Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உங்களுக்கு 5000 ரூபாய் கிடைக்கவில்லையா? நீங்களும் முறையிடலாம்

Featured Replies

கொரோனா தொற்று பரவியதை அடுத்து பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு 5,000 ரூபா கொடுப்பனவு வழங்கப்பட்டதில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக கணக்காய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் 3 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும், அவை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவு கணக்காய்வாளர் நாயகம் W.B.C. விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.

கொடுப்பனவு விடயத்தில் ஏதேனும் முறைப்பாடுகள் காணப்படுமாயின், www.auditorgeneral.gov.lk எனும் இணையத்தளத்திற்குள் பிரவேசித்து முறைப்பாடுகளை பதிவிட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முறைப்பாடுகள் தொடர்பிலான விசாரணைகள் பிரதி கணக்காய்வாளர் நாயகத்தின் கண்காணிப்பின் கீழ் முன்னெடுக்கப்படுகின்றன.

https://www.ibctamil.com/srilanka/80/144210

22 hours ago, Rajesh said:

இது தொடர்பில் 3 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும், அவை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவு கணக்காய்வாளர் நாயகம் W.B.C. விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.

ஒரு இணையத்தளத்தை திறந்து இந்த அது உயர் தொழில் நுட்ப வளரச்சி கொண்ட நாட்டில் 3 முறைப்பாடுகள் மட்டுமே கிடைத்துள்ளமை இது உலகிலேயே ஊழல் அற்ற நாடு என்பதை மீண்டும் மீண்டும் தெளிவாக காட்டுகின்றது 😛

ஐயாயிரம் ரூபாவில் மோசடி; மூடிமறைக்க முயற்சிக்கும் முல்லைத்தீவு மாவட்ட செயலகம்?

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மந்துவில் மற்றும் மல்லிகைத்தீவு கிராம அலுவலர் பிரிவுகளின் கிராம அலுவலர் 5000 ரூபா மோசடியில் ஈடுபட்டதனை அண்மையில் வெளிக்கொண்டு வரப்பட்டது.

இதன் பின்னணியில் கிராம அலுவலரின் நெருங்கிய உறவினர்களை கொண்டு விசாரணை குழு அமைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை கிராம அலுவலரின் மோசடியை மூடிமறைக்க முயற்சிக்கிறதா? முல்லைத்தீவு மாவட்ட செயலகம் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டில் கொரோன வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மக்கள் பாதிக்கப்பட்ட நிலமையில் அவர்களுக்காக வழங்கப்பட்ட 5000 ரூபா கொடுப்பனவில் 2000 ரூபா கொடுப்பனவு கொடுத்துவிட்டு மீதி 3000 ரூபா கொடுப்பனவு வழங்காது மோசடி செய்ததாகவும் அதன் பின்னர் குறித்த விடயம் ஊடகங்களில் வெளிவந்ததன் பின்னணியில் நிதிகள் மக்களுக்கு மீள வழங்கப்பட்டதோடு உயிரிழந்தவரின் பெயரில் கூட 5000 ரூபா மோசடி செய்யப்பட்டமை தொடர்பில் செய்திகள் வெளிக்கொண்டுவரப்பட்டிருந்தது.

இதன் பின்னணியில் பிரதேச செயலகம் மற்றும் மாவட்ட செயலகங்கள் விசாரணைகளை நடாத்துவதாக தெரிவித்திருந்தன. இவ்வாறான நிலையில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தினால் உள்ளக கணக்காய்வு குழுவின் விசாரணை அறிக்கையை ஆதாரமாகக் கொண்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கென முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தினால் முல்லைத்தீவு மாவட்ட செயலக பிரதம கணக்காளர் - ஜே.ரெஜினோல்ட் தலைமையில் விசேட குழு ஒன்றும் அமைக்கப்பட்டிருந்தது. இந்த குழுவில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தினுடைய பிரதம கணக்காளர் - ஜே .ரெஜினோல்ட் மற்றும் முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தினுடைய நிர்வாக உத்தியோகத்தர் செ .விமலேந்திரன் மற்றும் முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தினுடைய உதவிப் பிரதேச செயலாளர் இ.றமேஷ் ஆகியோர் இந்த குழுவில் அங்கம் வகிகின்றனர்.

குறிப்பாக இந்த குழுவில் கிராம அலுவலருடைய நெருங்கிய உறவினர்களை கொண்டே இந்த குழு அமைக்கப்பட்டு இருக்கின்றது. எனவே இந்த குழுவின் விசாரணை அறிக்கைகள் எவ்வாறு நேர்மையாக இருக்கும் என்ற கேள்வி தற்போது எழுப்பப்பட்டிருக்கிறது.

இந்தக் குழுவைச் சேர்ந்தவர்கள் நேற்றைய தினம் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர். இருப்பினும் இந்த குழு பொருத்தமற்றது எனவும் இதனை மாற்றியமைத்து இந்த விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் இந்த நடவடிக்கை குறித்த மோசடியை மூடிமறைக்கவா எனவும் சமூக நலன்விரும்பிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை திருகோணமலை மாவடடத்தில் அண்மையில் 5000 ரூபா கொடுப்பனவில் மோசடியில் ஈடுபட சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவரும் கிராம அலுவலர் ஒருவரும் பணிநீக்கம் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://www.ibctamil.com/srilanka/80/144242

தமிழ் மக்கள் நிறைய பேருக்கு கிடைக்கவில்லை என கூறினார்களே
அவர்கள் யாரும் முறைப்பாடு செய்யவில்லையாக்கும். 

5 minutes ago, Kali said:

தமிழ் மக்கள் நிறைய பேருக்கு கிடைக்கவில்லை என கூறினார்களே
அவர்கள் யாரும் முறைப்பாடு செய்யவில்லையாக்கும். 

ஒரு பக்கம் வறுமை மறுபக்கம் அறியாமை. 

இந்த இரண்டுக்கும் நடுவில் அவர்களை ஏமாற்றும் அதிகாரிகள், அரசு 😞 

3 minutes ago, ampanai said:

ஒரு பக்கம் வறுமை மறுபக்கம் அறியாமை. 

இந்த இரண்டுக்கும் நடுவில் அவர்களை ஏமாற்றும் அதிகாரிகள், அரசு 😞 

உதயன், வலம்புரி .... பத்திரிகைகள் இந்த செய்தியை போட்டிருக்க மாட்டினம். 
வானொலியில் சொன்னார்களா தெரியாது
சொன்னாலும், போட்டாலும் அந்த மக்கள் இவற்றை கேட்கும், பார்க்கும் நிலையில் இருக்கிறார்களோ தெரியாது 
அரசியல்வாதிகளுக்கு இதுல அக்கரை இருக்காது 

  • கருத்துக்கள உறவுகள்

சமுர்த்தி உத்தியோகத்தாருக்கு எதிராக முறைப்பாடு செய்தவர்கள், கொரோனா நிதி வழங்கும்போது பழி வாங்கப்பட்டதை கண்ட பின்னும், யாரும் இந்த ஊழல் மோசடி பேர்வழிகளுக்கு எதிராக முறைப்பாடு செய்வார்களா?  செய்தால், தாங்களும் பழி வாங்கப்படுவோம் என்கிற அச்சத்தினால் தாறதை  வாங்கிக் கொண்டு வாயை மூடிக்கொண்டு போய் இருப்பார்கள். முறைப்பாடு செய்தால் மட்டும் மாற்றம் வந்து விடுமாக்கும். முறைப்பாடு செய்தவர்களின் பெயர்பட்டியலை, அதிகாரி குறித்த உத்தியோகத்தரிடம் அனுப்பி மீண்டும் பழிவாங்கல் தொடரும். இது வேண்டுமா மக்களுக்கு? எங்கும், எதிலும் ஊழல். உயர் அதிகாரி தொடங்கி, சாதாரண உத்தியோகத்தர் வரை லஞ்சம். யாரை யார் விசாரிப்பது?       

அரசியல் வாதிகள் ஊரையே விழுங்கும் போது, இதெல்லாம் பெரிய விடயமா அவர்களுக்கு? 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.