Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நல்லை குருமுதல்வரை சந்தித்த யாழ் மாவட்ட கட்டளை தளபதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நல்லை குருமுதல்வரை சந்தித்த யாழ் மாவட்ட கட்டளை தளபதி

nallai.jpg?189db0&189db0.

 

யாழ்.மாவட்டத்தின் புதிய இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் செனரத் பண்டார இன்று (12) காலை நல்லூர் வீதியில் உள்ள நல்லை ஆதீன குருமுதல்வரை சந்தித்து ஆசி பெற்றார்.

யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கு புதிதாக பதவியேற்றுள்ள இராணுவ கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் செனரத் பண்டார பல தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாடி வருகின்ற நிலையில், இன்று காலை நல்லூர் வீதியில் உள்ள நல்லை ஆதீன குருமுதல்வரை சந்தித்து ஆசி பெற்றார்.

மேலும், யாழ்.மாவட்டத்தின் நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடினார். இதன்போது கருத்து தெரிவித்த அவர், “நான் பதவியேற்ற பின் இன்றைய தினம் முதன் முதலாக இந்து மத குருவை சந்தித்திருக்கின்றேன். சந்திப்பில் மிகவும் ஆக்கபூர்வமானதாக பல விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்து இருக்கின்றேன்.

இராணுவத்தினர் ஆகிய எமது பிரதான நோக்கம் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதோடு நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதாகும். இந்த அரசாங்கமானது பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் பல்வேறு முன்மொழிவுகளை மக்கள் சார்ந்து மேற்கொள்ள இருக்கின்றார்கள். யாழ் மாவட்ட கட்டளை தலைமையகமானது வடக்கு மக்களுக்கு உதவி செய்வதற்கும் இந்த பிரதேசத்தினை அபிவிருத்தி செய்வதற்கும் இப்பிரதேச மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கும் வேலைத்திட்டங்களை செயற்படுத்தும்.” – என்றார்.

https://newuthayan.com/நல்லை-குருமுதல்வரை-சந்தி/

 

  • கருத்துக்கள உறவுகள்

2 நாடு, 2 நிர்வாகம், 2 இராணுவக் கட்டமைப்பு – பிரிவினை என்ற பேச்சுக்கே இடமில்லை…

September 12, 2020

jaffna-army-comandor.jpg

நாங்கள் இலங்கையர் என்ற அடிப்படையில் அனைவரும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் செனரத் பண்டார தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் (12.09.20) யாழ்ப்பானம் நல்லை ஆதீன முதல்வரை சந்தித்தபின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,

“நான் பதவியேற்ற பின் இன்றைய தினம் முதன்முதலாக இந்து மத குருவை சந்தித்திருக்கின்றேன். அவரிடம் ஆசியினைப் பெற்றுள்ளேன். இந்த சந்திப்பில் மிகவும் ஆக்கபூர்வமானதாக பல விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்து இருக்கின்றேன்.

ராணுவத்தினர் ஆகிய எமது பிரதான நோக்கம் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தி லோடு நல்லிணக்கத்தை ஏற்படுத்துதலாகும் இந்த அரசாங்கமானது பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் திட்டங்கள் மற்றும் பல்வேறு முன்மொழிவுகளை மக்கள் சார்ந்து மேற்கொள்ள இருக்கின்றார்கள்.

குறிப்பாக யாழ் மாவட்ட கட்டளை தலைமையகமானது வடக்கு மக்களுக்கு உதவி செய்வதற்கும் இந்த பிரதேசத்தினை அபிவிருத்தி செய்வதற்கும் அத்தோடு இப்பிரதேச மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வேலைத்திட்டங்களை செயற்படுத்தும். அத்தோடு எமது பிரதேசத்தில் சமாதானம் முக்கியமானது இலங்கையர் அனைவரும் ஒரு நாட்டவர்கள் தான் என்ற கொள்கைக்கு இணங்க நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக இந்த நாட்டில் வசித்து வருகிறோம் இங்கே இரண்டு நாடுமில்லை இரண்டு நிர்வாகமும் இல்லை இரண்டு இராணுவ கட்டமைப்பு என்ற கதைக்கும் இடமுமில்லை. நாம் அனைவரும் இலங்கையர் என்ற ஒரு குடையின் கீழ் ஒற்றுமையாக செயற்பட வேண்டும் இங்கே பிரிவினை என்ற வார்த்தைக்கு இடமில்லை.

ஆகவே நான் இராணுவ கட்டளைத் தளபதிஎன்ற வகையில் யாழ் மாவட்டத்தின் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பில் கூடிய கவனம் செலுத்துவேன். அத்தோடு மக்களை சந்தோஷமாக வாழ்வதற்கு உரிய வழிவகை நான் செய்வேன் எனவும் தெரிவித்தார்.

குறித்த கலந்துரையாடலில் யாழ்மாவட்டத்தின் நிலைமைகள் தொடர்பிலும் கலந்துரையாடிய அவர், நல்லை ஆதீன குருமுதல்வரை சந்தித்த பின் நல்லூர் ஆலயத்திற்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டமையும் குறிப்பிடத்தக்கது.

 

https://globaltamilnews.net/2020/150010/

 

  • கருத்துக்கள உறவுகள்

 ஆங்கிலேயனை ஏமாத்தி அதிகாரத்தை கைப்பற்றின மாதிரி, அடுத்த நாடகம் அரங்கேறுது. இனி அடுத்தது யாழ் ஆயர் சந்திப்பு.. பவுத்தத்துக்கு முன்னுரிமை, ஆசி மட்டும் நல்லை ஆதீனத்திடமா? நல்லா நடிப்பானுகள் காரியம் ஆகுமட்டும்.  தெற்கில் சண்டித்தனம் இங்கு குழைவு.

3 minutes ago, satan said:

 ஆங்கிலேயனை ஏமாத்தி அதிகாரத்தை கைப்பற்றின மாதிரி, அடுத்த நாடகம் அரங்கேறுது. இனி அடுத்தது யாழ் ஆயர் சந்திப்பு.. பவுத்தத்துக்கு முன்னுரிமை, ஆசி மட்டும் நல்லை ஆதீனத்திடமா? நல்லா நடிப்பானுகள் காரியம் ஆகுமட்டும்.  தெற்கில் சண்டித்தனம் இங்கு குழைவு.

சர்வதேச அரங்கில் தமிழனுக்கு சாதகமாக என்னவோ நடக்குது அதுக்கு தான் இந்த கும்பிடு;  சீமான் கட்சி மீதானான தாக்குதல்; ஈழத்தமிழர் தமிழர் தெலுங்கு வழி தோன்றல்கள் என்ற நிறுவு முயற்சி.

இவையெல்லாம் தற்செயலாக நடப்பவை அல்ல மூன்றும் ஒருங்கிணைந்த செயற்பாடுகள்.

1 hour ago, Dash said:

சர்வதேச அரங்கில் தமிழனுக்கு சாதகமாக என்னவோ நடக்குது அதுக்கு தான் இந்த கும்பிடு;  சீமான் கட்சி மீதானான தாக்குதல்; ஈழத்தமிழர் தமிழர் தெலுங்கு வழி தோன்றல்கள் என்ற நிறுவு முயற்சி.

இவையெல்லாம் தற்செயலாக நடப்பவை அல்ல மூன்றும் ஒருங்கிணைந்த செயற்பாடுகள்.

சரியாக சொன்னீர்கள்

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Dash said:

சர்வதேச அரங்கில் தமிழனுக்கு சாதகமாக என்னவோ நடக்குது அதுக்கு தான் இந்த கும்பிடு;  சீமான் கட்சி மீதானான தாக்குதல்; ஈழத்தமிழர் தமிழர் தெலுங்கு வழி தோன்றல்கள் என்ற நிறுவு முயற்சி.

இவையெல்லாம் தற்செயலாக நடப்பவை அல்ல மூன்றும் ஒருங்கிணைந்த செயற்பாடுகள்.

இது போர்த்துக்கேயருடன் 1520ல்  ஆரம்பித்த 500 வருடகால அடிமைத்தனம்.... மாறும் காலம் வரும் விரைவில்.

யுத்த குற்றவாளிகள் அரசினை அமைத்து இருப்பது எமக்கு சாதகமானது. கொரோன இடையில் வராமல் இருந்திருந்தால், செப்டெம்பர் மாதத்தில் ஜெனீவாவில் விக்கல் வந்திருக்கும்.

மார்ச் மாதம் இறுகும்.  டொரோண்டோவில் இருந்து ஒட்டவா போவது போல....தமிழர்களும் உலகெங்கும் போராடனும்....
 

7 hours ago, Nathamuni said:

இது போர்த்துக்கேயருடன் 1520ல்  ஆரம்பித்த 500 வருடகால அடிமைத்தனம்.... மாறும் காலம் வரும் விரைவில்.

யுத்த குற்றவாளிகள் அரசினை அமைத்து இருப்பது எமக்கு சாதகமானது. கொரோன இடையில் வராமல் இருந்திருந்தால், செப்டெம்பர் மாதத்தில் ஜெனீவாவில் விக்கல் வந்திருக்கும்.

மார்ச் மாதம் இறுகும்.  டொரோண்டோவில் இருந்து ஒட்டவா போவது போல....தமிழர்களும் உலகெங்கும் போராடனும்....
 

சீமான் கட்சிக்குள் கலவரம் வரக் காரணமே இந்த ஜெனீவா கூட்டத் தொடர் தான்; 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.