Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உறவுகளின் கண்ணீர் போராட்டம்1200 ஆவது நாளை எட்டியது!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உறவுகளின் கண்ணீர் போராட்டம்1200 ஆவது நாளை எட்டியது!

 

 

  by : Yuganthini

வவுனியாவில் சுழற்சிமுறை உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டம் இன்றுடன் (திங்கட்கிழமை) 1200 ஆவது நாளை  எட்டியுள்ளது.

இதனை முன்னிட்டு அவர்களால் போராட்டமொன்று,  வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக இன்று (திங்கட்கிழமை) பிற்பகல் 12.15 மணியளவில்  முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது “எங்கே எங்கே பிள்ளைகள் எங்கே”, “வேண்டும் வேண்டும் நீதி வேண்டும்”, “ஓமந்தையில் கையளிக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே?” போன்ற பல்வேறான கோசங்களை எழுப்பியவாறு, சமூக இடைவெளிகளை பேணி இப்போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

போராட்டக்காரர்கள், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிரித்தானியாவின்  கொடிகளையும் ஏந்தியவாறு, “சிங்கள மக்களுடன் வாழ பாக்கியம் பெற்றவர்கள், தமிழ் மக்களுக்கு தலைமை தாங்க அருகதையற்றவர்கள்” என்ற வாசகம் தாங்கிய பதாதை தாங்கியிருந்தனர்.

அத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், தமிழ் தேசியக்கூட்டமைப்பின் ஊடகப்பேசாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரனுக்கு மஹிந்த ராஜபக்ஷவின் உடையை அணிவித்துள்ளமை  போன்றதானபுகைப்படமொன்றினையும் காட்சிப்படுத்தியிருந்தனர்.

இதன்போது அதிகளவிலான புலனாய்வாளர்கள், குறித்த போரட்டத்தினை புகைப்படமெடுத்ததுடன் அங்கு பிரசன்னமாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

pro-1.jpg

 

pro-4.jpg

pro5.jpg

pro-6.jpg

http://athavannews.com/உறவுகளின்-கண்ணீர்-போராட்/

2 minutes ago, nunavilan said:

வவுனியாவில் சுழற்சிமுறை உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டம் இன்றுடன் (திங்கட்கிழமை) 1200 ஆவது நாளை  எட்டியுள்ளது.

நீதி ஒருநாள் வென்றே தீரும்.

இவர்களின் அறப்போராட்டம் வெல்ல ஒவ்வொரு தமிழரின் பங்களிப்பும் அவசியம்.

7 hours ago, nunavilan said:

அத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், தமிழ் தேசியக்கூட்டமைப்பின் ஊடகப்பேசாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரனுக்கு மஹிந்த ராஜபக்ஷவின் உடையை அணிவித்துள்ளமை  போன்றதான புகைப்படமொன்றினையும் காட்சிப்படுத்தியிருந்தனர்.

சுமந்திரனின் சுயரூபத்தை படத்தின் மூலம் தத்ரூபமாக காட்டியுள்ளனர்.

On 1/6/2020 at 15:35, Gowin said:

இவர்களின் அறப்போராட்டம் வெல்ல ஒவ்வொரு தமிழரின் பங்களிப்பும் அவசியம்.

இந்த விடயத்தில் தமக்கென பிரச்சனைகள் வரும் வரை கண்டுகொள்ளாதிருக்கும் பெரும்பாலான தமிழ் மக்களின் மனநிலை மாற்றமடையும் அறிகுறிகள் இல்லை.

கூட்டமைப்பு போன்ற ஏமாற்றுப் பேர்வழிகள் முண்டு கொடுக்கும் சுயநல அரசியலை முன்னெடுக்கும் வரையில் இதற்கு சாத்தியமில்லை.

முக்கியமாக இந்த உறுப்பினர்கள் எந்தவொரு தனித்த அரசியல் கட்சிகளை / அரசியல்வாதிகளை சார்ந்து இருக்காது, அவர்களுடன் தேவையான இடைவெளியை பேணியவாறு தமது போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, போல் said:

இந்த விடயத்தில் தமக்கென பிரச்சனைகள் வரும் வரை கண்டுகொள்ளாதிருக்கும் பெரும்பாலான தமிழ் மக்களின் மனநிலை மாற்றமடையும் அறிகுறிகள் இல்லை.

கூட்டமைப்பு போன்ற ஏமாற்றுப் பேர்வழிகள் முண்டு கொடுக்கும் சுயநல அரசியலை முன்னெடுக்கும் வரையில் இதற்கு சாத்தியமில்லை.

முக்கியமாக இந்த உறுப்பினர்கள் எந்தவொரு தனித்த அரசியல் கட்சிகளை / அரசியல்வாதிகளை சார்ந்து இருக்காது, அவர்களுடன் தேவையான இடைவெளியை பேணியவாறு தமது போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.

எம் புதிய தலைமுறை இளைஞர்கள் நினைத்தால் சுழற்சி முறை அகிம்சை போராட்டதால் அரசையும் மக்களையும் கவனயீர்ப்பு செய்யலாம், அழுத்த இன்னும் கூடும் தேர்தல் நெருங்குவதால். யார் தொடக்கி வைப்பது என்பதே கேள்வி? 

5 minutes ago, உடையார் said:

யார் தொடக்கி வைப்பது என்பதே கேள்வி?

சாத்தியமாகும் அறிகுறிகள் தெரிகின்றன.
தேர்தலுடன் இது சம்பந்தப்படாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.