Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழம்(இலங்கை) தொடர்பாகத் திரு: மு.திருநாவுக்கரசு அவர்களது ஆய்வுகளின் காணொளிகள்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 

கள உறவுகளனைவருக்கும்  திரு: மு.திருநாவுக்கரசு அவர்களது ஆய்வுகளையும் கருத்துகளையும் ஒரேதிரியில் இருப்பது தேடிக்கொண்டிருக்காது நேரம் இருக்கும்போது பார்பதற்கும் அறிவதற்கும் தேவைப்படுமென்பதால் இந்தத் திரி. 

நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

இவர் இப்போது இந்தியாவின் முகாமுக்குள் தஞ்சம் அடைந்துவிட்டாரி இந்தியாவிலேயே நிரந்தரமாகவும் தங்கிவிட்டார்.  இனிமேல் அவர் வெளியே வராமாட்டார்.  

*******

 

Edited by நியானி
இழிவான கருத்து

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Elugnajiru said:

இவர் இப்போது இந்தியாவின் முகாமுக்குள் தஞ்சம் அடைந்துவிட்டாரி இந்தியாவிலேயே நிரந்தரமாகவும் தங்கிவிட்டார்.  இனிமேல் அவர் வெளியே வராமாட்டார்.  

******

 

வன்னியில் இருக்கும் போதே, புலிகளின் வானொலியில் சொனனதையே இன்றும் சொல்கிறார்; ஈழ விடுதலை என்பதன் திறப்பு தமிழகத்தில் தான் உள்ளது என்று வீராவுடன் நேர்காணலில் சொல்லி இருந்தார்.

  • கருத்துக்கள உறவுகள்

ஈழப்போர்  நடந்து கொண்டிருக்கும் காலங்களில்...
திரு: மு.திருநாவுக்கரசு அவர்களது அரசியல் கருத்துக்களை...தேடி வாசிப்பேன்.
பல விடயங்களை... தொட்டுச் செல்லும் அவரது கருத்துக்கள்.

நீண்ட காலத்தின் பின்... அவரது குரலைக்  கேட்டது, மகிழ்ச்சியாக உள்ளது.
காணொளி  இணைப்பிற்கு.... நன்றி நொச்சி.   

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Nathamuni said:

வன்னியில் இருக்கும் போதே, புலிகளின் வானொலியில் சொனனதையே இன்றும் சொல்கிறார்; ஈழ விடுதலை என்பதன் திறப்பு தமிழகத்தில் தான் உள்ளது என்று வீராவுடன் நேர்காணலில் சொல்லி இருந்தார்.

  உண்மை  நாதமுனியர்  தமிழீழ தேசியத் தொலைக்காட்சியில் அந்த  "நிலவரம்" நிகழ்வை நானும் பார்த்தேன். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

ஈழப்போர்  நடந்து கொண்டிருக்கும் காலங்களில்...
திரு: மு.திருநாவுக்கரசு அவர்களது அரசியல் கருத்துக்களை...தேடி வாசிப்பேன்.
பல விடயங்களை... தொட்டுச் செல்லும் அவரது கருத்துக்கள்.

நீண்ட காலத்தின் பின்... அவரது குரலைக்  கேட்டது, மகிழ்ச்சியாக உள்ளது.
காணொளி  இணைப்பிற்கு.... நன்றி நொச்சி.   

தமிழ்த் தேசியம்  மீதான தாக்குதல் தொடரும்  காலத்தில்  தமிழ்த் தேசியத்தை காக்கப்போவதாகக்  கட்சிகள் கூறித் தமிழரது நாடாளுமன்றப்பலம் பலவீனமாக்கப்பட்டிருக்கும் சூழலில்  தமிழரிடையே அரசறிவியற் புலமையாளரற்றதொரு (யாராவது இருந்தால் மன்னிக்கவும்)     நிலையிற் குறைந்தபட்சம் நமது நிலை என்ன என்ற தெளிவையாவது  பெற,  நீங்கள் சுட்டியதுபோல்    இவர்கள் போன்றோரது தர்கரீதியான கருத்துகள்  பயனுடையவை என்பதே எனது பார்வையுமாகும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nochchi said:

தமிழ்த் தேசியம்  மீதான தாக்குதல் தொடரும்  காலத்தில்  தமிழ்த் தேசியத்தை காக்கப்போவதாகக்  கட்சிகள் கூறித் தமிழரது நாடாளுமன்றப்பலம் பலவீனமாக்கப்பட்டிருக்கும் சூழலில்  தமிழரிடையே அரசறிவியற் புலமையாளரற்றதொரு (யாராவது இருந்தால் மன்னிக்கவும்)     நிலையிற் குறைந்தபட்சம் நமது நிலை என்ன என்ற தெளிவையாவது  பெற,  நீங்கள் சுட்டியதுபோல்    இவர்கள் போன்றோரது தர்கரீதியான கருத்துகள்  பயனுடையவை என்பதே எனது பார்வையுமாகும்.

நிச்சமாக... அதுதான், நிதர்சனமான உண்மை. நொச்சி.  :)

திரு மு. திருநாவுக்கரசு  தமிழ் மக்களின் சிறந்த அரசியல் ஆய்வாளர்களில் ஒருவர். இறுதி யுத்தத‍த்திற்கு முன்பு  தமிழீழ தேசிய தொலைக்காட்சியில் (NTT)  இல் நிலவரம் நிகழ்ச்சியில் பல முறை எமது எதிர்காலம் குறித்தது பல எச்சரிக்கைகளை விடுத்திருந்தார். அடுத்த யுத்தவெற்றியை யாழ்ப்பாண தாக்குதலை எதிர்பாரத்திருந்த எமது மக்கள் மத்தியிலும் சம்பந்தப்பட்டவர்கள் மத்தியிலும் அது சரியான வித‍த்தில் போய் சேராத‍து தமிழ் தேசியத்தில் துரதிஷ்ரமே. 

இந்த ஆய்வில் அவரது பின்வரும் கருத்துக்கள் மிகவம் காத்திரமாக இன்றைய இளைய தலைமுறையினர் சிந்திக்க வேண்டிய கனதியான வரிகள். இன்றைய யதாரத்த‍த்தை சரியாக பிரதிபலிக்கிறது. 

தோல்விகளில் இருந்து நாம் பெறக்கூடிய பாடங்களில்இருந்து எமக்கு புதிய சிந்தனைகளை தேவைபடுகின்றன. எங்களை பொறுத்த வரை முற்கற்பிதங்களாலும் அறிவியல் பாரம்பரியமற்ற அரசியல் அணுகுமுறையினாலும் நாம் சிறைப்டுத்தப்பட்டிருக்கிறோம். எமது அரசியலை முற்று முழுதாக அறிவியல் மயப்படுத்த வேண்டும்.

நாங்கள் புத்திபூர்வமான அரசியலுக்கு கிட்டவும் போவதில்லை. எங்கள் அரசியலுக்கும் புத்திக்கும் மிகப்பெரிய இடைவெளி இருக்கிறது. புத்தி கேட்க ஒரு புத்தி வேண்டும்.  இது தான் எமது நிலைமை.

தேசியத்தை நாம் கட்டமைக்க வேண்டும். அதற்கு ஒரு புதிய சிந்தனை வேண்டும். தோல்வியடைந்து போன பாதைகளால் மீண்டும் போக கூடாது. ஒரு நூற்றாண்டு கால தோல்வி ஏன் ஏற்பட்டது என்ற காரணத்தை  கேட்டுப்பார்க்க வேண்டும். எங்கள் வழிமுறைகளில் எங்கோ தவறு இருக்கிறது. தொடர்ந்து தோற்கிறோம் என்றால் எங்கையோ பாரிய பிழை இருக்கிறது என்று அர்த்தம். அது அறிவியல் இடைவெளி. அரசியலை நாம் கற்பனையில் நிகழ்த்துகிறோம். மிகப்பெரிய அறிவியல் இடைவெளியுடன் எமது அரசியல் பயணிக்கிறது. அது எப்போதுமே வீழ்த்தப்படுகிறது. இது தான் இன்றைய துயரமான நிலைமை. எனவே இப்போது கடந்த காலத்தில் இருந்து பெரிய திருப்பத்தைப் பெற்று ஒரு புதிய சிந்தனைக்ககு, புதிய பாதைக்கு, புதிய வழிமுறைக்கு போகவேண்டும். அது இலகுவான காரியம் அல்ல.

பழமை சி்ந்தனைகளோடு நிற்பவர்கள் முற்கற்பிதங்களோடு நிற்பார்கள். அவர்கள் அது தான் சரி என்று சொல்வார்கள். தங்கள் பதவி ஆசை உள்ளவர்கள் விதண்டாவாதம் செய்து அது தான்சரி என்று சொல்வார்கள்

 

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, nochchi said:

தமிழ்த் தேசியம்  மீதான தாக்குதல் தொடரும்  காலத்தில்  தமிழ்த் தேசியத்தை காக்கப்போவதாகக்  கட்சிகள் கூறித் தமிழரது நாடாளுமன்றப்பலம் பலவீனமாக்கப்பட்டிருக்கும் சூழலில்  தமிழரிடையே அரசறிவியற் புலமையாளரற்றதொரு (யாராவது இருந்தால் மன்னிக்கவும்)     நிலையிற் குறைந்தபட்சம் நமது நிலை என்ன என்ற தெளிவையாவது  பெற,  நீங்கள் சுட்டியதுபோல்    இவர்கள் போன்றோரது தர்கரீதியான கருத்துகள்  பயனுடையவை என்பதே எனது பார்வையுமாகும்.

இலங்கை தமிழரின் அரசியல் நிலைபற்றி கலாநிதி பட்டத்துக்கான ஆய்வை முதன்முதலில் செய்தவர் திருநாவுக்கரசு. அவரும் நானும் யாழ். பல்கலைக்கழகத்தில் இருந்த போது அருகருகே இருந்து ஒரே ஐயர் கடையில் மதியம் உணவருந்துவோம். ஆனால், பேசிக்கொள்வதில்லை. அவரை நான் அறிவேன், அவருக்கு என்னை தெரியாது. இந்திய இராணுவத்துடன் பேச்சுவார்த்தை நடந்த போது அருகே உள்ள தலைமை செயலகத்தில் இருந்து சாப்பாட்டுக்கடைக்கு ஆலோசனை கேட்டு ஆள் அனுப்புவார்கள். இந்திய இராணுவம் இறங்கும் என்பதை ஆறு மாதங்களுக்கு முன் எதிர்வு கூறியவர்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, tulpen said:

திரு மு. திருநாவுக்கரசு  தமிழ் மக்களின் சிறந்த அரசியல் ஆய்வாளர்களில் ஒருவர். இறுதி யுத்தத‍த்திற்கு முன்பு  தமிழீழ தேசிய தொலைக்காட்சியில் (NTT)  இல் நிலவரம் நிகழ்ச்சியில் பல முறை எமது எதிர்காலம் குறித்தது பல எச்சரிக்கைகளை விடுத்திருந்தார். அடுத்த யுத்தவெற்றியை யாழ்ப்பாண தாக்குதலை எதிர்பாரத்திருந்த எமது மக்கள் மத்தியிலும் சம்பந்தப்பட்டவர்கள் மத்தியிலும் அது சரியான வித‍த்தில் போய் சேராத‍து தமிழ் தேசியத்தில் துரதிஷ்ரமே. 

இந்த ஆய்வில் அவரது பின்வரும் கருத்துக்கள் மிகவம் காத்திரமாக இன்றைய இளைய தலைமுறையினர் சிந்திக்க வேண்டிய கனதியான வரிகள். இன்றைய யதாரத்த‍த்தை சரியாக பிரதிபலிக்கிறது. 

தோல்விகளில் இருந்து நாம் பெறக்கூடிய பாடங்களில்இருந்து எமக்கு புதிய சிந்தனைகளை தேவைபடுகின்றன. எங்களை பொறுத்த வரை முற்கற்பிதங்களாலும் அறிவியல் பாரம்பரியமற்ற அரசியல் அணுகுமுறையினாலும் நாம் சிறைப்டுத்தப்பட்டிருக்கிறோம். எமது அரசியலை முற்று முழுதாக அறிவியல் மயப்படுத்த வேண்டும்.

நாங்கள் புத்திபூர்வமான அரசியலுக்கு கிட்டவும் போவதில்லை. எங்கள் அரசியலுக்கும் புத்திக்கும் மிகப்பெரிய இடைவெளி இருக்கிறது. புத்தி கேட்க ஒரு புத்தி வேண்டும்.  இது தான் எமது நிலைமை.

தேசியத்தை நாம் கட்டமைக்க வேண்டும். அதற்கு ஒரு புதிய சிந்தனை வேண்டும். தோல்வியடைந்து போன பாதைகளால் மீண்டும் போக கூடாது. ஒரு நூற்றாண்டு கால தோல்வி ஏன் ஏற்பட்டது என்ற காரணத்தை  கேட்டுப்பார்க்க வேண்டும். எங்கள் வழிமுறைகளில் எங்கோ தவறு இருக்கிறது. தொடர்ந்து தோற்கிறோம் என்றால் எங்கையோ பாரிய பிழை இருக்கிறது என்று அர்த்தம். அது அறிவியல் இடைவெளி. அரசியலை நாம் கற்பனையில் நிகழ்த்துகிறோம். மிகப்பெரிய அறிவியல் இடைவெளியுடன் எமது அரசியல் பயணிக்கிறது. அது எப்போதுமே வீழ்த்தப்படுகிறது. இது தான் இன்றைய துயரமான நிலைமை. எனவே இப்போது கடந்த காலத்தில் இருந்து பெரிய திருப்பத்தைப் பெற்று ஒரு புதிய சிந்தனைக்ககு, புதிய பாதைக்கு, புதிய வழிமுறைக்கு போகவேண்டும். அது இலகுவான காரியம் அல்ல.

பழமை சி்ந்தனைகளோடு நிற்பவர்கள் முற்கற்பிதங்களோடு நிற்பார்கள். அவர்கள் அது தான் சரி என்று சொல்வார்கள். தங்கள் பதவி ஆசை உள்ளவர்கள் விதண்டாவாதம் செய்து அது தான்சரி என்று சொல்வார்கள்

 

துல்பனவர்களுக்கு

ஒலிவடிவத்தை நேரமெடுத்து வரிவடிமாக்கிப் பதிவிட்டமைக்கு நன்றி. வரிவடித்திலே படிக்கும்போது இன்னும் ஆழாக உற்றுநோக்க முடியும். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.