Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சம்பந்தன் மற்றும் சி.வி.விக்னேஸ்வரனின் இனவாத அரசியலை தோற்கடிக்க வேண்டும் – விமல் வீரவன்ஸ

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தன் மற்றும் சி.வி.விக்னேஸ்வரனின் இனவாத அரசியலை தோற்கடிக்க வேண்டும் – விமல் வீரவன்ஸ

spacer.png

திருமண வீடொன்றுக்கு ஒருவர் குடித்து விட்டு வந்து சர்ச்சைகளில் ஈடுபட்டால், ஏனையவர்கள் அச்சப்படமாட்டார்கள். அதுபோன்றுதான், சி.வி.விக்னேஸ்வரனின் செயற்பாடுகளும் காணப்படுகின்றன.அவருக்கு, சம்பந்தனைவிட பெரிய தலைவராக வேண்டும் என்பதுதான் ஆசை. தமிழர்களுக்கு யார் தலைவர் என்பதில், இவர்கள் இருவருக்கும் இடையில் போட்டி நிலவிவருகிறது.தமிழ்த் தேசியக் கூட்டடைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனின் இனவாத அரசியலை தோற்கடிக்க வேண்டும் என தெரிவித்துள்ள அமைச்சர் விமல் வீரவன்ஸ, அனைத்து இனங்களுக்கும் சம அந்தஸ்து வழங்குவதே அரசாங்கத்தின் நோக்கம் என்றும் தெரிவித்தார்.

எம்மைப் பொறுத்தவரை யாழில் இருந்து வந்த சுதந்திரக் கட்சி உறுப்பினருக்கும் கிழக்கிலிருந்து வந்த அதாவுல்லா போன்றோருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் வாய்ப்பை வழங்க வேண்டும்.இதுதான் எமது நிலைப்பாடாகும். இதுதான் ஜனநாயகத்தை பலப்படுத்தும் வழிமுறைகளாகும். நாம் இவ்வாறான செற்பாடுகளை மேற்கொள்ளும்போதுதான் அனைத்து சமூகங்களும் முன்னேற்றமடையும்.

அப்போது மட்டும்தான், சம்பந்தன் மற்றும் விக்னேஸ்வரனின் இனவாத அரசியலுக்கும் தேவை ஏற்படாது போகும். இன்னும் சில நாட்களில் புதிய அரசியலமைப்பு ஸ்தாபிக்கப்படவுள்ளது. இதன் ஊடாக இந்த நாடு மேலும் பலமடையும்.ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ, ஒரு நாடு – ஒரு சட்டம் என்ற கொள்கையில் மிகவும் தெளிவாக இருக்கிறார். ஒவ்வொருவருக்கும் தேவையான வகையில் சட்டங்களை வலைக்க நாம் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை.

ஜனாதிபதி இம்முறை நாடாளுமன்றுக்கு வருகைத் தந்ததை நாம் அனைவரும் அவதானித்தோம். எந்தவொரு ஆடம்பரமும் இல்லாமல்தான் அவர் தனது வாகனத்தில் வந்தார்.இதனை மதிக்கத் தெரியாதவர்கள்தான் இன்று எதிரணியில் இருந்துகொண்டு கூச்சலிடுகிறார்கள். அவர்களுக்கு குறைக்கூற எந்தவொரு காரணமும் கிடையாது என்பதால், ஜனாதிபதியின் வாகனம் வீதியின் கோட்டுக்கு இடையில் வந்ததாகக்கூட கூறுகிறார்கள்.நாடாளுமன்ற வீதிக்கு, பொதுப்போக்குவரத்து சட்டங்கள் இல்லை என்பதுகூட அந்த தரப்புக்கு தெரியாமல் இருக்கிறது.

சம்பந்தனைவிட பெரிய தலைவராக வேண்டும் என்பதுதான் ஆசை. தமிழர்களுக்கு யார் தலைவர் என்பதில், இவர்கள் இருவருக்கும் இடையில் போட்டி நிலவிவருகிறது.ஆனால், விக்னேஸ்வரனுக்கு அதற்கான தகுதி கிடையாது. அவர் பிறந்து வளர்ந்தது எல்லாம் கொழும்பில். றோயல் கல்லூரியில் கல்வி பயின்றவர்.இப்போது தமிழர்களை ஏமாற்றும் வகையில் பொய்யான ஒரு நாடகத்தைத்தான் அவர் அரங்கேற்றி வருகிறார்.இதன் ஓர் அங்கமாகத்தான், நாடாளுமன்றுக்கு வந்து உலகிலேயே மூத்த மொழி தமிழ் மொழி என கருத்து வெளியிட்டுள்ளார். அவருக்கு நன்றாகத் தெரியும், அப்படி கூறினால் இனவாதத்தை இலகுவாகத் தூண்டிவிட முடியும் என ஹோமாகமயில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.(15)

 

http://www.samakalam.com/செய்திகள்/சம்பந்தன்-மற்றும்-சி-வி-வ/

 

  • கருத்துக்கள உறவுகள்

(ஆர்.யசி)

சம்பந்தனையும், விக்கினேஸ்வரனையும் தாண்டி ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர் ஒருவர் வெற்றி பெற்றுள்ளதானது தமிழ் மக்கள் பிரிவினைவாத கொள்கையில் இருந்து விடுபட்டு தேசிய அரசியலில் காலடி எடுத்து வைக்க ஆரம்பித்துவிட்டனர் என்பது தெட்டத்தெளிவாக வெளிப்படுத்துகின்றது என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார். அங்கஜனுக்கு அமைச்சுப்பதவி கொடுத்திருக்க வேண்டும் எனவும் அவர் கூறுகின்றார்.

நிகழ்கால அரசியல் செயற்பாடுகள் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயங்களை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

சம்பந்தனை விடவும் மோசமான விதத்தில் தமிழ் தேசிய உரிமையாளராக மாற வேண்டும் என்பதே விக்கினேஸ்வரனின் நோக்கமாக உள்ளது. ஏனென்றால் விக்கினேஸ்வரனுக்கு வடக்கு கிழக்கு பூமியில் தேசியம் பேச எந்த உரிமையும் இல்லை, அவர் கொழும்பு  7 இல் பிறந்து வளர்ந்து கல்விகற்றவர். அவரது இரு பிள்ளைகளையும் சிங்களவர்களுக்கு திருமணம் முடித்துக்கொடுத்துள்ளார். தமிழ் மொழி மூத்த மொழி, தமிழே தனது மூச்சி, தமிழே அவரது பேச்சு என பாராளுமன்றத்தில் கூறுவது உண்மையென்றால் என்ன நோக்கத்தில் தனது பிள்ளைகளை சிங்களவர்களுக்கு திருமணம் முடித்துக்கொடுத்தார்.

அவர்களின் உடலில் இல்லாத இனவாதத்தை வேண்டுமென்றே உருவாக்கி விக்கினேஸ்வரன் இனவாத கருத்துக்களை முன்வைக்கின்றார். இவ்வாறு பேசி தமிழ் மக்களை குழப்பிவிட்டால் தான் சம்பந்தனை மிஞ்சிய வீரராக முடியும் என விக்கினேஸ்வரன் நினைக்கின்றார். இன்று வடக்கில் தமிழ் மக்கள் தமிழ் இனவாதத்தை நிராகரிக்கின்றனர். 16 பேராக இருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் பலம் இன்று 10 ஆக குறைந்துவிட்டது. முதல் தடவையாக வடக்கில் இருந்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர் பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளார். எனவே தமிழ் மக்கள் இன்று இனவாதத்தில் இருந்து விடுபட்டு இலங்கையர்கள் என்ற அடையாளத்தில் தமிழ் மக்கள் செயற்பட ஆரம்பித்துவிட்டனர். பெரும்பாலான தமிழர்கள் அரசாங்கத்தை ஆதரிக்க ஆரம்பித்து விட்டனர்.

என்னை பொறுத்தவரையில் யாழ்ப்பணத்தில்  ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் போட்டியிட்டு வெற்றியீட்டிய அங்கஜனுக்கும் அமைச்சு பதவி கொடுக்க வேண்டும், கிழக்கில் இருந்து தெரிவாகிய அதாவுல்லாவுக்கும் அமைச்சுப்பதவி கொடுக்க வேண்டும். அப்போது தான் தமிழ்பேசும்  மக்கள் மனங்களை வெற்றிகொண்டு இலங்கையர்கள் என்ற இணைந்த பயணத்தை முன்னெடுக்க முடியும் என்றார்.

https://www.virakesari.lk/article/88652

  • கருத்துக்கள உறவுகள்

இனவாதம் பேசாத ஒருவர் மேற்படி கருத்தை சொன்னாலும் பறவாயில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20200824-225454.jpg இப்படி எல்லாம் பேசினால் தான் வீட்டில் சாப்பாடு போடுவாங்க போல கிடக்கு ..😢

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, பிழம்பு said:

என்னை பொறுத்தவரையில் யாழ்ப்பணத்தில்  ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் போட்டியிட்டு வெற்றியீட்டிய அங்கஜனுக்கும் அமைச்சு பதவி கொடுக்க வேண்டும், கிழக்கில் இருந்து தெரிவாகிய அதாவுல்லாவுக்கும் அமைச்சுப்பதவி கொடுக்க வேண்டும். அப்போது தான் தமிழ்பேசும்  மக்கள் மனங்களை வெற்றிகொண்டு இலங்கையர்கள் என்ற இணைந்த பயணத்தை முன்னெடுக்க முடியும் என்றார்.

அங்கயன்  சுமந்திரனையும் வென்றுவிடடார் போங்கள். இதுதான் சம்பந்தர் எதிர்பார்த்தது.  நாளைக்கு தமிழருக்கு எதிராக அங்கயன் பேசாவிட்டால் இன்னொரு காக்கையன் வரலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.