Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

20ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய இனப்படுகொலை குற்றவாளி தலைமறைவாக இருந்த நிலையில் கைது!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ருவாண்டாவில் நிகழ்ந்த இனப்படுகொலையின் சூத்திரதாரியென பெயரிடப்பட்ட பெலிசியன் கபுகா 25 ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கைக்கு பின்னர் நேற்று சிக்கினார். பிரான்ஸில் அடையாளத்தை மறைத்து வாழ்ந்து வந்த அவரை பொலிசார் கைது செய்தனர்.

20ஆம் 20 ஆம் நூற்றாண்டில் நடந்த மிக மோசமான படுகொலைகளில் ருவாண்டாவில் நடந்த படுகொலைகளும் அடங்கும்.

84 வயதான அவர், அடையாளத்தை மறைத்து, வேறொரு நபரின் அடையாளத்துடன்  அஸ்னியர்ஸ்-சுர்-சீன் பகுதியில் ஒரு பிளாட்டில் வசித்து வந்ததாக பிரெஞ்சு நீதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ருவாண்டாவில் தேடப்படும் மிக முக்கிய மனிதரான அவரது தலைக்கு 5 மில்லியன் அமெரிக்க டொலர் அறிவிக்கப்பட்டிருந்தது.

தனது பிள்ளைகளுடன் அவர் தலைமறைவாக வாழ்ந்து வந்துள்ளார்.

“உலகில் அதிகம் தேடப்பட்ட தப்பியோடியவர்“ என அவர் வர்ணிக்கப்படுகிறார்.

1994ஆம் ஆண்டு ருவாண்டாவில் மீதான இனப்படுகொலைக்கு, ஆயுதப்படைகளிற்கு நிதியளித்த பிரதான நபர் இவராவார். இந்த இனப்படுகொலையில் சுமார் 800,000 பேர் கொல்லப்பட்டனர்.

அவர் பிரான்சில் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு, பின்னர் ஹேக் சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார்.

ருவாண்டாவின் மிக செல்வந்தவர்களில் கபுகாவும் ஒருவர். தனது நிறுவனங்களின் மூலம் ஆயுத பரிமாற்றம், நிதி வழங்கி ஆயுதக்குழுக்களின் மூலம் துத்ஸி இனத்தவர்கள் மீது இனஅழிப்பை மேற்கொள்ள உதவினார். தனது ஒளிபரப்பு நிலையங்கள் மூலம் இனப்படுகொலையை ஊக்கப்படுத்தினர்.

அப்போதைய ஜனாதிபதி ஹபரிமானா சுட்டுவிழுத்தப்பட்டதை தொடர்ந்து இந்த படுகொலைகள் நடந்தன. ஹபரியமனாவின் மகன் கபுகாவின் மகளையே திருமணம் செய்திருந்தார்.

https://www.pagetamil.com/124585/

  • கருத்துக்கள உறவுகள்

அவர்களது ஆட்கள் தேடிப்பிடிச்சு மாட்டி விட்டிருக்கினம்...

நம்ம ஊர் கொலையாளிகள்.... டாக்கி அங்கிள் ஆட்கள் எல்லாம்.... நமக்குளேயே மறைந்து இருப்பார்கள்....

யாருக்கு தெரியும்?

  • கருத்துக்கள உறவுகள்

அடைக்கலம் கொடுத்தவர்களே ஏதாவது காரணத்திற்காக கைது செய்து இருக்கலாம் ...கொடுக்கல் ,வாங்கல் பிரச்சனை 

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, ரதி said:

அடைக்கலம் கொடுத்தவர்களே ஏதாவது காரணத்திற்காக கைது செய்து இருக்கலாம் ...கொடுக்கல் ,வாங்கல் பிரச்சனை 

அதுக்கு சாத்தியம் இல்லை. ஆள் வேறு பெயரில் இருந்திருக்கிறார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.