Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முதல் தேர்தல் முடிவு நாளை பி.ப 2.30 மணிக்கு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முதல் தேர்தல் முடிவு நாளை பி.ப 2.30 மணிக்கு

020 பாராளுமன்றத் தேர்தலின் முதல் முடிவினை நாளை பிற்பகல் 2.30 மணிக்கு அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசியப்பிரிய தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/87406

  • கருத்துக்கள உறவுகள்

தொகுதி வாரியான... முடிவுகள், நள்ளிரவில்  இருந்து.. ஆரம்பிக்கும் என நினைக்கின்றேன். :)

என்னைப்  பொறுத்த வரையில்....  😎
🚲 பருத்தித் துறையில்... ஒருவர் ⬆️ வென்று, 🚲
🏠 திருகோணமலையில்... ஒருவர் ⬇️ தோற்றால்... 🏚️
🐎 கிடாய்... வெட்டி, எல்லோருக்கும்,  🎇 "பிரியாணி"  ♨️  விருந்து வைப்பேன்.  :grin: 

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, பிழம்பு said:

முதல் தேர்தல் முடிவு நாளை பி.ப 2.30 மணிக்கு

020 பாராளுமன்றத் தேர்தலின் முதல் முடிவினை நாளை பிற்பகல் 2.30 மணிக்கு அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசியப்பிரிய தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/87406

பிழம்பு... நீங்கள் கூறியது, சரி.
இந்தமுறைத் தேர்தலில்... ஜனாதிபதியும், தேர்தல் ஆணையமும்...
இரவில், முடிவுகளை வெளியிடாமல்... மிகவும் கண்டிப்புடன் உள்ளார்கள் போலுள்ளது.

அதே நேரம்... பதிவு செய்த ஊடகங்கள் மட்டுமே, 
தேர்தல் முடிவுகளை வெளியிட வேண்டும் என்ற செய்தியும் வந்திருந்தது.  

இலங்கையில் இதுவரை, எந்த ஊடகமுமே... 
தேர்தல் முடிவுகளைப்  பற்றிய செய்திகளை வெளியிடாமல், 
அமைதியாக  இருப்பது, வித்தியாசமான அனுபவமாக உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

வாக்கெண்ணும் பணி சற்றுநேரத்தில் ஆரம்பம் ; பிற்பகல் 3 மணியளவில் முதலாவது முடிவு !

இன்று காலை 7 மணிக்கும் 8 மணிக்கும் இடையில் வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பமாகுமென தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க மேலும் தெரிவித்தார். 

இதேவேளை, ஒன்பதாவது பாராளுமன்றத்திற்கு உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக நேற்று நடைபெற்ற பொதுத் தேர்தலின் வாக்களிப்பு மாலை 5 மணியளவில் நிறைவடைந்தது. அதற்கமைய தேர்தல் வாக்களிப்பு வீதம் 70 சதவீதமாக அமைந்திருந்ததாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

vote-counting-sri-lanka.jpg

அத்துடன் இன்று பிற்பகல் 3.00 மணியளவில் முதலாவது தேர்தல் முடிவை வெளியிடக்கூடியதாக இருக்கும் என்றும், இறுதி தேர்தல் முடிவை இன்று நள்ளிரவு அளவில் வழங்கக்கூடியதாக இருக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். 

இம்முறை தேர்தலில் நாடு முழுவதிலும் அமைக்கப்பட்டிருந்த 12,885 மத்திய நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட 16,263,885 வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றிருந்தனர்.

நாட்டில் கொவிட் 19 வைரஸ் தொற்றின் காரணமாக சுகாதார வழிகாட்டி ஆலோசனைகளை கடைப்பிடித்து தேர்தல் பணிகள் நடைபெற்றன. 

நேற்று மாலை 5 மணியளவில் தேர்தலுக்கான வாக்களிப்பு நிறைவடைந்த நிலையில், பலத்த பொலிஸ் பாதுகாப்பிற்கு மத்தியில் வாக்குப் பெட்டிகள் வாக்கெண்ணும் மத்திய நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு, பலத்த பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், இன்றையதினம் (6)  வாக்கு பெட்டியில் உள்ள வாக்குகள் எண்ணும் நடவடிக்கை வாக்கெண்டும் மத்திய நிலையங்களில் சற்றுநேரத்தில் மேற்கொள்ளப்படவுள்ளன. 

இந்நிலையில், நாடளாவிய தேர்தல் வாக்களிப்பு வீதம் 70 சதவீதமாக அமைந்திருந்த நிலையில், மாவட்ட ரீதியில் பதிவாகியுள்ள வாக்களிப்பு வீதங்கள் பின்வருமாறு அமைந்திருந்தது.

கொழும்பு மாவட்டம்- 72%

களுத்துறை மாவட்டம்- 70%

கண்டி மாவட்டம்- 72%

மாத்தளை மாவட்டம்- 72%

நுவரெலியா மாவட்டம்- 75%

காலி மாவட்டம் - 69%

மாத்தறை மாவட்டம் - 71%

ஹம்பாந்தோட்டை மாவட்டம் - 73%

யாழ்ப்பாணம் மாவட்டம்- 67.72%

வன்னி மாவட்டம் - 73%

மட்டக்களப்பு மாவட்டம்- 76%

திகாமடுல்ல மாவட்டம் - 72%

திருகோணமலை மாவட்டம் - 74%

குருநாகல் மாவட்டம் - 60%

புத்தளம் மாவட்டம் - 64%

அனுராதபுரம் மாவட்டம் - 70%

பொலன்னறுவை மாவட்டம் - 72%

பதுளை மாவட்டம் - 74%

மொனராகலை மாவட்டம் - 74%

இரத்தினபுரி மாவட்டம் - 73%

கேகாலை மாவட்டம் - 71%

கிளிநொச்சி மாவட்டம் - 71.52%

மன்னார் மாவட்டம் - 79.49%

வவுனியா மாவட்டம் - 74%

முல்லைத்தீவு மாவட்டம் - 76.25%

கம்பஹா மாவட்டம் - 63%
 

https://www.virakesari.lk/article/87423

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் வாக்கெண்ணும் பணி ஆரம்பம்; 11.30கு முதல் முடிவு வெளியாக வாய்ப்பு!

 

IMG-5006-960x720.jpg?189db0&189db0

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் பதிவான வாக்குகள் எண்ணும் பணிகள் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் உள்ள தேர்தல் மத்திய நிலையத்தில் இடம்பெற்று வருகிறது.

இன்று (06) காலை 7 மணிக்கு ஊர்காவற்றுறை மற்றும் யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதிகளின் தபால் மூல வாக்குகளை எண்ணும் பணியும் அதனைத் தொடர்ந்து காலை 8.30 மணிக்குப் பின்னர் ஏனைய வாக்குகள் எண்ணும் பணியும் ஆரம்பாகியது.

யாழ்ப்பாணத்தில் 73 சாதாரண வாக்குகள் எண்ணும் நிலையங்களிலும் 16 தபால்மூல வாக்குகள் எண்ணும் நிலையங்களிலும் வாக்குகளை எண்ணும் பணி இடம்பெறுகிறது.

யாழ்ப்பாணத்தில் அதிகாரபூர்வமான முதலாவது முடிவு முற்பகல் 11.30 வெளியிடப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன என்று மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகர் தெரிவித்துள்ளார்.

https://newuthayan.com/யாழில்-வாக்கெண்ணும்-பணி/

 
 

சுதந்திரத்திற்கு  பின்னர் நடைபைற்ற அத்தனை தேர்தல்களுலும் வாக்குப்பதிவு  நிறைவடைந்த உடனேயே வாக்குப் பெட்டிகள் சேகரிக்கப்பட்டு துரித கதியில் வாக்குகள் எண்ணப்பட்டு நள்ளிரவு தாண்ட முடிவுகள் வெளிவரும்.  கணணி வசதி இல்லாத காலத்திலேயே இப்படியான சுறுசுறுப்பான நிலையே இலங்கையில் காணப்பட்டது. இப்போது பக்கத்து  நாடான  இந்தியாவின் சோம்பேறித்தனம் சிறிதாக தொற்றிக் கொள்ள தொடங்கியுள்ளது. நல்ல விடயங்களை யாருடமிருந்தும் கொப்பி பண்ணலாம்  தவறில்லை. ஆனால் சோம்பேறித்தனத்தை கொப்பி பண்ணியது  தவறு. 

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, tulpen said:

சுதந்திரத்திற்கு  பின்னர் நடைபைற்ற அத்தனை தேர்தல்களுலும் வாக்குப்பதிவு  நிறைவடைந்த உடனேயே வாக்குப் பெட்டிகள் சேகரிக்கப்பட்டு துரித கதியில் வாக்குகள் எண்ணப்பட்டு நள்ளிரவு தாண்ட முடிவுகள் வெளிவரும்.  கணணி வசதி இல்லாத காலத்திலேயே இப்படியான சுறுசுறுப்பான நிலையே இலங்கையில் காணப்பட்டது. இப்போது பக்கத்து  நாடான  இந்தியாவின் சோம்பேறித்தனம் சிறிதாக தொற்றிக் கொள்ள தொடங்கியுள்ளது. நல்ல விடயங்களை யாருடமிருந்தும் கொப்பி பண்ணலாம்  தவறில்லை. ஆனால் சோம்பேறித்தனத்தை கொப்பி பண்ணியது  தவறு. 

ருல்ப்பன்...  இதனை, சோம்பேறித்தனம் என்று நான் நினைக்கவில்லை.
இராணுவ, போலீஸ் பாதுகாப்புடன்.... இரவு முழுவதும்,
வாக்குப் பெட்டிகளில்... "ஜில்லாலங்கடி" வேலை செய்ய, 
அவர்களுக்கு... கால அவகாசம், தேவைப் பட்டதாகவே... கருதுகின்றேன்.  :)

 

  • கருத்துக்கள உறவுகள்

வாக்கு பதிவு முடிந்தபின் அதை உடனடியாக எண்ணிமுடித்து முடிவுகள் வெளியிடப்பட வேண்டும். இது அனைத்து ஜன நாயக நாடுகளிலும் உள்ள நடைமுறை.

வேறு காரணங்களூக்காக எண்ணிமுடிப்பதை தாமதிப்பதாயின் செலுத்திய வாக்குகளை பாதுகாப்பதில் அதீத அக்கறையுடனும் அதற்கான சர்வதேச வழிமூறகளுக்கு ஏற்புடையதாகவும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

வாக்கு பெட்டிகள் வெறும் அட்டைப்பெட்டிகளை பயன்படுத்துவது ஏற்பதற்கில்லை. இதற்கு கனமான மரப்பெட்டிகள் பூட்டி சீல்வைக்க ஏற்ற முறையிலும் தூக்கிசெல்ல ஏதுவான முறையிலும் அமைக்கப்படுவது அவசியம்.

வாக்குபெட்டிகள் பாதுகாக்கும்போது எந்த ஒரு கணத்திலும் தேர்தல் ஆணையாளர் அல்லது அவரின் பிரதி நிதியின் கண்காணிப்பில் (கண்பார்வையில்) இருந்து அதை அப்புறப்படுத்துவது வாக்களிப்பை செல்லுபடியானதாக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.