Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லண்டனிலிருந்து இன்று கொழும்பு திரும்பும் 260 பேர்: ஹொட்டல்களில் தனிமைப்படுத்தப்படுவர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

லண்டனிலிருந்து இன்று கொழும்பு திரும்பும் 260 பேர்: ஹொட்டல்களில் தனிமைப்படுத்தப்படுவர்

srilankan-300x200.jpgவெளிநாடுகளிலிருந்து அழைத்து வரப்படுபவர்கள் ஹோட்டல்களில் தனிமைப் படுத்தப்படவுள்ளனர் என இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். முதற்கட்டமாக லண்டனிலிருந்து இன்று நாடு திரும்பும் 260 பேர் ஹொட்டல்களில் தனிமைப்படுத்தப்படவுள்ளார்கள்.

இராணுவ முகாம்களில் இடநெருக்கடி ஏற்பட்டுள்ளதால் ஹோட்டல்களில் தனிமைப்படுத்தல் செயற்திட்டம் ஆரம்பிக்கவுள்ளதாகவும், எனினும் இதற்காக தனிமைப்படுத்தப்படுபவர்கள் ஹோட்டல்களிற்கு பணம் செலுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். ஹோட்டல்களில் தனிமைப்படுத்தப்படும் ஏற்பாட்டிற்கு சம்மதம் தெரிவிக்கும் இலங்கையர்களே நாட்டுக்கு அழைத்து வரப்படவுள்ளனர் எனவும் அவர் கூறினார்.

இன்று பிரித்தானியாவிலிருந்து 260 பேர் இலங்கை திரும்பவுள்ளகர். அவர்களைத் தங்க வைக்க நாட்டின் பல பாகங்களிலுமுள்ள ஹோட்டல் உரிமையாளர்கள் தமது ஹோட்டல்களை தனிமைப்படுத்தல் மையங்களாக்க விருப்பம் தெரிவித்துள்ளனர் எனவும் இராணுவத்தளபதி தெரிவித்தார். அத்துடன் ஹோட்டல் உரிமையாளர்கள் இதை இலாப நோக்கத்துடன் செயற்படுத்தவில்லையயன்றும் தெரிவித்தார். ஹொட்டலில் உணவு மற்றும் தேநீர் உட்பட ஒரு நாளைக்கு 7,500 ரூபா வசூலிக்கப்படவுள்ளதாகவும் இராணுவத் தளபதி தெரிவித்தார்.

 

http://thinakkural.lk/article/40234

18 minutes ago, உடையார் said:

ஹோட்டல்களில் தனிமைப்படுத்தப்படும் ஏற்பாட்டிற்கு சம்மதம் தெரிவிக்கும் இலங்கையர்களே நாட்டுக்கு அழைத்து வரப்படவுள்ளனர் எனவும் அவர் கூறினார்.

பெரும்புள்ளிகளின் பிள்ளைகள் ? 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இங்கிலாந்திலிருந்து இலங்கையை வந்தடைந்த 207 மாணவர்கள் (படங்கள் இணைப்பு)

இங்கிலாந்தில் சிக்கியிருந்த 207 மாணவர்கள் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

லண்டனில் ஹீத்ரூ விமான நிலையத்தில் இருந்து இலங்கை ஏர்லைன்ஸ் விமானம் யுஎல் -504 விமானம் மாணவர்களை ஏற்றியபடி அதிகாலை 3.30 அளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.

மாணவர்களையும், அவர்களின் பொதிகளையும் விமானப்படையினர் கிருமி நீக்கம் செய்தபின்னர் இலங்கை இராணுவத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பேருந்துகளில் அவர்கள் தனிமைப்படுத்தல் மையங்களிற்கு அழைத்து செல்லப்பட்டார்கள்.

இதேவேளை, இலங்கை மாணவர்களை அழைத்துச் வருவதற்காக மற்றொரு இலங்கை ஏர்லைன்ஸ் விமானம் இன்று காலை கட்டூநாயக்கவிலிருந்து லண்டனுக்கு புறப்பட்டது.lo.jpglo1.jpglo2.jpg

 
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ampanai said:

பெரும்புள்ளிகளின் பிள்ளைகள் ? 

27000 பேர் நாட்டுக்கு திரும்ப விருப்பம் தெரிவித்து உள்ளதாக செய்திகளில் படித்தேன் சிங்களவர்களாக இருக்கலாம் 

ஆனால் எந்தெந்த நாடுகள் என்று தெரியவில்லை  கொரானோக்கு இலங்கை பாதுகாப்பான நாடாகும் என்ற தலைப்பில்

19 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

27000 பேர் நாட்டுக்கு திரும்ப விருப்பம் தெரிவித்து உள்ளதாக செய்திகளில் படித்தேன் சிங்களவர்களாக இருக்கலாம் 

ஆனால் எந்தெந்த நாடுகள் என்று தெரியவில்லை  கொரானோக்கு இலங்கை பாதுகாப்பான நாடாகும் என்ற தலைப்பில்

தடுப்பூசியை உலகம் கண்டுபிடித்து, அதை உற்பத்திசெய்து ... இலங்கை மக்கள் காண 2021-22 ஆகலாம். அதுவரை இவர்களின் படிப்பு என்னாவது? 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ampanai said:

தடுப்பூசியை உலகம் கண்டுபிடித்து, அதை உற்பத்திசெய்து ... இலங்கை மக்கள் காண 2021-22 ஆகலாம். அதுவரை இவர்களின் படிப்பு என்னாவது? 

படிப்பை விட உயிர் முக்கியம் அல்லவா எனது சகோதரர் இந்தியாவில் இருந்து வந்து தற்போது தனிமைபடுத்தல் நிலையமான வெலிகந்தையில் உள்ளார் பட்டப்படிப்புக்காக சென்றவர்.

1 minute ago, தனிக்காட்டு ராஜா said:

படிப்பை விட உயிர் முக்கியம் அல்லவா எனது சகோதரர் இந்தியாவில் இருந்து வந்து தற்போது தனிமைபடுத்தல் நிலையமான வெலிகந்தையில் உள்ளார் பட்டப்படிப்புக்காக சென்றவர்.

உண்மை. அப்படியே பல மாதங்கள் / வருடங்கள் இருப்பதுதான் சவால். 

  • கருத்துக்கள உறவுகள்

இப்பொழுது இங்கிலாந்தில் படிப்பதற்கு பெரும்புள்ளிகளின் பிள்ளைகளாக இருக்க தேவையில்லை.
மேலும் இங்கிலாந்தை விட கனடா/அவுஸ் சிறந்தது. குடிவரவு சட்டங்கள் இலகுவானபடியால் படித்து முடித்தவுடன் குடிபெயர இலகுவாக இருக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, ampanai said:

உண்மை. அப்படியே பல மாதங்கள் / வருடங்கள் இருப்பதுதான் சவால். 

பயம் பழக்கப்படுத்திகொள்ள வைக்கும் 😃

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.