Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

46 ஆவது ஜெனீவா கூட்டத்தொடரில் இலங்கை மீது புதிய பிரேரணை - அமெரிக்க தூதுவர் சுமந்திரனிடம் தெரிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

(ஆர்.ராம்)

 

30/1 தீர்மானத்திற்கு மேலதிகமான விடயங்களை தயார்ப்படுத்துமாறும் யோசனை

 

சிரியா, மியன்மார் விடயப் பொறிமுறைகள் குறித்தும் கவனம்

 

புதிய அரசியலமைப்பு செயற்பாடுகள் தொடர்பாக ஆழ்ந்த கரிசனை 

 

 

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள நிலையில் இலங்கை அரசாங்கத்தின் பொறுப்புக்கூறலை வலியுறுத்தும் வகையில் புதிய பிரேரணையொன்றையே கொண்டுவருவதற்கு இயலுமானதாக இருக்கும் என்று இலங்கை மற்றும் மாலை தீவுக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிஸ் தெரிவித்துள்ளார். 

 

2015 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசாங்கத்தின் இணை அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்தினை இலங்கையின் தற்போதைய அரசாங்கம் நிராகரித்துள்ளதோடு அதிலிருந்து வெளியேறுவதாகவும் பகிரங்கமாக கடந்த மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் அறிவித்து விட்டது. 

 

இதன் காரணமாக, கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்ட 30/1 தீர்மானத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு ஏதுவாக அத்தீர்மானத்தினையே மீளவும் முன்னெடுப்பதற்காக (Rollover) 34/1, 40/1 தீர்மானங்கள் தலா இரண்டு வருட கால இடைவெளில் நிறைவேற்றப்பட்டிருந்தன. 

 

எனினும் இலங்கை அரசாங்கம் 30/1 தீர்மானத்திலிருந்து வெளியேறியுள்ள நிலையில் அதே தீர்மானத்தினை நடைமுறைப்படுத்துமாறு கோரும் தீர்மானமொன்றை அதாவது அடுத்த மார்ச் மாதம் நடைபெறவுள்ள 46 ஆவது கூட்டத்தொடரில் கொண்டுவருவதால் பயனில்லை என்றும் அமெரிக்க தூதுவரர் அலைனா டெப்லிஸ்  கூறியுள்ளார். 

 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும், தமிழரசுக்கட்சியின் வெளிவிவகாரங்களுக்கான செயலாளரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனுக்கும் இலங்கை மற்றும் மாலைத்தீவுக்கான தூதுவர் அலைனா டெப்லிஸ், அரசியல் விவகாரங்களுக்கான அதிகாரி அடம் சுமித் ஆகியோருக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று கொழும்பில் உள்ள அமெரிக்க தூதுவரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றிருந்தது. 

spacer.png

இந்தச் சந்திப்பின்போதே அமெரிக்க தூதுவர் மேற்கண்டவாறு தனது நிலைப்பாடுகளை வெளிப்படுத்தியுள்ளார். இந்நிலையில் இந்தச் சந்திப்புக் குறித்து பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்த விடயங்கள் வருமாறு, 

 

ஐ.நா தீர்மானம்

 

“ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திலிருந்து இலங்கை அரசாங்கம் வெளியேறுவதாக அறிவித்துள்ள நிலையில் அதனால் பொறுப்புக்கூறப்பட வேண்டிய விடயங்களை மீண்டும் வலியுறுத்துவதற்கான உரிய பொறிமுறையொன்று வகுக்கப்பட வேண்டியுள்ளது.

இலங்கை அரசாங்கத்தின் பொறுப்புக்கூறலையும், சர்வதேசத்தின் பிரசன்னத்தினையும் முடிவுக்கு கொண்டுவருவதற்கு இடமளிக்க முடியாது.

கடந்த அரசாங்கம் 30/1 தீர்மானத்தில் சில விடயங்களை முழுமையாக இல்லாது விட்டாலும் முன்னெடுத்திருந்த நிலையில் அவ்விடயங்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் அதேநேரம், 30/1 தீர்மானத்திற்கு மேலதிகமாக தமிழ் மக்களின் சில விடயங்கள் தொடர்பாகவும் கவனம் செலுத்த வேண்டியுள்ளது” என்று சுமந்திரன் தூதுவரிடத்தில் எடுத்துரைத்தார். 

அதன்போது, “இலங்கை அரசாங்கம் 30/1 தீர்மானத்தினை நிராகரித்து அதிலிருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ள நிலையில், அத்தீர்மானத்தில் உள்ள விடயங்களை நடைமுறைப்படுத்துமாறு மீண்டும் தீர்மானமொன்றை கொண்டுவருவதால் பயனில்லை.

ஆகவே இலங்கையின் பொறுப்புக்கூறலை வலியுறுத்துவதற்காக “புதிய பிரேரணையே” கொண்டுவரப்பட வேண்டியதாகின்றது. 

அவ்வாறு புதிய பிரேரணை கொண்டுவரப்படுவதற்கான இயலுமான நிலைமையே தற்போதுள்ளன. எனவே அத்தகையதொரு பிரேரணை கொண்டுவரப்படுகின்றபோது 30/1 தீர்மானத்தில் பரிந்துரைக்கப்பட்டவற்றுக்கு மேலதிகமான விடயங்களை உள்ளீர்க்க முடியும்.

அவ்விதமாக உள்ளீர்க்கப்பட வேண்டிய விடயங்களை நீங்கள் தயார் செய்யுங்கள்” என்று அமெரிக்க தூதுவர் கூறியுள்ளார்.

இதனைத்தொடர்ந்து, இலங்கை அரசாங்கத்தின் பொறுப்புக்கூறலைச் செய்வதற்கான பொறிமுறை எவ்வாறானதாக அமைய வேண்டும் என்பது தொடர்பில் பரஸ்பர கருத்துப்பரிமாற்றங்கள் இடம்பெற்றுள்ளன.

அச்சமயத்தில், சுமந்திரன் சிரியா, மியன்மார் போன்ற நாடுகளின் விடயத்தில் ஐ.நா, உட்பட சர்வதேச தரப்புக்கள் செயற்பட்ட முறைமைகள் தொடர்பில் தாம் கரிசனை கொள்வதாக கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளார். 

 

புதிய அரசியலமைப்பு

 

இதனைத்தொடர்ந்து, புதிய அரசியலமைப்புக்கான செயற்பாடுகள் அதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொண்டிருக்கின்ற நம்பிக்கை, மற்றும் நிலைப்பாடுகள் தொடர்பாக அமெரிக்க தூதுவர் கேட்டறிந்து கொண்டுள்ளார். 

அதன்போது, புதிய அரசியலமைப்புக்கான பணிகள் ஏற்கனவே இடைக்கால அறிக்கை வரையில் முன்னெடுக்கப்பட்டிருந்த போதும் தற்போதைய அரசாங்கம் மீண்டும் ஆரம்பத்திலிருந்து பணிகளை முன்னெடுப்பதற்குரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது. தற்போது நிபுணர்குழு பரிந்துரைகளை எதிர்பார்த்திருக்கின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யும் வகையிலான கோட்பாட்டு ரீதியான முன்மொழிவுகளுடன் உத்தேச வரைபொன்றை சமர்ப்பிக்கவுள்ளது. 

கடந்த காலங்களில் பல சந்தர்ப்பங்களில் அரசியல் தீர்வு தொடர்பாக நாம் அரசாங்கத்துடன் பேச்சுக்களை நடத்தியிருக்கின்றோம். தீர்வுத்திட்டங்கள் தொடர்பாக ஆராய்ந்திருக்கின்றோம்.

தற்போதைய நிலைமையில் சந்திரிகா அம்மையார் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் முன்மொழிந்த “பிராந்தியங்களின் ஒன்றியம்” என்ற தீர்வையே ஆகக்குறைந்ததாக பரிசீலனை செய்ய முடியும் என்பதே எமது நிலைப்பாடாக உள்ளது என்று சுமந்திரன் எம்.பி பதிலளித்தார். 

 

சமகால நிகழ்வுகள்

 

அதனைத்தொடர்ந்து, ஜனநாயகப் பண்புகள் மதிக்கப்பட வேண்டியமை, மனித உரிமைகள் சார்ந்த விடயங்கள் பேணப்படவேண்டியவை உள்ளிட்ட சமகால நிகழ்வுகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதோடு தமிழர்கள் வியடத்தில் அமெரிக்கா கரிசனையுடன் பக்கபலமாக இருக்கும் என்றும் தூதுவரால் நம்பிக்கை அளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

46 ஆவது ஜெனீவா கூட்டத்தொடரில் இலங்கை மீது புதிய பிரேரணை - அமெரிக்க தூதுவர் சுமந்திரனிடம் தெரிவிப்பு | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

மில்லனியம் கொடையை அமெரிக்கா தன்னிச்சையாக நிப்பாட்டினது மேலோட்டமாக பார்த்தால் சீனாவுக்கு வெற்றி, வீரவன்ச கூட்டத்துக்கு வெற்றி போல புலப்படலாம், ஆனால் எவ்வாறு 2005 காலப்பகுதியில் புலிகள் சம்பந்தமான தமது அணுகுமுறையை கடுமையாக்கினார்களோ அப்படி ஒரு நிலை இலங்கைக்கு ஏற்பட தொடங்கிவிட்டதோ என்றும் யோசிக்க தோன்றுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, goshan_che said:

மில்லனியம் கொடையை அமெரிக்கா தன்னிச்சையாக நிப்பாட்டினது மேலோட்டமாக பார்த்தால் சீனாவுக்கு வெற்றி, வீரவன்ச கூட்டத்துக்கு வெற்றி போல புலப்படலாம், ஆனால் எவ்வாறு 2005 காலப்பகுதியில் புலிகள் சம்பந்தமான தமது அணுகுமுறையை கடுமையாக்கினார்களோ அப்படி ஒரு நிலை இலங்கைக்கு ஏற்பட தொடங்கிவிட்டதோ என்றும் யோசிக்க தோன்றுகிறது.

ஜனவரி அளவில் பெருச்சாளி எந்தப்பக்கம் ஓடுது என்று தெரிந்துவிடும் .

 

3 hours ago, பிழம்பு said:

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும், தமிழரசுக்கட்சியின் வெளிவிவகாரங்களுக்கான செயலாளரும்

இன்னும் அந்த பதவி இவருக்கு இருக்கா ?

வழமை போல் தூதர்களை அவர் மாத்திரம்தான் சந்திப்பாராம் கதையும்  அவரே  சொல்லுவார் 😁

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்புக்கு பக்கத்துணையாக அமெரிக்கா - தமிழ் தரப்புக்கும் அழைப்பு

ஜெனீவா தீர்மானம் தொடர்பான அமெரிக்காவின் யோசனை வரவேற்கத்தக்கது என புளொட்டின் தலைவரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள 46ஆவது கூட்டத்தொடரில் இலங்கையின் பொறுப்புக்கூறலை வலியுறுத்தி, புதிய தீர்மானமொன்றே கொண்டுவர வேண்டும் என்றும், அது மேலும் வலுவானதாக இருக்க வேண்டும் என்றும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிஸ் கூட்டமைப்பின் ஊடப்பேச்சாளரான எம்.ஏ.சுமந்திரனிடத்தில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அதனை வரவேற்று கருத்து வெளியிடும் போதே சித்தார்த்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது குறித்து தகவல் வெளியிட்டுள்ள அவர்,

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் 2015ஆம் ஆண்டு இலங்கையின் இணை அணுசரணையுடன் பொறுப்புக்கூறலை வலியுறுத்தி நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பாக தொடர்ச்சியான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

அந்த தீர்மானத்தினை நிறைவேற்றுவதற்கு கடந்த அரசாங்கத்திற்கு இரண்டு தடவைகள் சந்தர்ப்பம் அளிக்கப்பட்டதோடு புதிய அரசாங்கம் அத்தீர்மானத்திலிருந்து விலகியுள்ளது.

இந்நிலையில் அடுத்த அமர்வில் பிரித்தானியா முன்னின்று இந்த விடயங்களை கையாளவுள்ளது. எனினும் கடந்த காலத்தில் இலங்கை தொடர்பான பிரேரணைகளை தயாரித்து தீர்மானங்களை நிறைவேற்றிய அனுபவம் நிறைந்த அமெரிக்காவும் அதற்கு பக்கத்துணையாக இருக்கும் என்பதை வெளிப்படுத்தியுள்ளது.

இந்நிலையில் புதிய பிரேரணையொன்று கொண்டுவரப்படுவதானது இலங்கையின் பொறுப்புக்கூறலை மேலும் அழுத்தமாக கூறுவதற்கும் சர்வதேசத்தின் மேற்பார்வையையும் பிடியையும் வலுவாக்குவதற்கும் ஏதுவானதாக அமையும்.

ஆகவே அவ்விதமான புதிய பிரேரணையொன்று தயாரிக்கப்படும் செயற்பாடுகள் இடம்பெறுகின்ற போது நீதிக்காக காத்திருக்கும் பாதிக்கப்பட்ட மக்களினை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து தரப்புக்களும் ஒன்றிணைந்து வலுவானதொரு பிரேரணையை தயாரிப்பதற்குரிய முன்மொழிவுகளை ஏகோபித்து வழங்குவதே பொருத்தமானதாக இருக்கும்.

அதனைவிடுத்து தமிழ் தரப்புக்கள் இந்த விடயத்தினை தனித்தனியாக அரசியல் இலாபமடைவதற்காக கையாள முனைகின்றபோது இலங்கை அரசாங்கம் மிக இலகுவாக நழுவிக்கொள்ளும் நிலைமை ஏற்படும் ஆபத்துள்ளது.

ஆகவே இந்தத் தருணத்தினை சரியாக புரிந்துகொண்டு அனைத்து தலைமைகளும் ஒன்றிணைந்து செயற்படுவதற்கு அழைப்பு விடுப்பதோடு அதற்குரிய முன்நடவடிக்கைகளையும்மேற்கொள்வதற்கு தயாராகவே உள்ளேன் என்றார்.
 

https://www.ibctamil.com/srilanka/80/156388?ref=imp-news

  • கருத்துக்கள உறவுகள்
On 19/12/2020 at 00:53, பிழம்பு said:
13 hours ago, கிருபன் said:

ஆகவே இந்தத் தருணத்தினை சரியாக புரிந்துகொண்டு அனைத்து தலைமைகளும் ஒன்றிணைந்து செயற்படுவதற்கு அழைப்பு விடுப்பதோடு அதற்குரிய முன்நடவடிக்கைகளையும்மேற்கொள்வதற்கு தயாராகவே உள்ளேன் என்றார்.

ஆகவே இலங்கையின் பொறுப்புக்கூறலை வலியுறுத்துவதற்காக “புதிய பிரேரணையே” கொண்டுவரப்பட வேண்டியதாகின்றது

இந்தப்புதிய பிரேரணையை செயற்படுத்த எத்தனை ஆண்டுகள் அரசுக்கு அவகாசம் கொடுப்பதாக உத்தேசித்துள்ளீர்கள் என்பதையும் சொல்லிவிட வேண்டியது. 

அனைத்து தலைமைகளின் தலையையும் இணைத்து மொட்டை அடிக்காமல் இருந்தால் சரி.

On 19/12/2020 at 00:53, பிழம்பு said:

அவ்விதமாக உள்ளீர்க்கப்பட வேண்டிய விடயங்களை நீங்கள் தயார் செய்யுங்கள்” என்று அமெரிக்க தூதுவர் கூறியுள்ளார்.

அன்று "நீங்கள் ஜெனீவாவுக்கு வரவேண்டியதில்லை எல்லாவற்றையும் நாங்களே பாத்துக்கொள்கிறோம்" என்று  இவரிடம் சொன்னவர்கள், இன்று "நீங்களே தயார் செய்யுங்கள்" என்று இவரிடமே சொல்கிறார்கள். அப்போ;  உள்ள கொஞ்ச தமிழர் பிரதேசமும் சிங்களம் விழுங்கி ஏப்பம் விடுமளவும் இலங்கைக்கு அவகாசம் கொடுக்கப்போகிறோம் என்று தெளிவாய்ச் சொல்லுங்கோ சேர்.  

  • கருத்துக்கள உறவுகள்

மனித உரிமைகள் பேரவையில் புதிய தீர்மானம் வரவேண்டும் என்றே குறிப்பிட்டேன் – சுமந்திரன்

 
Sumanthiran-2-696x344.jpg
 26 Views

ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வரும் மார்ச் மாத அமர்வை ஒட்டி சர்வதேச சமூகத்தை ஐக்கியப்பட்டு அணுகுவதற்காகத் தாம் சமர்ப்பித்த வரைவு ஒன்று தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான நீதியரசர் சி.வீ.விக்னேஸ்வரன் எம்.பியும், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பியும் பொய்யான, விஷமத்தனமான பிரச்சாரம் செய்கின்றனர் என தமிழ்க் கூட்டமைப்பின் பேச்சாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் எம்.பி. குற்றம் சுமத்தியிருக்கின்றார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:-

“நான் அவர்களுக்குக் கொடுத்த ஆவணத்தில் இரண்டே இரண்டு விடயங்கள் தான் இருக்கின்றன. ஒன்று – இதுவரை ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலில் நிறைவேற்றிய தீர்மானங்களினால் எங்களுக்குப் பெரிய நன்மையாக ஏதும் வந்து விடவில்லை. அதனால் இனிமேல் இதையே முன்கொண்டு நடத்துவதில் அர்த்தமில்லை. ஆகையினால் இதிலும் காட்டமான, தீவிரமான நடவடிக்கை அவசியம். அதற்கு உதாரணமாக – முன்மாதிரியாக – சிரியாவிலும், மியன்மாரிலும் ஏற்படுத்தப்பட்ட பொறிமுறைகளைக் காட்டி, ஒரு வித்தியாசமான நிலைப்பாட்டுக்கு நாங்கள் போக வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இரண்டாவது – இந்த விவகாரம் ஒரு சர்வதேச அரங்கில் தொடர்ச்சியாக இருக்க வேண்டும். ஆகவே மனித உரிமைகள் கவுன்ஸிலில் ஒரு புதுத் தீர்மானம் நிறை வேற்றப்பட வேண்டும். இது இரண்டும்தான் அதில் உண்டு, அதில் காலநீடிப்பு என்றோ, கால அவகாசம் என்றோ, அதே தீர்மானத்தை மீண்டும் நிறைவேற்றுவது என்றோ எதுவுமேயில்லை.

ஆனால், இவர்கள் இருவரும் நான் அப்படி ஒரு பிரேரணை வரைவைத்தான் முன்வைக்கின்றேன் என்று வேண்டுமென்றே விமத்தனமான, பொய்யான பிரசாரம் ஒன்றை முன்வைக்கின்றனர். அதுதவறு” என்றார் எம்.ஏ.சுமந்திரன்.

 

https://www.ilakku.org/?p=37590

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.