Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் ஊரடங்கு தளர்த்தப்பட்டதும் நகரில் திரண்ட மக்கள்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, tulpen said:

அரிசி , பருப்பு வாங்கும் கடையில்  போத்தல் சகஜமாக வாங்க கூடிய நிலையும், சாதாரண தேனீர்ச்சாலையில், அல்லது  மதிய உணவு எடுக்கும் றெஸ்ர்ராண்டில் பக்கத்தில் குடும்பதோடு ஒருவர் மதிய உணவை எடுத்துக்கொண்டிருக்கும் போது பியரோ, சாராயமோ குடிக்க கூடிய நிலையும் இருக்குமானால் அந்த நாட்டில் நல்ல மனித பண்பாடு,கலாசாரம் நிலவுவதாக அர்த்தம். 

இலங்கையில் பூட் சிட்டியில் சரக்கும் இருக்கு அரக்கும் இருக்கு  மதிய உணவை எடுத்து பியர் குடிக்கக்கூடிய  உணவகமும் இருக்கு ஏன் யாழில் வலம்புரி இருக்குதானே 

முப்பது வருட கால யுத்தத்தின் பொழுது எவ்வாறு ஊரடங்குகளை எண்ணி நடந்தார்களோ அதேபோன்று மக்கள் எண்ணி நடக்கின்றனர் என எண்ணத்தோன்றுகின்றது.

மக்களாலும் ஏன் இந்த ஊரடங்கு என்பதை புரிய முடியவில்லை.

புரிய வைக்கமும் முழுதாக சம்பந்தப்பட்டவர்கள் முயலவில்லை.   

10 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

இலங்கையில் பூட் சிட்டியில் சரக்கும் இருக்கு அரக்கும் இருக்கு  மதிய உணவை எடுத்து பியர் குடிக்கக்கூடிய  உணவகமும் இருக்கு ஏன் யாழில் வலம்புரி இருக்குதானே 

அதையே கூறினேன்.   ஆனால் பக்கதில் இருப்பவருக்கு எந்த தொந்தரவும் செய்யாமல்.  அதன் மூலம் தெருவுக்கு தெரு மது பான சாலைகள் என்று தனியான  இருப்பதை தவிர்க்கலாம் 

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, tulpen said:

அதையே கூறினேன்.   ஆனால் பக்கதில் இருப்பவருக்கு எந்த தொந்தரவும் செய்யாமல்.  அதன் மூலம் தெருவுக்கு தெரு மது பான சாலைகள் என்று தனியான  இருப்பதை தவிர்க்கலாம் 

இலங்கையில் மது அருந்துபவன் தொந்தரவு செய்யாமல் இருப்பான் என்பது குதிரைக்கும் கொம்பு முளைக்கிற கதை

நேற்று மதுக்கலவரத்தில் சம்மாந்துறையில் போன வருடம் ஈஸ்டர் தக்குதல்  மோசமான ஆயுதங்கள் கைப்பற்றிய இடத்தில் துப்பாக்கி சூடும் சத்தமும்  ஒரு துப்பாக்கியும் தோட்டாக்களும் கைப்பற்றப்பட்டுள்ளது  விசாரணை தொடர்கிறது 

10 hours ago, Rajesh said:

வடக்கில தொப்பியும் போட்டு முகத்தை இறுக்கி மூடிகட்டிக்கொண்டு வரிசைல நிக்கிற பலர் இன்னமும் வேலைக்கு போகாத இளைஞர்களாம்.

ராஜேஷ் மாசி மாதம் நான் ஊர் சென்று இருந்தேன்.  சின்ன பொடியள் காற்சட்டையில் முகம் மறைக்காமல் கூடடமாக நின்று தண்ணி வாங்குகிறார்கள்.

இங்கு சிலருக்கு ஊர் கள நிலவரங்கள் தெரியாது.  பணக்காரர்களுக்கு தண்ணி வீடு வந்து சேரும்.  இல்லையோ அவர்கள் காரில் இருக்க சாரதி இறங்கி வாங்குவார்.  நடுத்தர குடும்ப ஆண்கள் குறுந்தகவல் அனுப்பி விட்டு வாசல் வர பொடியன் ஓடி போய் கறுப்பு பையில் சுத்தி குடுப்பான்.  

வரிசையில் நிற்பவர்கள் நாட்கூலி தொழிலாளியும், முண்டா குடிகாரர்களும் தான்.  மற்றும் அவர்கள் கால் போத்தில் வாங்கும் போது குவளையும் தண்ணி பையும் கேட்பார்கள்.  தெருவிலேயே கலந்து குடித்துவிட்டு குப்பையை போடுவார்கள்.  தெருவில் சேட்டை செய்வார்கள்.

தண்ணி கடை முக்கிய வியாபார நாட்களில் நான்கு காவல்துறையினர் வாசலில் நிற்பார்கள்.  தள்ளு முள்ளும் சண்டையும் தான்.

11 hours ago, நிழலி said:

உங்கள் ஊர் பாடசாலை அதிபர் பேய்க்காய் போல இருக்கு. அதிபருக்குரிய பொறுப்புகளுக்கும் மேலாக ஊரில எவரெவர் வெளினாட்டு காசிலும் உதவிப் பொருட்களிலும் வாழ்கினம், அதில் எவரெவர் தண்ணி வரிசையில் நிற்கினம், எவரெவர் வீட்டுக்கும் கொண்டு போகாமல் அரைவாசி விலைக்கு விற்கினம் என்று  தேவையில்லாத விடுப்புகளையும் பார்க்கும் அளவுக்கு பேய்க்காய் போல. ஒரு வேளை அவரும் அதிபர் சமபளம் காணாது என்று வெளினாட்டு உதவிகளை பெற்று சீவிக்கிறாரோ தெரியவில்லை....பாவம்

இந்த அதிபர் என் பாடசாலைக்கு புதிது.  அவரின் கீழ் படித்த பல நூற்று கணக்கானவர்கள் நல்ல வசதியாக இருக்கிறார்கள்.  அவரின் தாயாரும் ஊரில் நன்மதிப்பு பெற்ற ஆசிரியை.

மற்றும் எம் ஊர் கழகம் 22 பள்ளிகளை உள்வாங்கி வருடம் 20 துவிச்சக்கரவண்டிகளை நாட்தொழிளால குடும்ப குழந்தைகளுக்கு கொடுத்து வருகிறோம்.  ஒரு வங்கி கணக்கு தொடக்கி அதில் காசு போட்டு வரும் வட்டியில் 218 பள்ளி பல்கலை மாணவர்களுக்கு மாதாந்த உதவி தொகை அந்த வட்டியில் கொடுக்கிறோம்.    இந்த அதிபரும் அதில் பங்கு வகித்து உதவுகிறார்.

நான் ஒரு மருத்துவ மாணவியின் படிப்பிற்கு விழாவில் அன்பளிப்பு கொடுத்ததை பார்த்து இந்த அதிபர் என்னை வந்து சந்தித்தார். 

அவர் என்னிடம் நாற்பதாயிரம் ரூபா CCTV கெமரா பூட்ட கேட்டார்.  காரணம் பாடசாலை மாணவர்கள் தண்ணி மற்றும் கஞ்சா பாடசாலை வளாகத்திற்குள் வைத்து பாவிக்கிறார்கள் என்று.  

பின் இருபதாயிரம் ரூபா மைக் மற்றும் ஸ்பீக்கர் வாங்க கேடடார் ஏனெண்டால் மாணவர்களும் ஆசிரியர்களும் காசு போட்டு தான் அவர்கள் நிகழ்விற்கு ஒலி ஒளி இயக்கிகள் வாடகைக்கு பெறுவார்கள்.

இருபது சோடி சப்பாத்து கேட்டார்.  ஏனென்றால் மாகாண ரீதியில் உதைபந்தாடத்தில் வந்தார்கள் அனால் உருப்படியான சப்பாத்து இல்லாமல் போட்டியில் இருந்து நீக்கிவிடடார்கள்.

இப்படி வெளிநாட்டு காரரிடம் பிச்சை எடுத்து ஏழை மாணவருக்கு உதவும் போது, அந்த மாணவரின் சொந்த அப்பா குடிக்க வரிசையில் நிக்கும் போது அவருக்கு ஆதங்கம் வராதா?

கனடாவில் இருந்து திண்ணையில் கடலை போடும் உங்களுக்கே எங்கள் ஊர் ஆண்களுக்காக வாதாட உரிமை இருக்கென்றால் அவர்களது பிள்ளைகளின் வாழ்க்கையை உருப்படியாக்க போராடும் அதிபருக்கும், ஊர் பற்றாளர் எங்களுக்கும் தட்டி கேட்க முழு முழு உரிமை உண்டு!

Please lets keep superficial politically correct crap in Canada and not export it back home!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.