Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை: ஐந்து இணையதளங்களை முடக்கியது `தமிழீழ சைபர் படையணி` - விரிவான தகவல்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் உள்நாட்டு யுத்தம் நிறைவடைந்து 11 வருடங்கள் இன்றுடன் பூர்த்தியாகின்ற நிலையில், இலங்கை மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இலங்கை கணினி அவசர தயார் குழுவின் தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் தீனதயாளம் நாகரத்னன் பிபிசி தமிழுக்கு இந்த தகவலை உறுதிப்படுத்தினார்.

குறிப்பாக இன்றைய தினம் காலை முதல் இலங்கையின் மிக முக்கியமான 5 இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தமிழீழம் சைபர் படையணி (Tamil Eealm Cyber Force) என்ற அடையாளத்தை கொண்ட ஒரு பிரிவினரே இந்த தாக்குதலை நடத்தியுள்ளமை அவதானிக்க முடிகின்றது.

இலங்கை: தமிழீழம் சைபர் படையணி சைபர் தாக்குதல்

இலங்கையின் முன்னணி ஊடக நிறுவனமான ஹிரு நிறுவனத்தின் செய்தி இணையத்தளம் சைபர் தாக்குதல் மூலம் முடக்கப்பட்டதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் சார்பானவர்களே இந்த சைபர் தாக்குதலை நடத்தியதாக அந்த நிறுவனத்தின் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், இலங்கைக்கான சீன தூதரகத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தின் மீதும் இந்த சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

கடந்த சில வருடங்களாக ஒவ்வொரு ஆண்டும் இதே நாளின் இவ்வாறான சைபர் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவதாக இலங்கை கணினி அவசர தயார் குழுவின் தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் தீனதயாளன் நாகரத்னம் பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.

கடந்த ஆண்டும் இதேபோன்று சுமார் 10 இணையத்தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருந்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த முறை குறித்த சைபர் தாக்குதலை தடுத்து நிறுத்த தாம் பல்வேறு வகையிலான நடைமுறைகளைப் பின்பற்றியிருந்ததாக அவர் குறிப்பிட்டார்.

மே மாதம் 18ஆம் தேதி இந்த சைபர் தாக்குதல் நடத்தப்படுவதற்கான பிரதான காரணம், ஒரு குழுவின் பிரபல்யத்தை உறுதிப்படுத்துவதற்கு எனவும் அவர் கூறியுள்ளார்.

இலங்கை: தமிழீழம் சைபர் படையணி சைபர் தாக்குதல்

அதனால், குறித்த நபர்கள் தொடர்பிலான தகவல்களை வெளியிடாதிருப்பதே சிறந்தது என அவர் தெரிவிக்கின்றார்.

இந்த ஆண்டும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறும் என தாம் முன்னதாகவே எதிர்பார்த்திருந்ததாக கூறிய அவர், அதனை தடுத்து நிறுத்த பல முன் ஆயத்தங்களை மேற்கொண்டிருந்ததாகவும் சுட்டிக்காட்டினார்.

இதனை தடுத்து நிறுத்துவதற்கு இலங்கை கணினி அவசர தயார் குழு, இலங்கை விமானப்படையின் சைபர் பிரிவு மற்றும் இணையத்தள வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் நிறுவனங்களின் அதிகாரிகளையும் ஒன்றிணைத்து ஏற்கனவே ஒழு குழுவொன்று தயார்ப்படுத்தப்பட்டிருந்ததாக தீனதயாளன் கூறுகின்றார்.

தொடர்ந்தும் குறித்த குழு, இலங்கையிலுள்ள அனைத்து இணையத்தளங்களையும் கண்காணித்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இணையத்தளங்களை எவ்வாறு பாதுகாப்பது?

இலங்கை: தமிழீழம் சைபர் படையணி சைபர் தாக்குதல்

இணையத்தளங்களிலுள்ள சில குறைபாடுகளினாலேயே இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவதாக இலங்கை கணினி அவசர தயார் குழுவின் தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் தீனதயாளன் நாகரத்னம் தெரிவிக்கின்றார்.

புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்படுகின்ற சந்தர்ப்பங்களிலேயே, இணையத்தளங்களை புதுப்பித்து வருவோமேயானால் இவ்வாறான சைபர் தாக்குதல்களிலிருந்து பாதுகாத்துக்கொள்ள முடியும் என அவர் குறிப்பிடுகின்றார்.

எவ்வாறாயினும், தாம் தொடர்ந்தும் இவ்வாறான விடயங்கள் குறித்து ஆராய்ந்து வருவதாக தீனதயாளம் நாகரத்னம் கூறுகின்றார்.

https://www.bbc.com/tamil/sri-lanka-52706025?at_custom1=[post+type]&at_campaign=64&at_custom2=facebook_page&at_custom3=BBC+Tamil&at_custom4=A6169F26-98E9-11EA-AE0C-33C7FCA12A29&at_medium=custom7&fbclid=IwAR2XBp2IVZQc4lYznKeiAXa2ObXTgG1z7sD-hkE_Xf43AUbT1wXUCiwIkQ8

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, பெருமாள் said:

பொறியியலாளர் தீனதயாளன் நாகரத்னம்

அங்கும் ஒரு தமிழன் தான்.. சிங்களவனைப் பாதுகாக்கிறான். தாக்குதல் நடத்தியதும் தமிழன்.. அதனை எதிர்ப்பவனும் தமிழன். இடையில் சிங்களன் குளிர்காய்கிறான்.. வெற்றி விழாக் கொண்டாடிக் கொண்டு.

ரஜரட்டை பல்கலைக்கழக புதிய இணையத்தளத்திலும் நேற்றிரவு புலிக்கொடி பறந்ததைக் காணக் கூடியதாக இருந்தது. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த டெல்லிக்கு  காவடி எடுக்கும் கூட்டம் தமிழ் பிபிசி  தமிழீழ சைபர் படையணி என்று மித்திரன் ரென்சில் தலையங்கம் வைக்கினம் கன  அர்த்தம் வருது .😉

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பெருமாள் said:

இந்த டெல்லிக்கு  காவடி எடுக்கும் கூட்டம் தமிழ் பிபிசி  தமிழீழ சைபர் படையணி என்று மித்திரன் ரென்சில் தலையங்கம் வைக்கினம் கன  அர்த்தம் வருது .😉

நான் நேற்றே ரஜரட்ட பல்கலைக்கழக புதிய தளத்தில் பார்த்தேன். தமிழீழ சைபர் போஸ் என்று தான் எழுதி இருந்தார்கள். முகப்பில் தமிழீழ புலிச் சின்னம் போடப்பட்டிருந்தது. இப்போது நீக்கி விட்டிருக்கிறார்கள். 

2 hours ago, பெருமாள் said:

அத்துடன், இலங்கைக்கான சீன தூதரகத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தின் மீதும் இந்த சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

விடுதலை புலிகளின் பெயரில்  சில வல்லரசுகள் அரச பயங்கரவாதத்தை செய்தவண்ணம் தான் உள்ளன. 
 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nedukkalapoovan said:

நான் நேற்றே ரஜரட்ட பல்கலைக்கழக புதிய தளத்தில் பார்த்தேன். தமிழீழ சைபர் போஸ் என்று தான் எழுதி இருந்தார்கள். முகப்பில் தமிழீழ புலிச் சின்னம் போடப்பட்டிருந்தது. இப்போது நீக்கி விட்டிருக்கிறார்கள். 

டார்க் வெப்பில்  பிட் காய்நின்  பண பரிவர்த்தனையில் உங்களுக்கு தேவையான இணைய தாக்குதல்கள் பெயரில்லாமல் அனானி கள்  செய்யலாம் எனக்கென்னவோ நீங்கள்  கல்யாணம் கட்டியபின் பழைய ஆக்ரோஷம் இல்லை ஒருவேளை வேறு யாரோ உங்கள் பெயரில் எழுதுவது போல் ஒரு பிரமை தோனுது .

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

டார்க் வெப்பில்  பிட் காய்நின்  பண பரிவர்த்தனையில் உங்களுக்கு தேவையான இணைய தாக்குதல்கள் பெயரில்லாமல் அனானி கள்  செய்யலாம் எனக்கென்னவோ நீங்கள்  கல்யாணம் கட்டியபின் பழைய ஆக்ரோஷம் இல்லை ஒருவேளை வேறு யாரோ உங்கள் பெயரில் எழுதுவது போல் ஒரு பிரமை தோனுது .

நான் அவதானித்ததை தான் பதிவு செய்திருக்கிறேன். இதன் முன்புலம்.. பின்புலம் பற்றி எல்லாம் ஆராய்ந்து அல்லது உய்த்தாய்ந்து தகவல் எழுதவில்லை. நேரடி காட்சித் தகவல் தான்.

இணையத்தில் பல பின்னணி நடவடிக்கைகள்.. நடக்கின்றன... என்பது தெரியும்.

எதுஎப்படியோ.. இது ஒரு வகை செய்தியாகி உள்ளது. 

  • கருத்துக்கள உறவுகள்

இவைகள் எல்லாம் விடுதலைப் புலிகள் மற்றும் அவர்களது ஆதரவுத்தளங்களை இலக்குவைத்து நடாத்தப்படும் அவதூறுத் தாக்குதல்கள். மிகவும் சரியாகத் திட்டமிட்டுச் செய்கிறார்கள்

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Elugnajiru said:

இவைகள் எல்லாம் விடுதலைப் புலிகள் மற்றும் அவர்களது ஆதரவுத்தளங்களை இலக்குவைத்து நடாத்தப்படும் அவதூறுத் தாக்குதல்கள். மிகவும் சரியாகத் திட்டமிட்டுச் செய்கிறார்கள்

இது புதிதல்ல. ஹிந்திய படை ஆக்கிரமிப்பின் போது புலிகளில் இலச்சனையோடு போலி துண்டுபிரசுரங்களை விட்டு.. மக்களை குழப்பிறது இப்படி பல்வேறு நிகழ்வுகளை நாம் கண்டிருக்கிறோம்.

ஆனால்.. இணைய வழிச் செயற்பாடுகளில்.. தன்னார்வமுள்ள தொழில்நுட்ப அறிவுள்ள ஒரு சிலரே இப்படியான செயற்பாடுகளை செய்யக் கூடும். திட்டமிட்ட.. புலனாய்வாளர்களின் செயற்பாடுகளும் இருக்கலாம்.

இன்றைய சூழலில்.. எமக்கு இது ஒன்றும் பெரிய பாதிப்பாக இருக்கப் போவதில்லை.. என்பதே யதார்த்தம்.

சீனாவோ.. சிங்களமோ எமது வலியை உணர்வதாக இல்லை. ஒரு சிங்கள ஊடகமும் கூட முள்ளிவாய்க்கால் நினைவஞ்சலியை செய்தியாகக் கூடப் போடவில்லை. ஆனால்.. இதனை செய்தியாக்கி இருக்கிறார்கள். அந்த வகையில் முள்ளிவாய்க்கால் மறைமுகமாக நினைவு கூறப்பட்டுள்ளது. 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தாக்குதலால் இன்னும் பல உக்கிரமான செய்திகளையும் வக்கிரமான பேச்சுகளையும் இலங்கையில் காணலாம் 

அம்பு தொடுத்தாலும் காய் வீழ்ந்தாலும் காயம் கீழ் உள்ளவனுக்கே

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

இந்த தாக்குதலால் இன்னும் பல உக்கிரமான செய்திகளையும் வக்கிரமான பேச்சுகளையும் இலங்கையில் காணலாம் 

அம்பு தொடுத்தாலும் காய் வீழ்ந்தாலும் காயம் கீழ் உள்ளவனுக்கே

அம்பு தொடுக்காவிட்டாலும்.. ஆக்கிரமிப்பு பாதங்களுக்கு அடிமைகளின் அழுகுரல் கேட்காது. இது தான் யதார்த்தம். ஆக்கிரமிப்பு ஒன்றுள்ளது என்பதை வெளி உலகமாவது உணர வேண்டும்... ஆக்கிரமிப்பாளனை ஏவுவனும் உணர வேண்டும். இன்றேல் அடிமைக்கு விடிவில்லை... வலிக்கு மருந்தும் இல்லை. 

அச்சப்பட அச்சப்பட.. அடி தான் கூடும். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

இந்த தாக்குதலால் இன்னும் பல உக்கிரமான செய்திகளையும் வக்கிரமான பேச்சுகளையும் இலங்கையில் காணலாம் 

அம்பு தொடுத்தாலும் காய் வீழ்ந்தாலும் காயம் கீழ் உள்ளவனுக்கே

மவுனிப்பு என்பது எல்லாத்துக்கும் தான் .

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, nedukkalapoovan said:

அம்பு தொடுக்காவிட்டாலும்.. ஆக்கிரமிப்பு பாதங்களுக்கு அடிமைகளின் அழுகுரல் கேட்காது. இது தான் யதார்த்தம். ஆக்கிரமிப்பு ஒன்றுள்ளது என்பதை வெளி உலகமாவது உணர வேண்டும்... ஆக்கிரமிப்பாளனை ஏவுவனும் உணர வேண்டும். இன்றேல் அடிமைக்கு விடிவில்லை... வலிக்கு மருந்தும் இல்லை. 

அச்சப்பட அச்சப்பட.. அடி தான் கூடும். 

வெளி உலகம் என்று எதை சொல்கிறீர்கள் வெளிநாடுகளையா? அல்லது வெளிநாட்டில் உள்ள நம்ம மக்களையா ??

அச்சப்பட அச்சப்பட அடிதான் கூடும் வேண்டுறவனுகே வலி தெரியும் 

பூனை விளையாடும் எலி போராடும் யதார்த்தம் இதுவே நெடுக்கு 

Just now, பெருமாள் said:

மவுனிப்பு என்பது எல்லாத்துக்கும் தான் .

நாளை வேறு இணையத்தளம் வரலாம் அது புலிக்கும் புலியாக சித்தரிக்கப்படுகின்ற தமிழர்களுக்கும் இன்னும் எண்ணெய் ஊற்றி எரிய வைக்கலாம் 

ஆனால் குளிர் காய்பவன் எங்கோ இருக்க??

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

வெளி உலகம் என்று எதை சொல்கிறீர்கள் வெளிநாடுகளையா? அல்லது வெளிநாட்டில் உள்ள நம்ம மக்களையா ??

அச்சப்பட அச்சப்பட அடிதான் கூடும் வேண்டுறவனுகே வலி தெரியும் 

பூனை விளையாடும் எலி போராடும் யதார்த்தம் இதுவே நெடுக்கு 

நாளை வேறு இணையத்தளம் வரலாம் அது புலிக்கும் புலியாக சித்தரிக்கப்படுகின்ற தமிழர்களுக்கும் இன்னும் எண்ணெய் ஊற்றி எரிய வைக்கலாம் 

ஆனால் குளிர் காய்பவன் எங்கோ இருக்க??

உண்மை தெரிந்து மக்களுக்கு தெரியப்படுத்தும் ஊடகவியல் ஆள் சாதாரண ட்ராக்கடர் விபத்தில் கொல்லப்படுகிறார் .

மவனிப்பு என்ற சொல்லின்பின் ஒரு அணுவும் அசையாது இருக்கும்போது எங்கிருந்து வந்து குதித்தது  தமிழீழ சைபர் படையணி?

அவர்கள் அப்படி சொல்ல சொன்னார்கலாமா பிபிசி தமிழிடம் நம்மவர் நடாத்தும் பல நிகழ்வுகளை இருட்டுஅடிப்பது  பிபிசி தமிழின் வேலை இதை மாத்திரம் தூக்கி கொண்டு ஓடி திரியினம் .

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பெருமாள் said:

உண்மை தெரிந்து மக்களுக்கு தெரியப்படுத்தும் ஊடகவியல் ஆள் சாதாரண ட்ராக்கடர் விபத்தில் கொல்லப்படுகிறார் .

மவனிப்பு என்ற சொல்லின்பின் ஒரு அணுவும் அசையாது இருக்கும்போது எங்கிருந்து வந்து குதித்தது  தமிழீழ சைபர் படையணி?

அவர்கள் அப்படி சொல்ல சொன்னார்கலாமா பிபிசி தமிழிடம் ?

விபத்து நடந்தது உழவு இயந்திரத்தால் அதை ஓட்டியவர்தான் கொலை செய்திருப்பார் என்பது சந்தேகமே

பிபிசி தமிழ் இருக்கட்டும் புலிகளை புலிகளின் பெயர்களை வைத்து இயக்கும் நாடுகளை கண்டுபிடியுங்கள் இன்னும் புலிகள் தீவிரவாதிகள்தான் என்ற சொல்லுக்குள்ள வைத்திருக்க போறிங்கள் போல இதை வைத்தே இலங்கை அரசு அதன் வேலையை பார்க்கும் அதை நான் சொல்லியா நீங்கள் அறிய வேண்டும் பெருமாள் ஈரை பேன் ஆக்கி பெருச்சாளியாக ஆக்கும் அரசாங்கம் தற்போது அதை நீங்கள் முதலில் புரிந்துகொள்ளுங்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

விபத்து நடந்தது உழவு இயந்திரத்தால் அதை ஓட்டியவர்தான் கொலை செய்திருப்பார் என்பது சந்தேகமே

பிபிசி தமிழ் இருக்கட்டும் புலிகளை புலிகளின் பெயர்களை வைத்து இயக்கும் நாடுகளை கண்டுபிடியுங்கள் இன்னும் புலிகள் தீவிரவாதிகள்தான் என்ற சொல்லுக்குள்ள வைத்திருக்க போறிங்கள் போல இதை வைத்தே இலங்கை அரசு அதன் வேலையை பார்க்கும் அதை நான் சொல்லியா நீங்கள் அறிய வேண்டும் பெருமாள் ஈரை பேன் ஆக்கி பெருச்சாளியாக ஆக்கும் அரசாங்கம் தற்போது அதை நீங்கள் முதலில் புரிந்துகொள்ளுங்கள்.

புலி மவனித்து 10 ஆண்டுக்கு மேலாகிறது இனவாத சொறிலங்கா இன்றும் ஆர்ப்பரித்து கொண்டு புலி பூச்சாண்டி காட்டிக்கொண்டு இருக்கிறது மேலும் தான் ஏத்திய நெருப்பை அனையவிடாமல் பார்த்துக்கொள்கிறது. 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பெருமாள் said:

புலி மவனித்து 10 ஆண்டுக்கு மேலாகிறது இனவாத சொறிலங்கா இன்றும் ஆர்ப்பரித்து கொண்டு புலி பூச்சாண்டி காட்டிக்கொண்டு இருக்கிறது மேலும் தான் ஏத்திய நெருப்பை அனையவிடாமல் பார்த்துக்கொள்கிறது. 

இதுதான் இலங்கை .......................... அரசும் தந்திரமும் 

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, பெருமாள் said:

புலி மவனித்து 10 ஆண்டுக்கு மேலாகிறது இனவாத சொறிலங்கா இன்றும் ஆர்ப்பரித்து கொண்டு புலி பூச்சாண்டி காட்டிக்கொண்டு இருக்கிறது மேலும் தான் ஏத்திய நெருப்பை அனையவிடாமல் பார்த்துக்கொள்கிறது. 

தமிழர்கள் இலங்கைத் தீவில் சிங்களவர்களுடன் சேர்ந்து வாழனும் என்று விரும்பும் வரை இந்தப் பிரச்சனை இருக்கும். புலி இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன.

புலி இல்லாத வேளையில் கூட 1965  இல் இனவாத பிக்குகள் இராணுவத்தை வடக்குக் கிழக்கு நோக்கி ஏவச் சொல்லிவிட்டார்கள்.

நாம் தேவையற்றதுக்கு அஞ்சி அஞ்சி தேவையானதைச் செய்யாமல் இருப்பது தான் எமக்கு ஆபத்தாகும். 

https://www.facebook.com/kuruvikal/videos/10157357087652944/?t=7

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

மேலே அந்தாள் எமக்கு ஆதரவாய் குரல் கொடுக்குது ஆனால் சிங்களவர்கள் ஆடும் ஆட்டத்தை பாருங்கள் .

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இந்த தாக்குதலால் இன்னும் பல உக்கிரமான செய்திகளையும் வக்கிரமான பேச்சுகளையும் இலங்கையில் காணலாம் 

அம்பு தொடுத்தாலும் காய் வீழ்ந்தாலும் காயம் கீழ் உள்ளவனுக்கே

உண்மை மாற்றுக்கருத்துக்கு இடமில்லை....ஆனால் ஈழம்,தமிழீழம்,தமிழ்தேசியம், வடக்கு கிழக்கு இவற்றை இலங்கைவாழ் தமிழ் மக்களும்,புலம்பெயர்ந்த தமிழர்களும் மறந்தாலும் (ஒரு பேச்சுக்கு) பல சர்வதேச நாடுகளுக்கு அவர்களது பூலோக அரசியல் தேவைக்கு இந்த கருத்தியல் தேவைப்படுகிறது....

தெமிழு,கொட்டி,இராணுவம்,பெள‌த்தசாசனLTTE,‌ போன்றவை தமிழன் அந்த நாட்டில் வாழும் வரை சிங்கள மக்களுக்கும் ஆட்சியாளர்களுக்கும் ,அரசியல்வாதிகளுக்கும் அன்றாட வாழ்க்கையின் ஒர் அம்சம்....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.