Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அதிகார பகிர்வு வழங்கப்பட வேண்டும், 13 ஆவது திருத்தத்தை இரத்து செய்ய அனுமதியேன் – வாசுதேவ

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அதிகார பகிர்வு வழங்கப்பட வேண்டும், 13 ஆவது திருத்தத்தை இரத்து செய்ய அனுமதியேன் – வாசுதேவ

 

 

     by : Jeyachandran Vithushan

Vasudeva-Nanayakkara-1-720x450.jpg

புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டாலும் அதனூடாக அதிகார பகிர்வு வழங்கப்பட  வேண்டும் என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

அத்தோடு அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை இரத்து செய்து மாகாண சபை முறைமையை இல்லாதொழிப்பதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது என்றும் கூறினார்.

இந்த விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்த வாசுதேவ நாணயக்கார, இதற்காக தொடர்ந்து குரல் கொடுப்பேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

புதிய அரசாங்கத்தில் அரசியலமைப்பின் 19வது திருத்தம் நீக்கப்பட்டு புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்றும் இனப்பிரச்சினைகளுக்கு தீர்வாக கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பின் 13வது திருத்ததை நீக்குவதாக ஆளும் தரப்பின் உறுப்பினர்கள் குறிப்பிடுவது  சாத்தியமற்ற செயற்பாடு என்றும் அவர் கூறினார்.

13ஆவது திருத்தம் இரு  நாடுகளை அடிப்படையாகக் கொண்டது என்பதை மறந்து விட முடியாது என சுட்டிக்காட்டிய வாசுதேவ நாணயக்கார, மாகாண  சபை முறைமையின் ஊடாகவே இனப்பிரச்சினைக்கு ஒரளவனும் தீர்வு கிடைக்கப் பெற்றுள்ளது என்பதை புரிந்துகொள்ள வேண்டும் என குறிப்பிட்டார்.

பொதுத்தேர்தலைத் தொடர்ந்து பழைய தேர்தல் முறைமையில் மாகாண சபை தேர்தல் நடத்தப்படும் என்றும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களுக்கு மாத்திரமல்ல  அனைத்து மாகாணங்களுக்கும் அதிகாரம் அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதற்கு அமைய  பகிர்ந்தளிக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

https://athavannews.com/அதிகார-பகிர்வு-வழங்கப்ப/

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, nunavilan said:

அதிகார பகிர்வு வழங்கப்பட வேண்டும், 13 ஆவது திருத்தத்தை இரத்து செய்ய அனுமதியேன் – வாசுதேவ

இப்ப யார் இவரின் அனுமதியைக் கேட்டது?

1 hour ago, ஈழப்பிரியன் said:

இப்ப யார் இவரின் அனுமதியைக் கேட்டது?

சாம்-சூம் நடத்தும் சூதாட்டத்துக்கு இணையா கோத்தா-வாசு இன்னொரு நாடகம் 

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைத்தீவிலுள்ள சிங்கள தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல்வாதிகள் அனைவரும் சந்தர்ப்பாவாதிகளே. அவர்கள் தத்தமது சந்தர்ப்பத்தக்கு ஏற்றவாறு கதைத்துவிட்டுக் கடந்துவிடுவார்கள்.இவர்வளது பாரம்பரியமே இதுதானே. தற்போது தேர்தற்காலமாதலால்  இடதுசாரி என்று கட்சியை வைத்துக்கொண்டு இப்படியாவது கதைக்காவிட்டால் எப்படி. இவர்களால் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது.  தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் சுயமாக சிந்தித்து இந்த அரசியல்வாதிகளை துரத்தும்வரை, இவர்களால் ஏற்படும் கேடுகளை  உணரும்வரை எந்த மாற்றமும் நிகழாது. அபிவிருத்தி அரசியல் என்று தம்மை அரசியல்வாதிகள் அபிவிருத்தி செய்வதோடு, தமது பல தலைமுறைகளுக்கான சொத்துகளையும் சேர்த்துவைத்துவிடுவார்கள். அதேவேளை தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகள் அபிவிருத்தியோடு இனப்பிரச்சினைத்தீர்வென்று கூறிப் பின் நாடாளுமன்றம் சென்று சிங்கள அரசுகளோடு கைகுலுக்கித் தமக்கான வசதிகளைப் பெற்ற பின் மக்களை மறந்துவிடுவார்கள். மீண்டுமொரு  தேர்தல் வந்தால்தான் மக்கள் நினைவுக்கு வருவார்கள்.

அரசியல் என்பது மக்களுக்கானது என்ற நிலையும் மக்கள் விழிப்புநிலையிலிருந்து அரசியலை நோக்குவதும் அவசியமானது. ஆனால் அடிப்படை வாழ்வாதாரத்துக்கே தேடியலையும் நிலையில் அரசியலாவது அரசியல்வாதிகளாவது என்று வாக்களித்துவிட்டு வாழாதிருக்கும் மனநிலையும் அரசியல்வாதிகளின் அசமந்தப்போக்கிற்குக் கரணியமாகவுள்ளது.  மக்கள் எப்போது விழிப்படைந்து வினாத்தொடுக்கும் நிலை தோன்றுகிறதோ அன்றே மாற்றங்கள் தொடங்கும் அதுவரை இவர்களது வாசிப்புத் தொடரும்.

2 hours ago, nunavilan said:

அதிகார பகிர்வு வழங்கப்பட வேண்டும், 13 ஆவது திருத்தத்தை இரத்து செய்ய அனுமதியேன் – வாசுதேவ

மகிந்த கோஷ்டி தோற்க வேணும் என்கிறாரே!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.