Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மன்னாரில் நடைபெற்றது... இந்து எழுச்சி மாநாடு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

 

மன்னாரில் நடைபெற்றது... இந்து எழுச்சி மாநாடு!

மன்னார் இந்து குருமார் பேரவையின் ஏற்பாட்டில் இந்து எழுச்சி மாநாடும், இந்து குருமார் பேரவையின் 25ஆவது ஆண்டு விழாவும் இன்று நடைபெற்றது.

மன்னார் இந்து குருமார் பேரவையின் தலைவர் மனோ ஐங்கர சர்மா தலைமையில் மன்னார் நகர மண்டபத்தில் இந்நிகழ்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை இடம்பெற்றது.

இந்நிகழ்வின் ஒரு பகுதியாக காலை 9.45 மணியளவில் மன்னார் பிரதான பாலத்தடியில் இருந்து மன்னார் நகர மண்டபவம் வரை அமைதியான முறையில் ஊர்வலம் இடம்பெற்றது.

குறித்த ஊர்வலத்தில் இந்து குருமார்கள், இந்து மக்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டிருந்ததுடன் இதன்போது நந்திக் கொடியை ஏந்தியவாறு மன்னார் நகர மண்டபம் வரை ஊர்வலமாக வந்தனர்.

அதனைத் தொடர்ந்து மன்னார் நகர மண்டபத்தில் அமைக்கப்பட்ட கலாநிதி மனோகரக் குருக்கள் அரங்கில் நிகழ்வுகள் இடம்பெற்றன. இதன்போது நடனம் மற்றும் உரைகளும் இடம்பெற்றன.

இந்நிகழ்வில், மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் பிரதம குரு கருணாநந்த குருக்கள், கொழும்பு சிறி பத்திரகாளியம்மன் ஆலய பிரதம குரு குமன் குருக்கள், சிவசேன அமைப்பின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தன் உட்பட இந்து மத குருக்கள், அறநெறி பாடசாலை மாணவர்கள் பலர் கலந்து கொண்டிருந்தனர்.

http://athavannews.com/மன்னாரில்-நடைபெற்றது-இந்/

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ச்சியாக மன்னாரில் இந்து சமய நிகழ்வுகள் பெரும் ஏற்பாட்டில் நடக்கும். ஏதாவதொரு வழியில் வடக்கு கிழக்கில் வாழும் தமிழருக்கிடையில் சமயரீதியிலான மோதலை உருவாக்குவதற்கு இந்தியா மிகவும் மூர்க்கமாக முயற்சிக்கிறது. அதற்குத் தெரிவு செய்யப்பட்ட இடம்தான் மன்னார். 

சச்சியருக்கு அறிவு இந்த அளவுக்கு போகவேண்டுமா ?☹️ 

சமய ரீதியிலான பிர்ச்சனை முளைவிட்டால் கிறீத்துவர்களுக்கு உள்ள தெரிவு என்ன 🤔

இதனால் பயனடையப்போவது யார்🤔

ஏற்கனவே தமிழருக்கு போட்டியாக முசிலிம்கள் சகல பக்கங்களாலும் வளர்ந்து வரும்பொது இப்படியொரு புதிய பிரச்சனையை ஏற்படுத்தி தமிழரை மேலும் பலவீனப்படுத்துவதன் பின்னணி என்ன 🤔

சமய ரீதியிலான பிரச்சனையை உண்டாக்குவதற்கு இந்தியா பகீரதப் பிரயத்தனம் மேற்கொள்வதற்கான காரணம் என்ன 🤔

1 hour ago, Kapithan said:

 

இதனால் பயனடையப்போவது யார்🤔

ஏற்கனவே தமிழருக்கு போட்டியாக முசிலிம்கள் சகல பக்கங்களாலும் வளர்ந்து வரும்பொது இப்படியொரு புதிய பிரச்சனையை ஏற்படுத்தி தமிழரை மேலும் பலவீனப்படுத்துவதன் பின்னணி என்ன 🤔

 

கேள்வியையும் நீங்களே கேட்டு பதிலையும் நீங்களே குறிப்பீட்டுள்ளிர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Dash said:

கேள்வியையும் நீங்களே கேட்டு பதிலையும் நீங்களே குறிப்பீட்டுள்ளிர்கள்.

என்னவிதமான பயன் ?

13 hours ago, Kapithan said:

தொடர்ச்சியாக மன்னாரில் இந்து சமய நிகழ்வுகள் பெரும் ஏற்பாட்டில் நடக்கும். ஏதாவதொரு வழியில் வடக்கு கிழக்கில் வாழும் தமிழருக்கிடையில் சமயரீதியிலான மோதலை உருவாக்குவதற்கு இந்தியா மிகவும் மூர்க்கமாக முயற்சிக்கிறது. அதற்குத் தெரிவு செய்யப்பட்ட இடம்தான் மன்னார். 

சச்சியருக்கு அறிவு இந்த அளவுக்கு போகவேண்டுமா ?☹️ 

சமய ரீதியிலான பிர்ச்சனை முளைவிட்டால் கிறீத்துவர்களுக்கு உள்ள தெரிவு என்ன 🤔

இதனால் பயனடையப்போவது யார்🤔

ஏற்கனவே தமிழருக்கு போட்டியாக முசிலிம்கள் சகல பக்கங்களாலும் வளர்ந்து வரும்பொது இப்படியொரு புதிய பிரச்சனையை ஏற்படுத்தி தமிழரை மேலும் பலவீனப்படுத்துவதன் பின்னணி என்ன 🤔

சமய ரீதியிலான பிரச்சனையை உண்டாக்குவதற்கு இந்தியா பகீரதப் பிரயத்தனம் மேற்கொள்வதற்கான காரணம் என்ன 🤔

சச்சியார் என்னதான் பண்ணினாலும் ஒன்றும் நடக்கப்போவதில்லை. அவர் வளவதட்கு இந்தியாவிடம் இருந்து பணம் கிடைக்கும். அவ்வளவுதான். மாடறுப்புக்கு தடை குறித்து சந்தோசப்பட்டு கருது கூறினார். எதோ தான் சொல்லி, அதாவது ஹிந்து பரிஷத் சொல்லித்தான் இது நடந்ததுபோல் சந்தோஷப்பட்டார். அனால் உண்மையில் முஸ்லிம்களுக்கு எதிரான சில நடவடிக்கையில் ஒன்றாகவே அரசாங்கம் பார்த்தது.

இதே இந்துத்தவாதிகள்தான் இந்தியாவில் மாடறுப்பு செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறார்கள். பெரிய அரசியல்வாதிகளாகவும், பணக்காரராகவும் இவர்களே இருக்கிறார்கள். வெளியில்தான் உபதேசம். உள்ளுக்குள் எல்லாம் நடக்கும்.

இவர் எப்போதுமே இந்து கிறிஸ்தவ மோதலை ஆதரிப்பதில் முன்னிட்பவர் என்பதில் மாற்றுக்கருத்தும் இடமில்லை. மற்றப்படி மன்னாரில் இந்து கோவில்களாக இருக்கட்டும், பாடசாலைகளாக இருக்கட்டும் அங்கு எந்த பிரச்சினையும் இருந்ததில்லை. திருக்கேதீஸ்வர கோவில் வளைவு அமைப்பதில் பிரச்சினையே ஒழிய வேறு குறிப்பிரும்படியாக ஒன்றும் இல்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.