Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆடி அமாவாசை விரதத்திற்கான சுவையான பாகற்காய் கறி தயாரிக்கும் முறை

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பகலவன் said:

அப்பாவுக்காக செய்யும் கடமையாக நினைத்து பல ஆண்டுகளாக பிடிக்கிறேன்.

இடையில் சில வருடங்கள் தவிர்க்கமுடியாத காரணங்களால் விட்டுப்போனாலும் தொடர்ந்து பிடிக்க முயற்சி செய்கிறேன்.

எனது அப்பாவுக்கும் பாவற்காய் நிறைய பிடிக்கும். அவருக்காக அம்மா சமைச்சாலும் எனக்கு சிறுவயதில் பாகற்காய் பிடிக்காது. சாப்பாட்டை கூட தூக்கி எறிந்து இருக்கிறேன். 

அப்படி எறிந்தபோது அம்மா விட்ட சாபமோ என்னமோ பின்னைய நாட்களில் சாப்பாடே இல்லாமல் கழிந்த நாட்கள் பல. 

இப்போ பாகற்காய் பிடித்த உணவுகளில் ஒன்றாகிவிட்டது அப்பாவைபோல. (ஆனாலும் என் மகனுக்கு இப்போ பாகற்காய் பிடிக்காது என்னைபோல)

அப்பாவை பற்றி எங்கும் பதியவில்லை என்றாலும் எனது நாயகனும், பின் தொடர் மாதிரியும் அவர் தான். அவராக வாழ முயற்சி செய்கிறேன்.

அம்மா சமைக்க பிந்திவிட்டது என நானும் சாப்பிடாமல் வகுப்புகளிற்கு ஓடியுள்ளேன், நான் திரும்பி வரும் வரை அம்மாவும் சாப்பிடமாட்டா,  அழுது கொண்டிருப்பா பசியுடன் போய்விட்டன் என, அன்றாடம் காய்ச்சிகளின் நிலையே இதுதான், கிடைக்கும் நேரத்தில் சாமன்கள் வாங்கி சமைக்க பிந்திவிடும்.

நானும் பட்டினியாக கொழும்பில் அலைந்த காலங்களும் உண்டு. அந்த நேரங்களில்தான் சாப்பாட்டின் அருமை தெரிந்தது

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: food

ஆடி அமாவாசை.... அன்று மட்டுமே, சமைக்கும்...
காத்தோட்டிக் காயை... எல்லோரும் மறந்து விட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

Image may contain: food

ஆடி அமாவாசை.... அன்று மட்டுமே, சமைக்கும்...
காத்தோட்டிக் காயை... எல்லோரும் மறந்து விட்டார்கள்.

இது சித்திரை பௌர்ணமிக்கு என்று நினைக்கிறேன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காத்தோட்டிக்காய் பற்றிய அலசல்....😎

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, குமாரசாமி said:

உங்களுக்கு எல்லாம் தெரியும் எண்டது இந்த உலகத்துக்கே தெரிஞ்ச விசயம் தானே......😄
அது இருக்கட்டும்....

சைவ வீடுகளிலை சாதாரண நாள் சமையல்களை விட விரத/ விசேச நாட்களிலை பாத்திரங்கள் தொடக்கம் சமையல், சாப்பிடும் பாத்திரம்(வாழையிலை,தாமரை இலை) எண்டு எல்லாம் வித்தியாசமாகத்தான் இருக்கும்.அயலவர் உறவினர் கூடி உண்பர்.இல்லையேல் சமைத்ததை கொடுத்து பரிமாறுவர்.சமைக்கும் போது கூட உப்பு/புளி பார்க்க மாட்டார்கள்.ஆனால் அன்றைய தின சமையல்கள் வித்தியாசமான சுவையாக இருக்கும்.

உங்களுக்கு தெரியுமா? சைவ வீடுகளில்  படையல் என்று வரும் போது மச்சம் மாமிசம் எல்லாம் இருக்கும். எதற்கும் சைவ சமயத்தை விளங்கிக்கொள்ளுங்கள். அப்புறம் உங்களுக்கு மதமும் பிடிக்காது. மதப்பிரச்சனையும் வரவே வராது.

குமாரசாமி புலம் பெயர்ந்தாலும் புலன் பெயரவில்லை.😎

முதல்ல முட்டைக்கோப்பி குடிச்சிட்டியளா???? 😀

  • கருத்துக்கள உறவுகள்
On 19/7/2020 at 19:59, உடையார் said:

ஆடி அமாவாசை விரதத்திற்கான சுவையான பாகற்காய் கறி தயாரிக்கும் முறை

ஆடி அமாவாசை இந்த தினத்துக்காகவே காய்க்கிற மாதிரி ஒரு காய் காத்தோண்டிக்காய்(சரியான பெயரே தெரியாது).
இதில் பொரியல் மட்டுமே செய்வார்கள்.
வாயில் வைக்கேலாது பச்சைக் கச்சல்.

  • கருத்துக்கள உறவுகள்
On 20/7/2020 at 14:44, குமாரசாமி said:

நான் உங்களுக்கு இன்றைய விசேட நாளில் அந்த கருத்தை எழுதும் போது மிக மன வருத்தமாக இருந்தது.பிறர் மனம் நோகக்கூடாது என்பது என்னை பெற்றெடுத்தவர்களின் போதனை.
மனம் நோகடித்ததிற்கு மன்னிக்கவும்.:(

இது தான் அப்பா அம்மா
அடிக்கிற மாதிரி அடித்து
அணைக்கிற மாதிரி அணைக்க வேண்டும்.
சோலி முடிஞ்சுது போ.

18 hours ago, தமிழ் சிறி said:

ஆடி அமாவாசை.... அன்று மட்டுமே, சமைக்கும்...
காத்தோட்டிக் காயை... எல்லோரும் மறந்து விட்டார்கள்.

 

சிறி இப்போ தான் பார்த்தேன்.

1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

முதல்ல முட்டைக்கோப்பி குடிச்சிட்டியளா???? 😀

குடித்தபடியால்த் தான் இப்படி பிரசங்கம் செய்ய முடியுது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, ஈழப்பிரியன் said:

ஆடி அமாவாசை இந்த தினத்துக்காகவே காய்க்கிற மாதிரி ஒரு காய் காத்தோண்டிக்காய்(சரியான பெயரே தெரியாது).
இதில் பொரியல் மட்டுமே செய்வார்கள்.
வாயில் வைக்கேலாது பச்சைக் கச்சல்.

சரியான பெயர், எங்கள் ஊரில் இந்த மரம் கனக்க இருக்கு. ஆடியில் தான் காய்க்கும் முள்ளு மரம், நான் இந்த காய்களை பிடுங்கி பக்கத்து ஊர் கடைகளில் கொடுத்து ஆடி அம்மாவாசையன்று கை செலவுக்கு எடுப்பது வழமை😀

வாயில் வைக்கேலாது பச்சைக் கச்சல்.😂 ; நான் பொரியல்  விரும்பி சாப்பிடுவேன் 

18 hours ago, தமிழ் சிறி said:

Image may contain: food

ஆடி அமாவாசை.... அன்று மட்டுமே, சமைக்கும்...
காத்தோட்டிக் காயை... எல்லோரும் மறந்து விட்டார்கள்.

 

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, நந்தன் said:

இது சித்திரை பௌர்ணமிக்கு என்று நினைக்கிறேன்

 

8 hours ago, குமாரசாமி said:

காத்தோட்டிக்காய் பற்றிய அலசல்....😎

நந்தன்.... இதனை, ஆடி அமாவாசையன்று தான்... சமைப்பார்கள்.
குமாரசாமி அண்ணா.. கொடுத்த இணைப்பிலும், சிலர் அதனை உறுதிப் படுத்தியுள்ளனர்.

பத்து வருடத்துக்கு முன் நடந்த உரையாடலை... தேடி எடுத்த, குமாரசாமி அண்ணாவுக்கு நன்றி. :)

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, உடையார் said:

சரியான பெயர், எங்கள் ஊரில் இந்த மரம் கனக்க இருக்கு. ஆடியில் தான் காய்க்கும் முள்ளு மரம், நான் இந்த காய்களை பிடுங்கி பக்கத்து ஊர் கடைகளில் கொடுத்து ஆடி அம்மாவாசையன்று கை செலவுக்கு எடுப்பது வழமை😀

வாயில் வைக்கேலாது பச்சைக் கச்சல்.😂 ; நான் பொரியல்  விரும்பி சாப்பிடுவேன் 

 

 
முகநூலில் பார்த்த.. ஒரு பதிவு. 
 
போது யாழ்ப்பாணத்தில் நிலவிய பெரும் பண,பொருள் தட்டுப்பாட்டில் எனக்கு கைகொடுத்த காத்தோட்டிக்காய்
 
கொழும்பு சென்ற எனது தந்தையார் திரும்பி யாழ் வரமுடியாம திண்டாடிய வேளை கிட்டத்தட்ட ஒரு மாதம் எனது குடும்பத்தை நானே (12வயது)சந்தைக்கு சென்று சம்பாதிச்சு பார்த்தேன். அதற்கு முதலே பள்ளிசெல்வதோட சந்தைக்கு யாவாரம் செய்ய போவதும் எனது பணி.
 
இந்த வேளையில்
தக்காளிப்பழம் கிலோ 50 சதம்.
ஒரு முட்டை 30-40 ரூபா.
சீனி கிலோ 200 ரூபா
முருங்கங்காய்-400 ரூபா
பெரும்பாலும் மரக்கறிகள் 200 க்கு மேலே விலைவாசி
நல்லெண்ணெய்- ஒரு போத்தல் 900-1000 ரூபா
இந்த வேளையில் நான் ஒரு மரக்கறி வியாபாரிக்கு உதவியாளனாகவும்
 
சமவேளையில்
கருவேப்பிலை, #காத்தோட்டிக்காய் (அந்த இருநாள் செமக்காசு 😉 ) நெல்லி, ஜம்புக்காய் வியாபாரமும் செய்தேன்.இந்த ஆடி அமாவாசைக்கு முந்தினமும் ஆடி அமாவாசை தினத்திலும் 2000 களுக்கு மேல் பணம் சம்பாதித்தது அந்தநாளில் பெரும் பணமே.
 
குறிப்பு- காத்தோட்டிக்காய் ஆடி அமாவாசை விரதத்தில் பெரும்பாலும் பொரித்து உணவில் சேர்ப்பர். அதற்கு சாப்பிடும் போது அதன் #கச்சல் தன்மையால் #அப்பா_என்ன_கச்சல் என்று அப்பாவை நினைப்பதாக ஒரு ஐதீகம் உண்டு.
நான் அடைந்த கஸ்டங்களை என்றும் நான் மறப்பதில்லை. ஆனால் பலர் மறந்துபோய் விட்டனர் 😂
இன்று  ஆடி_அமாவசை ஆதலால் ஒரு மீள் நினைவில் ❤️//

Edited by தமிழ் சிறி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.