Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கிழக்கைச் சேர்ந்த அனைத்து தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ள த.ம.விடுதலைப் புலிகள் கட்சி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களின் இருப்பினை பாதுகாக்கின்ற வகையில் கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒற்றுமையுடன் சேர்ந்து பயணிப்பதற்கு நாம் பகிரங்கமாக அழைப்பு விடுக்கின்றோம் என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூபாலபிள்ளை பிரசாந்தன் அழைப்பு விடுத்துள்ளார்.

மட்டக்களப்பு - வாவிக்கரை வீதியில் அமைந்துள்ள அவரது கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வேண்டுகோளை விடுத்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் ஒரு பாரிய செய்தியினை வெளிப்படுத்தியிருக்கின்றது. கடந்த 40 வருடங்களுக்கு மேலாக பல வேதனைகளுக்கு மத்தியில் வாழ்ந்து வந்த மக்கள் 2015 ஆம் ஆண்டு தொடக்கம் அபிவிருத்தியிலும், தனித்துவத்திலும் மிகவும் மோசமாகப் பின்னடைவை எதிர்நோக்கியிருக்கின்றார்கள்.

எனவே மட்டக்களப்பு மாவட்டத்தில் அபிவிருத்திகளும் முன்னெடுக்கப்படல் வேண்டும். அதேபோல் தனித்துவமும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை மட்டக்களப்பு மாவட்ட மக்கள் கடந்த தேர்தல் மூலம் வெளிப்படுத்தியிருக்கின்றார்கள்.

இதனை எமது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி , எமது தலைவர் சிவனேசத்துரை சந்திரகாந்தனின் தலைமையில் முன்னெடுத்துச் செல்வோம் என்பதில் எமக்கு நம்பிக்கை இருக்கின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள தமிழ் மக்கள் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அதிகமான வாக்குகளை வழங்கி இம்முறை 4 நாடாளுமன்றப் பிரதிநிதிகளைத் தேர்வு செய்துள்ளார்கள்.

இவ்வாறு தெரிவு செய்யப்பட்ட ஒவ்வாருவரும் ஒவ்வொரு அரசியற் கட்சி சார்ந்தவர்களாக இருந்தாலும், ஒவ்வொரு கட்சிக் கொள்கை சார்ந்தவர்களாக இருந்தாலும், அரசியல் என்பது மக்களுக்காகவே தவிர தங்களுக்காகவோ, தாங்கள் சார்ந்த கட்சிக்காகவோ அல்ல என்பதைப் புரிந்து கொண்டு, மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்டடிருக்கின்ற அனைத்து தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும், ஒரே கூரையின் கீழ் மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கான களத்தினை எமது கட்சி அமைத்துக் கொடுக்கும் என்ற அடிப்படையில், எதிர்வரும் 20ஆம் திகதி ஆரம்பிக்கப்பட இருக்கின்ற புதிய நாடாளுமன்ற அமர்வில் எமது கட்சித்தலைவரான நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள சி.சந்திரகாந்தன் அந்த அமர்வில் கலந்து கொள்வார்.

எனவே மட்டக்களப்பிலிருந்து தெரிவு செய்யப்பட்டுள்ள 4 தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும், அதேபோல் தமிழர்களின் இருப்பினை பாதுகாக்கின்ற வகையில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த அனைத்து தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒற்றுமையுடன் சேர்ந்து பயணிப்பதற்கு நாம் பகிரங்கமாக அழைப்பு விடுக்கின்றோம்.

கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் வசமிருந்த கிழக்கு மாகாணசபை மீண்டும் தமிழர்களின் வசம் வரவேண்டும் என்பதில் கிழக்கு மாகாண தமிழ் மக்கள் உறுதியாக இருக்கின்றார்கள்.

ஆனால் அம்பாறை மாவட்டத்திலும், திருகோணமலை மாவட்டத்திலும், தமிழர்களின் இருப்பை பாதுகாக்க வேண்டும் எனும் நோக்கில், எமது கட்சி கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம் போட்டியிட்டிருந்தது.

ஆனாலும் திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டத்திலுள்ள தமிழ் மக்களை என்றும் நடுக்கடலில் விடுவதற்கு எமது கட்சி தயாராக இல்லை. ஏனெனில் அவர்கள் அரசியல் அநாதைகளாக நடுத்தெருவில் விடப்பட்டது போன்று பல செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

எனவே அம்பாறை மாவட்டத்திற்கும், திருகோணமலை மாவட்டத்திற்கும், எமது கட்சி அரசியல் தலைமைத்துவத்தை வழங்குவதற்குத் தயாராக இருக்கின்றது. இந்நிலையில் எமது கட்சி எதிர்வரும் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் கிழக்கு மாகாணத்தில் உள்ள திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் போட்டியிடும்.

இந்நிலையில் தமிழர்கள் நிருவகித்த கிழக்கு மாகாண சபையை மீண்டும் பொறுப்பேற்று செயற்படுத்துவதற்கு எமது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தயாராக இருக்கின்றது.

மத்திய அரசாங்கத்துடன் ஒரு இணக்க அரசியல் செய்தவர்கள் நாங்கள் என்ற வகையில் மத்தியில் ஆட்சி அமைத்திருக்கின்ற ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோருடன் இணக்க ஆட்சி நடத்திய நட்பு இருக்கின்றது. அவர்களும் எம்முடன் கலந்துரையாடியுள்ளார்கள்.

எமது கட்சித் தலைவருக்கு அமைச்சுப் பதவி வழங்குவது தொடர்பில் மிக விரைவில் இறுதித் தீர்மானங்கள் எடுக்கப்படும்.

புதன்கிழமை அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவுள்ளன. இந்நிலையில் எமது தலைவர் தடுப்புக் காவலில் இருப்பதன் காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான சிறப்புரிமை என்கின்ற அடிப்படையில் எதிர்வரும் 20 ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற அமர்வுக்குரிய நீதிமன்ற அனுமதி பெறப்பட்டுள்ளது.

அவர் நாடாளுமன்றம் சென்ற பின்பே ஏனைய நடைமுறைகள் முன்னெடுக்கப்படும் என அவர் இதன்போது மேலும் கூறியுள்ளார்.

https://www.tamilwin.com/politics/01/253303?ref=home-latest

இந்தாங்கோ இன்னொரு செய்தி. இனி இதிலை பிச்சுப்புடுங்குங்கோ.

எண்டாலும் அவர் சொன்னதிலே ஒரு நியாயம் இருக்கு. ஒண்டா இருங்கோ ஒருத்தர் அபிவிருத்தியை செய்யட்டும், ஒருத்தர் தேசியத்தை பாருங்கோ, ஒருத்தர் எல்லை பிரச்சனையை பாருங்கோ.

அது தானே அரசியல். ஒருத்தர் சேர்ந்தும் ஒருத்தர் எதிர்த்தும் அரசியல் செய்யுங்கோ ஆனால் இரண்டுபேரும் ஒண்டா நில்லுங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச ரீதியில் மிகவும் மோசமான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் மற்றும் சொந்த இனத்தை படுகொலை செய்த குற்றச்சாட்டுக்கள் அடங்கிய இந்த சிங்கள பெளத்த பேரினவாத அரச ஒட்டுக்குழுப் பயங்கரவாத அமைப்போடு சேர்வதை தமிழ் மக்களின் உரிமை நாடும் அனைவரும் தவிர்த்துக் கொள்வது நல்லம்.

ஏலவே இவர்களின் எஜமானர்களாக சிங்கள பெளத்த பேரினவாதிகளே இவர்களுக்கு அமைச்சுப் பதவி வழங்காமல் புறக்கணித்துள்ளதாக செய்திகள் வரும் நிலையில்.. சொந்த இனத்தின் குறிப்பாக தமிழ் தேசிய கருத்தியலூடான தமிழ் மக்களின் உரிமை மீட்புக்காக பாடுபட்ட பலரையும் சிங்கள பெளத்த பேரினவாத அரச கூலிகளாக இருந்து படுகொலை செய்த இந்தக் கும்பலோடு எந்தவகையான தொடர்புகளும் பேணப்படுவது ஆபத்தாகவே முடியும். 

இவர்கள் செய்த குற்றங்களுக்கு தண்டிக்கப்பட வேண்டிய தடை செய்யப்பட வேண்டியவர்கள். 

6 hours ago, nedukkalapoovan said:

சர்வதேச ரீதியில் மிகவும் மோசமான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் மற்றும் சொந்த இனத்தை படுகொலை செய்த குற்றச்சாட்டுக்கள் அடங்கிய இந்த சிங்கள பெளத்த பேரினவாத அரச ஒட்டுக்குழுப் பயங்கரவாத அமைப்போடு சேர்வதை தமிழ் மக்களின் உரிமை நாடும் அனைவரும் தவிர்த்துக் கொள்வது நல்லம்.

ஏலவே இவர்களின் எஜமானர்களாக சிங்கள பெளத்த பேரினவாதிகளே இவர்களுக்கு அமைச்சுப் பதவி வழங்காமல் புறக்கணித்துள்ளதாக செய்திகள் வரும் நிலையில்.. சொந்த இனத்தின் குறிப்பாக தமிழ் தேசிய கருத்தியலூடான தமிழ் மக்களின் உரிமை மீட்புக்காக பாடுபட்ட பலரையும் சிங்கள பெளத்த பேரினவாத அரச கூலிகளாக இருந்து படுகொலை செய்த இந்தக் கும்பலோடு எந்தவகையான தொடர்புகளும் பேணப்படுவது ஆபத்தாகவே முடியும். 

இவர்கள் செய்த குற்றங்களுக்கு தண்டிக்கப்பட வேண்டிய தடை செய்யப்பட வேண்டியவர்கள். 

இங்கு யாருமே சுத்தமானவர்கள் இல்லை. எல்லா கட்சிகளிலும் கொலை காரர்களும் கொள்ளை காரர்களும் கேடடார்கள். ஆனால் எல்லோரும் தெரிவு செய்யப்படவில்லை. பிள்ளையான் தெரிவு செய்யப்படடர். சுரேஷ் பிரேமச்சந்திரனை ஏற்றுக்கொள்ள முடியமென்றால், அடைக்கலத்தை ஏற்றுக்கொள்ள முடியுமென்றால், சித்தார்தனை ஏற்றுக்கொள்ள முடியுமென்றால் ஏன் பிள்ளையானை ஏற்றுக்கொள்ள முடியாது. உங்களில் குற்றமில்லாதவன் முதல் கல்லை எறியக்கடவன். பழையதை கிளறினால் எல்லாருடையதையும் கிளற வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, முதல்வன் said:

எனவே மட்டக்களப்பிலிருந்து தெரிவு செய்யப்பட்டுள்ள 4 தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும், அதேபோல் தமிழர்களின் இருப்பினை பாதுகாக்கின்ற வகையில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த அனைத்து தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒற்றுமையுடன் சேர்ந்து பயணிப்பதற்கு நாம் பகிரங்கமாக அழைப்பு விடுக்கின்றோம்.

நல்ல செய்தி ....பயணிக்க வேண்டும் ....தனித்துவம் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் அத்துடன் அபிவிருத்தி ....செய்து காட்டி முன்னோடியாக இருங்கள்

பிழவுகளிருந்தாலும் இணைந்து செயற்படுதல் அவசியமானது. அடுத்த தேர்தலை மனதில் கொண்டு மற்றவர்கள் வாருங்கள் கிழக்கின் தேவை கருதி இணைவோமென்றால் அதற்கு மதிப்பளிக்காவிட்டாலும் எதிர்ப்பது என்பது சரியான முடிவல்ல.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.