Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கஜேந்திரன் எம்.பி. அம்பாறைக்கு களவிஜயம்; கல்முனையை தரமுயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கஜேந்திரன் எம்.பி. அம்பாறைக்கு களவிஜயம்; கல்முனையை தரமுயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறார்

BharatiSeptember 11, 2020

தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் தேசிய பட்டியல் உறுப்பினராக செல்வராஜா கஜேந்திரன் அம்பாறை மாவட்டத்திற்கு களவிஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளார்.

கடந்த 9 ஆவது பாராளுமன்ற தேர்தலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பில் இரண்டு ஆசனங்கள் பெறப்பட்ட நிலையில் தேசிய பட்டியல் மூலம் வன்னி மற்றும் கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவம் செய்யும் எம்.பியாக அவர் சார்ந்த கட்சியினால் நியமிக்கப்பட்டிருந்தார்.

 

இந்நிலையில் இன்று அம்பாறை மாவட்டத்தின் மக்கள் பிரச்சினைகளை ஆராயும் முகமாக வருகை தந்த அவர் கல்முனை உப பிரதேச செயலகம் நாவிதன்வெளி பிரதேச செயலகம் திருக்கோவில் மற்றும் பொத்துவில் பகுதிகளுக்கும் விஜயம் செய்திருந்தார்.

 

இவ்வாறு விஜயம் செய்த பின்னர் கல்முனை உப பிரதேச செயலகம் தரமுயர்த்த தமது கட்சி கடந்த காலங்களில் செயற்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் காலங்களில் அதனை செயலுருவாக்கம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறினார்.

 

இதே வேளை பாராளுமன்ற உறுப்பினர் நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன் மற்றும் கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தின் பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஆகியோரை சந்தித்திருந்ததுடன்இவர் பாராளுமன்ற உறுப்பினருக்குரிய பாதுகாப்பு உத்தியோகத்தர் எவரும் இன்றி வருனை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது

 

http://thinakkural.lk/article/67748

 

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, கிருபன் said:

கஜேந்திரன் எம்.பி. அம்பாறைக்கு களவிஜயம்; கல்முனையை தரமுயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறார்

இவர் பாராளுமன்ற உறுப்பினருக்குரிய பாதுகாப்பு உத்தியோகத்தர் எவரும் இன்றி வருனை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது

 

http://thinakkural.lk/article/67748

 

ஏற்றுகொள்ள முடியாது இவர் வடக்கில் தானே பா.உ இவர் ஏன் கிழக்கு மாகாணத்துக்கு சென்று வடக்கு தமிழரின் ஆதிக்க வெறியை காட்ட முனைகின்றார்....கிழக்கில் பல வெடி வைத்த விடி வெள்ளிகள் அபிவிருத்தி செய்ய துடிக்கும் பொழுது இவர் அங்கு சென்று அந்த மக்களின் ஒளிமயமான எதிர்காலத்துக்கு ஆப்பு வைக்க முயல்கின்றார்....

இன்னும் ஐந்து வருடத்தின் பின்பு அதிரடி படை பாதுகாப்பு வழங்கும்..

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, putthan said:

ஏற்றுகொள்ள முடியாது இவர் வடக்கில் தானே பா.உ இவர் ஏன் கிழக்கு மாகாணத்துக்கு சென்று வடக்கு தமிழரின் ஆதிக்க வெறியை காட்ட முனைகின்றார்....கிழக்கில் பல வெடி வைத்த விடி வெள்ளிகள் அபிவிருத்தி செய்ய துடிக்கும் பொழுது இவர் அங்கு சென்று அந்த மக்களின் ஒளிமயமான எதிர்காலத்துக்கு ஆப்பு வைக்க முயல்கின்றார்....

இன்னும் ஐந்து வருடத்தின் பின்பு அதிரடி படை பாதுகாப்பு வழங்கும்..

சரி சந்தோசம்
சிட்னி முருகன் கோவிலில் ஒரு அடையாள உண்ணாவிரதம் இருந்தா போச்சு.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஈழப்பிரியன் said:

சரி சந்தோசம்
சிட்னி முருகன் கோவிலில் ஒரு அடையாள உண்ணாவிரதம் இருந்தா போச்சு.

கொரானா இல்லாவிடில் நான் தான் முதல் ஆள் ....அன்னதானத்தில்😄

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, putthan said:

ஏற்றுகொள்ள முடியாது இவர் வடக்கில் தானே பா.உ இவர் ஏன் கிழக்கு மாகாணத்துக்கு சென்று வடக்கு தமிழரின் ஆதிக்க வெறியை காட்ட முனைகின்றார்....கிழக்கில் பல வெடி வைத்த விடி வெள்ளிகள் அபிவிருத்தி செய்ய துடிக்கும் பொழுது இவர் அங்கு சென்று அந்த மக்களின் ஒளிமயமான எதிர்காலத்துக்கு ஆப்பு வைக்க முயல்கின்றார்....

இன்னும் ஐந்து வருடத்தின் பின்பு அதிரடி படை பாதுகாப்பு வழங்கும்..

உங்கள் ஜோக் புரிகிறது.

ஆனால் இவர் கட்சிக்கு வடக்கு, கிழக்கில் விழுந்த மொத்த வாக்கை வைத்தே இந்த தேசியபட்டியல் ஆசனம் கிடைத்தது.

பிள்ளையான் கட்சி இன்னும் 80 சொச்ச வாக்கு கூட எடுத்திருந்தால் அவர்களுக்கு போயிருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

உங்கள் ஜோக் புரிகிறது.

ஆனால் இவர் கட்சிக்கு வடக்கு, கிழக்கில் விழுந்த மொத்த வாக்கை வைத்தே இந்த தேசியபட்டியல் ஆசனம் கிடைத்தது.

பிள்ளையான் கட்சி இன்னும் 80 சொச்ச வாக்கு கூட எடுத்திருந்தால் அவர்களுக்கு போயிருக்கும்.

இதனால் எந்த பிரயோசனமும் இல்லை....என நினைக்கிறேன்...தனது தொகுதி மக்களுக்கே பெரிதாக செய்ய முடியாது ஒரு பா.உ என்ற தகுதியால்..அரசின் ஆதரவாளராக இருந்தால் பா.உ வை விட அதிகம் செய்யலாம்....
நவீன சுப்பர்மார்க்கட் கட்டி கொடுப்பார்கள்....துரையப்பா செய்த மாதிரி....

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, putthan said:

இதனால் எந்த பிரயோசனமும் இல்லை....என நினைக்கிறேன்...தனது தொகுதி மக்களுக்கே பெரிதாக செய்ய முடியாது ஒரு பா.உ என்ற தகுதியால்..அரசின் ஆதரவாளராக இருந்தால் பா.உ வை விட அதிகம் செய்யலாம்....
நவீன சுப்பர்மார்க்கட் கட்டி கொடுப்பார்கள்....துரையப்பா செய்த மாதிரி....

உண்மைதான். ஆனால் ஒரு வடக்கு எம்பி, அந்த ஊரில் போய் அலுவலகம் திறந்து, காணி இதர விடயங்களில் முன்நின்று செயல்படும்போது சொல்லப்படும் செய்தி எமது இன ஒற்றுமையை கட்டி காக்க உதவும்.

தவிரவும் புலம் பெயர் தனிப்பட்ட உதவிகளை கூட தேவை படுபவருக்கு இவர் மூலம் செய்ய முடியும் அல்லவா?

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

தவிரவும் புலம் பெயர் தனிப்பட்ட உதவிகளை கூட தேவை படுபவருக்கு இவர் மூலம் செய்ய முடியும் அல்லவா?

இது நடக்கக் கூடிய சாத்தியக் கூறுகள் இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையர், அரசு முதல் சாதாரண ஏழை வரை நம்பியிருக்கும் மூலதனம் தற்போதைக்கு புலம்பெயர்ந்தோரின் உதவியே.

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, goshan_che said:

உண்மைதான். ஆனால் ஒரு வடக்கு எம்பி, அந்த ஊரில் போய் அலுவலகம் திறந்து, காணி இதர விடயங்களில் முன்நின்று செயல்படும்போது சொல்லப்படும் செய்தி எமது இன ஒற்றுமையை கட்டி காக்க உதவும்.

தவிரவும் புலம் பெயர் தனிப்பட்ட உதவிகளை கூட தேவை படுபவருக்கு இவர் மூலம் செய்ய முடியும் அல்லவா?

உண்மை... இனஒற்றுமைக்கு இது தேவை மாற்றுகருத்துக்கு இடமில்லை....புலம் பெயர் உதவிகள் கிடைக்க வ்சதிகளை இவர் முன்னின்று செய்தால் வரவேற்கப்படவேண்டிய விடயம்

நல்ல செயல்

6 hours ago, putthan said:

உண்மை... இனஒற்றுமைக்கு இது தேவை மாற்றுகருத்துக்கு இடமில்லை....புலம் பெயர் உதவிகள் கிடைக்க வ்சதிகளை இவர் முன்னின்று செய்தால் வரவேற்கப்படவேண்டிய விடயம்

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.