Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முஸ்லீம்கள் ஷரியா சட்டத்தினை இலங்கையின் சட்டமாக அர்த்தப்படுத்த முடியாது – ஏனைய சமூகங்கள் மீது திணிக்க முடியாது- மல்கம் ரஞ்சித் கருத்து

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லீம்கள் ஷரியா சட்டத்தினை இலங்கையின் சட்டமாக அர்த்தப்படுத்த முடியாது – ஏனைய சமூகங்கள் மீது திணிக்க முடியாது- மல்கம் ரஞ்சித் கருத்து

 

முஸ்லீம்கள் ஷரியா சட்டத்தினை முக்கியமானதாக கருதலாம் ஆனால் அதற்காக அதனை இலங்கையின் சட்டமாக அதனை அர்த்தப்படுத்த முடியாது எனபேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
ஷரியா சட்டத்தினை ஏனைய சமூகங்களின் மீது திணிக்கலாம் என்றோ அல்லது அதனை ஏனைய சமூகங்கள் மீது செல்வாக்கு செலுத்துவதற்கோ அச்சுறுத்துவதற்கோ பயன்படுத்தலாம் என்றோ முஸ்லீம் கருதக்கூடாது என கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

malcom-ranjirth-300x168.jpg
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கவிந்த ஜயவர்த்தனவுடனான சந்திப்பின்போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து இதுவரை இடம்பெற்ற விசாரணைகள் மூலம் ஷரியா சட்டமும் ஷரியா சட்டத்தினை போதிக்கும் அமைப்புளும் இந்த தாக்குதலிற்கான முக்கிய காரணம் என்பது தெரியவந்துள்ளதாக கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்த விசாரணைகள் உரிய முறையில் இடம்பெறாவிட்டால் வேறுமாற்றுவழிகளை கண்டுபிடிக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போதைய விசாரணைகள் உரிய முறையில் இடம்பெறாவிட்டால் நாங்கள் விசாரணைகளை மேற்கொள்ளும் பொறுப்பை வேறு தரப்பினரிடம் வழங்கவேண்டும்,மாற்றுவழிமுறைகளை தேடவேண்டும் எனஅவர் தெரிவித்துள்ளார்.

easter-aatack4-300x169.jpg
நாளாந்த விவகாரங்கள் காரணமாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணைகளில் பின்னோக்கி செல்வது பொருத்தமற்றது என குறிப்பிட்டுள்ள மல்கம் ரஞ்சித் தாக்குதல்கள் குறித்த உண்மைகள் கண்டுபிடிக்கப்படும் வரை கத்தோலிக்கர்கள் விழிப்புடண் இருப்பார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் ஜனாதிபதியும் இந்த குண்டு தாக்குதல்கள் குறித்த முழுமையான விசாரணைகள் இடம்பெறும் என உறுதியளித்துள்ளனர்,இது குறித்த விசாரணைகளை ஜனாதிபதி ஆணைக்குழு மாத்திரமின்றி ஏனைய அரச அமைப்புகளும் முன்னெடுக்கவேண்டும்,அரசியல் தேவைகளுக்காகவும் இரகசிய உடன்பாடுகளிற்காகவும் நாங்கள் இவை மூடி மறைக்கப்படுவதை விரும்பவில்லை.

 

https://thinakkural.lk/article/95147

கர்தினால் ஆண்டகை பயங்கரவாதிகள் ரிசத்தையும், ஹிஸ்புல்லாவையும் விட்டுவிட தயாரில்லை. இவர்கள் பின்கதவால் தப்பிக்க வழி கிடையாது. அரசாங்கம் சில வேளைகளில் அரசியல் காரணங்களுக்காக ஒரு சில ஓடடைகளை பயன்படுத்திக்க தப்பிக்க விட்டுவிடுவார்களோ என்பது தான் கத்தோலிக்க மக்களின் கவலை. ஆனால் கர்தினால் இலகுவில் விட்டுவிட மாடடார். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Robinson cruso said:

கர்தினால் ஆண்டகை பயங்கரவாதிகள் ரிசத்தையும், ஹிஸ்புல்லாவையும் விட்டுவிட தயாரில்லை. இவர்கள் பின்கதவால் தப்பிக்க வழி கிடையாது. அரசாங்கம் சில வேளைகளில் அரசியல் காரணங்களுக்காக ஒரு சில ஓடடைகளை பயன்படுத்திக்க தப்பிக்க விட்டுவிடுவார்களோ என்பது தான் கத்தோலிக்க மக்களின் கவலை. ஆனால் கர்தினால் இலகுவில் விட்டுவிட மாடடார். 

ஆனால்..

அவர்  தமிழர்கள் அரசாங்கத்தின்  போர்க் குற்ற விசாரணையில் நம்பிக்கையில்லாமல், மூன்றாம் தரப்பின் விசாரணையைக் கோரினால் அதை மட்டும் எதிர்ப்பார்..

போடாங்.......(?)

😂😂

9 hours ago, Kapithan said:

ஆனால்..

அவர்  தமிழர்கள் அரசாங்கத்தின்  போர்க் குற்ற விசாரணையில் நம்பிக்கையில்லாமல், மூன்றாம் தரப்பின் விசாரணையைக் கோரினால் அதை மட்டும் எதிர்ப்பார்..

போடாங்.......(?)

😂😂

ஐயா அவர் ஒரு இனவாதி என்பது எனக்கு நல்லாகவே தெரியும். அதனால்தான் வடக்குகிழக்கில் தனியான மீசாம் அமைக்க உள்ளுக்குள் போராட்டம் நடக்கிறது. அதாவது இவருக்கு கீழே இல்லாமல் தனி அமைப்பாக இயங்குவது. அது வேறு விடயம்.

  இருந்தாலும் இந்த ரிசார்ட்டும் , ஹிஸ்புல்லாவும் தமிழனுக்கு செய்த அநியாயத்துக்கு அவருக்கு பின்னாலே போக வேண்டி இருக்குது. அதட்காகத்தான் இவருக்கு ஆதரவு தெரிவிக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, உடையார் said:

தற்போதைய விசாரணைகள் உரிய முறையில் இடம்பெறாவிட்டால் நாங்கள் விசாரணைகளை மேற்கொள்ளும் பொறுப்பை வேறு தரப்பினரிடம் வழங்கவேண்டும்,மாற்றுவழிமுறைகளை தேடவேண்டும் எனஅவர் தெரிவித்துள்ளார்.

செய்தாலும் செய்துபோடுவார் என்கிறீர்கள்? ரோமிலிருந்து அப்படியேதும் நெருக்குதல் கொடுக்கிறார்களோ? 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.