Jump to content

பொருளாதார வீழ்ச்சியை மறைக்கிறதா அரசாங்கம்?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பொருளாதார வீழ்ச்சியை மறைக்கிறதா அரசாங்கம்?

அனுதினன் சுதந்திரநாதன்

இலங்கையின் ஒவ்வொரு காலண்டினதும் மொத்தத் தேசிய உற்பத்தி, அந்தக் காலாண்டு முடிவடைந்து, ஒரு சில மாதங்களுக்குள்ளேயே வெளியாகிவிடும். நல்லாட்சி அரசாங்கத்தினுள் குழப்பங்கள் நிலவிய காலத்திலும் கூட, இந்தத் தகவல் அறிக்கையில் எந்தத் தாமதமும் ஏற்பட்டதில்லை. கோட்டாபய ராஜபக்ஷ, ஜனாதிபதியாகப் பொறுப்பேற்ற பின்பும் கூட, 2020ஆம் ஆண்டின் முதல் காலாண்டுக்கான மொத்தத் தேசிய உற்பத்தித் தொடர்பானத் தகவல்கள், பொருத்தமானக் காலப்பகுதியில் வெளியாகியிருந்தது. இதன்போது, 2020ஆம் ஆண்டு முதல் காலாண்டுக்கான மொத்தத் தேசிய உற்பத்தி, -1 சதவீதமாகப் பதிவாகியிருந்தது. கொரோனாவின் ஆரம்ப நிலை, நாட்டின் முடக்கம் என்பவற்றை, இதற்கானக் காரணமாகக் காட்டி, அரசாங்கம் தப்பித்துக் கொண்டதுடன், நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கான செயற்பாடுகளை மும்முரமாக ஆரம்பித்திருந்தது.

இந்நிலையில், 2020ஆம் ஆண்டு முடிவடைவதற்கு இன்னும் இரண்டு மாதங்களே உள் நிலையில், 2020ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டுக்கான மொத்தத் தேசிய உற்பத்தி தொடர்பானத் தகவல்களை, நாம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கவேண்டும். ஆனால், இரண்டாம் காலாண்டுக்கான பொருளாதாரத் தகவல்களேயே, தற்போதுள்ள அரசாங்கம் வெளியிடாமல் மறைக்கத் தொடங்கியுள்ளது என்றே கூறலாம். பொருளாதார வல்லுநர்களின் கணிப்பின் படி, இலங்கையின் 2020ஆம் ஆண்டுக்கான இரண்டாம் காலாண்டின் பொருளாதார வளர்ச்சியானது, -17 சதவீதமாக பதிவாகியுள்து. இதை உறுதிப்படுத்தும் வகையில்தான், நாட்டின் துறைசார் வளர்ச்சிகளும் உள்ளது என்பது, மேலதிகத் தகவல். ஆனால், இதை மக்களுக்குப் பகிரங்கபடுத்துவதில், இலங்கை அரசாங்கம் பின்னடித்துக் கொண்டிருக்கிறது என்றே கூறலாம்.

தாங்களால் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமை, ஆட்சிப் பீடத்தைக் கைப்பற்றிய முதலாவது காலாண்டே, மிக மோசமான பெறுபேறுகளை, மக்களிடம் காட்ட வேண்டிய சூழ்நிலை வருகின்றபோது, அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலம் போன்ற தங்களுக்கு சாதகமானத் திட்டங்களை நிறைவேற்றுவதில், அழுத்தங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் எனும் சுயலாபக் காரணங்களுக்காக, பொருளாதாரத் தகவல்கள் வெளியிடப்படாமல் , அரசாங்கம் பின்னடிக்கின்றது என்பதே உண்மை.

இதன்மூலமாக, இறுதியில் சாமானிய பொதுமக்களாகிய நாங்களே பாதிக்கப்படுகின்றோம் என்பதில் மாற்றுக் கருத்துகள் இல்லை எனலாம். ஆனாலும், இந்தச் சாமானிய மக்களின் வாக்குகளால் உருவான இந்தச் சர்வாதிகார நாடாளுமன்றமும் அதன் அரசியல்வாதிகளும், பொதுமக்களைப் பற்றி கவலைகொண்டதாக தெரியவில்லை.

ஜூன் 2020ஆம் ஆண்டின் தரவுகளின்படி, இலங்கையின் 2020ஆம் ஆண்டுக்கான ஏற்றுமதியானது, கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, -26.4 சதவீத வீழ்ச்சியைக் கொண்டிருந்தது. அத்துடன், சுற்றுலாப் பயணிகளின் வருகையில், -49.7 சதவீத வீழ்ச்சியைப் பதிவு செய்திருந்தது. அத்துடன் தேயிலை ஏற்றுமதி -14 சதவீதத்தாலும் கட்டட நிர்மாணத்துறை -16 சவீதத்தாலும் வீழ்ச்சியைச் சந்தித்திருந்தது.

உண்மையில், இந்தப் பொருளாதார வீழ்ச்சிக்கு, தற்போது உலகிலுள்ள அனைத்து நாடுகளும் முகங்கொடுத்து வருகின்றது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு உலகிலுள்ள அனைத்து நாடுகளுக்கும் முகங்கொடுத்து வருகின்றமையால், பொருளாதார வீழ்ச்சி என்பது, சாதாரணமானதாகி விட்டது. உதாரணமாக, தன்னுடைய பொருளாதாரம் -23.9 சதவீத வீழ்ச்சக்கு முகங்கொடுத்திருப்பதாக, இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது. அத்துடன், 200 மில்லியன் பேர் வேலையை இழந்திருப்பாதாகவும் தரவுகளில் தெரிவித்துள்து. இந்தியாவின் பெரும்பாலான ஊழியர்கள், நாள் அடிப்படையிலானக் கூலியை எதிர்பார்த்திருக்கும் ஊழியப்படை எனும் ரீதியில் இந்த வேலையிழப்பை எதிர்கொண்டுள்ளனர்.

இந்தியாவைத் தவிர்த்து, பொருளாதார வீழ்ச்சியானது, அவுஸ்திரேலியாவில் -7 சதவீதமாகவும் பிரேசிலில் -9.7 சதவீதமாகவும், பிரித்தானியாவில் -20 சதவீதமாகவும் பதிவாகியுள்ளது என, புள்ளிவிவரங்களில் தெரிவிக்கப்பட்டுள்து.

இதேநிலையைதான், இலங்கையும் முகங்கொடுத்துள்ளது. ஆனால், இலங்கையின் அரசாங்கம், தன்னுடைய சுயலாப நோக்கங்கள் சிலவற்றை அடைந்துகொள்ள, இந்த வீழ்ச்சியை மூடி மறைப்பது சரியானதாக அமையாது.

இலங்கை அரசாங்கத்தைப் பொறுத்தவரை, 2020ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டு, ஓரளவுக்குப் பொருளாதார வளர்ச்சிக்கான அறிகுறிகளைக் கொண்ட காலாண்டு ஆகும். உலக வங்கி கூட, இந்தக் காலாண்டில் இலங்கையால் 6-7 சதவீத வளர்ச்சியை நோக்கி நகர வாய்ப்புள்ளதாகத் தெரிவித்திருந்தது. ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுமிடத்து, இலங்கை  கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தி, நாட்டை சாதாரண நிலைக்கு திருப்பியமையே, இதற்குக் காரணமாக அமைந்திருந்தது. ஆனால், அந்த மனத் திருப்தி, "மினுவாங்கொட கொரோனா கொத்தனி" காரணமாக நீடித்திருக்கவில்லை. மூன்றாம் காலாண்டில் ஏதாவதொரு வளர்ச்சியை ஏற்படுத்தி, இரண்டாம் காலாண்டின் பொருளாதார வீழ்ச்சியை, இந்த வளர்ச்சியைக் கொண்டு மறைத்துவிடலாம் எனும் திட்டத்துடன், அரசாங்கம் செயற்பட்டு வந்தது. ஆனால், கொரோனா தொடர்பில் அரசாங்கமே அலட்சியமாக செயற்பட்டமை அரசாங்கத்தின் திட்டத்துக்கு மாபெரும் அடியாக அமைந்துவிட்டது.

கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில், இலங்கை அரசாங்கம் காட்டிய மெத்தனப் போக்கும், அலட்சியமுமே இன்று, இலங்கை மீண்டுமொரு பொருளாதாரச் சரிவை நோக்கி பயணிப்பதற்கான முக்கியக் காரணமாக அமைந்துள்ளது. வருமுன் காப்போம் என்பதை மறந்து, வந்தபின் பார்ப்போம் என, இலங்கை அரசாங்கம் சுயலாபத்துக்காக செயற்பட ஆரம்பித்ததன் விளைவே இது எனலாம்.

உண்மையில், 2021/22ஆம் ஆண்டுகள் வரை, கொரோனா வைரஸுக்குப் பொருத்தமான மருந்து கண்டுபிடிக்கும்வரை, இதுமாதிரியான முடக்கல்கள், பிரச்சினைகளை நாம் சந்தித்துக்கொண்டே இருக்கவேண்டும். அப்படியாயின், அதற்கு ஏற்றவகையில், நாம் தயாராக வேண்டும் என்பது, மிக முக்கியமானது. வீம்புக்காக கைமீறி போகின்றச் சந்தர்ப்பங்களிலும் எந்தவிதமானத் தீவிர நடவடிக்கைகளை எடுக்காமல், கட்டுப்படுத்திவிட முடியுமெனச் செயற்படுவதை விடுத்து, யதார்த்தத்தை அங்கிகரித்துக் கொண்டு, விட்ட தவறுகளிலிருந்து சரியாகச் செயற்படுகின்ற மக்களின் அரசாங்கமாக, இந்த அரசாங்கம் செயற்படுவதன் மூலமாகவே, நாட்டை மிகச்சரியானப் பொருளாதார பாதைக்குள் கொண்டுச் செல்ல முடியும்.

மினுவாங்கொட போன்று, எதிர்காலத்திலும் இலங்கையில் கொரோனா கொத்தணிகள் தோற்றம் பெறலாம். அதற்கான வாய்ப்புகள் இல்லையென முற்றாக மறுத்துவிட முடியாது. ஆனாலும், அப்படியான சூழ்நிலைகளில் செயற்படத் தயாராக இருக்கிறோமா என்பது தொடர்பில் கவனம் செலுத்துவது அவசியமாகிறது. காரணம், இனி கொரோனாவுடன் வாழ பழகிக்கொள்கின்ற நிலையில்தான் நாமும், நம்முடைய பொருளாதாரமும் இருக்கிறது. இதற்கு மேலானப் பொருளாதார வீழ்ச்சியைத் தாங்கிக்கொள்கின்ற நிலையில் சாமானிய மக்கள் இல்லையென்பதே உண்மை. எனவே, இதைத் தவிர்க்கும் வகையிலான மூலோபாய திட்டங்களுடன் மக்கள் சார்பாக, அரசாங்கம் செயற்படவேண்டியது முக்கியமானது.

இலங்கை அரசாங்கத்தின் கொரோனா தொடர்பிலான அலட்சியபோக்கானது, மீண்டும் நாட்டை முடக்கத்துக்குள் கொண்டுவந்தது மட்டுமல்லாது, வணிகங்கள் தங்களை மீளகட்டமைத்துக்கொள்ள வழங்கிய நிதியுதவிகளையும் ஒன்றுமில்லாமல் செய்திருக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக நட்ட நிலையிலிருந்து மீட்சி அடைந்தவர்கள் கூட, தற்போது மீண்டும் பழைய இடத்துக்கே சென்று விட்டதை உணர கூடியதாக இருக்கிறது. வங்கிகள் சலுகை அடிப்படையில் வழங்கிய வட்டியில்லா கடனைக் கூட மீள்செலுத்தும் நிலையில் வணிகங்களும் மக்களும் இல்லை என்பதை உணர்ந்துகொள்ளக் கூடியதாக இருக்கிறது. இந்தநிலையில், மீண்டுமொரு நிதி சலுகை வழங்கக் கூடிய நிலையில், நிதி நிறுவனங்கள் உறுதியாக இருக்கிறதா எனும் கேள்வியும் எழுந்திருக்கிறது. 

இலங்கையில் தற்போது எழுந்திருக்கும் இந்தக் கொரோனா பாதிப்பானது, புதிதாக ஆட்சிக்கு வந்த அரசாங்கமானது, இந்த இக்கட்டான குறித்த சில மாதங்களில், எப்படி மெத்தன போக்காகவும் அலட்சியமாகவும் செயற்பட்டிருக்கிறது என்பதை, வெளிப்படையாகக் காட்டி இருக்கிறது. ஆனால், இந்த நிலை எல்லைமீறி போவதற்கு முன்பதாகவே, அரசாங்கம் தன்னுடைய ஈகோவை விடுத்து, களத்தில் இறங்கி அணைக்கட்டுவது மிக மிக அவசியமானது. 

 

http://www.tamilmirror.lk/வணிகம்/பொருளாதார-வீழ்ச்சியை-மறைக்கிறதா-அரசாங்கம்/47-257830

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நெடுமாறன் அய்யா எமக்காக செய்தவற்றில் சில 1982ஆம் ஆண்டு இலங்கையில் தமிழ் நூல்கள் அதிகம் இருந்த யாழ் நூலகம் தீக்கிரையாக்கப்பட்டபோது, அவ்விடம் சென்று அதனை ஆவணப்படுத்தி, அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆரிடம் அறிக்கை சமர்ப்பித்தார். அதன்பின், எம்.ஜி.ஆர், இலங்கையில் தமிழர் போராட்டம் குறித்து அன்றைய பிரதமர் இந்திரா காந்தியிடம் பேசினார் என்பது வரலாறு. மேலும், 1985ஆம் ஆண்டு, சிங்களப் படைகளால் பாதிக்கப்பட்ட இலங்கை தமிழ்ப்பகுதிகளை, ரகசியமாக பயணம் செய்து காணொலியாகப் பதிந்து, உலகம் முழுக்க தெரியப்படுத்தினார். அதேபோல், 1991ஆம் ஆண்டு இந்திய அமைதிப்படை இலங்கையில் செய்த கொடூரங்களை, ஆவணப்படுத்தி, அன்றைய பிரதமர் வி.பி.சிங்கிடம் இதுகுறித்து பேசி,அவரை திரும்பப்பெற வலியுறுத்தினார். இப்படி தொடர்ந்து ஈழ ஆதரவுப் போராட்டங்களில் ஈடுபட்டார், பழநெடுமாறன்.  நாங்கள் என்ன செய்தோம்.  போராடமால் வெளிநாடு சென்று இணையத்தில் மட்டுமே போராடுகிறோம்.  2010 தேர்தலில் எம்மை அழித்த சரத் பொன்சேகாவுக்கு யாழில் எம்மவர்கள் வழங்கிய அதிக வாக்குகள்.  ஆனால் நாங்கள் தமிழக அரசியல்வாதிகளைப் பார்த்து துரோகிகள் என்கிறோம். இது வேடிக்கை இல்லையா?
    • இப்படி உறைக்க சொல்லுங்கோ பாஸ். அப்பதான் எனக்கும் உறைக்கும். ஏனென்றால், நானும் இப்படித்தான் நினைச்சுக் கொண்டு இருக்கின்றேன். என் மகள் உறைப்பு சாப்பிடவே மாட்டார், ஆனால் மகன் மகளுக்கு நேர் எதிர். இதனால், அவனுக்கு "எந்த சாப்பாட்டைக் கொடுத்தாலும், சாப்பிடுவான்' என்று ஒரே நற்சான்றிதழ் கொடுப்பதுடன், அவன் விரும்பிச் சாப்பிடும் சாப்பாடுகளில், உறைப்பை தூக்கலாக போட்டுத்தான் சமைப்பது. நானும் கடும் உறைப்பு சாப்பிட்டுக் கொண்டு இருந்தனார் - இந்த வருடம் பெப்ரவரி வரைக்கும். பெப் இல் வந்த நிமோனியாவுக்கு எடுத்த  நுண்ணுயிர் எதிர்ப்பியால் / Antibiotics , மிளகாய்த் தூள் கொஞ்சம் கூடப் போட்டு சமைத்தால்.... பிச்சுக் கொண்டு போகுது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.