Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

டெங்கு மற்றும் எலிக் காய்ச்சல் பரவும் அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

%E0%AE%9F%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-720x450.jpg

டெங்கு மற்றும் எலிக் காய்ச்சல் பரவும் அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை

நாட்டில் டெங்கு மற்றும் எலிக் காய்ச்சல் நோய் பரவும் அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொற்று நோய் விஞ்ஞான பிரிவு குறித்த எச்சரிக்கையினை விடுத்துள்ளது.

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடத்தின் முதல் காலப்பகுதியில் டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்து காணப்பட்டபோதிலும் தற்போது அதிகரிக்கும் அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

http://athavannews.com/டெங்கு-மற்றும்-எலிக்-காய/

  • கருத்துக்கள உறவுகள்

பேசிக் கொண்டிருப்பதை நிறுத்துங்கள்..! எவராக இருந்தாலும் கைது செய்யுங்கள், ஆளுநர்கள், உள்ளுராட்சிமன்ற தலைவர்களுக்கு ஜனாதிபதி அதிரடி உத்தரவு.. 

Goeetiwnw_1080.jpg

இலங்கையில் டெங்கு ஒழிப்புக்கு சுற்றாடல் சுத்தமே முதலாம்படி அதனை உதாசீனம் செய்தால் எவருக்கும் தயக்கம் காட்டாமல் நடவடிக்கை எடுங்கள். என சுகாதார துறையினருக்கு உத்தரவிட்டிருக்கும், ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச,

அதற்கான அதிகாரத்தை ஆளுநர்கள், உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்களிடம் பூரணமாக வழங்கியிருக்கின்றார். டெங்கு ஒழிப்பு நடவடிக்கை தொடர்பாக இன்று நடைபெற்ற உயர்மட்டக் கலந்துரையாடலின்போதே அவர் இந்த உத்தரவை வழங்கியுள்ளார். 

ஒவ்வொரு வருடமும் டெங்கு நோயாளிகள் அதிக எண்ணிக்கையில் மேல் மாகாணத்திலேயே பதிவாகின்றனர். வேறு பிரதேசங்களில் இருந்து இம் மாகாணத்திற்கு தினமும் பெருமளவானோர் வருகைதருகின்றனர். மேல் மாகாணத்திற்கு முன்னுரிமையளித்து 

டெங்கு நோயை கட்டுப்படுத்துவதன் மூலமே அவர்கள் நோய் காவிகளாக வெளியே செல்வதை தடுக்க முடியும். இதற்காக மாகாணத்தின் அனைத்து உள்ளுராட்சி நிறுவனங்களின் சுகாதார பிரிவுகளும் சூழல் பொலிஸாரும் செயற்திறமாக செயற்பட வேண்டும்.

கடந்த வருடங்களுடன் ஒப்பிடும் போது இவ்வருட முற்பகுதியில் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்திருப்பதாக சுகாதார பிரிவினர் சுட்டிக்காட்டினர். நவம்பர் முதல் முறையாக குப்பைகளை அகற்றுதல் மற்றும் கொவிட் நோய்த்தொற்று 

ஒழிப்புடன் இணைந்ததாக அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு சட்ட காலப்பகுதியில் மக்கள் தமது வீட்டுத்தோட்டங்களை சுத்தமாக வைத்திருந்ததும் இதற்கு காரணமாகும். மாகாணங்களுக்கிடையிலான பயணங்கள் மட்டுப்படுத்தப்பட்டிருந்ததும் 

மற்றுமொரு காரணமாகும்.பாடசாலைகள், வைத்தியசாலைகள், அரச நிறுவனங்கள், சமய ஸ்தானங்கள் மற்றும் நிர்மாணப் பணிகள் மேற்கொள்ளப்படும் இடங்கள் குறித்து அதிக கவனம் செலுத்தி சுத்தப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியதன் முக்கியத்துவம் 

இன்று சுட்டிக்காட்டப்பட்டது.சுகாதார துறை மற்றும் உள்ளுராட்சி நிறுவனங்களுடன் இணைந்து இவ்வாறான இடங்களை கண்காணிக்கும் பொறுப்பு சுற்றாடல் காவற் துறை பிரிவுக்கு வழங்கப்பட்டுள்ளது.டெங்கு பரவல் அதிகரிக்கும் வகையில் செயற்படுவோருக்கு 

எதிராக கடுமையாக சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறும் பணிப்புரை விடுக்கப்பட்டது. டெங்கு நோயாளி ஒருவர் அரசாங்க அல்லது தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட உடனேயே அது பற்றி பிரதேச வைத்திய அதிகாரிகள் 

மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்களுக்கு அறிவிக்க வேண்டும். அதனைத் தொடர்ந்து குறித்த இடங்களை உடனடியாக புகை விசுறுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு சுத்தப்படுத்த வேண்டும். டெங்கு ஒழிப்பு தொடர்பாக ஊடகங்களின் வாயிலாக 

மக்களுக்கு அறிவூட்டுவது தொடர்பாகவும் கவனம் செலுத்த வேண்டும்.வாரத்தில் ஒரு முறை ஆளுநர்கள் மற்றும் உள்ளுராட்சி நிறுவன முதல்வர்கள் ஒன்றுகூடி சுகாதார குழுக்களின் திட்டங்களை மீளாய்வு செய்யுமாறும், 

வெற்றிகரமாக டெங்கு ஒழிப்பை மேற்கொண்டுள்ள நாடுகளின் அனுபவங்களை முன்னுதாரணமாக கொள்ளுமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார். 

https://jaffnazone.com/news/18201

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் எலிக்காய்ச்சல் வேகமாக பரவும் ஆபத்து! வைத்தியர்கள் கடும் எச்சரிக்கை

Rat-Fever.jpg

இலங்கையின் பல பகுதிகளில் எலிக்காய்ச்சல் வேகமாக பரவும் ஆபத்துக்கள் உள்ளதாக தொற்று நோய் பிரிவின் விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் எலிக்காய்ச்சல் பரவும் ஆபத்துக்கள் அதிகரித்துள்ளது. அத்துடன் இந்த நாட்களில் நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக இதன் வேகம் மேலும் அதிகரிக்கும்.

பொது மக்கள் இது தொடர்பில் மிகவும் அவதானமாக இருப்பது அவசியமாகும். எலிக்காய்ச்சல் பாக்டீரியா மூலம் பரவும் நோயாகும். எலி, பெருச்சாலி, எறுமை மாடு போன்றவற்றினால் இந்த பாக்டீரியா பரவுகின்றது.

விலங்குகளின் சிறுநீரகங்களில் வாழும் பாக்டீரியாக்கள் சிறுநீருடன் சுற்றுச்சூழலுக்கு வெளியிடப்படுகின்றன. நெல் வயல்கள் போன்ற நீர் அதிகம் கொண்ட பகுதிகளில் பாக்டீரியாக்கள் ஏராளமாக வாழ்கின்றன. நீரில் உள்ள பாக்டீரியாக்கள் வெட்டுக்காயங்கள், கீறல்கள், கண்கள் மற்றும் வாய் போன்றவைகளினால் உடலில் நுழைகின்றன.

இந்த காய்ச்சலின் முக்கிய அறிகுறிகளாக திடீர் காய்ச்சல், தொண்டை புண், தசை வலி மற்றும் முதுகுவலி போன்ற அறிகுறிகள் காணப்படும். இதற்கு மேலதிகமாக கண் சிவத்தல், வாந்தி, தலைவலி, மலச்சிக்கல் மற்றும் சிறுநீர் வெளியேற்றத்தில் குறைவு போன்ற அறிகுறிகளே காணப்படுகின்றது.

இந்த அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாக வைத்தியசாலைக்கு செல்ல வேண்டும். ஆரம்பத்திலேயே சென்றால் இலகுவாக காப்பாற்றி விடலாம்” என வைத்தியர் மேலும் தெரிவித்துள்ளார்.

நாட்டில் கொரோனா வைரஸ் பரவல், டெங்கு காய்ச்சல் தீவிரமடைந்துள்ளன. இந்நிலையில் எலிக்காய்ச்சல் தொடர்பான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.vanakkamlondon.com/rat-fever-02-06-2020/

டிஸ்கி

23a6lC.gif

 

  • கருத்துக்கள உறவுகள்

கோவிட்  19 என்ற பெயருடைய வைரஸ் இனி டெங்கு எலிக்காய்ச்சல் எனும் பெயரில் இலங்கையில் அழைக்கப்படுமாம் .

4 minutes ago, பெருமாள் said:

கோவிட்  19 என்ற பெயருடைய வைரஸ் இனி டெங்கு எலிக்காய்ச்சல் எனும் பெயரில் இலங்கையில் அழைக்கப்படுமாம் .

சொறிலங்கா போர்குற்றவாளிகள் கோவிட் வைரஸை வெற்றிகரமா கட்டுப்படுத்தியபடியா மனித உரிமை பிரச்சினை ஐநாவில் எழாமல் இருக்க எலிக்காச்சலும் டெங்கும் உதவிக்கு விரைந்துள்ளன.

டெங்கு, எலி காய்ச்சல் தீவிரம் - சுகாதார அமைச்ச விடுத்துள்ள எச்சரிக்கை

நாட்டில் டெங்கு மற்றும் எலி காய்ச்சல் பரவும் ஆபாயம் அதிகரித்திருப்பதாக சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த மே மாதத்தில் மாத்திரம் டெங்கு காய்ச்சளினால் 920 பேரும் எலி காய்ச்சளினால் 740 பேரும் பீடிக்கப்பட்டிருந்ததாக சுகாதார அமைச்சின் புள்ளிவிபர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வருடத்தின் முதல் ஐந்து மாத காலப்பகுதியில் டெங்கு காய்ச்சளினால் 19,940 பேரும் , எலி காய்ச்சலினால் 2,198 பேரும் பீடிக்கப்பட்டிருந்தனர்.

கொழும்பு , கம்பஹா , களுத்துறை ஆகிய மாவட்டங்களில் அதிகளவில் டெங்கு காய்ச்சள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், டெங்கு நுளம்புகள் பெருகும் இடங்களை சுத்தப்படுத்தி கிருமிநாசினியை தெளிக்குமாறு சுகாதார பிரிவினருக்கு சுகாதார அமைச்சு ஆலோசனை வழங்கியுள்ளது.

இதேவேளை, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றும் தீவிரமாக பரவி வரும் நிலையில், தற்போது வரையில் 1735 பேர் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.tamilwin.com/community/01/247713?ref=home-feed

கொழும்பில் இன்று முதல் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

In இலங்கை     June 4, 2020 9:32 am GMT     0 Comments     1143     by : Jeyachandran Vithushan

கொழும்பு மாநகர சபையின் எல்லைக்குள் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை இன்றும் நாளை மற்றும் 06, 07ஆம் தினங்களில் முன்னெடுக்கப்படவுள்ளது.

இதன்போது ஒவ்வொரு பிரதேசங்களையும் உள்ளடக்கிய வகையில் அனைத்து சுற்றாடல் பகுதிகளும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாகவும் இந்த இடங்களை பரிசோதனை செய்யும் பணியில் பொது மக்கள் சுகாதார அதிகாரியொருவருடன் பொலிஸார் ஒருவரும் கழிவு முகாமைத்துவத்தைச் சேர்ந்த ஊழியர் ஒருவரும் இடம்பெறுவர்.

இதற்கமைவாக நகரத்தில் அனைத்து வடிகான் கட்டமைப்பு, இயற்கை கழிவுப்பகுதி மற்றும் சாக்கடைப் புழை (Manhole) ஆகியன பரிசோதனை செய்யப்பட்டு சுத்தம் செய்வதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சம்பந்தப்பட்ட சுற்றாடல் பகுதிகள் பரிசோதனை செய்யப்படும் சந்தர்ப்பத்தில் அந்த இடத்தில் டெங்கு நுளம்புகள் பெருகக் கூடிய இடங்கள் அடையாளங் காணப்பட்டால் அது தொடர்பில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் மேலும் அறிவிக்கப்ட்டுள்ளது.

கொழும்பு நகரம் டெங்கு நுளம்பு அற்ற வலயமாக முன்னெடுப்பதற்கு தேவையான ஒத்துழைப்பை வழங்குமாறு கொழும்பு மாநகர ஆணையாளர் கேட்டுக் கொண்டுள்ளார்.

http://athavannews.com/கொழும்பில்-இன்று-முதல்-ட/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.