Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அறவழிப் போராட்டங்களை நடத்தி என்ன பயனைக் கண்டனர் தமிழர்.?!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அறவழிப் போராட்டங்களை நடத்தி என்ன பயனைக் கண்டனர் தமிழர்.?!

Screenshot-2020-10-01-10-51-26-214-org-m

வடக்கு, கிழக்கில் தமிழர்கள் 'உரிமைகள் வேண்டும்' என்ற கோஷத்துடன் கடந்த காலங்களிலும், தற்காலத்திலும் அறவழிப் போராட்டங்களை நடத்தி என்ன பயனைக் கண்டார்கள்.? ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டம், ஒரு நாள் ஹர்த்தால் போராட்டமும்தான் அவர்களின் தற்போதைய அறவழிப் போராட்டங்களா?"

- இவ்வாறு கேள்விக்கணைகளைத் தொடுத்துள்ளார். அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல.

"தமிழர்கள் அறவழியில் போராடியோ அல்லது மீண்டும் ஆயுதம் தூக்கிப் போராடியோ அரசை ஒரு போதும் மிரட்ட முடியாது. அரசு நடு நிலையுடன் செயற்படுகின்றது. இதைத் தமிழ்க் கட்சிகளின் தலைவர்களிடம் கூறி வைக்க விரும்புகின்றோம்" எனவும் அவர் குறிப்பிட்டார்.

'வடக்கு, கிழக்கில் தமிழ்பேசும் உறவுகளை அடக்கியாள முடியும் என்று ராஜபக்ச அரசு இனியும் எண்ணவேகூடாது. கடந்த 26ஆம் திகதியும், 28ஆம் திகதியும் இங்கு நடைபெற்ற அரசுக்கு எதிரான அறவழிப் போராட்டங்களின் வெற்றிச் செய்திகள் இதற்கு உதாரணங்களாக உள்ளன' என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்திருந்தார். இதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

"சிங்களவர்களைப் போல் தமிழர்களும் சகல உரிமைகளையும் இந்த நாட்டில் அனுபவிக்கின்றார்கள். அவர்கள் தற்போது பயங்கரவாதிகளான தமிழீழ விடுதலைப்புலிகளை நினைவு கூரவே அனுமதி கேட்டு உண்ணாவிரதப் போராட்டத்தையும், ஹர்த்தால் போராட்டத்தையும் நடத்தியுள்ளார்கள். தமிழ்க் கட்சிகளின் வற்புறுத்தலின் பேரிலேயே தமிழர்கள் இந்த ஒரு நாள் போராட்டங்களில் ஈடுபட்டார்கள். இதனால எந்தப் பயனையும் தமிழர்களும், தமிழ்க் கட்சியினரும் ஒருபோதும் பெற மாட்டார்கள்.

இந்த ஏமாற்றுப் வழி போராட்டங்கள் வெற்றியடைந்துள்ளன என்று தமிழ்த் தலைவர்கள் பகல் கனவு காண்கின்றார்கள். இவ்வாறு ஒரு நாள் போராட்டங்கள் வெற்றியடைந்தன எனில் , சுமார் 70 வருடங்களாக தமிழர்கள் ஏன் அறவழியிலும், ஆயுதம் தூக்கியும் போராடினார்கள்.?

தமிழ்த் தலைவர்களின் இந்த ஏமாற்று வேலைகளுக்கு வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் இனியும் துணைபோகக்கூடாது" - என்றார்.

http://aruvi.com/article/tam/2020/10/01/17392/

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

சுமார் 70 வருடங்களாக தமிழர்கள் ஏன் அறவழியிலும், ஆயுதம் தூக்கியும் போராடினார்கள்.

இது கூட தெரியாத வெறிக்குட்டி விளக்கம் சொல்லுது.  அதுகள் மனிதர்களாக இருந்தாற்தானே அடுத்தவரின் உணர்வுகளை விளங்கவும், மதிக்கவும் தெரியும். 

  • கருத்துக்கள உறவுகள்

அதுவும் பிரயோசனம் இல்லை, இதுவும் பிரயோசனம் இல்லை..... சரி....

அட.... பண்ணாட.... நம்ம தேசத்தை நீ போரில வெல்லவில்லை.... ஜரோப்பியன் பறித்து தந்தான்.....

அதே போல அவனிடம் பேசி எடுக்கிறோம். நீ மூடு.... 😡

  • கருத்துக்கள உறவுகள்

இவருக்குத் தெரியவில்லை போராட்ட வாழ்வுதான் தமிழர்களை இப்போதும் உயிர்ப்புடன் வைத்திருக்கின்றதென தவிர சிங்கள இனம் ஒன்று இப்போது தன்முனைப்புடன் இருக்கின்றதென்றால் அதற்குக்காரணம் தமிழர்கள்தான். 

கடந்தகாலங்களில் நாம் உங்களுடன் பொருதுதல்கள் அதாவது சண்டைகள் போராட்டங்கள் அனைத்திலும் இதுவரை நாம் தோற்றுப்போயிருக்கலாம் ஏன் இன்னும் நூற்றுக்கணக்கான பெரிய சிறிய பொருதுதல் மற்றும் போராட்டங்களில் இனிமேலும் தோற்கலாம் இருக்கட்டும்.

ஆனால் என்றோ ஒருநாள் உங்களால் வெற்றிபெறமுடியாத ஒரு தருணம் எதிர்காலத்தில் வரும் உங்களது நடைமுறை வாழ்வில் நீஙகள் பார்த்த தமிழீழ விடுதலைப் புலிகளை விட மூர்க்கமான எதிரியை உங்கள் வாழ்நாளில் இல்லாதுவிடினும் உங்கள் பேரன் பூட்டன் காலத்திலாவது சிங்களம் எதிர்கொள்ளும். அதற்கு முன்னுரையான தோல்விகளே விடுதலைப் புலிகளதும் ஏனைய அரசியல் முன்னெடுப்புக்களினதும் தோல்வியுமாகும்.

மாகாபாரதம் அறிந்திருந்தால் அதில்வரும் சகுனி எனும் பாத்திரம் எப்படித் தோன்றியது என முடியுமாகில் அறியமுயலவும்.

 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நாட்டு பூர்வீக மக்களின் உரிமைகளை பறிப்பதற்கு, அந்நிய சக்திகளை உள்நுழைத்து தனக்குமில்லாமல் நாடு அந்நியரிடம் பறிபோவதை, வாய்பொத்தி மௌனமாக வேடிக்கை பார்க்கும் காலம் வரும்போது, தெரியும் இந்த முட்டாள்த்தனமான வீரப்பேச்சின் விளைவுகளை. இப்ப உங்களை  நீளக்கயிற்றில் விட்டிருக்கு நல்லாய் பிரிச்சு மேயுங்கோ இறுக்கும் நேரம் வரும்போது கத்துவதற்கே வாய் திறக்க முடியாது உங்களால். உங்களிடம் சிக்கித்தவிக்கும்  புத்தருக்கும்  உங்களிடம் இருந்து விடுதலை கிடைத்துவிடும். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.