Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குப்பை கொட்டியவரை பிடிக்க சென்ற சுகாதார பரிசோதகர் மீது தாக்குதல்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

குப்பை கொட்டியவரை பிடிக்க சென்ற சுகாதார பரிசோதகர் மீது தாக்குதல்!

201912271234282124_real-estate-owner-attack_SECVPF.jpg?189db0&189db0

யாழ்ப்பாணம் நகர் பகுதியில் கழிவுப் பொருட்களை கொட்டுவதற்கு சென்ற நபர் அதனை தடுக்க முற்பட்ட பொது சுகாதார பரிசோதகரை தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.

இன்று (21) அதிகாலை 4.40 மணியளலில் ஸ்டான்லி வீதி அத்தியடிச் சந்தி பகுதியில் இச் சம்பவம் நடந்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், தாக்குதலில் காயமடைந்த பொது சுகாதர பரிசோதகர் சிகிக்சைக்காக யாழ் போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த பகுதியில் குப்பை அதிகளவில் கொட்டப்படுவதால் அதற்கு அண்மித்த இடங்களில் உள்ளவர்கள் பல்வேறு சுகாதார பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்திருந்தனர்.

இந்நிலையில் அவ்விடத்தில் குப்பை போட வேண்டாம் என்று யாழ் மாநகர சபையினால் அறிவித்தல் பலகை வைக்கப்பட்டிருந்தது. இருப்பினும் பொறுப்பற்ற விதத்தில் அதிகளவானவர்கள் அங்கு தினமும் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இவ்வாறு அறிவித்தலை மீறி குப்பை கொட்டுபவர்கள் இனங்காணப்பட்டு அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யும் நடவடிக்கையினை அப்பகுதிக்கு பொறுப்பான பொது சுகாதார பரிசோதகர் மேற்கொண்டு வருகின்றனர்.

இதுவரையில் அவர் 70 ற்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளார். இந்நிலையில் இன்று அதிகாலை 6332 என்ற இலக்க மோட்டார் சைக்கிளில் வந்தவர் அங்கு குப்பைகளை கொட்டியுள்ளார். இதனை தடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்ய முற்பட்ட போதே பொது சுகாதார பரிசோதகர் தாக்கப்பட்டுள்ளார்.

 

https://newuthayan.com/குப்பை-கொட்டியவரை-பிடிக்/

24 minutes ago, உடையார் said:

இதுவரையில் அவர் 70 ற்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளார். இந்நிலையில் இன்று அதிகாலை 6332 என்ற இலக்க மோட்டார் சைக்கிளில் வந்தவர் அங்கு குப்பைகளை கொட்டியுள்ளார். இதனை தடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்ய முற்பட்ட போதே பொது சுகாதார பரிசோதகர் தாக்கப்பட்டுள்ளார்.

யாழ் மக்களின் குப்பைக் குணங்களில் ஒன்டு!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Rajesh said:

யாழ் மக்களின் குப்பைக் குணங்களில் ஒன்டு!

இங்கு லண்டனிலும் இதே விளையாட்டு. இரவு நடுநிசிக்கு காத்திருந்து பழைய மெத்தைகள் உடைந்த தளபாடங்களை தெரு முனையில் வைப்பது அல்லது.. விடியற்காலையில் இப்படிச் செய்வது. எம்மவர்கள் காட்டிக்கொடுத்து இப்ப கறுப்பர்கள்.. ஹிந்தியர்கள் பாகிஸ்தானியர்களும் செய்ய.. கவுன்சில் கமரா பூட்டிக் கண்காணிக்கிற அளவுக்கு நிலைமை வந்திட்டுது. 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
On 21/6/2020 at 08:25, nedukkalapoovan said:

கமரா பூட்டிக் கண்காணிக்கிற அளவுக்கு நிலைமை வந்திட்டுது. 

அந்த கமரா பத்திரமா இருக்குதோ ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.