Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு அதிகரிப்பு : இராணுவத்தினர் குவிப்பு

Featured Replies

ஸ்ரீ ஜயவர்தனபுரவில் அமைந்துள்ள நாடாளுமன்றத்தின் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தின் பாதுகாப்புக்காக நேற்று மாலை முதல் இராணுவத்தினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

பொதுத் தேர்தலை நடத்துவதற்காக அரசியலமைப்புச் சட்டத்தில் தனக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரங்களுக்கு அமைய ஜனாதிபதி கடந்த மார்ச் 2 ஆம் திகதி நாடாளுமன்றத்தை கலைத்து வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டார்.

எனினும் தற்போது நாட்டில் நிலவும் கொரோனா நிலைமை காரணமாக பொதுத் தேர்தலை நடத்தி, புதிய நாடாளுமன்றத்தை கூட்ட முடியாத சூழ்நிலையில், கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை கூட்ட வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருவதுடன் அதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் றாடாளுமன்றத்தின் பாதுகாப்பு திடீரென அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.ibctamil.com/srilanka/80/141819

  • தொடங்கியவர்

நாடாளுமன்றத்தை விரைவில் கூட்டாவிட்டால் கோட்டாபயவுக்கு எதிராக நீதிமன்றம் செல்லத் தயார்! விடுக்கப்பட்டது எச்சரிக்கை

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிமிக்க சூழலைக் கருத்திற்கொண்டு நாடாளுமன்றத்தை விரைவில் அழைக்காவிட்டால் ஜனாதிபதிக்கெதிராக நீதிமன்றம் செல்லக்கூடிய நிலைமை வரலாம் என்று ஜனநாயகத்திற்கான சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளரான சட்டவல்லுநர் லால் விஜேநாயக்க, அரசாங்கத்தை எச்சரித்துள்ளார்.

அவ்வாறு நீதிமன்றத்தை சிலர் நாடினால் 2018ஆம் ஆண்டில் அரசியலமைப்பு குழப்பத்தை ஏற்படுத்திய அரசாங்கத்திற்கு ஏற்பட்ட தோல்வி நிலையே கோட்டா-மஹிந்த தலைமையிலான அரசாங்கத்திற்கும் ஏற்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் கொரோனா வைரஸின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் கலைக்கப்பட்டிருக்கும் நாடாளுமன்றத்தைக் கூட்டி நாட்டிற்கான தீர்மானங்களை எடுக்குமாறு எதிரணி உள்ளிட்ட பல தரப்பினராலும் கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றன. எனினும் அந்தக் கோரிக்கைளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நிராகரித்து வருகின்றார்.

குறிப்பாக நேற்றைய தினம் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற மகா சங்கத்தினர் மற்றும் மகாநாயக்க தேரர்களுடனான சந்திப்பின் போதும் அவர் தனது விடாப்படியான தீர்மானத்தைத் தெளிவுபடுத்தியுள்ளார். இந்நிலையில், கண்டியில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய சட்டவல்லுநர் லால் விஜேநாயக்க, விரைவில் நாடாளுமன்றத்தைக் கூட்டாவிட்டால் அரசாங்கத்திற்கு எதிராக சிலர் நீதிமன்றத்தை நாடவேண்டிய நிலைமை வரலாம் என்று குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

நாடாளுமன்றத்தை ஜனாதிபதி தொடர்ந்தும் கூட்டாமலிருந்தால் சபையை அழைக்கும்படி கூறும் தரப்பினரால் பெரும்பாலும் நீதிமன்றத்தை நாட வேண்டி வரலாம். அவ்வாறு நீதிமன்றத்தை நாடும் பட்சத்தில் 2018ஆம் ஆண்டில் ஒக்டோபரில் ஏற்பட்ட நிலைமையே இந்த அரசாங்கத்திற்கும் ஏற்படலாம். மஹிந்த ராஜபக்சவை அப்போதைய ஜனாதிபதி பிரதமராக நியமித்ததினால் அரசியலமைப்பு குழப்பநிலை ஏற்பட்டது.

பின்னர் திரும்பவும் பழைய நிலைமைக்கே வரவேண்டிய நிலைமை அரசாங்கத்திற்கு ஏற்பட்டிருந்தது. ஆகவே தற்போதைய அவசர நிலைமை போன்று இதற்கு முன்னர் எமது நாட்டில் இருந்ததில்லை. அதனைக் கருத்திற்கொண்டு நாடாளுமன்றத்தை கூட்டுவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும். நாடாளுமன்றத்தை அவர் திரும்பக்கூட்டினால் ஜனாதிபதியின் பதவி நிலைகளில் எந்தவொரு அதிகாரமும் இல்லாமல் போய்விடாது.

அதற்கு அச்சுறுத்தலும் ஏற்படாது. அதேபோலவே பிரதமரின் பதவியாகும். எமது நாட்டில் உச்சநிலை நாடாளுமன்றம். அதனை அழைக்காமல் இப்போது ஒன்றுமே செய்யவும் முடியாது. ஜனாதிபதி இப்படியே இருந்தால் மார்ச் 2ஆம் திகதி நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் வலுவற்றதாகிவிடும்.

பின்னர் தேர்தல் நடத்தினாலும் கூட புதிய நாடாளுமன்றம் கூடும் திகதியை ஜனாதிபதி வர்த்தமானியில் அறிவிக்க வேண்டும். அவ்வாறு செய்வதற்கு முன்னர் ஜனாதிபதியினால் இப்போதே பிழையை உணர்ந்து நாடாளுமன்றத்தைக் கூட்ட வேண்டும். தற்போது சில சட்டவல்லுநர்கள் எனக் கூறிக்கொள்பவர்களே 2018ஆம் ஆண்டில் ஒக்டோபரில் ஏற்பட்ட அரசியலமைப்புக் குழப்ப நிலையில் அரசாங்கம் எடுத்தது சரியான தீர்மானம் என்று தெரிவித்திருந்தனர்.

ஆனால் இறுதியில் அவர்கள் எடுத்த தீர்மானம் பிழை என்பதை நீதிமன்றம் அறிவித்தது. ஆகவே இப்போது நாடாளுமன்றத்தை அழைப்பதே சரியான முடிவானதாக அமையும். 1980களில் அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர் ஜயவர்தன தேர்தலின்றி நாடாளுமன்றத்தை நடத்திச் செல்வதற்காக பொது மக்கள் கருத்துக் கணிப்பை நடத்தியிருந்தார்.

அது மிகவும் மோசடிமிக்கதாக நடத்தப்பட்டது. அதன் காரணமாகவே கலவரமும் உருவாகியது. எனவே ஒருவர் செய்ததினால் இன்னுமொருவர் அதனையே செய்ய வேண்டும் என்ற எண்ணம் தவறாகும் எனவும் அவர் தெரிவித்தார்.

https://www.ibctamil.com/srilanka/80/141884

  • கருத்துக்கள உறவுகள்

கொத்தாவுக்கு  கொரனோ  மீது படு பயங்கரமாய் கோபம் வந்துவிட்டது போல் உள்ளது இனி ஆமியை வைத்து கொர்னோவை  துவக்கால் சுட்டு கொல்லபோகினம் ஆக்கும் .😀

நினைத்தது நடக்கவில்லை இனி b  பிளானாக இருக்க கூடும்.

 

3 hours ago, போல் said:

மேலும் கொரோனா வைரஸின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் கலைக்கப்பட்டிருக்கும் நாடாளுமன்றத்தைக் கூட்டி நாட்டிற்கான தீர்மானங்களை எடுக்குமாறு எதிரணி உள்ளிட்ட பல தரப்பினராலும் கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றன. எனினும் அந்தக் கோரிக்கைளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நிராகரித்து வருகின்றார்.

கொரானாவுக்குள் துரோகிகள் இல்லையாம். சிங்களம் கவலை 🤔

கொரோனா இப்பிடி காலை வாரும் என்டு முதலே கோட்டா கோஷ்டிக்கு சொல்லாத சிங்கள யோசியர்களை முதல்ல ஒருகை பாக்கட்டும்.

  • தொடங்கியவர்

நாடாளுமன்றத்தை சுற்றி இராணுவம் குவிப்பு, பாதுகாப்பு நடவடிக்கைகளும் தீவிரம்..!

army-1.jpg

நாடாளுமன்ற வளாகத்தினை சுற்றி ஆயுதம் ஏந்திய இராணுவம் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளதையும் இதுபோன்ற பாதுகாப்பு ஏற்பாடுகள் எதற்கு என்றும் முன்னாள் அமைச்சர்கள் சபாநாயகரிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.

நாடாளுமன்ற பொதுச்செயலாளருக்கு முன்னாள் அமைச்சர்களான எரான் விக்ரமரத்ன மற்றும் ஹர்ஷ டி சில்வா ஆகியோர் எழுதிய கடிதத்திலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் “நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நாடே முடக்கப்பட்டுள்ள நிலையில், இதுபோன்ற பாதுகாப்பு மாற்றங்களுக்கு என்ன தேவை என்பதை நாங்கள் அறிய விரும்புகின்றோம்.

மேலும் அச்சுறுத்தல் காணப்படுகின்றனவா அல்லது பயங்கரவாத அச்சுறுத்தல் காணப்படுகின்றனவா? வழக்கமான பாதுகாப்பு ஏற்பாடுகளை மாற்ற வேண்டிய அளவுக்கு ஏதும் அச்சுறுத்தல் இருக்கின்றனவா என்பது குறித்த எந்த தகவல்களும் எங்களுக்கு கிடைக்கவில்லை” என தெரிவித்துள்ளனர்.

நாட்டில் அமைதியைப் பேணுவதற்கும் ஜனநாயகத்தின் அத்தியாவசிய கூறுகளான நிறைவேற்று, சட்டமன்றம் மற்றும் நீதித்துறை ஆகியவற்றைப் பாதுகாப்பது அனைத்து பிரஜைகளின் கடமையாகும் என்றும் குறிப்பாக வரிசெலுத்தும் மக்களின் கடமை என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஜனநாயகத்தின் அத்தியாவசிய கூறுகளான நிறைவேற்று, சட்டமன்றம் மற்றும் நீதித்துறை ஆகியன ஒன்றோடு ஒன்று தாக்கத்தை ஏற்படுத்த கூடாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனநாயகத்தின் முக்கிய மூன்று கூறுகளின் தனித்துவத்தை பாதுகாப்பதில் இலங்கைக்கு மிக நீண்ட வரலாற்று பாரம்பரியம் ஒன்று உண்டு என்பதை சுட்டிக்காட்டியுள்ள முன்னாள் அமைச்சர்கள் இவ்வாறான நடவடிக்கைகளை அனுமதிக்க கூடாது என்பதை நாம் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

http://athavannews.com/நாடாளுமன்றத்தை-சுற்றி-இர/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.