Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கைக்கு வெளியிலிருந்து முன்வைக்கப்படும் நல்லிணக்க கட்டமைப்பை ஏற்றுக்கொள்ள தயாரில்லை – அரசாங்கம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைக்கு வெளியிலிருந்து முன்வைக்கப்படும் நல்லிணக்க கட்டமைப்பை ஏற்றுக்கொள்ள தயாரில்லை – அரசாங்கம்

Rajeevan ArasaratnamSeptember 19, 2020

இலங்கைக்கு வெளியிலிருந்து முன்வைக்கப்படும் நல்லிணக்க கட்டமைப்பை ஏற்றுக்கொள்ள தயாரில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
உண்மை நீதி இழப்பீடுமற்றும் மீளாநிகழாமை ஆகியவற்றை உறுதிசெய்வதற்கான ஐநாவின் விசேட அறிக்கையாளருடனான கலந்துரையாடலின் போது இலங்கை பிரதிநிதிகள் இதனை தெரிவித்துள்ளனர்.

கடந்த நான்கரை வருடங்களாக உண்மையான நல்லிணக்கத்தை ஏற்படுத்த தவறியுள்ள இலங்கைக்கு வெளியே இருந்துமுன்வைக்கப்பட்ட நல்லிணக்க கட்டமைப்பினை தொடர்வதை கைவிட்டுவிட்டு இலங்கையின் நலனை கருத்தில் கொண்டு பயனளிக்க கூடிய நல்லிணக்க நடவடிக்கைகளை முன்னெடுக்கப்போவதாக அரசாங்கம்தெரிவித்துள்ளது.
மக்கள் அவ்வாறான கட்டமைப்பிற்கான ஆணையை வழங்கியுள்ளனர் எனவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

விசேட அறிக்கையாளர் இலங்கைக்கு விஜயம்மேற்கொண்ட பின்னர் உண்மை நீதி இழப்பீடு மீளநிகழாமை போன்ற விடயங்களில்சாதிக்கப்பட்டுள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அறிக்கையாளரின் அறிக்கை உண்மையாகவும்சாதகமாகவும் குறிப்பிடவில்லைஎன இலங்கை தெரிவித்துள்ளது.

 

http://thinakkural.lk/article/69897

  • கருத்துக்கள உறவுகள்

வெளியிலிருந்து முன்வைக்கப்படும் நல்லிணக்க கட்டமைப்பை ஏற்கமாட்டோம்: ஜெனீவாவில் இலங்கை

 

இலங்கைக்கு வெளியிலிருந்து முன்வைக்கப்படும் நல்லிணக்கக் கட்டமைப்பை ஏற்றுக்கொள்ளத் தயாரில்லை என அரசு ஜெனிவாவில் ஐ.நா.மனித உரிமைகள் சபைக்குத் தெரிவித்துள்ளது.

நான்கரை ஆண்டுகளுக்கும் மேலாக உண்மையான நல்லிணக்கத்தை வழங்கத்தவறிய வெளிப்புறமாக இயக்கப்படும் ஒரு கட்டமைப்பைத் தொடர விரும்புவதற்குப் பதிலாக இலங்கையின் நலனுக்காக,மக்கள் வழங்கிய கட்டளைகளின் ஆதரவுடன் நல்லிணக்கத்துக்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கப் போவதாகவும் அரசு தெரிவித்துள்ளது.

ஜெனிவாவில் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 45 ஆவது அமர்வில், உண்மை நீதி இழப்பீடு மற்றும் மீள நிகழாமை ஆகியவற்றை உறுதி செய்வதற்கான ஐ.நாவின் விசேட அறிக்கையாளருடனான கலந்துரையாடலின்போதே இலங்கைப் பிரதிநிதிகள் இதனைத் தெரிவித்துள்ளனர்.

2030 ஆம் ஆண்டு நிலையான அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலின் கீழ் தன்னார்வக் கடமைகளுக்கு இணங்க நீதி மற்றும் நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துதல் மற்றும் சமூகத்தில் பாதிக்கப்படக்கூடிய பிரிவினர்களின் பிரச்னைகளை நிவர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டு அரசு செயல்படும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

ஐ.நா. விசேட அறிக்கையாளரின் சிறப்பு அறிக்கையில் இலங்கை குறித்த பல கவலைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. விசேட அறிக்கையாளர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட பின்னர் உண்மை, நீதி, இழப்பீடு, மீளநிகழாமை போன்ற விடயங்களில் சாதிக்கப்பட்டுள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை, அறிக்கையாளர் தனது அறிக்கையில் உண்மையாகவும் சாதகமாகவும் குறிப்பிடவில்லை என இலங்கை தெரிவித்துள்ளது.

உள்நாட்டு முன்னுரிமைகள் மற்றும் கொள்கைகளுக்கு இணங்க, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம், ஐ.நா. மனித உரிமைகள் பொறிமுறைகள், உள்நாட்டு முன்னுரிமைகள் மற்றும் கொள்கைகளுக்கு ஏற்ப சர்வதேச சமூகத்துடன் நெருக்கமான ஒத்துழைப்புடன் செயற்படுவதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

 

http://www.ilakku.org/வெளியிலிருந்து-முன்வைக்/

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, உடையார் said:

வெளியிலிருந்து முன்வைக்கப்படும் நல்லிணக்க கட்டமைப்பை ஏற்கமாட்டோம்: ஜெனீவாவில் இலங்கை

உள்ளிருந்து முன்வைக்கப்படும் நல்லிணக்க கட்டமைப்பையே ஏற்கமாட்டம் : ஜெனீவாவில் இலங்கை..

OblongCoarseBluefintuna-size_restricted.

போவீயா என் மிலிபன் விசுகோத்து ..👍

10 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

உள்ளிருந்து முன்வைக்கப்படும் நல்லிணக்க கட்டமைப்பையே ஏற்கமாட்டம் : ஜெனீவாவில் இலங்கை..

OblongCoarseBluefintuna-size_restricted.

போவீயா என் மிலிபன் விசுகோத்து ..👍

எத்தனை காலத்திற்குதான் ஏமாற்ற முடியும் . ஒருநாள் அகப்படுவார்கள் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.