Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நெருக்கடி நிலையில் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு- தமிழ் தேசியக் கூட்டமைப்பு குறித்து விமல்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நெருக்கடி நிலையில் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு- தமிழ் தேசியக் கூட்டமைப்பு குறித்து விமல்!

 

 

   by : Litharsan

கொரோனா வைரஸ் பரவலின் நெருக்கடியான நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்க முன்வந்தமை ஏற்றுக்கொள்ள கூடிய செயற்பாடு என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

அத்துடன், அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரதமரிடம் எந்தவித கோரிக்கைகளையும் சமர்ப்பிக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் கூறுகையில், கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தவும், சவால்களை வெற்றிக்கொள்ளவும் எதிர்த் தரப்பினர் எந்நிலையிலும் அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை.

பிரதமர் தலைமையில் அலரி மாளிகையில் கடந்த 4ஆம் திகதி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களது பங்குப்பற்றலுடன் முக்கிய பேச்சுவார்த்தை இடம்பெற்றது.

இதன்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் பிரதமரிடம் கோரிக்கை உள்ளடங்கிய பத்திரங்களைச் சமர்ப்பித்தார்கள். இது தொடர்பாக மாறுபட்ட கருத்துக்கள் குறிப்பிட்டப்படுகின்றன. அரசியல் நோக்கங்களை அடிப்படையாக்க் கொண்டு கூட்டமைப்பினர் பிரதமரிடம் எவ்வித கோரிக்கைகளையும் விடுக்கவில்லை.

அரசாங்கத் தரப்பினருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இடையில் அரசியல் ரீதியான நிலைப்பாடு வேறுப்பட்டதாகவே காணப்படுகின்றது.

எனினும், நெருக்கடி நிலையில் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்க கூட்டமைப்பினர் முன்வந்தமை ஏற்றுக்கொள்ளக்கூடிய செயற்பாடாகும்” என்று குறிப்பிட்டார்.

http://athavannews.com/நெருக்கடி-நிலையில்-அரசாங/

 

நெருக்கடி நிலைகளில் தங்கள் பெட்டிகளை நிரப்புவதில் கூட்டமைப்பினர் வல்லவர்கள். 
பெட்டிக்குள்ள ஏதாவது இரகசியமா கிடைக்குமென்றால் பெட்டிப்பாம்பா மாறிடுவீனம். 

  • கருத்துக்கள உறவுகள்

அரசின் பிரச்சாரங்களுக்கும், நல்ல பிள்ளை சான்றிதழுக்கு உழைக்கினம்.  வாழ்க கூட்டமைப்பினர்.

மக்களுக்காக உழைக்கும் (?) ஒரேயொரு கட்சி। தாங்கள் இப்போது பாராளுமன்ற உறுப்பினர்களாக இல்லாதபோதும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி , வன்னி , கிழக்கு போன்ற இடங்களிருந்து கொழும்பு வந்து மக்களுக்காக பேசிய ஒரே கட்சியினர்। மற்ற கட்சியினரைப்போல அறிக்கை விட்டிட்டு இருப்பவர்கள் இவர்கள் அல்ல। இப்படியான மக்கள் சேவகர்களை விமர்சிப்பது (?)  அவ்வளவு சரியாக தெரியவில்லை। 

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, Vankalayan said:

மக்களுக்காக உழைக்கும் (?) ஒரேயொரு கட்சி। தாங்கள் இப்போது பாராளுமன்ற உறுப்பினர்களாக இல்லாதபோதும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி , வன்னி , கிழக்கு போன்ற இடங்களிருந்து கொழும்பு வந்து மக்களுக்காக பேசிய ஒரே கட்சியினர்। மற்ற கட்சியினரைப்போல அறிக்கை விட்டிட்டு இருப்பவர்கள் இவர்கள் அல்ல। இப்படியான மக்கள் சேவகர்களை விமர்சிப்பது (?)  அவ்வளவு சரியாக தெரியவில்லை। 

கடைசியாக விமல் தந்த சார்ட்டிபிகேட்டை  வைத்து வெள்ளையடிக்க வேண்டிய நிலைமை, 
வடக்கு கிழக்கு இணைப்பிற்குள் சமஷ்டியை  சொருகி ஏக்கிய ராஜ்யவிற்கு தமிழில் தீசிஸ் எழுதி சூப்பு வைத்த பெருமையை மக்களுக்காக (?) பேசிப்பேசி தனதாக்கியிருக்கிறது கூத்தமைப்பு , கிடைத்த வாய்ப்பை வைத்து அரசாங்கத்தோடு சேர்ந்து ஒரு நான்கு தமிழனுக்கு வேலை வாய்ப்பாவது வாங்கிகொடுத்திருக்கலாம், வெளியே சொல்லிக்கொள்ளும்  மாதிரியாவது இருந்திருக்கும்.
சம் கொடுத்த கோப்பு மஹிந்த மாத்தையாவின் மேசையிலிருக்கா என்று பாருங்க ,
கொடுத்த கையுடன் குப்பை தொட்டிக்கு போயிருக்கும் வாய்ப்புதான் அதிகம்       

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.