Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

என் வெற்றியை பறிக்க கட்சிக்குள் சூழ்ச்சி நடந்தது – கருணாகரம் (மட்டக்களப்பு MP)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்களின் விருப்பங்களை அறிந்து அதற்கேற்றாற்போல் தமிழ் தேசியக் கூட்டமைப்பு முடிவுகளை எடுக்க வேண்டிய தேவையுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் இன்று (07) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். மேலும்,

“மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் எனக்கும் வாக்களித்த மக்களுக்கும் எனது வெற்றிக்கு தோள்கொடுத்த அனைவருக்கும் இந்தவேளையில் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்.

எனது வெற்றிவாய்ப்பினை பறிப்பதற்காக பல சூழ்ச்சிகள் செய்யப்பட்டன. நான் நாடாளுமன்ற உறுப்பினராக வரக்கூடாது என்பதில் கட்சிக்குள் வெளியே இருந்த எதிர்ப்பினை விட கட்சிக்குள் அதிகளவிலான எதிர்ப்பு இருந்தது. மிகவும் போராடியே இந்த வெற்றியை நாங்கள் பெற்றிருக்கின்றோம்.

மட்டக்களப்பு மாவட்ட மக்கள் வித்தியாசமான பாதையினை விரும்புகின்றனர். தமிழ் தேசிய கூட்டமைப்பு தற்போது சென்று கொண்டிருக்கின்ற பாதையில் ஒரு மாற்றம்வேண்டும் என்பதை மக்கள் விரும்புகின்றனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கத்துவ கட்சியான தமிழீழ விடுதலை இயக்கம் இருந்துவருகின்றது. தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆரம்பித்த காலம் தொடக்கம் இன்றுவரையில் இருக்கும் ஒரேயொரு கட்சியாக தமிழீழ விடுதலை இயக்கமான ரெலோ இருந்துவருகின்றது.

வடகிழக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைத்துள்ள தேசியப் பட்டியில் உட்பட கிடைத்த பத்து ஆசனங்களில் மூன்று தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களை ரெலோ கொண்டுள்ளது.

விரைவில் எமது தலைமைக்குழு கூடி தமிழ் தேசிய கூட்டமைப்பின் எதிர்காலம் தொடர்பாகவும் எமது நடவடிக்ககைள் குறித்தும் மக்கள் அதிகளவானோர் அபிவிருத்தியை விரும்புவதன் காரணமாக அது தொடர்பிலும் கூடி ஆராய்ந்து தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவினை அவசரமாக நாடாளுமன்றம் கூடுவதற்கு முன்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழுவினை கூட்டி அது தொடர்பில் ஆராயவேண்டும்.

தமிழ் மக்களின் புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்கான தீர்வினை வேண்டி நிற்கும்வேளையில் வித்தியசமான முறையில் தமிழ் மக்கள் சிந்திக்கின்றனர்.

அந்தவகையில் தமிழ் மக்களின் விருப்பங்களை அறிந்து அதற்கேற்றாற்போல் தமிழ் தேசிய கூட்டமைப்பு முடிவுகளை எடுக்கவேண்டிய தேவையுள்ளது.அந்தவகையில் தமிழீழ விடுதலை இயக்கம் கூடி ஒரு தீர்மானத்தினை எடுத்து அதனை தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பு கூட்டத்தில் சமர்ப்பித்து அதற்கான தீர்வினைப்பெற்றுக்கொள்ளவேண்டிய தேவை எமக்கிருக்கின்றது.

அம்பாறை மாவட்டத்தில் தமிழ் பிரதிநிதித்துவம் இழக்கப்பட்டுள்ளது.1994ஆம் ஆண்டு இந்த நிலைமை ஏற்பட்டது.அதேநிலைமை இந்த ஆண்டும் ஏற்பட்டுள்ளது.தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு ஓரு தேசிய பட்டியல் உறுப்புரிமை கிடைத்துள்ளது.அதனை அம்பாறை மாவட்டத்திற்கு வழங்கும் ஆலோசனையினை நாங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் வழங்குவோம்.

அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் போராட்ட காலங்களில் பல வகையிலும் பாதிக்கப்பட்ட மக்கள்.போராட்ட ரீதியாகவும்,இனரீதியாகவும் பல்வேறு வகையிலான பாதிப்புகளை எதிர்கொண்ட மக்களாக உள்ளனர்.அம்பாறை மாவட்டத்தில் பல தமிழ் கிராமங்கள் கடந்த காலத்தில் இல்லாமல்செய்யப்பட்டுள்ளன.

அந்த நிலைமை எதிர்காலத்தில் வரக்கூடாது என்பதை உணர்ந்துகொண்டு அம்பாறை மாவட்டம் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு கூடிய அக்கறை செலுத்தவேண்டும்.அதேபோன்று எனது நாடாளுமன்ற சேவையின் ஒரு பகுதி அம்பாறை மாவட்ட தமிழ் மக்களுக்கு வழங்குவேன் என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.” – என்றார்.

https://newuthayan.com/என்-வெற்றியை-பறிக்க-கட்ச/

அது சரி. நீங்கள் எல்லாம் போய்தான் என்னத்தை கிழிக்க போகிறீர்கள். 5 வருடத்துக்கு உங்கட காட்டில மழைதான்.

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, Robinson cruso said:

அது சரி. நீங்கள் எல்லாம் போய்தான் என்னத்தை கிழிக்க போகிறீர்கள். 5 வருடத்துக்கு உங்கட காட்டில மழைதான்.

bf4cdd367488ce4b49ba48dd70a227a4-prev.jpg

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, பிழம்பு said:

எனது வெற்றிவாய்ப்பினை பறிப்பதற்காக பல சூழ்ச்சிகள் செய்யப்பட்டன. நான் நாடாளுமன்ற உறுப்பினராக வரக்கூடாது என்பதில் கட்சிக்குள் வெளியே இருந்த எதிர்ப்பினை விட கட்சிக்குள் அதிகளவிலான எதிர்ப்பு இருந்தது. மிகவும் போராடியே இந்த வெற்றியை நாங்கள் பெற்றிருக்கின்றோம்.

கிழக்கிலும்... ஒரு சுமந்திரன், உருவாக... பார்த்திருக்கிறார். :grin:
உசாராகி.. தடுத்து நிறுத்தியுள்ளனர்.   🤣

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Robinson cruso said:

அது சரி. நீங்கள் எல்லாம் போய்தான் என்னத்தை கிழிக்க போகிறீர்கள். 5 வருடத்துக்கு உங்கட காட்டில மழைதான்.

உங்களுக்கு அவரை பற்றி என்ன தெரியும்?...உங்கட சுமத்திரன் மாதிரி என்று நினைத்து விட்டீர்களோ?
தனிப்பட்ட ரீதியில் எனக்கு அவரை பிடிக்காது...ஆனால் தேர்தலுக்கு முதலே அங்குள்ள மக்களுக்கு அவர் மீது நம்பிக்கை இருந்தது...அவர் அவ் மக்களது நம்பிக்கையை குலைக்காமல்  இனி மேலும் நடந்து கொள்வார் என்றே எதிர் பார்க்கிறேன் 

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Robinson cruso said:

அது சரி. நீங்கள் எல்லாம் போய்தான் என்னத்தை கிழிக்க போகிறீர்கள். 5 வருடத்துக்கு உங்கட காட்டில மழைதான்.

 அவர் சொந்த வாகனம் பிரேதம் ஏற்றுவது அவசர சேவைகளை  மக்களுக்கு செய்வது   செய்வது குறிப்பா எழைகளுக்கு அதனால் மக்கள் விரும்பி வாக்களித்துள்ளார்கள் கிராம மக்கள் படுவான்கரையும் பட்டிருப்பு தொகுதியும் 

அவரை துரத்த கட்சிக்குள் ஆயிரம் பேர் இருந்தாலும் மக்கள் மனதில் இடம்பிடிப்பவர்கள் வெல்கிறார்கள் 

6 hours ago, ரதி said:

உங்களுக்கு அவரை பற்றி என்ன தெரியும்?...உங்கட சுமத்திரன் மாதிரி என்று நினைத்து விட்டீர்களோ?
தனிப்பட்ட ரீதியில் எனக்கு அவரை பிடிக்காது...ஆனால் தேர்தலுக்கு முதலே அங்குள்ள மக்களுக்கு அவர் மீது நம்பிக்கை இருந்தது...அவர் அவ் மக்களது நம்பிக்கையை குலைக்காமல்  இனி மேலும் நடந்து கொள்வார் என்றே எதிர் பார்க்கிறேன் 

முன்னை நாள் ரெலோ உறுப்பினர் பழைய வரலாறுகள் போகட்டும் ......................................... 

மக்களுக்காக சேவை செய்யக்கூடியவர் 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தனிக்காட்டு ராஜா said:

 அவர் சொந்த வாகனம் பிரேதம் ஏற்றுவது அவசர சேவைகளை  மக்களுக்கு செய்வது   செய்வது குறிப்பா எழைகளுக்கு அதனால் மக்கள் விரும்பி வாக்களித்துள்ளார்கள் கிராம மக்கள் படுவான்கரையும் பட்டிருப்பு தொகுதியும் 

அவரை துரத்த கட்சிக்குள் ஆயிரம் பேர் இருந்தாலும் மக்கள் மனதில் இடம்பிடிப்பவர்கள் வெல்கிறார்கள் 

முன்னை நாள் ரெலோ உறுப்பினர் பழைய வரலாறுகள் போகட்டும் ......................................... 

மக்களுக்காக சேவை செய்யக்கூடியவர் 

எனக்குத் தெரியும் தனி 
 

On 8/8/2020 at 16:43, ரதி said:

உங்களுக்கு அவரை பற்றி என்ன தெரியும்?...உங்கட சுமத்திரன் மாதிரி என்று நினைத்து விட்டீர்களோ?
தனிப்பட்ட ரீதியில் எனக்கு அவரை பிடிக்காது...ஆனால் தேர்தலுக்கு முதலே அங்குள்ள மக்களுக்கு அவர் மீது நம்பிக்கை இருந்தது...அவர் அவ் மக்களது நம்பிக்கையை குலைக்காமல்  இனி மேலும் நடந்து கொள்வார் என்றே எதிர் பார்க்கிறேன் 

என்ன செய்வது கொலை , கொள்ளை, கட்பளிப்பு செய்தவர்கள் எல்லாம் இப்போது நல்லவர்களாக தெரிகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Robinson cruso said:

என்ன செய்வது கொலை , கொள்ளை, கட்பளிப்பு செய்தவர்கள் எல்லாம் இப்போது நல்லவர்களாக தெரிகிறார்கள்.

நீங்கள் கண்ணை மூடி கொண்டு சுமத்திரன் பின்னால் போவதை விடவா😀 ...முதலாவது நான் ஒன்றும் கூட்டமைப்பின் தீவிர ஆதரவாளர் இல்லை . உங்களை போல tw_lol:...இரண்டாவது அவர் கொலை ,கொள்ளை,பலாத்காரம் செய்தவர் என்று தெரிந்தும் அவருக்கு தேர்தலில் இடம் கொடுத்தது உங்கட கட்சி🙂...இப்ப சொல்லுங்கோ யாரில் பிழை?
 

Just now, ரதி said:

நீங்கள் கண்ணை மூடி கொண்டு சுமத்திரன் பின்னால் போவதை விடவா😀 ...முதலாவது நான் ஒன்றும் கூட்டமைப்பின் தீவிர ஆதரவாளர் இல்லை . உங்களை போல tw_lol:...இரண்டாவது அவர் கொலை ,கொள்ளை,பலாத்காரம் செய்தவர் என்று தெரிந்தும் அவருக்கு தேர்தலில் இடம் கொடுத்தது உங்கட கட்சி🙂...இப்ப சொல்லுங்கோ யாரில் பிழை?
 

என்னைப்பொறுத்த வரைக்கும் அடைக்கலம், வினோ, கருணாகரன் போன்றோருக்கு இடம் கொடுத்ததது கட்சியின் பிழை. மக்கள் அதட்கு தண்டனை வழங்கி இருக்கிறார்கள். பிள்ளையான், கருணா, வியாழேந்திரன் போல கருணாகரமும் மக்கள் சேவை செய்வார்க இருந்தால் கடந்த காலத்தை மறந்து ஆதரவளிக்கலாம். ஆனால் இவர் தமிழ் தேசியத்துக்குள் இருந்துகொண்டு எதை செய்வாரோ தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Robinson cruso said:

என்னைப்பொறுத்த வரைக்கும் அடைக்கலம், வினோ, கருணாகரன் போன்றோருக்கு இடம் கொடுத்ததது கட்சியின் பிழை. மக்கள் அதட்கு தண்டனை வழங்கி இருக்கிறார்கள். பிள்ளையான், கருணா, வியாழேந்திரன் போல கருணாகரமும் மக்கள் சேவை செய்வார்க இருந்தால் கடந்த காலத்தை மறந்து ஆதரவளிக்கலாம். ஆனால் இவர் தமிழ் தேசியத்துக்குள் இருந்துகொண்டு எதை செய்வாரோ தெரியவில்லை.

உப்ப வாங்கோ வழிக்கு ...உதைத் தான் என் முதலாவது கருத்தில் சொன்னேன் 

20 minutes ago, ரதி said:

உப்ப வாங்கோ வழிக்கு ...உதைத் தான் என் முதலாவது கருத்தில் சொன்னேன் 

நான் எப்போவும் உங்களோடதான் ரதி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.