Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் கடல்நீர் வீடுகளுக்குள் புகுந்ததால் 85 குடும்பங்கள் பாதிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ். மாநகர சபை எல்லைக்குட்பட்ட கடற்கரையை அண்டிய சில பகுதிகளின், வீடுகளுக்குள் கடல் நீர் உட்புகுந்ததால் சுமார் 85 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

spacer.pngகுறிப்பாக யாழ்ப்பாண பிரதேச செயலர் பிரிவுட்குப்பட்ட கொழும்புத்துறை ஜெ 161 கிராம உத்தியோகத்தர் பிரிவில் உள்ள , எழிலூர், மகேந்திரபுரம் கிராமங்களில், சுமார் 50 குடும்பம் பாதிக்கப்பட்டுள்ளதோடு 3 குடும்பங்கள் உறவினர்கள் வீடுகளுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.

அத்தோடு ஜெ 68 கிராம உத்தியோகத்தர் பிரிவில், தொடர்மாடி அருகாமை கிழக்கு பகுதியில் சுமார் 35 குடும்பங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. குறித்த பகுதிகளுக்கு யாழ் மாட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் எஸ்.சூரியராஜா பார்வையிட்டுள்ளார்.

அத்தோடு, யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர் எஸ்.சுதர்சன், யாழ்.மாநகர சபையின் பிரதி முதல்வர் து.ஈசன் மற்றும் மாநகர சபை உறுப்பினர்களும் குறித்த பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



http://cdn.virakesari.lk/uploads/medium/file/138299/20201110_115333.jpg

 

https://www.virakesari.lk/article/94114

Edited by பிழம்பு

எனக்கு ஞாபகம் இருக்கிறது ஏறக்குறைய ஆறு ஏழு வருடங்களுக்கு முன்னர் முன்னாள் அமைச்சர் பாட்டாளி சம்பிக்க ரணவக்க கூறி இருந்த ஒரு கருத்து. அதாவது இன்னும் ஒரு பத்து, பதினைந்து வருடங்களுக்குள் யாழ் பெரும் பகுதி கடல் நீருக்குள் செல்லும் அபாயம் இருப்பதாக கூறி இருந்தார். எனவே அங்குள்ள அரசியல்வாதிகளும், துறை சார் நிபுணர்களும் இதுபற்றி ஆராய்ந்து இதட்கான தீர்வை காண்பது பொருத்தமாக இருக்கும். வருமுன் காப்பது நல்லது. கடந்த வாரம் ஒரு டாக்குமெண்ட்ரி ஒன்று பார்த்தேன். அதில் பிலிப்பைன்ஸில் எவ்வாறு அவர்களது நிலங்கள் கடலுக்குள் அமிழ்ந்து போனது என்பதைப்பற்றி விளாக்கி இருந்தார்கள்.  கடல் மடடம உயர்வதால் இப்போதே அதட்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், அல்லது மக்களை பாதுகாப்பான இடங்களில் குடியமர்த்த வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Robinson cruso said:

எனக்கு ஞாபகம் இருக்கிறது ஏறக்குறைய ஆறு ஏழு வருடங்களுக்கு முன்னர் முன்னாள் அமைச்சர் பாட்டாளி சம்பிக்க ரணவக்க கூறி இருந்த ஒரு கருத்து. அதாவது இன்னும் ஒரு பத்து, பதினைந்து வருடங்களுக்குள் யாழ் பெரும் பகுதி கடல் நீருக்குள் செல்லும் அபாயம் இருப்பதாக கூறி இருந்தார். எனவே அங்குள்ள அரசியல்வாதிகளும், துறை சார் நிபுணர்களும் இதுபற்றி ஆராய்ந்து இதட்கான தீர்வை காண்பது பொருத்தமாக இருக்கும். வருமுன் காப்பது நல்லது. கடந்த வாரம் ஒரு டாக்குமெண்ட்ரி ஒன்று பார்த்தேன். அதில் பிலிப்பைன்ஸில் எவ்வாறு அவர்களது நிலங்கள் கடலுக்குள் அமிழ்ந்து போனது என்பதைப்பற்றி விளாக்கி இருந்தார்கள்.  கடல் மடடம உயர்வதால் இப்போதே அதட்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், அல்லது மக்களை பாதுகாப்பான இடங்களில் குடியமர்த்த வேண்டும்.

கொஞ்சம் பொறுங்க நாங்கள் எல்லாம் அங்கிருந்து கிளம்பி பலவருடங்கள் ஆகி விட்டன தெற்கிலும் இதே போல் கடல் நீர் உள்ளே வந்தது பற்றி செய்திகளில் படிக்கிறோம் இந்த பிரச்னை வடக்குக்கு மாத்திரம் அல்ல  ஏன் இப்படியும் யோசிக்கலாம்  சிமெந்து தொழில் சாலை எனும் பெயரில் சுண்ணக்கல்  அகழ்வின் தாக்கம் ஆகவும் இருக்கலாம் தானே ?

21 hours ago, பெருமாள் said:

கொஞ்சம் பொறுங்க நாங்கள் எல்லாம் அங்கிருந்து கிளம்பி பலவருடங்கள் ஆகி விட்டன தெற்கிலும் இதே போல் கடல் நீர் உள்ளே வந்தது பற்றி செய்திகளில் படிக்கிறோம் இந்த பிரச்னை வடக்குக்கு மாத்திரம் அல்ல  ஏன் இப்படியும் யோசிக்கலாம்  சிமெந்து தொழில் சாலை எனும் பெயரில் சுண்ணக்கல்  அகழ்வின் தாக்கம் ஆகவும் இருக்கலாம் தானே ?

தென் பகுதியில் கடல் உள்வரவில்லை , ஆனால் பெரும்பகுதி கடல் அரிப்பில் பாதிக்கப்பட்டிருக்கிறது. இருந்தாலும் தென் பகுதிக்கு வந்து பார்த்தால் தெரியும் எவ்வாறு பாதுகாப்பு அரண்கள் அமைக்கப்பட்டு கரையோரங்கள் பாதுகாக்கப்பட்டு கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார்கள் என்று.

எனது ஊரிலும் கடலரிப்பு, நீர் உட்ப்புகும் பிரச்சினை இருந்தது. அரசியல் வாதிகள் வாயினால் வெட்டி வீழ்த்தினார்கள். கடைசியாக எங்கள் ஊரில் இருந்த ஒரு உயர் அதிகாரி தனது தனிப்படட செல்வாக்கினால் அதிகாரிகளிடம் பேசி கடலணை கட்டி ஊரை காப்பாற்றினார்.

இங்கும் அரசியல்வாதிகளை நம்பினால் ஒன்றும் நடக்காது. அங்குள்ள மக்கள்தான் அதிகாரிகளுடன் இணைந்து இதட்கு முடிவு காண வேண்டும். மடற்ப்படி அப்படி , இப்படி என்று எழுதுவதால் ஒன்றுமே நடக்கப்போவதில்லை. அங்குள்ள மக்கள்தான் பாதிக்கப்படுவார்கள்.

தென்பகுதியிலும் கடல் உள்வருகிறது என்பதட்காக வடக்கு மக்கள் சும்மா இருக்கலாம் என்றால் பிரச்சினை  இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
On 12/11/2020 at 01:01, Robinson cruso said:

தென்பகுதியிலும் கடல் உள்வருகிறது என்பதட்காக வடக்கு மக்கள் சும்மா இருக்கலாம் என்றால் பிரச்சினை  இல்லை.

உலகம் முழுக்க இருக்கும் பிரச்னை மேல் உள்ளது .

வடமராட்சியின் கரையோரங்கள் கடல் அரிப்பினால் மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளது பாவிக்கப்படதா  சினோர் போட்கள் கடற்கரையில் மண்ணுக்கு பாரமாக இருந்தன அந்த போட்களை கடல் அரிக்கும் இடத்தில் போட்டு அவற்றுனுள் சீமெந்து கலவையை ஊற்றி விட்டால் மாரி  கடலடி நேரம் கடல் அரிக்கும் வேகத்தை குறைக்கலாம் என ஒரு திட்டம் அந்த திட்டத்துக்கு தடைபோட்டது உள்ளூர் கவுன்சில் கடல் கரையில் இருந்து 100 மீற்றர்  க்குள் பொதுமக்கள் எதுவும் செய்ய முடியாது எனும் சட்டம் அங்குள்ளதாமே .இந்த கேட்டுக்குள் ..................... 

10 hours ago, பெருமாள் said:

உலகம் முழுக்க இருக்கும் பிரச்னை மேல் உள்ளது .

வடமராட்சியின் கரையோரங்கள் கடல் அரிப்பினால் மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளது பாவிக்கப்படதா  சினோர் போட்கள் கடற்கரையில் மண்ணுக்கு பாரமாக இருந்தன அந்த போட்களை கடல் அரிக்கும் இடத்தில் போட்டு அவற்றுனுள் சீமெந்து கலவையை ஊற்றி விட்டால் மாரி  கடலடி நேரம் கடல் அரிக்கும் வேகத்தை குறைக்கலாம் என ஒரு திட்டம் அந்த திட்டத்துக்கு தடைபோட்டது உள்ளூர் கவுன்சில் கடல் கரையில் இருந்து 100 மீற்றர்  க்குள் பொதுமக்கள் எதுவும் செய்ய முடியாது எனும் சட்டம் அங்குள்ளதாமே .இந்த கேட்டுக்குள் ..................... 

உங்கள் கரிசனை புரிகிறது. கடலுக்குள்  போனால் என்ன, ஆத்துக்குள் போனால் என்ன ? நல்லது 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.