Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இமயத்திலிருந்து 'இறங்கினார்' ரஜினி

Featured Replies

இமயமலையில் 38 நாள் ஆன்மீக பயணம் மேற்கொண்டிருந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சென்னை திரும்பி விட்டார்.

ஆண்டுதோறும் இமயமலைக்குச் சென்று குறைந்தது ஒரு மாதம் ஆன்மீக பயணம் மேற்கொள்வது ரஜினியின் வழக்கம். இமயத்தில் உள்ள பாபாஜி குகைக்குச் செல்வதும் இந்த பயணத்தின் முக்கிய நோக்கம்.

இமயத்திற்குச் செல்வதன் மூலம் மனதுக்கும், உடலுக்கும் புத்துயிர் கிடைக்கிறது, மறு பிறவி எடுப்பது போல உள்ளது என்று பலமுறை ரஜினி கூறியுள்ளார். அது அவரது அனுபவ வார்த்தைகள்.

இமயத்திற்குப் போனவுடன், ரஜினி என்ற அந்தஸ்திலிருந்து சிவாஜி ராவாக மாறி, சாதாரண மனிதனாக மாறி விடுவது ரஜினியின் வழக்கம். இமயத்தின் ஒவ்வொரு மலைப் பகுதியையும் தனது பாதத்தால் அளவிட்டு மனதுக்குள் ஆன்மீக அலைகளை உலவ விட்டு உற்சாகம் பெறுவார் ரஜினி.

இந்த ஆண்டு தனது இமயமலைப் பயணத்தை ஏப்ரல் 30ம் தேதி தொடங்கினார் ரஜினி. முதலில் கோவில்களின் புனித நகராக கருதப்படும் பத்ரிநாத் சென்றார். அங்கு ஒரு வார பயணத்தை முடித்து விட்டு ரிஷிகேஷ், கேதார்நாத் ஆகிய இடங்களுக்குச் சென்றார்.

குரு பாபாஜியின் குகைக்குச் சென்ற ரஜினி அங்கு ஆழ்ந்த தியானத்தில் ஈடுபட்டாராம். பாபாஜி குகைக்குச் சென்றதோடு தனது இமயமலைப் பயணத்தை நிறைவு செய்தார் ரஜினி.

தனது இமய பயணத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு சென்னை திரும்பியுள்ளார்.

சிவாஜி படம் ரிலீஸாகும்போது சென்னையில் இருப்பேன் என்று ஏற்கனவே கூறியிருந்தார் ரஜினி. சொன்னபடி ரிலீஸுக்கு முன்பாகவே சென்னை திரும்பி விட்டார் ரஜினி.

சிவாஜி, கெட், செட், ஜூட்!

-thatstamil-

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏன் அந்த மனுசன் எத்தனை மணிக்குக் கழிப்பறை போறார் என்ற தகவல்களையும் தினமும் பிரசுரித்தால் நல்லா இருக்குமே

அட நானும் எங்கவீடு படியில இருந்து இறங்கினான் ஒருத்தரும் போடவில்லை

:P

அட நானும் எங்கவீடு படியில இருந்து இறங்கினான் ஒருத்தரும் போடவில்லை

:P

உண்மையாகவா? :lol:

யம்முக்குட்டி அவ்வளவு பெரிரிரிரிய குழந்தையா? :D:o

ரஜனி இமயமலைக்குப் போகும்போது பூஜை, தியானம் செய்வார்.

மற்ற நாட்களில் 'தீர்த்தம்தான்'.

உண்மையாகவா? :lol:

யம்முக்குட்டி அவ்வளவு பெரிரிரிரிய குழந்தையா? :D:o

இல்லை அம்மாவோட இறங்கினான் தாத்தா

:P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இல்லை அம்மாவோட இறங்கினான் தாத்தா

:P

இதெல்லாம் கொஞ்சம் ஓவரா இருக்கு. :angry:

இதெல்லாம் கொஞ்சம் ஓவரா இருக்கு. :angry:

ஜன்னி அக்கா கோவிக்க கூடாதுங்கோ பேபி என்றா அப்படி தான்

:P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரி இனியென்ன சாமி மலையிலையிருந்து இறங்கீட்டால் ஒரே தீர்த்தத்திருவிழாத்தான் :blink:

அட நானும் எங்கவீடு படியில இருந்து இறங்கினான் ஒருத்தரும் போடவில்லை

:P

அட அப்படி நீங்கள் இறங்கும் போது வழுக்கி (படியில்) விழுந்ததைச் சொல்லவில்லையே!! :P :blink: :P :P

சரி இனியென்ன சாமி மலையிலையிருந்து இறங்கீட்டால் ஒரே தீர்த்தத்திருவிழாத்தான் :blink:

:huh::lol:

அட அப்படி நீங்கள் இறங்கும் போது வழுக்கி (படியில்) விழுந்ததைச் சொல்லவில்லையே!! :P :blink: :P :P

படியில தானே வழுக்கினான் வாழ்கையில இல்லையே

:P

படியிலை வழுக்காமல் கவனமாய் இறங்கினால்தான் வாழ்க்கையிலும் வழுக்காமல் இருக்கலாம்

தொட்டில் பழக்கம சுடுகாடு வரைக்கும் என்று சும்மாவா சொன்னார்கள்.

ம் ரஜனி இப்போது தேனீர் அருந்திக்கொண்டிருக்கின்றார

படியில வழுக்கினா எழும்பலாம் ஆனா வாழ்கையில வழுக்கினா

:icon_idea:

துடைச்சுவிட்டிட்டு எமும்புங்க

எல்லாமே நன்மைக்கு என்று நினைத்தால் எதையும் வெல்லலாம்.

உதாரணம்

பெருமைக்காக சொல்லவில்லலை.

படிக்கின்ற காலத்தில் காதல்காற்று வீசி நானும் வசமானேன். எனது பெற்றோரின் கடும் பிரயத்தனத்தால் மீண்டு இன்று இங்கு வாழ்கின்றேன். நான் காதலித்த பெண் மிக மிக சந்தோசமாக வாழ்கின்றாள். நினைக்க பெருமையாக இருக்கின்றது. நான் அவளுடன் சேர்ந்திருந்தால் அவளுடைய வாழ்க்கையும் விரயமாகி என்னுடைய வாழ்க்கையும் விரயமாகி இருக்கும். ஏனெனில் வயதுக்கோளறு....................

அன்று எல்லாமே நன்மைக்|கு என்று றினைத்தேன் இன்று பெருமைப்படுகின்றேன்.

  • தொடங்கியவர்

நாட்டிலை நடக்கிறதை பாருங்கய்யா

ஊர் புதினப்பக்கம் பாருங்கையா :angry:

ம் ரஜனி இப்போது தேனீர் அருந்திக்கொண்டிருக்கின்றார
  • தொடங்கியவர்

துடைச்சுவிட்டிட்டு எமும்புங்க

எல்லாமே நன்மைக்கு என்று நினைத்தால் எதையும் வெல்லலாம்.

உதாரணம்

பெருமைக்காக சொல்லவில்லலை.

படிக்கின்ற காலத்தில் காதல்காற்று வீசி நானும் வசமானேன். எனது பெற்றோரின் கடும் பிரயத்தனத்தால் மீண்டு இன்று இங்கு வாழ்கின்றேன். நான் காதலித்த பெண் மிக மிக சந்தோசமாக வாழ்கின்றாள். நினைக்க பெருமையாக இருக்கின்றது. நான் அவளுடன் சேர்ந்திருந்தால் அவளுடைய வாழ்க்கையும் விரயமாகி என்னுடைய வாழ்க்கையும் விரயமாகி இருக்கும். ஏனெனில் வயதுக்கோளறு....................

அன்று எல்லாமே நன்மைக்|கு என்று றினைத்தேன் இன்று பெருமைப்படுகின்றேன்.

ஹீ ஹீ..உங்களுக்கு வயதுக்கோளாறு...Ok..

But..எல்லாருக்கும் அப்படி எதிர்பார்க்க முடியாதே... :lol:

துடைச்சுவிட்டிட்டு எமும்புங்க

எல்லாமே நன்மைக்கு என்று நினைத்தால் எதையும் வெல்லலாம்.

உதாரணம்

பெருமைக்காக சொல்லவில்லலை.

படிக்கின்ற காலத்தில் காதல்காற்று வீசி நானும் வசமானேன். எனது பெற்றோரின் கடும் பிரயத்தனத்தால் மீண்டு இன்று இங்கு வாழ்கின்றேன். நான் காதலித்த பெண் மிக மிக சந்தோசமாக வாழ்கின்றாள். நினைக்க பெருமையாக இருக்கின்றது. நான் அவளுடன் சேர்ந்திருந்தால் அவளுடைய வாழ்க்கையும் விரயமாகி என்னுடைய வாழ்க்கையும் விரயமாகி இருக்கும். ஏனெனில் வயதுக்கோளறு....................

அன்று எல்லாமே நன்மைக்|கு என்று றினைத்தேன் இன்று பெருமைப்படுகின்றேன்.

பரணி அண்ணா அப்படி சொல்ல முடியாது இரண்டையும் காப்பாற்றி இருந்தால் உங்களிம் மனசாட்சிக்கு விரோதம் இல்லாம சொல்லுங்கோ உங்களுக்கு இதை விட சந்தொசமாக இருக்கும் தானே

:lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.