Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈஸ்டர் தாக்குதல்தாரிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – ஜனாதிபதி மீண்டும் உறுதி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஈஸ்டர் தாக்குதல்தாரிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – ஜனாதிபதி மீண்டும் உறுதி!

 

 

     by : Benitlas

தீவிரவாத வன்முறைக்கு ஒருபோதும் இடமளிக்காதிருப்போம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இலங்கை தீவில் நூற்றுக் கணக்கான அப்பாவி மக்களின் உயிர்களைப் பறித்தும் அங்கச் சிதைவுகளை ஏற்படுத்தியதுமான பாரிய பயங்கரவாத குண்டுத்தாக்குதல்கள் இடம்பெற்று இன்றுடன் ஓராண்டு நிறைவுற்றுள்ளது.

இந்தநிலையில் இதுகுறித்து ஜனாதிபதியின் ஊடகப்பிரிவினால் இன்று(செவ்வாய்கிழமை) வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “கொடூர தீவிரவாத கருத்தினைக் கொண்ட ஒரு குழுவினர் 2019 ஏப்ரல் 21 ஞாயிறன்று முக்கிய கத்தோலிக்க தேவாலயங்களையும் சுற்றுலா ஹோட்டல்கள் சிலதையும் இலக்குவைத்து மேற்கொண்ட பாரிய மனிதப் படுகொலைகள் இடம்பெற்று இன்று ஒரு வருடம் நிறைவடைகின்றது.

இந்த காட்டுமிராண்டித்தனமான குற்றத்தின் மூலம் உயிரிழந்தவர்களினதும் கடுமையாக காயப்பட்டவர்களினதும் குடும்ப உறுப்பினர்களுக்கும், அதனால் பெரிதும் கவலைக்குள்ளான கத்தோலிக்க மக்களுக்கும் அனைத்து இலங்கையர்களுக்கும் நான் எனது அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.

உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தற்கொலை தாக்குதலினால் சுமார் 270பேர் உயிரிழந்தனர். சுமார் 500 பேர் காயமுற்றனர். காயமடைந்தவர்களில் சிலர் பின்னர் உயிரிழந்தனர். இன்னும் சிலர் அங்கவீனமுற்றுள்ளனர்.

தாக்குதலில் உயிரிழந்த பெரும்பாலானவர்கள் கத்தோலிக்க சமயத்தவர்கள் என்ற போதும் அது அவர்களை மட்டுமன்றி முழு இலங்கை மக்களையும் இலக்கு வைத்த பயங்கரவாத நடவடிக்கையாகும். எந்த சிந்தனையின் பெயரில் இந்த மனிதப் படுகொலை இடம்பெற்றாலும் இது மனித இனத்திற்கே இழுக்கான ஒன்றாகும்.

தேசிய பாதுகாப்பை மறந்து பாதுகாப்பு திட்டங்களும் ஏற்பாடுகளும் கைவிடப்பட்டிருந்த காரணத்தினாலேயே உயிர்த்த ஞாயிறு மனிதப் படுகொலைக்கு வசதியான பின்னணி உருவானது. அத்தகையதொரு கட்டற்ற சூழலில் தீவிரவாதமும் பயங்கரவாதமும் தலைதூக்குவது ஆச்சரியமான ஒன்றல்ல.

‘சுபீட்சத்தின் நோக்கு’ என்ற எனது கொள்கைப் பிரகடனத்தில் உறுதியளித்தவாறு எனது ஆட்சிக் காலத்தில் அனைத்து இனங்களினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும், எந்தவகையிலும் தீவிரவாதத்திற்கும், தீவிரவாத வன்முறைக்கும் இடமளிக்கப்போவதில்லை என்றும், உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு வகைகூறவேண்டியவர்களை சரியாக இனம்கண்டு சட்டத்தின் முன் நிறுத்துவதற்கும் நான் எனது மக்களுக்கு உறுதியளிக்கின்றேன்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பலியான, பாதிப்புக்கு உள்ளான கத்தோலிக்க மக்கள் உள்ளிட்ட இலங்கை மக்களுக்கு நான் மீண்டும் எனது அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன்“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

http://athavannews.com/ஈஸ்டர்-தாக்குதல்தாரிகள-2/

முழுமையாக நம்புகிறோம்। வார்த்தையில் அல்ல செயலில் காட்டிட வேண்டும்।

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, nunavilan said:

உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தற்கொலை தாக்குதலினால் சுமார் 270பேர் உயிரிழந்தனர். சுமார் 500 பேர் காயமுற்றனர். காயமடைந்தவர்களில் சிலர் பின்னர் உயிரிழந்தனர். இன்னும் சிலர் அங்கவீனமுற்றுள்ளனர்.

இவைகள் எல்லாம்  உங்களின் அரசியல் வெற்றிக்கு அளிக்கப்பட்ட விலைகள். உங்களின் பேச்சை நாங்கள் நம்பிற்றோம் ஐயா. ஆனால் ஒன்று, கொலைக்குற்றவாளி என நீதிமன்றங்களால் இனங்காணப்பட்ட ஒருவரை நீங்கள் விடுதலை செய்தது ஒன்றுதான் கொஞ்சம் உறுத்துது. பார்க்கப்போனால் உங்களுக்கு எத்தனை தடவை மரண தண்டனை கொடுக்கப்பட வேண்டும்? எந்த நீதிபதி கொடுப்பார்? இனி நமது நாட்டுக்கு நீதிபதிகளே தேவையில்லை என்கிற நிலை வந்து விட்டது. நீங்கள் ஒருவரே போதும் ஐயா.

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

ஈஸ்டர் பயங்கரவாதம் – நீதி இல்லையேல் வீதிக்கு வருவோம்

IMG-20200430-WA0004-960x640.jpg?189db0&189db0

 

கடந்த ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதம் தொடர்பில் இதுவரை நீதி கிடைக்கவில்லை. குண்டுதாரிகள் பலியாகிவிட்டனர். அவர்களுக்கு பின்புலமாக இருந்தது யார்? உதவியது யார்? தாக்குதலை தடுக்க தவறியது யார்?. அவர்களை நீதியின் முன் நிறுத்தியிருக்க வேண்டும். ஆனால் அது நடக்கவில்லை. நடவடிக்கை இல்லையேல் கத்தோலிக்க மக்கள் நாம் வீதியில் இறங்கி போராடுவோம் என்று நீர்கொழும்பு மாவட்ட அருட்தந்தையர்களும், பயங்கரவாதத்தால் காயமடைந்தோரும் தெரிவித்துள்ளனர்.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதம் தொடர்பாக அரசாங்கத்துக்கு அறிவித்தல் ஒன்றை விடுப்பதற்காக இன்றைய தினம் (30) நீர்கொழும்பு – கட்டுவப்பிட்டிய புனித செபஸ்தியார் தேவாலயத்தில் கட்டான, போலாவலான மற்றும் கொச்சிக்கடை ஆலய அருட்தந்தையர்கள் இணைந்து ஏற்படு செய்த ஊடக சந்திப்பிலேயே இதனை தெரிவித்துள்ளனர். இந்த ஊடக சந்திப்பில் உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலில் குடும்ப உறுப்பினர்களை இழந்த மற்றும் காயமடைந்த சிலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது கருத்து வெளியிட்ட நீர்கொழும்பு புனித அன்னம்மாள் ஆலய பங்குத்தந்தை சிறில் காமினி பெர்னாந்து,

‘உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பாக நீதியை எதிர்பார்த்து காத்திருக்கும் எவருக்கும் சம்பவம் நடந்து ஒருவருடம் கடந்துள்ள நிலையிலும் இதுவரையில் நியாயம் கிடைக்கவில்லை. குண்டுவெடிப்பு சம்பவத்தின் நோக்கம் என்ன? இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் தற்கொலை தாரிகள் உயிரிழந்து விட்டனர். அவர்களுக்கு பின்புலமாக செயற்பட்டவர்கள் யார்? அவர்களுக்கு உதவிய முக்கிய புள்ளிகள் யார்? அவர்கள் அனைவரையும் கைது செய்து நீதியின் முன்னிறுத்தியிருக்க வேண்டும்.

ஆனாலும் ஒருவருடம் கடந்தும் இவை எதுவும் நடக்கவில்லை. அதேபோன்று புலனாய்வு தகவல்கள் கிடைத்தும் இந்த குண்டு தாக்குதலை தடுக்க தவறியவர்களை தாக்குதலுக்கு உதவியவர்களாக கருதி இந்த நாட்டிற்கு வெளிவிடுவதுடன் அவர்களை தண்டிக்க வேண்டும். கொரோன நோய் பரவல் காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ் நிலை தணிந்ததும் கத்தோலிக்க மக்களுக்கும் உரிய நியாயம் வேண்டுமென்று’ – எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து இங்கு கருத்து தெரிவித்த கட்டுவப்பிட்டிய புனித செபஸ்தியார் ஆலய பங்குத்தந்தை மஞ்சுள நிரோஷான் பெர்னாந்து,

‘பயங்கரவாத தாக்குதலில் கொச்சிக்கடை மற்றும் கட்டுவப்பிட்டிய ஆலயங்களில் 171 பேர் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். தாக்குதலில் காயமடைந்தோரில் 10 பேர் எந்தவித பணிகளையும் சுயமாக செய்யமுடியால் படுக்கையில் இருக்கின்றனர். இன்னமும் 50 பேர் வைத்தியசாலைக்கு சென்று சிகிச்சை பெற்று வருபவர்களாக காணப்படுகின்றன். அத்துடன் தாய் தந்தையை இழந்த குடும்பங்கள் 14 உள்ளன.

இவர்களின் பல்வேறு தேவைகளையும் ஆராய்ந்து எமது சபைகள் தீர்த்து வைக்கின்றது. இருப்பினும் எம்மால் தீர்த்து வைக்க முடியாத பல பிரச்சினைகள் உள்ளது. அதனை அரசாங்கமே தீர்த்து வைக்க முடியும்.

நாங்கள் ஒருவருடத்துக்கும் மேலாக பொறுமையாக அவதானித்துக்கொண்டு இருக்கின்றோம். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய அனைவரும் எந்த ஒரு சக்திக்கும் அடிமையாகாமல் நீதியாக யாருக்கும் பாதகம் ஏற்படாமல் தண்டிக்கப்பட வேண்டும்.

நாங்கள் மீண்டும் மீண்டும் ஊடக சந்திப்புகளை நடத்த விரும்பவில்லை. இச்சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் நாங்கள் வீதிக்கு இறங்கி போராடுவதற்கு கத்தோலிக்கர்களாக தீர்மானித்துள்ளோம்’ – என்றும் தெரிவித்தார்.

இறுதியாக பாதிக்கப்பட்டவர்கள் பேசும்போது, ‘காலம் தாழ்த்தாமல் தமக்கான நீதியை பெற்றுத்தர வேண்டுமென்றும் தங்களுக்கான நீதியை இந்த ஜனாதிபதியால் மட்டுமே பெற்றுத்தர முடியுமெனவும். அவரில் தங்களுக்கு சிறிய அளவில் நம்பிக்கை உள்ளதாகவும்’ – தெரிவித்தனர்.

 

https://newuthayan.com/ஈஸ்டர்-பயங்கரவாதம்-நீத/

On 21/4/2020 at 06:14, nunavilan said:

‘சுபீட்சத்தின் நோக்கு’ என்ற எனது கொள்கைப் பிரகடனத்தில் உறுதியளித்தவாறு எனது ஆட்சிக் காலத்தில் அனைத்து இனங்களினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும், எந்தவகையிலும் தீவிரவாதத்திற்கும், தீவிரவாத வன்முறைக்கும் இடமளிக்கப்போவதில்லை என்றும், உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு வகைகூறவேண்டியவர்களை சரியாக இனம்கண்டு சட்டத்தின் முன் நிறுத்துவதற்கும் நான் எனது மக்களுக்கு உறுதியளிக்கின்றேன்.

மீண்டும் மீண்டும் அதே குப்பையை கொட்டும் சிங்களம் !

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு துணிவிருந்தால்..ரிசாத்து,கிசிபுல்லா,அமீரலி.கக்கீமை பிடித்து அடையுங்கள்...காணாவிட்டால் சுமந்துவையும் சேருங்கள்.... பிரச்சனை ஓவர்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.