Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழுத்தம் பிரயோகிக்கப்படுகின்றது – பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல் குற்றச்சாட்டு!

Featured Replies

பொதுத்தேர்தலுக்கான திகதி ஒன்றை நிர்ணயிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழுத்தம் வழங்கப்படுவதாக ஆணைக்குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல் தெரிவித்துள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் முக்கிய கூட்டமொன்று நாளை கொழும்பில் இடம்பெறவுள்ள நிலையில், யாழில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “கொரோனா அச்சம் காரணமாக எதிர்வரும் 25ஆம் திகதி தேர்தலினை நடாத்துவது என்பது முடியாத செயலாகும். இதனால் தேர்தலினை பிற்போட யோசித்திருந்தோம்.

அத்துடன், இதற்கமைய நீதிமன்றத்தின் ஆலோசனையினை பெற்றுக்கொள்ளுமாறு நாம் ஜனாதிபதிக்கு தெரிவித்தோம். எனினும் அவர் அதற்கு மறுப்பு தெரிவித்து எங்களை ஒரு திகதியினை அறிவிக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.

அதேபோன்று யாழ்ப்பாணத்திற்கு தற்போது கொண்டு வரப்படும் நிவாரணப் பொருட்களை அங்குள்ள அரசியல்வாதி ஒருவர் பெற்றுக்கொண்டு பின்னர் அவற்றினை தான் வழங்குவது போன்று விநியோகம் செய்கின்றார்“ எனவும் இதன்போது குற்றம் சுமத்தியுள்ளார்.

http://athavannews.com/தேர்தல்கள்-ஆணைக்குழுவி-12/

  • கருத்துக்கள உறவுகள்

மார்ச் மாதம் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதால், 3 மாத இடைவெளிக்குள் அதாவது ஜூனுக்கு முதல் திரும்ப கூட்ட வேண்டும் ...அது தான் மே மாத கடைசியில் தேர்தல் வைக்க ஓடுபட்டு திரியினம் 

தேர்தல் தொடர்பில் அறிவிப்பு

பொதுத் தேர்தலை நடத்துவதற்கு சூழல் சரியானதா இல்லையா என்பது தொடர்பாக தீர்மானிக்கவும் இலங்கையில் கொரோனா வைரஸின் நிலை தொடர்பான முழுமையானத் தகவல்களைத் தெரிந்துகொள்ளவும் நாளை (20), சுகாதார அதிகாரிகள், பாதுகாப்புப் படையினர் உள்ளிட்ட அது தொடர்புடைய அதிகாரிகளைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்தார்.

இந்தச் சந்திப்பில் தீர்மானம் எடுக்கும்வரையில், பொதுத் தேர்தல் குறித்து தன்னால் எந்தவொரு கருத்தையும் கூறமுடியாது என்ற அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், நாடாளுமன்றத்தைக் மீண்டும் கூட்டுதல் உள்ளிட்ட பிற விடயங்கள், தேர்தல் ஆணைக்குழுவின், தேர்தல் செயலகத்தின் கீழ் தீர்மானம் எடுக்கப்படுவதில்லை என்றும் எனினும், ஜனாதிபதி விரும்பினால், நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்ட முடியும் என்றும் அவர் கூறினார்.

http://www.tamilmirror.lk/செய்திகள்/தேர்தல்-தொடர்பில்-அறிவிப்பு/175-248838

மே 28 இல் தேர்தலை நடத்த இணங்க முடியாது – பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல்!

In இலங்கை     April 20, 2020 4:45 am GMT     0 Comments     1263     by : Benitlas

எதிர்வரும் மே மாதம் 28ஆம் திகதி தேர்தலை நடத்த இணங்க முடியாது என தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர் பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல் தெரிவித்துள்ளார்.

கடந்த 16ஆம் திகதி தேர்தல் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 14ஆம் திகதி தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தம்மை தொலைபேசியில் தொடர்புகொண்டு இன்று நடைபெறவுள்ள ஆணைக்குழு கூட்டத்தில் கலந்துகொள்கின்றீர்களா என வினவியதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மே மாதம் 28ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்துவதற்கான வர்த்தமானியை வௌியிடுவதற்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் இதன்போது யோசனை முன்வைத்ததாக பேராசிரியர் ரட்ணஜீவன் ஹுல் குறிப்பிட்டுள்ளார்.

அந்த யோசனையை நிராகரிக்கும் வகையில் இந்த கடிதத்தை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அனுப்பிவைப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மே மாதம் 28ஆம் திகதி தேர்தல் நடத்தப்படுவதற்கு தாம் இணங்காதிருப்பதற்கான நிலைப்பாட்டினை நியாயப்படுத்துவதற்காக பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல் ஏழு விடயங்களை குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரது பேஸ்புக் பக்கத்தில் தேர்தல் நடத்தப்படும் திகதி தொடர்பில் எழுந்துள்ள கருத்தாடல் தொடர்பிலான நிலைப்பாட்டினையும் அவர் தனது கடிதத்தில் தௌிவுபடுத்தியுள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவிற்குள் கலந்துரையாடப்பட வேண்டிய விடயங்கள், குறிப்பாக கருத்தாடலுக்கு வித்திடுகின்ற அல்லது சமூக உணர்வை ஏற்படுத்தக் கூடிய விடயங்களை கலந்துரையாடுவதற்கு முன்னதாக ஊடகங்களில் பகிரங்கப்படுத்துவது தேர்தல்கள் ஆ ணைக்குழு பிற்பற்ற வேண்டிய நடைமுறை அல்லவெனவும் ரட்ணஜீவன் ஹூல் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிற்போடப்பட்டுள்ள தேர்தலை நடத்துவதற்கான திகதி தொடர்பில் தீர்மானிக்கும் அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவிடமே உள்ளதாக அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தலை பிற்போடுவது தொடர்பிலும் உடனடியாக நடத்துவது தொடர்பிலும் பல கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டாலும், எந்த கருத்துக்கள் எதுவும் தேர்தலை ஒத்திவைக்கவோ நடத்தவோ தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழுத்தத்தை ஏற்படுத்தாது என அவர் வலியுறுத்தியுள்ளார்.

http://athavannews.com/மே-28-இல்-தேர்தலை-நடத்த-இணங்/

மஹிந்த தேசப்பிரிய நாளை கட்சி தலைவர்களை சந்திக்கின்றார்

In இலங்கை     April 20, 2020 8:44 am GMT     0 Comments     1161     by : Jeyachandran Vithushan

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய நாளை (செவ்வாய்க்கிழமை) கட்சி தலைவர்களை சந்திக்கவுள்ளார். குறித்த சந்திப்பு நாளை காலை 10:30 க்கு இடம்பெறும் என ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

இதேவேளை இலங்கையில் கொரோனா வைரஸின் தாக்கத்தையடுத்து ஒத்திவைக்கப்பட்டிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலை எப்போது நடத்துவது தொடர்பாக ஆராயும் பொருட்டு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இன்று விசேட சந்திப்பில் ஈடுபட்டவுள்ளார்.

ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் இந்தக் கூட்டத்துக்கு பொலிஸ் மற்றும் முப்படை உயர் அதிகாரிகளும், தேர்தல்கள் செயலக அதிகாரிகளும், பொதுநிர்வாக சேவை உயர் அதிகாரிகளும் அழைக்கப்பட்டுள்ளனர்.

தற்போதைய நெருக்கடி நிலையைக் கவனத்தில்கொண்டு தேர்தலை நடத்த முடியாத நிலை காணப்படுவதால் இதற்கு எத்தகைய மாற்று நடவடிக்கைகள் எடுப்பதற்குத் திட்டமிடப்பட்டு இருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஒத்திவைக்கப்பட்ட தேர்தலுக்கான திகதியை அறிவிப்பதற்கான அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கே உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

ஜனாதிபதியால் நிர்ணயிக்கப்பட்ட திகதியில் நாடாளுமன்ற தேர்தலை நடத்த முடியாவிட்டால், தேர்தல்கள் ஆணைக்குழு பிறிதொரு திகதியை அறிவிக்கும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கடந்த சில தினங்களுக்கு முன்னர்தெரிவித்திருந்தார்.

அத்துடன் திகதியொன்றை நிர்ணயிக்காமல் தேர்தலை ஒத்திவைப்பதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அதிகாரம் இல்லை எனவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சுட்டிக்காட்டியிருந்த நிலையில் அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

http://athavannews.com/நாளை-கட்சி-தலைவர்களை-சந்/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.