Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முஸ்லிம்களை தனி இனமாக பிரிக்க வேண்டியிருந்தது, அது ஒரு மறைமுக தந்திரோபாய வியூகம் - ரணில் சாட்சியம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் தரப்புடன் இணைந்ததாக இருந்த முஸ்லிம்களை தனியான இனத்துவ அடையாளத்தைக் கொண்ட தரப்பாக பிரிக்க உளவுத் துறைக்கு பாரிய தேவை இருந்த நிலையில், வடக்கிலிருந்து தமிழீழ விடுதலை புலிகள் முஸ்லிகளை வெளியேற்றியதை அடுத்து, முஸ்லிம்களின் அத்தகைய  கோரிக்கைக்கு  எமது உளவுச் சேவையும் மறைமுகமாக உதவியது என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.  

புலிகளுடனான யுத்ததின் போது உளவுத் தகவல்களைப் பெற்றுக்கொள்ள பெற்றுக்கொள்ள அது ஒரு உக்தியாக பயன்படுத்தப்பட்டதாகவும் அவர்  சுட்டிக்காட்டினார்.

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பில் விசாரிக்கும் ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழு முன்னிலையில்  சாட்சியமளிக்கும் போதே அவர் நேற்று இதனை வெளிப்படுத்தினார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

சட்ட மா அதிபர் திணைக்களத்தின்  மேலதிக சொலிசிட்டர் ஜெனரால்  அய்ஷா ஜினசேனவின் நெறிப்படுத்தலில், அவரது கேள்விகளுக்கு பதிலளித்தவாறு ரணில் விக்ரமசிங்க சுமார் ஒரு மணி நேரம் வரை குறித்த ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியம் அளித்தார். 

அதன் பின்னர் சுகயீன நிலைமை காரணமாக பிறிதொரு திகதியை சாட்சியமளிக்கக் கோரி, அவர் அங்கிருந்து வெளியேறினார். 

இதன்போது எதிர்வரும் 13 ஆம் திகதி மாலை 4.00 மணிக்கு அவருக்கு மீள ஆணைக்குழுவில் ஆஜராக அறிவித்தல் விடுக்கப்பட்டது.

நேற்றைய தினம் மேற்கண்ட விடயங்கள் குறித்து ஆணைக்குழுவில் விளக்கங்களை முன்வைத்த ரணில் விக்ரமசிங்க,

முஸ்லிம்கள் தனியான இனத்துவ அடையாளதரப்பாக அரசியலில் அடையாளப்படுத்தப்பட்ட பின்னணியினை விளக்கலானார்.

'தமிழீழ விடுதலை புலிகளால் வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட பின்னர், முஸ்லிம்களை தனித்துவ அடையாளத்துடன் அரசியலில் அடையாளப் படுத்த வேண்டும் என்ற கோரிக்கை மேலெழுந்தது. அப்போதைய முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அஷ்ரபும் அந்த கொள்கையில் இருந்தார்.

முஸ்லிம்களை இவ்வாறு  தமிழர்கலிடம் இருந்து பிரித்து தனியாக தரப்பாக அடையாளப்படுத்த எமது உளவுச் சேவைக்கும் பாரிய தேவை இருந்தது. அது ஒரு மறைமுக தந்திரோபாய வியூகம்.  

அவ்வாறு முஸ்லிம்கள் தனித்தரப்பாக அடையாளப் படுத்தப்பட்டதன் ஊடாக யுத்ததின் போது, உளவுத் தகவல்களைப் பெற்றுக்கொள்வது இலகுவானது என்றார்.

-www.jaffnamuslim.com

  • கருத்துக்கள உறவுகள்

9b8066e669e115b4bebfc4c36129b8d0.jpg

ஆனா உங்கட கோவனமும் இப்ப போச்சேன்னே..👍

4 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

9b8066e669e115b4bebfc4c36129b8d0.jpg

ஆனா உங்கட கோவனமும் இப்ப போச்சேன்னே..👍

யாரை கூறுகின்றீர்கள் தமிழ் தேசியன்? ரணில் விக்கிரமசிங்க என்ற தனி நபரையா? அல்லது சிங்கள இனவாதத்தையா?  அல்லது சிங்கள இனவாதிகளின்  சூழ்சசிகளுக்கு ஆட்ப்பட்டு  தமது அறியாமையால் தனி நபர்களை பழிவாங்க புறப்பட்டு தேசியத்தை இழந்து தோல்வியடைந்த  அனைத்து தமிழ்தரப்பு தலைமைகளையா?   அல்லது அப்பாவி மக்களையா? 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 minutes ago, tulpen said:

சிங்கள இனவாதிகளின்  சூழ்சசிகளுக்கு ஆட்ப்பட்டு  தமது அறியாமையால் தனி நபர்களை பழிவாங்க புறப்பட்டு தேசியத்தை இழந்து தோல்வியடைந்த  அனைத்து தமிழ்தரப்பு தலைமைகளையா?

ஒருவர் பிழை விடலாம். இருவர் பிழை விடலாம். சரி  வேண்டாம் மூவர் பிழை விடலாம் ஏமாறாலாம்...சுத்தலாம் பேக்காட்டலாம்.

அதெப்படி 70 ஆண்டு காலமாக தமிழர் தரப்புகள் அனைத்தும் தோல்விக்கு மேல் தோல்வி அடைந்து வருகின்றது.

அது ...அதாவது உங்கள் மொழியில் பயங்கரவாதமாக 30 வருடங்கள் போராடியும் பயனில்லை. எனது மொழியில் அரசியல் ரீதியாக 70 வருடங்கள் போராடியும் பயனில்லை.

உங்கள் ஆலோசனைகள் ஏதாவது இருந்தால் சொல்லுங்கள் மிஸ்டர் துல்பன்.😎

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, zuma said:

புலிகளுடனான யுத்ததின் போது உளவுத் தகவல்களைப் பெற்றுக்கொள்ள பெற்றுக்கொள்ள அது ஒரு உக்தியாக பயன்படுத்தப்பட்டதாகவும் அவர்  சுட்டிக்காட்டினார்.

அப்ப, வேலிக்கு வைச்ச முள்ளு இப்ப, உங்கட காலையே தைச்சு நடக்க முடியாமல் முடங்கிபோனீர்கள் என்கிற உண்மையையும் சொல்லிவிட வேண்டியது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.