Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மைத்திரியை ஏன் கைதுசெய்யவில்லை?

Featured Replies

2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதியன்று நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறுத் தினத் தாக்குதல்கள் தொடர்பில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, ஏன்? கைது செய்யவில்லையென என்பதற்கு, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில விளக்கமளித்துள்ளார்.

இவ்விடயம் குறித்து பலரும் தன்னிடம் வினவுவதாக, தன்னுடைய டுவிட்டர் கணக்கில் பதிவொன்றை இட்டுள்ள, முன்னாள் எம்.பி உதய கம்மன்பில, அரசமைப்பின் 35(1) பிரிவின் பிரகாரம் அவர் தப்பித்துகொள்கிறார் என குறிப்பிட்டு பதிலளித்துள்ளார்.

அரசமைப்பின் 35(1)ஆம் பிரிவின் பிரகாரம், எவரேனுமாள் ஜனாதிபதி என்ற பதவியை வகிக்கின்றபோது, அவரது பதவி முறையில், அல்லது தனிப்பட்ட முறையில் செய்யப்பட்ட அல்லது செய்யாது விடப்பட்ட எவ்விடயம் தொடர்பிலும் ஜனாதிபதிக்கு எதிராக குற்றவியல் அல்லது குடியியல் வழக்கு தொடுக்கப்படுதல் அல்லது தொடர்ந்து நடத்தப்படுதல் ஆகாது என  குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.tamilmirror.lk/செய்திகள்/மைத்திரியை-ஏன்-கைதுசெய்யவில்லை/175-249085

  • தொடங்கியவர்
19 hours ago, ampanai said:

இவ்விடயம் குறித்து பலரும் தன்னிடம் வினவுவதாக, தன்னுடைய டுவிட்டர் கணக்கில் பதிவொன்றை இட்டுள்ள, முன்னாள் எம்.பி உதய கம்மன்பில, அரசமைப்பின் 35(1) பிரிவின் பிரகாரம் அவர் தப்பித்துகொள்கிறார் என குறிப்பிட்டு பதிலளித்துள்ளார்.

படம் இதைக் கொண்டிருக்கலாம்: உணவு

முறையான விசாரணை நடந்தால் ஒன்றல்ல மூன்று சனாதிபதிகளும் சிறைகளில் அடைபட / தூக்கில் தொங்க வேண்டியவர்கள்.

சடடப்படி ஜனாதிபதியாக ஒருவர் இருந்த காலத்தில் செய்த குற்றத்துக்காக கைது செய்ய முடியாது। அரசியல் சாசனத்தில் அதட்கு ஒரு விதி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது।

  • தொடங்கியவர்
8 minutes ago, Vankalayan said:

சடடப்படி ஜனாதிபதியாக ஒருவர் இருந்த காலத்தில் செய்த குற்றத்துக்காக கைது செய்ய முடியாது। அரசியல் சாசனத்தில் அதட்கு ஒரு விதி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது।

சட்டத்தின் முன் யாவரும் சமம் என்பது வெறும் பாடசாலைகளுக்கே 🙂 

Just now, ampanai said:

சட்டத்தின் முன் யாவரும் சமம் என்பது வெறும் பாடசாலைகளுக்கே 🙂 

அப்படி இருந்தாலும் , வழக்காடும்பொழுது அரசியல் சாசன புத்தகமே ஏற்றுக்கொள்ளப்படும்। இது ஒரு விதி விலக்காக தங்களை காத்துக்கொள்ள ஏட்படுத்திய ஒரு சாசனம்।

  • தொடங்கியவர்
2 minutes ago, Vankalayan said:

அப்படி இருந்தாலும் , வழக்காடும்பொழுது அரசியல் சாசன புத்தகமே ஏற்றுக்கொள்ளப்படும்। இது ஒரு விதி விலக்காக தங்களை காத்துக்கொள்ள ஏட்படுத்திய ஒரு சாசனம்।

ஆம், நான் அதை மறுக்கவில்லை. எனது கேள்வி என்னவென்றால், அந்த சட்டத்தை  வைத்தே சில தலைவர்கள் குற்றமும் செய்கிறார்கள். குறிப்பாக இலங்கை போன்ற ஒற்றையாட்சி பல்லின மக்கள் சமுகத்தில். 

அதனால் தான் சில தலைவர்கள் ஒல்லாந்தின் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் சென்றார்கள். 

On 25/4/2020 at 07:08, ampanai said:

ஆம், நான் அதை மறுக்கவில்லை. எனது கேள்வி என்னவென்றால், அந்த சட்டத்தை  வைத்தே சில தலைவர்கள் குற்றமும் செய்கிறார்கள். குறிப்பாக இலங்கை போன்ற ஒற்றையாட்சி பல்லின மக்கள் சமுகத்தில். 

அதனால் தான் சில தலைவர்கள் ஒல்லாந்தின் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் சென்றார்கள். 

அப்படி என்றால் இதையும் அங்கு கொண்டு செல்ல முடியும்தானே? அதில் எது சடட சிக்கல் இருக்குமோ? 

  • கருத்துக்கள உறவுகள்
On 23/4/2020 at 18:07, போல் said:

முறையான விசாரணை நடந்தால் ஒன்றல்ல மூன்று சனாதிபதிகளும் சிறைகளில் அடைபட / தூக்கில் தொங்க வேண்டியவர்கள்.

சரியாக... சொன்னீர்கள். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.