம் ஒரு இக்கட்டான காலகட்டத்தை அடைந்தபோது அதனை முன்னகர்த்த அந்த வேள்வித்தீயில் தன்னையும் ஆகுதியாக்கிக் கொண்டவர் அன்னை பூபதியாவார்.

நட்பு முகத்தோடு வந்த இந்திய அரசின் உண்மையான துரோக முகத்தை வெளிப்படுத்திய தியாக தீபம் திலீபனின் வழியில் தன் இன்னுயிரை ஈந்த அன்னை பூபதியை வாஞ்சையோடும் அர்ப்பணிப்போடும் நினைவுகூருவது தமிழ் மக்களின் தார்மீக கடமையாகும்.

காந்தீயமும் அகிம்சையும் பேசும் இந்திய அரசின் உண்மையான கோரமுகம் இவர்களின் தியாகத்தால் கிழித்தெறியப்பட்டது. இந்தியா தமிழ் மக்கள் சார்பாக செயற்படும் என்ற தமிழ் மக்களின் நீடிய எதிர்பார்ப்பின் போலித்தன்மையை தமிழ்மக்கள் உணர்ந்து கொள்ள கிட்டிய ஒரு சந்தர்ப்பமாகவும் இது அமைந்திருந்தது.

இந்திய இராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் போர் நடைபெற்றுக் கொண்டிருந்த 1988ஆம் ஆண்டு காலப்பகுதியில் போரை நிறுத்துங்கள் விடுதலைப்புலிகளோடு பேச்சுவார்த்தை நடத்துங்கள் என்ற எளிமையான கோரிக்கைகளோடுதான் அன்னை பூபதியும் அவர் சார்ந்த அன்னையர் முன்னணி அமைப்பும் சாத்வீக போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இந்திய தரப்பினருடனான பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்படாத சூழ்நிலையிலேயே அன்னை பூபதி சாகும் வரையான உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார்.

இந்திய அரசு அவரை சாகவிட்டது ஆனால் தமிழ் மக்கள் அவரை தமது இதயங்களில் தாங்கிக் கொண்டனர். தமிழ் மக்களின் வீரத்தினதும் தியாகத்தினதும் குறியீடாக என்றும் அன்னை உயர்ந்து நிற்கிறார்.

பல்கலைக் கழகங்கள் மூடப்பட்டுள்ள சூழலில் வழமைபோல எமது நினைவுகூரலை செய்ய முடியாத இக்கட்டான நிலையில் நாம் இருந்தாலும் இவ்வறிக்கை மூலம் தமிழ் மக்கள் அனைவருக்கும் அன்னையின் நினைவுகூரலின் அவசியத்தை வலியுறுத்தி நிற்கிறோம்.“ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

jaffna.jpg

Edited by Rajesh

இந்திய அரசின் உண்மை முகத்தை கிழித்தெறிந்த அன்னை பூபதியின் 32வது நினைவு தினம்

நாட்டில் ஏற்பட்டுள்ள இக்கட்டான சூழலில் அன்னை பூபதியின் 32வது நினைவு தினமான இன்று யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் நினைவுகூர்ந்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

தமிழ் மக்களின் விடுதலை யாகம் ஒரு இக்கட்டான காலகட்டத்தை அடைந்தபோது அதனை முன்னகர்த்த அந்த வேள்வித்தீயில் தன்னையும் ஆகுதியாக்கிக் கொண்டவர் அன்னை பூபதியாவார்.

நட்பு முகத்தோடு வந்த இந்திய அரசின் உண்மையான துரோக முகத்தை வெளிப்படுத்திய தியாக தீபம் திலீபனின் வழியில் தன் இன்னுயிரை ஈந்த அன்னை பூபதியை வாஞ்சையோடும் அர்ப்பணிப்போடும் நினைவுகூருவது தமிழ் மக்களின் தார்மீக கடமையாகும்.

காந்தீயமும் அகிம்சையும் பேசும் இந்திய அரசின் உண்மையான கோரமுகம் இவர்களின் தியாகத்தால் கிழித்தெறியப்பட்டது.

இந்தியா தமிழ் மக்கள் சார்பாக செயற்படும் என்ற தமிழ் மக்களின் நீடிய எதிர்பார்ப்பின் போலித்தன்மையை தமிழ்மக்கள் உணர்ந்து கொள்ள கிட்டிய ஒரு சந்தர்ப்பமாகவும் இது அமைந்திருந்தது.

இந்திய இராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் போர் நடைபெற்றுக் கொண்டிருந்த 1988ஆம் ஆண்டு காலப்பகுதியில் போரை நிறுத்துங்கள் விடுதலைப்புலிகளோடு பேச்சுவார்த்தை நடத்துங்கள் என்ற எளிமையான கோரிக்கைகளோடுதான் அன்னை பூபதியும் அவர் சார்ந்த அன்னையர் முன்னணி அமைப்பும் சாத்வீக போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இந்திய தரப்பினருடனான பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்படாத சூழ்நிலையிலேயே அன்னை பூபதி சாகும் வரையான உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார்.

இந்திய அரசு அவரை சாகவிட்டது ஆனால் தமிழ் மக்கள் அவரை தமது இதயங்களில் தாங்கிக் கொண்டனர். தமிழ் மக்களின் வீரத்தினதும் தியாகத்தினதும் குறியீடாக என்றும் அன்னை உயர்ந்து நிற்கிறார்.

பல்கலைக் கழகங்கள் மூடப்பட்டுள்ள சூழலில் வழமைபோல எமது நினைவுகூரலை செய்ய முடியாத இக்கட்டான நிலையில் நாம் இருந்தாலும் இவ்வறிக்கை மூலம் தமிழ் மக்கள் அனைவருக்கும் அன்னையின் நினைவுகூரலின் அவசியத்தை வலியுறுத்தி நிற்கிறோம் என யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

https://www.ibctamil.com/srilanka/80/141516

5 hours ago, Rajesh said:

ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையிலும் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியிலும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு உணர்வுபூர்வமாக நடைபெற்றது.

தியாக தீபம் அன்னை பூபதி அவர்களுக்கு வீர அஞ்சலிகள் !!!

  • கருத்துக்கள உறவுகள்

அன்னைக்கு வீர வணக்கங்கள் 

  • கருத்துக்கள உறவுகள்

தியாக அஞ்சலிகள்..

மெய்நிகர் தொழில்நுட்பத்தில் நினைவுகூரப்பட்ட முதன்நிகழ்வாக  அன்னை பூபதி !!

தமிழீழ விடுதலைப் போராட்டம் தனது மூலோபாயங்களை அடைய, காலத்தின் நிலைமைகளுக்கு அமைய தனது தந்திரோபாயங்களை வகுத்துக் கொள்வது போல், தற்போதைய உலக நிலைமைகளுக்கு அமைய, நினைவேந்தல் நிகழ்வுகளையும், மக்கள் சந்திப்புக்களையும் மெய்நிகர் தகவல்தொழில்நுட்ப பரிமாணத்தில் மாற்றியுள்ளதன் முதன்நிகழ்வாக தமிழீழத் தாய்மார்களது தியாகத்தின் குறியீடாக இருக்கின்ற நாட்டுப்பற்றாளர் அன்னை பூபதியின் 32வது ஆண்டு தமிழர் தாயகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும் நினைவுகூரப்பட்டது. 

1988ம் ஆண்டுகளில் தமிழர் தாயகத்தில் நிலைகொண்டு தமிழர் தரப்புக்கு எதிரான யுத்தத்தில் ஈடுபட்டிருந்த இந்திய இராணுவம் யுத்தநிறுத்தத்தினை மேற்கொண்டு, தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்தைகளில் ஈடுபடவேண்டும் என கோரிக்கையுடன் 1988ம் ஆண்டு மார்ச் மாதம் 19ம் திகதி தனது சாகும்வரையான உண்ணாவிரதப்போராட்டத்தை தொடங்கிய அன்னை பூபதி, 31 நாட்களின் பின்னர், ஏப்ரல் 19ம் நாள் தனதுயிரை தமிழீழ தேசத்துக்கு காணிக்கையாக்கியிருந்தார்.

ஆயிரம் ஆயிரம் மாவீரர்களை தந்த தமிழீழத் தாய்மார்களது குறியீடாக அன்னை பூபதி ஆண்தோறும் நினைவுகூரப்பட்டு வரும் நிலையில், தற்போது கொரோனா வைரஸ் பெருந்தொற்று உலகத்தை முடக்கியுள்ள நிலையிலும் அன்னை நினைகூரப்பட்டுள்ளார்.

வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடும் தாய்மார்கள், தமிழர் தாயகத்தில் நினைவேந்தியிருக்க, மெய்நிகர் தொலைத்தொடர்பு தொழில்நுட்பத்தின் ஊடாக புலம்பெயர் தேசங்களையும், தமிழ்நாட்டையும் ஒருங்கிணைத்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுத்திருந்தது.

கவிதை, அன்னையின் நினைவுப் பகிர்வுகள், சிறப்புரை என அமைந்திருந்த இவ்மெய்நிகர் கூட்டத்தில் அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், ஜேர்மனி, பிரித்தானியா உட்பட தமிழ்நாட்டில் இருந்து தமிழ்உறவுகள் பங்கெடுத்து நினைவேந்திக் கொண்டனர்.

தமிழீழ தாய்மார்களின் குறியீடாக அன்னை பூபதி இருப்பதற்கு சான்றாக இன்று தமிழர் தாயகத்தில் தொடர்சியாக நீதிக்கான போராடிக் கொண்டிருக்கும் தாய்மார்களது ஓயாத போராட்டத்தினை தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மூத்த உறுப்பினர் பாலா அண்ணா அவர்கள் குறிப்பிட்டிருந்தார்.

தமிழீழ தேசத்துக்கான விடுதலைப் போராட்டத்தில் நாம் அனைவரும் நாட்டுப்பற்றாளர்களாக பங்காற்ற வேண்டுமென நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் குறிப்பிட்டிருந்தார். 

--
Murugiah Suginthan
The Secretariat,TGTE 

 join us : 
Website: http://tgte.org/tamil
Facebook: https://www.facebook.com/TGTE.Secretariat/
Twitter: @suginthan
Twitter: @TGTE_SEC 
G+: https://plus.google.com/u/0/+TGTESecretariat

வீர வணக்கம் அன்னையே

  • தொடங்கியவர்

விடுதலைக்கான பயணத்தில் கொரோனாவின் தாக்கம் சிறிய தாமதமேயன்றி தடை அல்ல- ஸ்ரீதரன்

In இலங்கை     April 20, 2020 5:41 am GMT     0 Comments     1148     by : Litharsan

விடுதலைக்கான பயணத்தில் கொரோனாவின் தாக்கம் சிறிய தாமதமேயன்றி தடை அல்லவென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

தேசத்தின் விடுதலைக்காக உண்ணா நோன்பிருந்து உயிர்தந்த தியாகதீபம் அன்னைபூபதியின் 32ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வுகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அலுவலகமான அறிவகத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது.

இந்நிகழ்வில, ஈகைச் சுடரினை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் ஏற்றிவைத்து அன்னைபூபதி திருவுருவப் படத்திற்கான மலர் மாலையினையும் அணிவித்தார்.

இந்நிகழ்வில் கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் வேழமாலிகிதன், உப தவிசாளர் தவபாலன், கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளையின் செயலாளர் விஜயன் உள்ளிட்ட செயற்பாட்டாளர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது அவர் நினைவுரையாற்றுகையில், “1988ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் சிங்கள ஆட்சியாளர்களினதும் அதனோடு இணைந்த உதவிப் படைகளின் ஆக்கிரமிப்பின் கீழ் எங்கள் தேசம் சிக்கித் தவித்தது. மரணஓலமே எம் மண்ணை நிறைத்திருந்தது.

மரணங்கள் மலிந்த பூமியாக நாம் வதைபட்டபோது அன்னைபூபதி அகிம்சைக் களத்திலே தன்னை அர்ப்பணித்தார். தர்மம் மிகுந்த வாழ்வை தமிழர்கள் பெற வேண்டும் என்பதற்காக தன் உயிர் தேசத்தின் தாயாக அவர் பரிணமித்தார். கடந்த 32 ஆண்டுகளாக அந்த தாய் தாங்கிய கனவுகளோடு பயணிக்கிறோம். போராட்ட வழிமுறைகள் மாறினாலும் இலட்சியம் மாறாது பயணிக்கின்ற இவ்வேளையிலே மரணங்கள் மலிந்துபோயுள்ளன. வல்லரசுகள் நிலைகுலைந்து போயிருக்கின்றன.

ஒவ்வொரு அரசுகளும் தேசிய இனங்களும் தர்மத்தை நேசிக்கின்ற, தேடுகின்ற காலம் உருவாக்கியிருக்கிறது. 89 ஆம் ஆண்டுகளின் பின்னர் 23 நாடுகள் சுதந்திரம் அடைந்திருக்கின்றன. உலகம் இன்று இருளில் சூழ்ந்திருக்கின்றது. புதிய சிந்தனைகளை, புதிய பாதைகளை, புதிய பொருளாதாரத் தேர்வுகளை புதிய உலக ஒழுங்கினைப் பற்றி சிந்திப்பதற்கு கொரோனா வைரஸ் அடிகோலியிருக்கிறது.

ஆகவே, தமிழ் தேசிய இனமாகிய நாங்கள் போரை, சுனாமியை, பொருளாதாரத் தடையை, பன்னாட்டு அரசுகளின் அழுத்தங்களை எதிர்கொண்ட வண்ணம் சுயநிர்ணய பாதையில் பயணித்துக்கொண்டிருக்கும் போது கொரோனா வந்திருக்கிறது.

இதனை எதிர்கொள்வோம், வெற்றி கொள்வோம் என்கின்ற திடசங்கற்பத்தோடு அன்னை பூபதி காட்டிய அறப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம். ஒரு தேசிய இனத்தின் விடுதலைப் பாதையில் கொரோனா வைரஸின் தாக்கம் தாமதமே அன்றி தடையல்ல என்பதை ஒன்றுபட்ட சக்தியாக நின்று வெற்றி கொள்வதே அன்னை பூபதியின் இலட்சியச் தாகத்தை வென்றெடுப்பதற்கான திடசங்கற்பம் ஆகும்” என்றார்.

Annai-Poopathy-Rememrance-2020-in-Kilino

Annai-Poopathy-Rememrance-2020-in-Kilino

Annai-Poopathy-Rememrance-2020-in-Kilino

Annai-Poopathy-Rememrance-2020-in-Kilino

Annai-Poopathy-Rememrance-2020-in-Kilino

Annai-Poopathy-Rememrance-2020-in-Kilino

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.