Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மணிசங்கர் ஐயர் மீது மன்மதக் குற்றச்சாட்டு...

Featured Replies

மணிசங்கர் ஐயர் மீது மன்மதக் குற்றச்சாட்டு...

‘கட்டிப் பிடிக்கிறார்... முத்தம் கொடுக்கிறார்!’

சமீபத்தில் இந்தி நடிகை ஷில்பா ஷெட்டி முத்த சர்ச்சையில் சிக்கினார். இப்போது மத்திய பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சரான மணி சங்கர் ஐயர் மீதும் முத்த சர்ச்சை கிளம்பியிருக்கிறது. இந்த முத்த விவகாரத்தைக் கையிலெடுத்துக் கலக்க ஆரம்பித்திருக்கிறது, காங்கிரஸின் கூட்டணிக் கட்சிகளில் ஒன்றான பா.ம.க.!

பா.ம.க&வின் தஞ்சாவூர் வடக்கு மாவட்டச் செயலாளர் ஸ்டாலினைச் சந்தித்து இதுகுறித்துக் கேட்டோம்.

‘‘எங்கேயோ பிறந்து மயிலாடுதுறையில் வந்து போட்டி போட்ட மணிசங்கர் ஐயரை ஜெயிக்க வைக்க, நாங்க எவ்வளவோ போராடினோம். ஜெயிச்சு மத்திய மந்திரியாவும் ஆயிட்ட ஐயர், தன் நடத்தைகளைக் கொஞ்சம்கூடத் திருத்திக்கலை. சமீபத்தில் டெல்லி செங்கோட்டையில் சுதந்திரப் போரின் 150&வது ஆண்டு நினைவுவிழா நடந்தது. அதில் தமிழகத்தின் சார்பில் நேரு யுவகேந்திரா அமைப்பைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டவங்க கலந்துகிட்டாங்க. டெல்லியில் அவங் களுக்கு மரியாதை கொடுக்கப்படலை. தமிழ்ப் பெண்களை ஆபாச வெறியோடு சிலர் தாக்கியும் இருக் காங்க. உடைகள் கிழிய, உயிர்பயத்தோடு ஓடிப்போய் நம் பெண்கள் மணிசங்கர் ஐயரிடம் முறையிட, அவரோ ‘இதெல்லாம் ஒரு விஷயமா? இங்கே கட்டிப் பிடிக்கிறது, முத்தம் கொடுக்கிறதெல்லாம் சகஜம். இதையெல்லாம் தப்பா நினைச்சா ஏன் டெல்லிக்கு வர்றீங்க?’னு திட்டி அனுப்பியிருக் கார்.

அதோட, அந்த இடத்திலேயே ஒரு டெல்லிப் பெண்ணை கட்டிப்பிடிச்சு முத்தம் கொடுத்துக் காட் டியிருக்கிறார். ஐயர் டெல்லியில் மட்டுமில்லை, தொகுதிக்குள்ளேயும் அப்படித்தான் நடந் துக்கிறார்’’ என்று பொரிந்து தள்ளியவர் தொடர்ந்து, ‘‘சில மாதங்களுக்கு முன்னால் கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற ஒரு பெண்கள் பள்ளியில் நடந்த விழாவுக்கு ஐயரைக் கூப்பிட்டிருந்தாங்க. விழாவுக்கு வந்தவர், அங்கே நின்ற வயதுக்கு வந்த மாணவி ஒருவரைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துட்டார். பள்ளி நிர்வாகிகளுக்கும் பொதுமக்களுக்கும் ரொம்ப அசிங்கமாப் போயி டுச்சு. ஒருவழியா சட்டுபுட்டுன்னு விழாவை நடத்தி முடிச்சுட்டாங்க. இதுமாதிரி தன்னைச் சந்தித்து மனு கொடுக்க வர்றவங்ககிட்டயும் மட்டமா நடந்துக்கிறதைத்தான் வாடிக்கையா வச்சிருக்கார். அதையெல்லாம் பட்டியல் போட்டா, எங்க தொகுதிப் பெண்களுக்குத்தான் அசிங்கம். மயிலாடுதுறையைக் ‘குட்டி துபாயாக்குவேன்’னு முழக்கமிட்டவர், சாதாரண சிட்டியாக்கக்கூட எந்த முயற்சியையும் எடுக்கலை! இப்போ தொகுதி சீரமைப்புன்னு சொல்லி மயிலாடுதுறையையே காலிபண்ணப் பார்க்குது தேர்தல் ஆணையம். அதைக்கூட ஐயரால் தடுக்க முடியலை. தொகுதிக்கான மேம்பாடுகளைப் பண்ணாமல் கட்டிப் பிடிக்கவும் முத்தம் கொடுக்கவும் அவர் ஏன் எம்.பி&யாகவும் மந்திரியாகவும் இருக்கணும்? ஐயர் தன்னைத் திருத்திக்கலைனா அடுத்த படியா போராட்டங்களால் அவரை நாறடிக்கவும் தயங்க மாட்டோம்’’ என ஆவேசமாகச் சொன்னார் ஸ்டாலின்.

ஐயர் அமெரிக்காவில் இருப்பதால் அவரை சந்திக்க முடியவில்லை. அவருடைய பிரதான உதவியாளரும் மயிலாடுதுறை சட்டமன்ற உறுப் பினருமான ராஜ்குமாரைச் சந்தித்துப் பேசினோம்.

‘‘அமைச்சர் மணிசங்கர் ஐயரோட குழந்தை மனசு எல்லோருக்குமே தெரியும். துறைரீதியான பணிகளை மட்டும் செஞ்சிட்டுத் தொகுதியைக் கவனிக்காமல் விடுற பழக்கம் அவருக்குக் கிடையவே கிடையாது. எந்தப் புகாராக இருந்தாலும், அவரோட அலுவலக முகவரிக்குக் கடிதமா எழுதினாலே போதும். அடுத்த சில நாட்களில் தக்கத் தீர்வு கிடைச்சுடும். இல்லைனா, புகார்தாரருக்கு தகுந்த விளக்கம் கடிதமா எழுதப்படும். இப்படிப்பட்டவரை கொச்சையான புகார்களில் சிக்கவைப்பது நியாயமே இல்லாத விஷயம்!

டெல்லியில் சுதந்திரப் போர் 150&வது ஆண்டு விழாவின்போது நடந்த தாகச் சொல்லப்படும் விஷயம் முற்றிலும் கற்பனையானது. சம்பவம் நடந்த தாகச் சொல்லப்படும் தினத்தில் தமிழக யுவகேந்திரா அமைப்பினருக்கும் பிற மாநிலத்தவர்களுக்கும் பிரச்னை ஏற்பட்டு, எல்லா சலசலப் புகளும் அடங்கிய பிறகுதான் அமைச்சருக்குத் தகவலே வந்தது. அவர் ஸ்பாட்டுக்குச் செல்வதற்குள் விவகாரம் முற்றிலும் அடங்கிவிட்டது. அதுகுறித்துத் தமிழ கத்தைச் சேர்ந்த யாரும் அமைச்சரிடம் எவ்வித முறையீட்டையும் செய்ய வில்லை. அப்படியிருக்க, அவர் கள் முன்னிலையில் அமைச்சர் ஒரு டெல்லிப் பெண்ணைக் கட்டிப் பிடித்து முத்தம் கொடுக்கவேண்டிய அவசியம் என்ன இருக் கிறது? கொஞ்சம்கூட அர்த்தமில்லாத அவதூறைக் கிளப்பிவிட்டு, அமைச்சரின் மனதை சிலர் நோகடிக்க முயல்வதைப் பொறுத்துக்கொள்ளவே முடியாது’’ எனச் சொன்ன ராஜ்குமாரிடம் பா.ம.க&வினர் எடுத்துவைத்த மற்ற புகார்களுக்கும் விளக்கம் கேட்டோம்.

‘‘கும்பகோணத்தில் நடந்த பள்ளி விழாவில் சலசலப்பான எந்த விஷயமும் நடக்கவில்லை. இப்போது அவருக்கு 64 வயதாகிறது. மூன்று பெண் குழந்தைகளின் தந்தை அவர். அவர்மீது இப்படிப்பட்ட குற்றச்சாட்டுகளைக் கிளப்புவது என்ன நியாயம்? அவர் வெளிநாடுகளின் பழக்கவழக்கத்தை அறிந்து வளர்ந்தவர். முத்தம் கொடுப்பது, கட்டிப்பிடித்து வரவேற்பது எல்லாம் மரியாதைக்குரியவையாகத்தான் அவர் மனதுக்குப்படும். அப்படியும் தமிழ்க் கலாசாரத்தை நன்கு அறிந்து, நாகரிகமாகத் தான் அவர் நடந்துகொள்கிறார். ஐயரின் செயல்பாடுகள் குறித்து இதுநாள்வரை யாராவது புகார் சொல்லி இருக்கிறார்களா? இல்லை. இதெல்லாம் உள்நோக்கத்தோடு சிலர் கிளப்பிவிடுவது!’’ என்று விளக்கம் கொடுத்தார் ராஜ்குமார்.

நன்றி :ஜூனியர் விகடன்

  • கருத்துக்கள உறவுகள்

மணிசங்கரும் ராஜபக்ஷவும் செம தோஸ்துங்க எப்பொழுதுமே தமிழர் விரோத போக்கை கடைப்பிடிப்பவர் தான் இந்த ஜயர்..ஜயர்க்கு தமிழ் கூட சரியா வராது... :lol::lol:

மணிசங்கரும் ராஜபக்ஷவும் செம தோஸ்துங்க எப்பொழுதுமே தமிழர் விரோத போக்கை கடைப்பிடிப்பவர் தான் இந்த ஜயர்..ஜயர்க்கு தமிழ் கூட சரியா வராது... :lol::lol:

சுண்டு இங்கேயும் ஒரு ஜயர் அப்படி தான் யார் என்று உங்களுக்கு தெறியுமா?

:P

சுண்டு இங்கேயும் ஒரு ஜயர் அப்படி தான் யார் என்று உங்களுக்கு தெறியுமா?

:P

அட ஜம்மு ரொம்பத்தான் பாதிக்கப்பட்டிருக்கீங்க போல?? :D:blink: எப்ப நடந்தது?? :blink::huh: எப்படி நடந்தது?? :blink::huh:

‘‘அமைச்சர் மணிசங்கர் ஐயரோட குழந்தை மனசு எல்லோருக்குமே தெரியும். துறைரீதியான பணிகளை மட்டும் செஞ்சிட்டுத் தொகுதியைக் கவனிக்காமல் விடுற பழக்கம் அவருக்குக் கிடையவே கிடையாது. எந்தப் புகாராக இருந்தாலும், அவரோட அலுவலக முகவரிக்குக் கடிதமா எழுதினாலே போதும். அடுத்த சில நாட்களில் தக்கத் தீர்வு கிடைச்சுடும். இல்லைனா, புகார்தாரருக்கு தகுந்த விளக்கம் கடிதமா எழுதப்படும். இப்படிப்பட்டவரை கொச்சையான புகார்களில் சிக்கவைப்பது நியாயமே இல்லாத விஷயம்!

குழந்தை மனசு? நம்ப முடியவில்லை... எனக்கும் குழந்தை மனசு, மணிசங்கர் செய்த வேலையை நாமளும் செய்யலாமா?

அட ஜம்மு ரொம்பத்தான் பாதிக்கப்பட்டிருக்கீங்க போல?? :D:blink: எப்ப நடந்தது?? :blink::huh: எப்படி நடந்தது?? :blink::huh:

அண்ணா அது எனக்கு இல்லை வேற ஒரு ஆள் நானாவது பாதிக்க படுறதாவது

:P

இவர்போன்ற கேடுகெட்ட சிலரின் ஆலோசனையில்தான் இந்தியாவின் இலங்கை தொடர்பான வெளிநாட்டுக் கொள்கை வழிநடத்தப் படுகிறது என்பது கவலைக்கிடமானது.

64 வயது ஐயர் ஸ்ரீலங்கா வந்திருந்த போது நட்சத்திர ஹோட்டல்களிலும், அரசினர் மாளிகைகளிலும் வாடகை அழகிகளுடன் அடித்த கூத்து தெரிந்தவர்களுக்கு தெரியும். மாமா மகிந்தவுக்கும் தெரியும்.

எந்த இந்திய அதிகாரிக்கு என்ன பலஹீனம் என்று தெரிந்து கொண்டு அது பெண்ணாக இருந்தாலும் கூட, மாமா வேலை செய்தாவது இந்திய அதிகாரிகளை வலையில் வீழ்த்துவது ஜே ஆர் ஜயவர்த்தன காலத்தில் இருந்தே கடைபிடிக்கப்படும் சிங்கள இராஜதந்திரம்.

Edited by vettri-vel

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆமாம் ஐயருக்கு தற்போதைய யூஎன்பியைச் சேர்ந்த நடிகை ஒருவருடனைந்து நட்சத்திர ஹோட்டலில் நடாத்திய கூத்துக்கள் சன்டே லீடரில் மறைமுகமாக வந்தது. இந்து ராமையும் இப்படித்தான் வீழ்த்தினார்கள். நாராயண் கிழவனை எப்படி வீழ்த்தினார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

கடும் வேலைகளுக்கு மத்தியிலும் இதைப் பார்த்துக்கொண்டு எழுதாமல் இருக்க இயலவில்லை. இந்த பெண்களைக் காட்டி விழுத்தும் வேலை பல ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்தியாவின் சுதந்திரம் குறித்த பேச்சு வார்த்தைகள், இந்திய பாகிஸ்தான் பிரிவு இவையெல்லாம் நடந்த போது மவுன்ட் பர்ட்டன் பிரபுவின் மனைவிக்கும் நேருவுக்கும் ஏதோ கசமுசா எல்லாம் இருந்ததாக இன்னும் பேசிக் கொள்கிறார்கள். அந்த அம்மணியின் விருந்தோம்பல் நேருவை இலகுவாகக் கையாள உதவியதாகக் கூறுவார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தாவும் மனைவியுடன் மணிசங்கரைச் சந்திக்க செல்வது வழக்கம். மகிந்தாவிடமிருந்து மணி சங்கர் அடிவாங்கப் போவது நிச்சயம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.