Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்று சேர்ந்தும் அரசை ஜெனிவாவில் மிரட்டவே முடியாது - அமைச்சர் தினேஷ்.!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்று சேர்ந்தும் அரசை ஜெனிவாவில் மிரட்டவே முடியாது - அமைச்சர் தினேஷ்.!

Screenshot-2020-12-22-01-47-18-750-com-a

"கடந்த நல்லாட்சி அரசின் இணை அனுசரணையுடன் இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்ட ஐ.நா. தீர்மானங்கள் இரண்டும் செத்துப்போய்விட்டன. அதனைப் புதிய பிரேரணை மூலம் புதுப்பிக்க முடியாது. அதேவேளை, தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்று சேர்ந்தும்  ஜெனிவாவில் இலங்கை அரசை மிரட்ட முடியாது." - இவ்வாறு வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

"ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான புதிய அரசு, இலங்கைக்கு எதிரான ஐ.நா. தீர்மானங்களின் இணை அனுசரணையிலிருந்து இவ்வருடம் விலகிவிட்டது. அந்தத் தீர்மானங்களின் காலவரையறையும் நிறைவடைந்துவிட்டது.

அதனால் அந்தத் தீர்மானங்கள் இரண்டும் மரணித்து போனமைக்குச் சமமாகும்.

இந்த நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஐ.நா. உறுப்புரிமை நாடுகளுடன் பேச்சுவார்த்தை  நடத்தி எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவா அமர்வில் இலங்கைக்கு எதிராகப் புதிய பிரேரணை கொண்டு வருவதன் மூலம் செத்துப்போன அந்தத் தீர்மானங்களைப் புதுப்பிக்க முடியாது. அதே வேளை, புதிய பிரேரணையை நிறைவேற்றினாலும் அதற்கு இலங்கை அரசு இணை அனுசரணை வழங்காது. அந்தப் பிரேரணையும் வலுவிழந்துதான் போகும்.

தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்று சேர்ந்து ஜெனிவா விவகாரத்தைக் கையாளும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை விடுத்துள்ள அறிவிப்பு நகைப்புக்கிடமானது. இந்தக் கட்சிகள் ஒன்று சேர்ந்து ஜெனிவாவில் இலங்கை அரசை மிரட்ட முடியாது.

இலங்கை மீது எத்தனை புதிய பிரேரணை வந்தாலும் அதை எமது நட்பு நாடுகள் எதிர்த்தே தீரும். நாமும் அந்தப் பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்காமல் அதையும் வலுவிழக்கச் செய்வோம்.

தமிழர் பிரச்சினைகளுக்கு உள்நாட்டில்தான் தீர்வு கிடைக்கும். ஐ.நா. உள்ளிட்ட   சர்வதேச சமூகம் தமிழருக்கு ஒரு போதும் தீர்வைப் பெற்று தராது. இதை இன்னமும் தமிழ்த் தேசியக் கட்சிகள் நம்பாமல் இருப்பது சிறு பிள்ளைத்தனமாது" - என்றார்.

http://aruvi.com/article/tam/2020/12/21/20659/

  • கருத்துக்கள உறவுகள்

புரட்ச்சி..அவர்..செல்வது..மிகக்சரி...எனெனில்..இந்தியா..இலங்கை... போன்றநாடுகளில் ..சட்டத்துக்குமதிப்புயில்லை..

உதாரணத்துக்கு..நீஙகளும்..இந்தியாப்பிரதமர்  மோடிஅவர்களும் ஒரேகுற்றத்தை

செய்துவிட்டீரகளேன வைத்துக்கொள்ளுக்கள்...இந்தியாச்சட்டம்...அல்லது..இந்தயா

நிதிமன்றம்..உங்கள்..இருவருக்கும்..ஒரே தண்டணையை..வழங்குமா?.  இல்லை

பிரதமரை விடுதலைசெய்யும்...உங்களை .வெற்றுப்பேப்பரில்..கையெப்பம்

வேண்டிக்கொண்டு சிறைலிலாடைக்கும்..இந்நிலையில்..பிரதமர் சட்டத்தை

மதிப்பார?.   ...இந்தியா..இலங்கை...போன்றநாடுகளிலுள்ளமக்கள்....

சாதரணகுடிமகன் ..தொடக்கம்..பிரதமர்..வரை..சட்டத்தின்முன்..

அனைவரும் சமன்...என்றநிலைவர..மிகக்கடுமையாகயுழைக்கவேண்டும்....

அந்தநிலை ழவாந்தால்...எங்களுக்கு...தனிநாடுவேண்டாம்....மநிலசுயாட்ச்சிவேண்டாம்

நாங்கள்...இலங்கையின்....வடகிழக்கில்...மிகமகிழ்ச்சியுடன்..வாழ்வோம்..

இந்தியாவிலுள்ளமக்களும்..சுற்றியுள்ளநாடுகளிலுள்ளமக்களும்...மிகமகிழ்ச்சியுடன்

வாழ்வாரகள்..😜👍🙏

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Kandiah57 said:

 

இந்தியாவிலுள்ள மக்களும்..சுற்றியுள்ள நாடுகளிலுள்ள மக்களும்...மிக மகிழ்ச்சியுடன்

வாழ்வாரகள்..😜👍🙏

  1.  கிருத யுகம் - 1,728,000 வருடங்கள்
2.    திரேதா யுகம் - 1,296,000 வருடங்கள்
 3.   துவாபர யுகம் - 864,000 வருடங்கள்
 4.   கலியுகம் - 432,000 வருடங்கள் 

இந்த 4 யுகங்களும் சோ்ந்தது ஒரு மகா யுகம் அல்லது சதுா்யுகம்.

12 மகா யுகங்களைக் கொண்டது ஒரு மன்வந்திரம்.

14 மன்வந்திரங்களைக் கொண்டது ஒரு கல்பம்.

இப்படியாக 30 கல்பங்கள் இருக்கின்றன. 

டிஸ்கி :  

30 கல்பங்கள் முடிந்து புது கல்பத்தில் வேண்டுமானால் நடக்கலாம் .. 

அப்போ நாம் புது "சென்மம்" எடுத்திருக்க சான்ஸ் உண்டு தோழர் ..👍..

☺️..😊

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்
பிழை திருத்தம்

தினேஷ் ஐயா பயப்பட வேண்டாம். அப்படி நடக்கும்  சந்தர்ப்பம் குறைவாகத்தான் இருக்கிறது. பாருங்கள், தமிழன் ஒற்றுமைப்படும்போது எப்படி பயப்படுகிறார்கள் என்று. இருந்தாலும் அந்த ஒற்றுமை உருவாகுமா என்பதே இப்போது உள்ள பிரச்சினை.

  • கருத்துக்கள உறவுகள்
On 22/12/2020 at 07:20, புரட்சிகர தமிழ்தேசியன் said:

தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்று சேர்ந்து ஜெனிவா விவகாரத்தைக் கையாளும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை விடுத்துள்ள அறிவிப்பு நகைப்புக்கிடமானது. இந்தக் கட்சிகள் ஒன்று சேர்ந்து ஜெனிவாவில் இலங்கை அரசை மிரட்ட முடியாது.

 பல எலி சேர்ந்தால் புத்து எடுக்காது என்று யாரோ தினேஷுசுக்கு சொல்லிப்போட்டானுகள் போல. இருந்தாலும் பிரச்சனைகளை சாமர்த்தியமாக கையாளுவதில் சிங்களவனுக்கு நிகர் சிங்களவனே. ஒரு பிரச்னையையிட்டு தமிழர் தீவிரமாக எதிர்ப்பு வெளியிடும்போது அதை திசை திருப்ப வேறொரு பிரச்சனையை உருவாக்கி மக்களின் கவனத்தை அதன் பக்கம் திருப்பிவிட்டு பழைய பிரச்சனையை கனகச்சிதமாக முடித்து விட்டு, புதுப்பிரச்சனையை கையாள இன்னுமொரு புதுப்பிரச்சனையை கிளப்பி எல்லாவற்றையும் முடித்து விடுகிறான். நாங்கள் ஒவொன்றுக்கு பின்னாலும் ஓடியோடி களைப்படைவோமே தவிர, ஒன்றையும் காப்பாற்ற மாட்டோம். அவ்வாறே சிங்களவனுக்கெதிராக பிரேரணை கொண்டு ஜெனீவா புறப்பட்டு,  இப்போ சுமந்திரனின் நயவஞ்சக திட்டங்களோடு போராட சிங்களவன் தப்பி விடுவான். இவ்வாறு ஒவ்வொரு கூட்டத்தொடருக்கும் ஒவ்வொரு கறுப்பாடுகளை பிரித்தெடுத்து மோதவிட்டு அவன் தப்பிக்கொள்வான். நாங்கள் வந்த திசையை விட்டு வேறொரு திசையில் போய்க்கொண்டிருப்போம். இதில நாங்கள் சாணக்கியர், நின்று நிதானமாய் கருமமாற்றுகிறோம்  
வாய் வீச்சு வேறு. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.