Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இது கொரோனா காலம்..!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

large.0-02-0a-ad69e0d16b704a28530c834ee423e9e432304145e832d36a0f464c2ec8032f00_1c6da0d4a1b774.jpg.603a8831cf4a4392b864848b4cb08d57.jpg

எனது 10 “இருவரிக்கவிதைகள்உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றேன்.

இது கொரோனா காலம்..!

“””””””””””””””””””””””””””

கொரோனா எங்களைத் தனிமைப் படுத்த முன்பே

கை பேசிகள் தனிமைப் படுத்தி விட்டது.

*********************************************

2020இல் இயற்கை மழையை  விடவும் மக்களின்

கண்ணீர் மழைதான்  உலகை நனைக்கிறது.

**********************************************

ஆரத் தழுவி அணைத்து முத்தமிட விமானங்களைக்

காணாமல் கண்ணீர் வடிக்கின்றன முகில் கூட்டங்கள்.

*********************************************

 தார்ச்சாலைகள் எல்லாம்  திரும்பி படுத்து உறங்குகின்றன

எழுப்புவதற்கு வாகனங்கள் இல்லாததால்.

*************************************************

 மனிதர்களை தேடி அலைகின்றன மற்றைய உயிரினங்கள்

உயிருக்காக ஒடுங்கி ஒழித்திருப்பது தெரியாமல்.

************************************************

அலையலையாக கொரோனா  அடிப்பதால் இப்போது

கடல் அலைகூட அமைதியாகி விட்டது.

***********************************************

வாய் ஓயாமல் கத்திய மனிதக் கூட்டத்துக்கு

வாய்ப்பூட்டுப் போட்டு வைத்துள்ளது கொரோனா.

*******************************************

சுறுசுறுப்பான சுற்றுலா தலமெல்லாம் காலுடைந்து

கட்டிலில் கிடக்கிறது காற்றுக்குப் பயந்து.

**********************************************

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளைக்கூட

துண்டுதுண்டாக்கி சூப்புக்குடிக்கிறது நுண்ணுயிர்.

***********************************************

மனிதர்களுக்கு மட்டுமே மூச்சுக்காற்றில் விசம் கலந்தது

கடவுளா, கலியுகமா  கொரோனாவே சந்தேகிக்கிறது.

***********************************************

-பசுவூர்க்கோபி-

 

 

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, பசுவூர்க்கோபி said:

large.0-02-0a-ad69e0d16b704a28530c834ee423e9e432304145e832d36a0f464c2ec8032f00_1c6da0d4a1b774.jpg.603a8831cf4a4392b864848b4cb08d57.jpg

எனது 10 “இருவரிக்கவிதைகள்உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றேன்.

இது கொரோனா காலம்..!

“””””””””””””””””””””””””””

கொரோனா எங்களைத் தனிமைப் படுத்த முன்பே

கை பேசிகள் தனிமைப் படுத்தி விட்டது.

*********************************************

2020இல் இயற்கை மழையை  விடவும் மக்களின்

கண்ணீர் மழைதான்  உலகை நனைக்கிறது.

**********************************************

ஆரத் தழுவி அணைத்து முத்தமிட விமானங்களைக்

காணாமல் கண்ணீர் வடிக்கின்றன முகில் கூட்டங்கள்.

*********************************************

 தார்ச்சாலைகள் எல்லாம்  திரும்பி படுத்து உறங்குகின்றன

எழுப்புவதற்கு வாகனங்கள் இல்லாததால்.

*************************************************

 மனிதர்களை தேடி அலைகின்றன மற்றைய உயிரினங்கள்

உயிருக்காக ஒடுங்கி ஒழித்திருப்பது தெரியாமல்.

************************************************

அலையலையாக கொரோனா  அடிப்பதால் இப்போது

கடல் அலைகூட அமைதியாகி விட்டது.

***********************************************

வாய் ஓயாமல் கத்திய மனிதக் கூட்டத்துக்கு

வாய்ப்பூட்டுப் போட்டு வைத்துள்ளது கொரோனா.

*******************************************

சுறுசுறுப்பான சுற்றுலா தலமெல்லாம் காலுடைந்து

கட்டிலில் கிடக்கிறது காற்றுக்குப் பயந்து.

**********************************************

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளைக்கூட

துண்டுதுண்டாக்கி சூப்புக்குடிக்கிறது நுண்ணுயிர்.

***********************************************

மனிதர்களுக்கு மட்டுமே மூச்சுக்காற்றில் விசம் கலந்தது

கடவுளா, கலியுகமா  கொரோனாவே சந்தேகிக்கிறது.

***********************************************

-பசுவூர்க்கோபி-

 

 

தங்களின் இரு வரி கவிதை அருமை 💐 

பகிர்விற்கு நன்றி தோழர் ..👍

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

தங்களின் இரு வரி கவிதை அருமை 💐 

பகிர்விற்கு நன்றி தோழர் ..👍

உங்களுக்கும் உளமார்ந்த நன்றிகள் தோழர்.

  • கருத்துக்கள உறவுகள்

"மனிதர்களை தேடி அலைகின்றன மற்றைய உயிரினங்கள்

உயிருக்காக ஒடுங்கி ஒழித்திருப்பது தெரியாமல்." 👍

 

பசுவூர்கோபி ஆகா அருமையான இருவரி கவிதைகள், ஒவ்வென்றும் நல்ல அர்த்தமுள்ள கவிதைகள்.

சின்ன வேண்டுகோள் ஒவ்வொரு நாளும் இப்படி இரு வரி கவிதைகளை பகிரலாமே எங்களுடன். இருவரிக்கு நேரமில்லையென்று கூற முடியாது, நடக்கும் போது மனதில் தோன்றுவதை எங்களுடன் பகிரலாமே

பகிர்விற்கு நன்றி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, உடையார் said:

"மனிதர்களை தேடி அலைகின்றன மற்றைய உயிரினங்கள்

உயிருக்காக ஒடுங்கி ஒழித்திருப்பது தெரியாமல்." 👍

 

பசுவூர்கோபி ஆகா அருமையான இருவரி கவிதைகள், ஒவ்வென்றும் நல்ல அர்த்தமுள்ள கவிதைகள்.

சின்ன வேண்டுகோள் ஒவ்வொரு நாளும் இப்படி இரு வரி கவிதைகளை பகிரலாமே எங்களுடன். இருவரிக்கு நேரமில்லையென்று கூற முடியாது, நடக்கும் போது மனதில் தோன்றுவதை எங்களுடன் பகிரலாமே

பகிர்விற்கு நன்றி

அன்பு உடையாருக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் முயற்சி செய்கிறேன்.

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 9/11/2020 at 17:05, பசுவூர்க்கோபி said:

தார்ச்சாலைகள் எல்லாம்  திரும்பி படுத்து உறங்குகின்றன

எழுப்புவதற்கு வாகனங்கள் இல்லாததால்.

மனிதர்கள் பயத்தைத் துறந்துவிட்டார்கள் இப்போது. லொக்டவுனிலும் சாலைகள் நிரம்பிவழிகின்றன.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 21/11/2020 at 11:04, கிருபன் said:

மனிதர்கள் பயத்தைத் துறந்துவிட்டார்கள் இப்போது. லொக்டவுனிலும் சாலைகள் நிரம்பிவழிகின்றன.

உண்மைதான்.
நன்றிகள் அண்ணா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.