Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூட்டு முயற்சிக்கு நாம் உடன்படவில்லை: சுமந்திரன் அணி மாவையிடம் நேரில் ஒப்பாரி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டு முயற்சிக்கு நாம் உடன்படவில்லை: சுமந்திரன் அணி மாவையிடம் நேரில் ஒப்பாரி!

November 3, 2020
BBC89A75-3D1E-491A-AEFE-35B65BC1127F.jpe

தமிழ் தேசிய அரசியலில் அண்மையில் ஏற்பட்டு வரும் சடுதியான மாற்றங்களில் தமக்கு உடன்பாடில்லை, அவை தமக்கு தெரியாமல் நடக்கிறது என எம்.ஏ.சுமந்திரன் தரப்பு குற்றம்சுமத்தியுள்ளது.

எம்.ஏ.சுமந்திரனும், அவர் தரப்பு எம்.பிக்களான சி.சிறிதரனும், சார்ள்ஸ் நிர்மலநாதனும் நேற்று, மாவை சேனாதிராசாவிடம் நேரில் இந்த குற்றச்சாட்டுக்களை சுமத்தினர்.

யாழ்ப்பாணம் 2ஆம் குறுக்குத் தெருவிலுள்ள எம்.ஏ.சுமந்திரனின் இல்லத்தில் நேற்று (2) நடந்த சந்திப்பில் இதனை தெரிவித்தனர்.

தமிழ் அரசியலில் அண்மையில் சடுதியான மாற்றங்கள் நடந்து வருகிறது. தமிழ் தேசிய பரப்பிலுள்ள கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சிகள் நடந்து வருகிறது. அத்துடன், இதுவரை இலங்கை தமிழ் அரசியல் கட்சிக்குள் எம்.ஏ.சுமந்திரனின் ஆதிக்கத்திற்கும், மாவை சேனாதிராசா முழுமையான முட்டுக்கட்டை போட்டுள்ளார். இப்பொழுதுதான் கட்சியின் உண்மையான தலைவரை போல, முழுமையான அதிகாரத்தை கையிலெடுத்துள்ளார்.

இது எம்.ஏ.சுமந்திரன் தரப்பிற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலைமை குறித்து சுமந்திரன் ஆதரவாளர்கள் சமூக வலைத்தளங்களில் பகிரங்கமாக அதிருப்தி தெரிவித்து வந்தனர். எனினும், அதற்கு பலன்கிட்டாத நிலையில், எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன், சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் கூட்டாக மாவை சேனாதிராசாவை சந்தித்து, இது குறித்து பேசியுள்ளனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின்- தமிழ் அரசு கட்சியின் அண்மைய நகர்வுகளில் தம்முடன் கலந்தலோசிக்கவில்லை, தமது பிடி நழுவிச் செல்கிறதா என அங்கலாய்த்த 3 எம்.பிக்களும் நேற்று மாவை சேனாதிராசாவுடன் பேச முடிவு செய்து, யாழில் எம்.ஏ.சுமந்தரனின் வீட்டில் ஒன்றுகூடினர்.

மாலை 6 மணியளவில் மாவை சேனாதிராசாவை தொடர்பு கொண்டு, அவரை சந்திக்க விரும்பும் விடயத்தை தெரிவித்தனர்.

இதன்போது, நகரில் தமிழ் கட்சிகளின் கூட்டமைப்பு குறித்த சந்திப்பொன்றை முடித்துக் கொண்ட மாவை, நேரடியாக எம்.ஏ.சுமந்திரனின் இல்லத்திற்கு சென்றார்.

இதன்போது, தமிழ் கட்சிகளின் கூட்டு தமக்கு தெரியாமல் நடப்பதாகவும், அதில் தாம் உடன்படவில்லையென்றும் தெரிவித்தனர். அத்துடன், கூட்டமைப்பின் செயலாளர் நியமன விவகாரமும் தமக்கு தெரியாது என்று தெரிவித்தனர்.

இதற்கு பதிலளித்த மாவை- கூட்டமைப்பின் செயலாளர் விவகாரம் 3 கட்சிகளின் தலைவர்களுடன் தொடர்புடைய விவகாரம். தலைவர்கள் கூடி முடிவெடுத்தோம் என்றார்.

தம்மையும் அழைத்து சென்றிருக்க வேண்டுமென 3 எம்.பிக்களும் தெரிவித்தனர்.

“தம்பியவை… ஒவ்வொரு கட்சிக்குள்ளும் இப்படி கேட்க பலரிருப்பார்கள். இப்படி கேட்பவர்களையெல்லாம் 3 கட்சிகளும் கூட்டி வந்தால் அது கட்சித்தலைவர்கள் கூட்டமாக இருக்காது. பொதுக்கூட்டமாக மாறி விடும். கட்சி தலைமையுடன் தொடர்புடைய விவகாரங்களை கட்சி தலைமை மேற்கொள்ளும்“ என காரமாக தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பில் மாவை சேனாதிராசா கறாராக பதிலளித்தது, தமது முறையீடுகளை அவர் கணக்கில் எடுக்காததால் எம்.ஏ.சுமந்திரன் தரப்பு எம்.பிக்களை மேலும் அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது.
 

https://www.meenagam.com/கூட்டு-முயற்சிக்கு-நாம்/

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

தமிழ் கட்சிகளின் கூட்டு தமக்கு தெரியாமல் நடப்பதாகவும், அதில் தாம் உடன்படவில்லையென்றும் தெரிவித்தனர். அத்துடன், கூட்டமைப்பின் செயலாளர் நியமன விவகாரமும் தமக்கு தெரியாது என்று தெரிவித்தனர்.

 

roflphotos-dot-com-photo-comments-201707

இவயளின் பஞ்சாயத்துக்கு ரெல்லியில் இருந்து தானே ஒடர் வரணும் ..👍

1 hour ago, கிருபன் said:

கூட்டு முயற்சிக்கு நாம் உடன்படவில்லை: சுமந்திரன் அணி மாவையிடம் நேரில் ஒப்பாரி!

தங்களுக்குள் உள்ள மோதலை தீர்க்கமுடியாமல் திண்டாடும் இவர்கள் தான் இலங்கை அரசுக்கு பயமுறுத்தல் விட்டு நாளுக்கு நாள் அறிக்கை விடுகிறார்களா!

  • கருத்துக்கள உறவுகள்

என்ன தலையா போயிடிச்சு நாம இனி தனிகட்சி தொடங்க போறமே.

  • கருத்துக்கள உறவுகள்

விக்கினேஸ்வரன் ஐயாவை  கட்சி தொடங்க துரத்தி அடித்தவர்கள், தொடங்கியபோது நக்கல் அடித்தவர்கள் இனி ஆளுக்கொரு கட்சி தொடங்கட்டும். நையாண்டி பண்ணவோ, வாக்குப்போடவோ ஆள் இருக்காது. சிங்களவன் காட்டில் நல்ல மழை பெய்யப்போகுது  என்கிறீர்கள். 

12 hours ago, vanangaamudi said:

என்ன தலையா போயிடிச்சு நாம இனி தனிகட்சி தொடங்க போறமே.

 

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

roflphotos-dot-com-photo-comments-201707

இவயளின் பஞ்சாயத்துக்கு ரெல்லியில் இருந்து தானே ஒடர் வரணும் ..👍

மெத்தச் சரி அமைச்சரே. மெத்தச் சரி 😂😂

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, vanangaamudi said:

என்ன தலையா போயிடிச்சு நாம இனி தனிகட்சி தொடங்க போறமே.

அவ்வளவுக்கு முதுகெலும்பு இருந்து இருந்தால் கடந்த தேர்தலில் தனித்து போட்டியிட போயிருப்பினம் சுமத்திரன் குழு .அப்படியே தனிக்கட்சி போனால் நல்லது மக்களே ஓய்வு கொடுத்து வீட்டுக்கு அனுப்பி விடுங்கள் .

20 hours ago, கிருபன் said:

தமிழ் தேசிய அரசியலில் அண்மையில் ஏற்பட்டு வரும் சடுதியான மாற்றங்களில் தமக்கு உடன்பாடில்லை, அவை தமக்கு தெரியாமல் நடக்கிறது என எம்.ஏ.சுமந்திரன் தரப்பு குற்றம்சுமத்தியுள்ளது.

போர்க்குற்ற விசாரணை பற்றி மற்றவர்களுக்கு சொல்லியா திரிந்தவர் சுமத்திரன் தனக்கு மட்டுமே எல்லாம் தெரிந்த அறிவாளி போல் நடந்து கொண்டவர் தமிழகத்தில் ஸ்டாலின் தமிழ் கதைக்க தெரியாமல் திண்டாடுவது போல் இவர்க்கு கேள்விகள் கேட்டால் பிடிக்காது உடனே அந்த சட்ட புத்தகத்தைபடித்து பாருங்க என்று எந்த கூச்சமும் இன்றி சொல்லும் ஆள் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.