Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாவீரர் தின நினைவேந்தல்களை வீட்டில் செய்யலாம்- சுமந்திரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர் தின நினைவேந்தல்களை வீட்டில் செய்யலாம் - சுமந்திரன்

sumanthran.jpg

யுத்தத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் தங்களின் வீடுகளில் நினைவேந்தல்களை செய்வதற்கு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏசுமந்திரன் தெரிவித்துள்ளார்.

மாவீரர் நாள் நிகழ்வுகளைத் தடை செய்யக் கூடாது எனக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு நீதிமன்றால் தள்ளுபடி செய்யப்பட்டமை தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன் போது மேலும் தெரிவிக்கையில், யுத்தத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் தாங்கள் தனியாக நினைவேந்தல்களை செய்வதனை மன்று ஏற்றுகொள்வதாகவும் ஆனால் கூட்டாக சேர்ந்து, மாவீரர் நினைவேந்தல் எனும் அடிப்படையில் செய்வது தேசிய பாதுகாப்புடன் சம்பந்தப்பட்ட விடயமாகும் என அறிவித்ததாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

https://vanakkamlondon.com/world/srilanka/2020/11/91609/

 டிஸ்கி

பேசாம வீட்டிலே இருந்திருக்கலாம் ..👍

Screenshot-2020-11-20-20-00-11-184-org-m

  • கருத்துக்கள உறவுகள்

அப்போ சிங்களவர்கள் பன்சலைக்குப் போகத் தேவையில்லை. புத்தரை வீட்டில் வைச்சே வழிபடலாமே..!!

சிங்கள அரச பயங்கரவாதிகளின் வெற்றி நிகழ்வுகள் பொதுவெளியில் அவசியமில்லை. கோத்தாவும் மகிந்தவும் வீட்டில் கொண்டாடலாமே.

இதில.. உள்ளக விசாரணை மூலம்.. தமிழ் மக்கள் மீது சிங்களம் நிகழ்த்திய இனப்படுகொலைக்கு நீதி பெற்றிடுவாராம் இவர்..???!

சொறீலங்கா நீதித்துறை என்பது சிங்கள பெளத்த பேரினவாதத்தின் ஏவல் இயந்திரம். இன்றேல்.. பெரும் படுகொலைகளை செய்த சிங்களப் படைகளை குற்றமற்றவர்கள் என்று விடுவிக்குமா...???! 

விடுதலைப்புலிகள் மீதான தடைகளை சர்வதேசப் பரப்பில் அகற்றுவதில் வெற்றி பெறுவதன் மூலமே... ஈழத்தில்.. தமிழ் மக்கள் மீதான சிங்கள அடக்குமுறைக்கு எதிராக சர்வதேசத்தின் கவனத்தைக் கொண்டு வந்து ஒரு உருப்படியான தீர்வைப் பெற முடியும். இதில் ஹிந்தியா.. சிங்களத்தை நம்பினால்.. தமிழகள் மீண்டும்.. புதைகுழிகளில் தான் சீவிக்க வேண்டி வரும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஈழப் போர்.....முடிந்த கையுடன், தமிழ் அரசியல்வாதிகள்...   
சர்வதேசத்தின் மூலம்...  ஸ்ரீலங்காவிற்கு எதிராக, 
காய்களை நகர்த்தாமல் இருந்து விட்டு...  
இப்ப... நீதிமன்றம், போய் என்ன பிரயோசனம்.

எம்மை... நாமே, நொந்து கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்

 வீட்டில் நினைவேந்தல் செய்வதற்கு நீதிமன்றத்தின் அனுமதியும் சுமந்திரனின் கருத்தும் எதற்கு?

 

இதுதான் ஈயம் பூசினமாதிரியும் இருக்க வேண்டும், பூசாத மாதிரியும் இருக்கவேண்டும்.

சிங்கள விசுவாசத்தையும் காட்ட வேண்டும், தமிழருக்கு சார்பாய் ஏதோ பேசினமாதிரியும் இருக்கவேண்டும்.

தான் படித்த சட்டநுணுக்கங்களை எதுக்கு பயன் படுத்தினாரோ இல்லையோ,சுமந்திரன் தமிழரை நக்கலடிக்கிறதுக்கு சரியாகதான்  பயன் படுத்துகிறார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

யுத்தத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் தங்களின் வீடுகளில் நினைவேந்தல்களை செய்வதற்கு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏசுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இதைத்தானே இவ்வளவு காலமும் செய்து கொண்டிருக்கிறோம். இப்ப என்ன புதுசாய் அனுமதி பெற்றாராம்?  நல்லவேளை! அதற்கும் தடை வேண்டி மாவீரர்  தின நினைவேந்தல்களை இதயத்தில் செய்ய நீதிமன்றம்  அனுமதி என்று சொல்லாமல்  இருந்தாரே என்று இவரை  வாழ்த்துவோம். தியாகி திலீபனை நினைவு கூர அனுமதி மறுக்கப்பட்ட போது: தன்னை யாரும் நீதிமன்றம் செல்ல  அணுகவில்லை, இல்லையென்றால் பெற்றிருக்கலாம் என்றார். இன்று நீதிமன்றம் சென்று வென்று வந்துவிட்டார். இவர் ஒரு திறமையான வக்கீல்தான். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.