Jump to content

இறைவனிடம் கையேந்துங்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

எக்காளம் ஊதிடுவோம்
எரிக்கோவை தகர்த்திடுவோம்
கர்த்தரின் நாமம் உயர்த்திடுவோம்
கல்வாரிக் கொடி ஏற்றுவோம்

1. கிதியோன்களே புறப்படுங்கள்
எதிரிகளை துரத்திடுங்கள்
தீபங்களை ஏந்திடுங்கள்
தெருத் தெருவாய் நுழைந்திடுங்கள்
2. சிம்சோன்களே எழும்பிடுங்கள்
வல்லமையால் நிரம்பிடுங்கள்
சீறிவரும் சிங்கங்களை
சிறைபிடித்து கிழித்திடுங்கள்
3. தெபோராக்களே விழித்திடுங்கள்
உபவாசித்து ஜெபித்திடுங்கள்
எஸ்தர்களே கூடிடுங்கள்
இரவுகளை பகலாக்குங்கள்
4. அதிகாலையில் காத்திருப்போம்
அபிஷேகத்தால் நிரம்பிடுவோம்
கழுகுபோல பெலனடைந்து
கர்த்தருக்காய் பறந்திடுவோம்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாக்யம்தான் லட்சுமி வாருமம்மா

முன்னோர்கள் செய்த
பாக்யம்தான் லட்சுமி வாருமம்மா

என் அன்னையே
சௌபாக்யம்தான் லட்சுமி வாருமம்மா

என் இல்லமே
சௌபாக்யம்தான் லட்சுமி வாருமம்மா

நித்தில கொலுசுகள் கட்டியம் படிக்க

நித்தில கொலுசுகள் கட்டியம் படிக்க
உத்தமி வருகையை மெட்டிகள் ஒலிக்க

நித்திய சுமங்கலி பூஜையில் அழைக்க
மத்துறு தயிரினை வெண்ணையாய் ஜொலிக்க

கனக வ்ரிக்-ஷமாய் தன மழை தருக
மனைகள் எங்கிலும் திரவியம் பெறுக

தினகரன் கோட்டி உன் மேனியில் உருக
ஜனகராஜன் திரு கண்மணி வருக

சங்கணினி முதல் நவநிதி தாராய்
கங்ஙனம் கையால் மங்களம் செய்தல்

குங்கும பூவாய் மங்கைய பாவை
வெங்கட்டரமணனின் பூங்கொடி வாராய்
 
அக்திகள் சொரியும், மண்ணையில் ஐஸ்வர்யம்
நித்த மஹாச்சவம், நித்ய மங்களம்

சக்திக் ஏத்தபடி சாது போஜனம்
சாப்பிட்டு தருவாய் அக்க்ஷதை சீதனம்

சர்க்கரை பாயசம் சுமங்கலி அருந்த
சுக்கிரவார பூஜையில் இருந்து

அக்கறை யோடு சந்தனம் குழைத்து
சாற்றிட புரந்தர விதலனை அழைத்து

பாக்கியம் தான் லட்சுமி வாரமும் அம்மா...
என் இல்லமே, சௌபாக்கியம் தான் லட்சுமி வாரமும் அம்மா...

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குழலாக பிறப்பேனோ கண்ணா
உந்தன் விரல் தீண்ட கனி வாயில் இசை பாடுவேன்
 மயிலாக பிறப்பேனோ கண்ணா 
உந்தன் மயிர்க்காலில் மயிலிறகாய் நடமாடுவேன்..
குயிலாக பிறப்பேனோ கண்ணா
 உந்தன் குழல் ஓசைக்கிசைவாக தினம் கூவுவேன் 
குழல் ஏதும் எனக்கில்லை கண்ணா 
எந்த பிறவியிலும் உன்னை எண்ணி உயிர் வாழ்வேன்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திருநீர் என்னை காக்கும் வடிவேலவா 
வடிவேல் எந்தன் துனையே வேல்முருகா 

வடிவேல் என்னை காக்கும் வடிவேலவா 
உந்தன் நாமம் என்னை நாடும் வேல்முருகா 

ஓம் முருகா ஓம் முருகா 
சரவண பவ குக வடிவேலா 

திருநீர் என்னை காக்கும் வடிவேலவா 
வடிவேல் எந்தன் துனையே வேல்முருகா 

சிவபெருமான் உந்தன் தந்தையல்லவோ 
பார்வதி அம்மா உன் தாயல்லவோ 
ஸ்ரீ கணேசன் உந்தன் அண்ணல்லவோ 
என்று பாடும் இந்த உயிர் உந்தன் பிள்ளை அல்லவோ  

ஓம் முருகா ஓம் முருகா 
சரவண பவ குக வடிவேலா 

திருநீர் என்னை காக்கும் வடிவேலவா 
வடிவேல் எந்தன் துனையே வேல்முருகா 

கண்கள் உன்னை தேடும் வடிவேலவா 
எந்தன் கண்ணீர் உந்தன் அபிஷேகம் வேல் முருகா 

ஓம் முருகா ஓம் முருகா 
சரவண பவ குக வடிவேலா 

திருநீர் என்னை காக்கும் வடிவேலவா 
வடிவேல் எந்தன் துனையே வேல்முருகா 

வடிவேல் என்னை காக்கும் வடிவேலவா 
உந்தன் நாமம் என்னை நாடும் வேல்முருகா 

ஓம் முருகா ஓம் முருகா 
சரவண பவ குக வடிவேலா

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எட்டுக்குடி வேலோனுக்கு ஆடும் காவடி சேவல் காவடி.. பாடல் (அரோகரா)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அல்லா ஒருவனை இதயம் மகிழ்ந்தே போற்றிடுவோம்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இடைவிடா நன்றி உமக்குத்தான்
இணையில்லா தேவன் உமக்குத்தான்

1. என்ன நடந்தாலும் நன்றி ஐயா
யார் கைவிட்டாலும் நன்றி ஐயா
நன்றி… நன்றி…

2. தேடி வந்தீரே நன்றி ஐயா
தெரிந்துகொண்டீரே நன்றி ஐயா

3. நிம்மதி தந்தீரே நன்றி ஐயா
நிரந்தரமானீரே நன்றி ஐயா

4. என்னைக் கண்டீரே நன்றி ஐயா
கண்ணீர் துடைத்தீரே நன்றி ஐயா

5. நீதி தேவனே நன்றி ஐயா
வெற்றி வேந்தனே நன்றி ஐயா

6. அநாதி தேவனே நன்றி ஐயா
அரசாளும் தெய்வமே நன்றி ஐயா

7. நித்திய ராஜாவே நன்றி ஐயா
சத்திய தீபமே நன்றி ஐயா

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சின்னஞ்சிறு குழந்தை ஒன்று கனவில் வந்தது அதன்
சிங்காரா புன்னகையால் என்னை கவர்ந்தது

வெற்றி தரும் அதன் கையில் வேலிருந்தது
வில்லும் அதன் விழி எந்தன் மேலிருந்தது
நெற்றி திருநீறு பாலை போலிருந்தது
நீலமயில் மீதிலதன் காலிருந்தது | |

வண்ணமணி மார்பில் முத்து மாலை கிடந்தது 
வந்த கிண்கிணி ஓசை காதில் தொடர்ந்தது 
பொன்னான அதன் முகமோ பூவை வென்றது
போற்றும் எந்தம் பெயர் எதுவோ முருகன் என்றது | |

கண்களை நான் திறந்தேன் காட்சி மறைந்தது
கண்ட அந்த காட்சி அதன் ஆட்சி விரைந்தது
மண்ணுறங்கும் எனினும் எந்தன்  மனமுறங்கவில்லை
மயக்கும் அந்த முகத்தை தவிர வேறெதுவும் தெரியவில்லை

சின்னஞ்சிறு குழந்தை ஒன்று கனவில் வந்தது அதன்
சிங்காரா புன்னகையால் என்னை கவர்ந்தது | |
கனவில் வந்தது முருகன்...

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீ ஜெயிக்க தானே ஒப்புக்கொடுத்தேன்
கல்வாரி சிலுவையில் பலியானேன்(2)

     என் பிரியமே நீ ஜெயங்கொள்ள
     சிலுவையில் வெற்றி சிறந்தேன்(2)

ஆதி அன்பை விட்டு
போனதும் ஏனோ?
என் மேல் கொண்ட பாசம்
குறைந்ததும் ஏனோ? (2)
விழுந்த நிலையை நினைத்து
ஆதி நிலைக்கு ஓடி வா!
ஜீவ கனியை புசித்து
நித்தம் என்னோடு வாழ வா! - என் பிரியமே


  அனலாய் நின்ற நீ
  குளிர்ந்தது ஏனோ?
  பாடுகள் வந்ததும்
  உடைந்தது ஏனோ? (2)
  சோதனையை  நீ சகித்து
  உண்மையாய் வாழ நீயும் வா
  ஓட்டத்தை ஓடி முடித்து
  ஜீவ கிரீடம்  சுட வா ! - என் பிரியமே

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணன் பிறந்தான்-எங்கள்
கண்ணன் பிறந்தான்-இந்தக்
காற்றதை யெட்டுத் திசையிலுங் கூறிடும்.

தின்ன முடையான்-மணி
வண்ண முடையான்-உயர்
தேவர் தலைவன் புவிமிசைத் தோன்றினன்

பண்ணை யிசைப்பீர்-நெஞ்சிற்
புண்ணை யொரிப்பீர்-இந்தப்
பாரினிலே துயர் நீங்கிடும் என்றிதை

எண்ணிடைக் கொள்வீர்-நன்கு
கண்ணை விழிப்பீர்-இனி
ஏதுங் குறைவில்லை;வேதம் துணையுண்டு,
                                                                                                 (கண்ணன் பிறந்தான்)

அக்கினி வந்தான்-அவன்
திக்கை வளைத்தான்-புவி
யாரிருட் பொய்மைக் கலியை மடித்தனன்

துக்கங் கெடுத்தான்-சுரர்
ஒக்கலும் வந்தார்-சுடர்ச்
சூரியன்,இந்திரன்,வாயு,மருத்துக்கள்

மிக்க திரளாய்-சுரர்
இக்கணந் தன்னில்-இங்கு
மேவி நிறைந்தனர்;பாவி யசுரர்கள்

பொக்கென வீழ்ந்தார்,-உயிர்
கக்கி முடிந்தார்-கடல்
போல ஒலிக்குது வேதம் புவிமிசை.
                                                                                              (கண்ணன் பிறந்தான்)

சங்கரன் வந்தான்-இங்கு
மங்கல மென்றான்-நல்ல
சந்திரன் வந்தின் னமுதைப் பொழிந்தனன்

பங்க மொன் றில்லை-ஒளி
மங்குவ தில்லை-இந்தப்
பாரின்கண் முன்பு வானத்திலே நின்று

கங்கையும் வந்தாள்-கலை
மங்கையும் வந்தாள்-இன்பக்
காளி பராசக்தி அன்புட னெய்தினள்

செங்கம லத்தாள்-எழில்
பொங்கு முகத்தாள்-திருத்
தேவியும் வந்து சிறப்புற நின்றனள்.
                                                                                                 (கண்ணன் பிறந்தான்)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

    அருண மலை குரு ரமணா
    கருணை அருள் விழி வதனா
    அருண மலை குரு ரமணா
    கருணை அருள் விழி வதனா
    மனது ஒன்று இருக்கிறதே
    எனது என்று தவிக்கிறதே
    மனது ஒன்று இருக்கிறதே
    எனது என்று தவிக்கிறதே
    எனது மனம் அழிந்திடவே
    அருள் புரிவாய் அருள் புரிவாய்

    அருண மலை குரு ரமணா
    கருணை அருள் விழி வதனா
    அருண மலை குரு ரமணா
    கருணை அருள் விழி வதனா

    இசை        சரணம் - 1

    தனித்திருக்கும் தாகம் கொண்டேன்
    தயவும் உனக்கு இல்லையோ
    பனித்த விழி நீரும் எந்தன்
    நிலையைக் கூறவில்லையோ
    இனியும் காலம் தாழ்த்தாமல்
    கனிவாம் பார்வை தர வேண்டும்
    பெரிதாம் பிறவி நோய் தீர்த்து
    இனி பிறவா வரமும் பெற வேண்டும்
    அந்தம் கடந்த ஆதியே
    உனைச் சொந்தம் என்று பாடினேன்
    அச்சம் தோற்றும் பூமியில்
    வினை மிச்சம் தொலைய நாடினேன்
    கோடி கோடி அடியவரில்
    நான் தான் கடைக் கோடி அய்யா

    அருண மலை குரு ரமணா
    கருணை அருள் விழி வதனா
    மனது ஒன்று இருக்கிறதே
    எனது என்று தவிக்கிறதே
    எனது மனம் அழிந்திடவே
    அருள் புரிவாய் அருள் புரிவாய்

    அருண மலை குரு ரமணா
    கருணை அருள் விழி வதனா
    அருண மலை குரு ரமணா
    கருணை அருள் விழி வதனா

    இசை        சரணம் - 2

    உன் பெயரை ஓதும் யாரும்
    உயர்ந்த ஓர் பிறவியே
    தம் துயரைத் தீர்க்க எமக்கு
    கிடைத்த ஓர் கருவியே
    உன்னை தொழுதல் பெரும் பேறு
    செய்வேன் என்ன கைமாறு
    அய்யன் அருளைப் பெறுமாறு
    செய்தாய் அது என் அருட்பேறு
    உன் கடனைத் தீர்க்கும் வழி ஒன்றும்
    நான் காணா நிலையும் ஆகுமோ
    என் உடலை தீபத் திரி ஆக்கி
    அதை எரித்தால் கூடப் போதுமோ
    என் பிதற்றல் பிள்ளை மொழி அல்ல
    ரமணன் விளக்கின் ஒளியன்றோ

    அருண மலை குரு ரமணா
    கருணை அருள் விழி வதனா
    அருண மலை குரு ரமணா
    கருணை அருள் விழி வதனா
    மனது ஒன்று இருக்கிறதே
    எனது என்று தவிக்கிறதே
    எனது மனம் அழிந்திடவே
    அருள் புரிவாய் அருள் புரிவாய்

    அருண மலை குரு ரமணா
    கருணை அருள் விழி வதனா
    அருண மலை குரு ரமணா
    கருணை அருள் விழி வதனா

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சின்ன பயல் ஒருவன் செய்த செயல் என்னை கலக்கிடுதே

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுவரை செய்த செயல்களுக்காக
இயேசுவே உமக்கு ஸ்தோத்திரம்

1.  உவர் நிலமாக இருந்த என்னை
விளைநிலமாக மாற்றிய உம்மை
அலைகடல் அலைந்து ஓய்கின்ற வரையில்
நாவினால் புகழ்ந்து பாடுவேன் நன்றி

2. தனி மரமாக இருந்த என்னை
கனி மரமாக மாற்றிய உம்மை
திசைகளும் கோள்களும் அசைகின்ற வரையில்
இன்னிசை முழங்கியே பாடுவேன் நன்றி

3. உம் சித்தம் செய்திட அழைத்தவர் நீரே
சொந்தமாய் என்னையே ஏற்றுக் கொள்வீரே
சோர்விலும் தாழ்விலும் சோதனை யாவிலும்
தாங்கினீர் தயவாய் பாடுவேன் நன்றி

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என் உள்ளம் ஏங்குதே உம் அன்பிற்காகவே
என்றென்றும் ஏங்குதே உம் வாசம் வேண்டியே
என்றென்றும் பாராமல் (2)
எப்போதும் நெஞ்சில் உம்மை துதிப்பேன்
காற்றோரம் காற்றாகி உம்மை தொடுவேன்
ஆனந்த பூவாகி உம் காலில் கிடப்பேன்
இன்பங்கள் பெருகி பாசத்தை பொழிவீர்
எப்போதும் நெஞ்சில் உம்மை துதிப்பேன்

உம் அன்பை பார்க்கிலும்
வேறொன்றும் இல்லையே ஓ...
என் இயேசுவே...
ஒருநாளும் மறவேனே
என் நேசர் நீர்தானே ஓ...
என்றென்றுமே
நான் உம்மை மறவேன்

உம் சத்தம் கேட்டுதான் என் நெஞ்சம் குளிரும்
உள்ளாடும் எண்ணங்கள் என் கண்ணில் தெரியும்
சிற்பங்கள் சிரிக்கும் சிந்தனை சிறக்கும்
உன் முகம் பார்த்தால் பூமி நிலைக்கும்
அதிகாலை நேரத்தில் என் கண்கள் தவிக்கும்
உம் முகம் பார்த்தால் என் கண்கள் குளிரும்
இன்பங்கள் தருவீர் பாசத்தை பொழிவீர்
எப்போதும் நெஞ்சில் உம்மை துதிப்பேன்

உம் அன்பை பார்க்கிலும்
வேறொன்றும் இல்லையே ஓ...
என் இயேசுவே...
ஒருநாளும் மறவேனே
என் நேசர் நீர்தானே ஓ...
என்றென்றுமே
நான் உம்மை மறவேன்

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பண் -  நட்டபாடை                
திருச்சிற்றம்பலம்        
        
    தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதி சூடிக்       
    காடுடையசுட லைப்பொடிபூசிஎன்1 உள்ளங்கவர் கள்வன்        
    ஏடுடையமல ரான்முனைநாட்பணிந் தேத்தஅருள் செய்த         
    பீடுடையபிர மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே. 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொந்தி சரிய மயிரே வெளிறநிரை
     தந்த மசைய முதுகே வளையஇதழ்
          தொங்க வொருகை தடிமேல் வரமகளிர் ...... நகையாடி

தொண்டு கிழவ னிவனா ரெனஇருமல்
     கிண்கி ணெனமு னுரையே குழறவிழி
          துஞ்சு குருடு படவே செவிடுபடு ...... செவியாகி

வந்த பிணியு மதிலே மிடையுமொரு
     பண்டி தனுமெ யுறுவே தனையுமிள
          மைந்த ருடைமை கடனே தெனமுடுக ...... துயர்மேவி

மங்கை யழுது விழவே யமபடர்கள்
     நின்று சருவ மலமே யொழுகவுயிர்
          மங்கு பொழுது கடிதே மயிலின்மிசை ...... வரவேணும்

எந்தை வருக ரகுநா யகவருக
     மைந்த வருக மகனே யினிவருக
          என்கண் வருக எனதா ருயிர்வருக ...... அபிராம

இங்கு வருக அரசே வருகமுலை
     யுண்க வருக மலர்சூ டிடவருக
          என்று பரிவி னொடுகோ சலைபுகல ...... வருமாயன்

சிந்தை மகிழு மருகா குறவரிள
     வஞ்சி மருவு மழகா அமரர்சிறை
          சிந்த அசுரர் கிளைவே ரொடுமடிய ...... அடுதீரா

திங்க ளரவு நதிசூ டியபரமர்
     தந்த குமர அலையே கரைபொருத
          செந்தி னகரி லினிதே மருவிவளர் ...... பெருமாளே 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தும்பிக்கை ஆண்டவனே 

 

Edited by உடையார்
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 'மகாவம்சத்தில் புதைந்துள்ள உண்மைகளும் வரலாற்று சான்றுகளும்' / பகுதி 20       அனுராதபுரத்தில் 44 ஆண்டுகள் ஆட்சி செய்த எல்லாளனை அடைவதற்கு 31 தமிழ் மன்னர்களை வென்று அதன் பின் தான் 32 ஆவதாக எல்லாளனை துட்ட கைமுனு வென்றதாக மகாவம்சம் விவரிக்கிறது. அது மட்டும் அல்ல அவன் தனது போரில் இலட்ச கணக்கானவர்களை கொன்றதாக கூறுகிறது. இந்த தரவை வைத்து பார்க்கும் பொழுது அனுராத புரத்தையும் அதை சுற்றியும் பெரும் அளவான தமிழ் கிராமங்களும் தமிழர்களும் வாழ்ந்தது அத்தாட்சி படுத்தப்படுகிறது. அவர்கள் சிவனை வழிபட்டார்கள் என்பதும் தெரிகிறது.   கி மு 200 ஆண்டு அளவில் அல்லது அதற்குப் பின்பு, பாளி மொழி இறந்த மொழியாக மாறிக் கொண்டிருந்தது. எனவே இதற்கு பிரதியீடாக ஹெள அல்லது எலு மொழி [Eḷu, also Hela or Helu, is a Middle Indo-Aryan language or Prakrit of the 3rd century BC] முக்கியத்துவம் பெற்றது. என்றாலும் எலு அல்லது ஹெல என்னும் மொழியின் தோற்றம் குறித்துத் தெளிவு இல்லை. ஆனாலும், இது இலங்கையிலேயே தோற்றம் பெற்ற ஒரு மொழி என்பது பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. எலு மொழிக்கும், சமஸ்கிருதம், பாளி முதலிய இந்திய-ஆரிய மொழிகளுக்கும் இடையே பல ஒப்புமைகள் காணப்படுகின்றன.   அத்துடன், இலங்கைப் பூர்வீக குடிகளின் மொழியுடன் பல்வேறு கால கட்டங்களில் இலங்கையில் வந்து குடியேறிய இந்திய இனத்தவரின் மொழிகளும் கலந்து உருவானதே ஹெலமொழி என்று கருதப்படுகிறது. இம்மொழிகளுள் ஆரிய மொழிகளும், தமிழும் அடங்கும். அதன் பின் கி பி ஆறாம் நூற்றாண்டில் அல்லது அதற்குப் பின், இதில் இருந்து சிங்கள மொழி மற்றும் மாலைதீவுகளில் பேசப்படும் திவெயி மொழி [Elu is ancestral to the Sinhalese and Dhivehi languages] முதல் முதல் வளர்ச்சி அடைந்தது. ஆகவே அதற்கு முன்பு சிங்கள மொழி என்று ஒன்றும் இல்லை என்பதே உண்மை ஆகும்.   அது மட்டும் அல்ல, வரலாற்று ரீதியாக, அனுராத புரத்தில் தமிழர்கள் பெரும் அளவில் வாழ்ந்தார்கள் என்பதை உறுதிப்படுத்துவதாக, அதன் தொடர்ச்சியை, பதினேழாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியிலும் கூட, வர்த்தகரான ரொபெர்ட் நொக்ஸ் [Robert Knox ] என்ற ஆங்கிலேயனின் "Historical Relation of Ceylon" என்ற அவரின் நூலிலும் காண்கிறோம்.   ரொபெர்ட் நொக்ஸ் கண்டி அரசனால் சிறை பிடிக்கப்பட்டான். எனினும் பல ஆண்டுகளின் பின் சிறையில் இருந்து தப்பி, காடுகளையும் மலைகளையும் கடந்து, அனுராத புரத்தை வந்தடைந்தான். அவன் சிறையில் இருந்த போது, சிங்கள மொழியில் தேர்ச்சி பெற்றிருந்தான். ஆகவே அநுராத புரம் வந்த ரொபெர்ட் நொக்ஸ், அங்குள்ள மக்கள் சிங்கள மக்கள் என எண்ணி, சிங்கள மொழியில் பேச முற்பட்டான். ஆனால் அவர்களுக்கு அந்த மொழி விளங்கவில்லை. அதன் பின்பு தான் அவனுக்கு தெரிய வந்தது இவர்கள் தமிழர்கள் என்று எழுதி உள்ளார்.   ["To Anarodgburro therefore we came, called also Neur Waug.* Which is not so much a particular single Town, as a Territory. It is a vast great Plain, the like I never saw in all that Island: in the midst where∣of is a Lake, which may be a mile over, not natural, but made by art, as other Ponds in the Country, to serve them to water their Corn Grounds. This Plain is encompassed round with Woods, and small Towns among them on every side, inhabited by Malabars, a distinct People from the Chingulayes. But these Towns we could not see till we came in among them. Being come out thro the Woods into this Plain, we stood looking and staring round about us, but knew not where nor which way to go. At length we heard a Cock crow, which was a sure sign to us that there was a Town hard by; into which we were resolved to enter. For standing thus amazed, was the ready way to be taken up for suspitious persons, especially because White men ne∣ver come down so low. Being entred into this Town, we sate our selves under a Tree,* and proclaimed our Wares, for we feared to rush into their Yards, as we used to do in other places, lest we should scare them. The People stood amazed as soon as they saw us, being originally Malabars, tho Subjects of Cande. Nor could they understand the Chingulay Lan∣guage in which we spake to them. And we stood looking one upon another until there came one that could speak the Chingulay Tongue: "[ "The History of Ceylon from the Earliest Period TO THE YEAR MDCCCXV " / AUTHOR'S ESCAPE. PART IV /page 322-323].   வரிசைக்கிரமமான சரித்திரக் குறிப்புகளில் இருந்து, தமிழ் நாட்டில் புகார் என்னும் காவிரிப்பூம்பட்டினம், தூத்துக்குடி மற்றும் இலங்கையில் மாந்தை அல்லது மாதோட்டம் [மன்னர்] போன்ற இடங்களில் இருந்து [From the annals of history we learn that the port of Puhar along the Coromandel coast of Tamil Naadu, the port of Tutucurin along the Southern coast of Tamil Naadu and the port of Mantai (Mannar) along the North-Western coast of Lanka] கிருஸ்துக்கு முன்பும், ஆரம்பகால கிறிஸ்தவ காலங்களிலும் வர்த்தகம் செய்ததிற்கு வரலாற்று சான்றுகள் பல உண்டு. அவர்கள் ஏற்றுமதி இறக்குமதி செய்த பொருள்களின் தமிழ் பெயர்களை இன்றும் கிரேக்கத்திலும் ஆங்கிலத்திலும் காணலாம் [Tamil names of the commodities exported and imported are seen in the vocabularies of the Greek and English languages today]. உதாரணமாக கிரேக்கத்தில் அரிசியை, ஒரிசா [oryza] என்றும், இஞ்சியை சிஞ்சிபெர் [zingiber] என்றும், கருவா (பட்டை) யை கர்பியன் [karbion] என்று அழைப்பதை கவனிக்க. இது அங்கு தமிழ் மொழியே பேசப்பட்டதை மேலும் உறுதி படுத்துகிறது.     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]   பகுதி: 21 தொடரும்           
    • சர்வதேச விமானநிலையத்தில் வைத்து தரக்குறைவாக ந்டக்குமளவிற்கு முட்டாள்களாகவா இருப்பார்கள்? அவர்களது விமானநிலையத்தில் இராணுவத்தினரை பணிக்கமர்த்துவதனால் இலங்கைக்கு சாதகம்தானே (தண்டமாகத்தானே இருக்கிறார்கள் எதுக்கு வீணா சம்பளம் கொடுத்து முகாமில் வைத்து பராமரிப்பதற்கு)? அவர்கல் தமிழர் பிரதேசத்தில் இருந்து தொல்லை கொடுக்காமல் அவர்கள் தலைநகரத்தில் இருந்து புலம்பெயர் தமிழருக்கு தொல்லை கொடுத்தால் பரவாயில்லைதானே. அண்மையில் ஒரு தவிர்க்கமுடியாத காரணத்தினால் (ஒரு துயர நிகழ்வொன்றிற்காக) 4 - 5 நாள்கள் பயணமாக இலங்கை சென்றிருந்தேன் மிக நீண்டகாலத்தின் பின்னர், பேனா எடுத்து செல்லவில்லை கணனியில் பதிவு செய்து சென்றேன், கடமையில் இருந்த பெண்மணி குடிவரவு அட்டையினை கேட்டார் கனனியில் பதிந்தாகக்கூறினேன் எந்த தொல்லையுமில்லை.
    • The Top 25 Safest Airlines For 2024   Air New Zealand Qantas Virgin Australia Etihad Airways Qatar Airways Emirates All Nippon Airways Finnair Cathay Pacific Airways Alaska Airlines SAS Korean Air Singapore Airlines EVA Air British Airways Turkish Airlines TAP Air Portugal Lufthansa/Swiss Group KLM Japan Airlines Hawaiian Airlines American Airlines Air France Air Canada Group United Airlines   Jetstar has been named the world's safest low-cost carrier. GETTY The 20 Safest Low-Cost Airlines For 2024   Jetstar easyJet Ryanair Wizz Norwegian Frontier Vueling Vietjet Southwest Volaris flydubai AirAsia Group Cebu Pacific Sun Country Spirit Westjet JetBlue Air Arabia Indigo Eurowings   இனியும்  ஏர் லங்காவில் பயணித்து  உங்கள் இனிய உயிர்களை பாதுகாப்பற்று ஆக்க  வேண்டாம். https://www.forbes.com/sites/laurabegleybloom/2024/01/03/ranked-the-25-safest-airlines-in-the-world-according-to-airlineratingscom/?sh=fe651ac4c03c ஸ்டார்ட் மியூசிக் .........😀   
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.