Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு - கிழக்கின் அபிவிருத்திக்கே அதிகளவான சர்வதேச கடன்களை வாங்கினோம் : பந்துல

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

 

இலங்கை கடன் நெருக்கடியில் சிக்கிக்கொண்டுள்ள போதிலும் அவற்றில் இருந்து விடுபடும் மாற்று வேலைத்திட்டம் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் அரசாங்கத்திடம் இருப்பதாகவும், வடக்கு கிழக்கு பிரதேசங்களின் அபிவிருத்திக்காகவே அதிகளவில் சர்வதேச கடன்களை வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன சபையில் தெரிவித்தார்.

 

அரசாங்கத்தின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான முதலாம் நாள் விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இதனை கூறினார்.

அவர் மேலும் கூறுகையில்,



http://cdn.virakesari.lk/uploads/medium/file/138857/sss.jpg

கடந்த 2015 ஆம் ஆண்டு தொடக்கம் 2019 ஆம் ஆண்டுவரை நாட்டில் எந்தவொரு பொருளாதார வளர்ச்சியும் ஏற்படவில்லை. கடந்த 2014 ஆம் ஆண்டுக்கு முன்னர் வரையில் இலங்கை மத்திய  வருமானம் பெரும் நாடக மாறியது, ஆனால் 2014 ஆம் ஆண்டின் பின்னர் நிலைமை மாற்றம் கண்டது. 2014 ஆம் ஆண்டு நாட்டின் தலா வருமானம் 7.4 வீதமாக இருந்தது. ஆனால் இதுவே 2019 ஆம் ஆண்டு 2.3 வீதத்திற்கு குறைவடைந்தது. இதேபோல் சகல துறைகளிலும் வீழ்ச்சியே காணப்பட்டுள்ளது. எமக்கு நாட்டை ஒப்படைக்கும் போது மிக மோசமான நாடாகவே காணப்பட்டது. ஆனால் 2015 தொடக்கம் நல்லாட்சி அரசாங்கம் எந்தவித சவால்களும் இல்லாத நாட்டையே பொறுப்பேற்றனர். ஆனால் மீண்டும் நாட்டை ஒப்படைக்கும் போது நாட்டினை நாசமாக்கியே கொடுத்தனர் என்றார். 

நாம் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தோம், சுனாமி அனர்த்தத்திற்கு முகங்கொடுத்தோம். இவற்றையெல்லாம் வெற்றிகொண்டு மிகச்சிறந்த நாடாக மாற்றப்பட்டது. விரைவான அபிவிருத்தி கண்டது. இப்போது நாடாக பல சவால்களை எதிர்கொள்ள நேர்ந்துள்ளது. 

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ ஆட்சியில் மிக்கபெரிய இரண்டு சவால்களை எதிர்கொள்ள நேர்ந்துள்ளது. ஒன்று ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் நாடு கண்ட பொருளாதார வீழ்ச்சி, அதேபோல் இப்போது தாக்கத்தை செலுத்தி வருகின்ற கொவிட் -19 வைரஸ் தாக்கம். இந்த இரண்டும் நாட்டின் பொருளாதாரத்தில் தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. எனினும் நாம் கடன்களை செலுத்தும் வேலைத்திட்டங்களை முன்னெடுத்தே வருகின்றோம் என்றார்.

https://www.virakesari.lk/article/94676

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, பிழம்பு said:

இலங்கை கடன் நெருக்கடியில் சிக்கிக்கொண்டுள்ள போதிலும் அவற்றில் இருந்து விடுபடும் மாற்று வேலைத்திட்டம் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் அரசாங்கத்திடம் இருப்பதாகவும், வடக்கு கிழக்கு பிரதேசங்களின் அபிவிருத்திக்காகவே அதிகளவில் சர்வதேச கடன்களை வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன சபையில் தெரிவித்தார்.

வடக்கு கிழக்கை சாட்டினால் காட்டினால்த் தானே உலகமே திரும்பி பார்க்குது.

  • கருத்துக்கள உறவுகள்

நம்பீட்டம் அமைச்சரே.. 😜

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

வடக்கு கிழக்கை சாட்டினால் காட்டினால்த் தானே உலகமே திரும்பி பார்க்குது.

அது எங்கே திரும்பி பார்க்கும். வடக்கு கிழக்கில் மக்களைக் கொல்ல அதுதானே உதவி புரிந்தது.

7 hours ago, Kapithan said:

நம்பீட்டம் அமைச்சரே.. 😜

அப்படி சொல்லித்தான் வாங்கினார்கள்.

இரணைமடு குளத்திலிருந்து யாழுக்கு நீர் வழங்குதல். ஆனால் அது நடக்கவில்லை.

பருத்தித்துறை, பேசாலையில் பெரிய துறை முகம் அமைக்கும் திடடம். ஆனால் அது நடக்கவில்லை.

வடமராட்சியில் இருந்து கடல் நீரை நன்னீராக்கி (RO வாட்டர்) யாழுக்கு கொண்டு செல்வது. ஆனால் அது நடக்கவில்லை.

இப்படியாக நிறைய திட்ட்ங்களை போட்டு பணம் வாங்கியது உண்மைதான். ஆனால் இங்கு ஒன்றுமே செலவு பண்ணப்படவில்லை. எல்லாவற்றையும் சிங்கள தேசத்திட்கு திருப்பி விடடார்கள். அதுதான் உண்மை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.