Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை தமிழர்களை 2ஆம் தரமாக்க முயற்சி - இந்திய பிரதமரின் தலையீட்டை வலியுறுத்தும் டி.ஆர். பாலு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
5 நிமிடங்களுக்கு முன்னர்
இலங்கை தமிழர்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இலங்கையில் மாகாண சபைகளை ஒழிக்க முற்படும் அந்நாட்டு அரசின் முயற்சியை தடுக்க இந்திய பிரதமர் நரேந்திர மோதியின் தலையீட்டை வலியுறுத்தியிருக்கிறார் திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர். பாலு.

இலங்கை அரசின் செயல்பாடு, அங்கு வாழும் தமிழர்களை இரண்டாம் தர குடிமகனாக மாற்றும் திட்டத்தின் ஒரு பகுதி,"என்று அவர் அறிக்கை மூலம் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஈழத் தமிழர்களின் குறைந்தபட்ச சுயமரியாதையை பறிக்கும் 'மாகாண ஒழிப்பு', இந்திய - இலங்கை உறவில் மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்று பிரதமர் நரேந்திர மோதி இலங்கைக்குக் கடுமையான எச்சரிக்கை விடுக்க வேண்டும்," என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

ஈழத்தமிழர்களை இரண்டாந்தரக் குடிமக்களாக்கிட, தொடர்ச்சியாகக் கொண்டிருக்கும் அதே உள்நோக்கத்துடன் - "இலங்கையில் மாகாணங்கள் ஒழிக்கப்படும்" என்று இலங்கை அரசு அறிவித்து - அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது கடும் கண்டனத்திற்குரியது.

மாகாணங்களை ஒழிக்கும் திட்டம், இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் உருவான 13-ஆவது சட்டத் திருத்தத்திற்கு எதிரானது. அந்தச் சட்டத் திருத்தத்தையே அகற்றி விடும் ஆணவம் மிக்க, அக்கிரமமான நடவடிக்கை இது. இந்தியாவுடன் போட்ட ஒப்பந்தமே மதிக்கப் படாமல், கேள்விக்குறியாக்கப்படுகின்ற இந்த நெருக்கடியான நேரத்தில் கூட, நமது வெளியுறவுத்துறை அமைச்சரோ, சமீபத்தில் இலங்கைச் சென்று வந்த தேசியப் பாதுகாப்பு ஆலோசகரோ - ஏன், நம் பிரதமரோ, வாய் திறக்காமல் இருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

தமிழர்களுக்கு அதிகாரம் அளிப்போம் - அதுவும் 13-ஆவது திருத்தச் சட்டத்திற்கும் அதிகமான அதிகாரம் அளிப்போம் என்றெல்லாம் பேசி விட்டு, தற்போது தமிழர்களுக்கென இருக்கின்ற மாகாணங்களையும் ஒழிப்போம் என்பதை, இந்திய அரசு எப்படி - ஏன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது? என்று பாலு கேள்வி எழுப்பியுள்ளார்.

ஈழத் தமிழர்களுக்கு தற்போது இருக்கின்ற குறைந்தபட்ச சுய மரியாதையையும் பறிக்கும் இந்த மாகாண ஒழிப்பு திட்டத்தை உடனடியாகக் கைவிட வேண்டும் என்றும் - அப்படியொரு முடிவு, "இந்திய - இலங்கை உறவில் மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும்" என்றும், பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் இலங்கைக்குக் கடுமையான எச்சரிக்கை விடுக்க வேண்டும் என்றும், திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன் என்று பாலு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை தமிழர்களை 2ஆம் தரமாக்க முயற்சி - இந்திய பிரதமரின் தலையீட்டை வலியுறுத்தும் டி.ஆர். பாலு - BBC News தமிழ்

  • கருத்துக்கள உறவுகள்

இந்த அகளான் இத்தனை காலமும் எங்கே இருந்தது... ? 🤥

  • கருத்துக்கள உறவுகள்

திமுக நாடாளுமன்றக் கட்சித் தலைவர் டி.ஆர். இலங்கையில் மாகாண சபை முறைகளை ஒழிக்கும் இலங்கையின் நடவடிக்கையை நிறுத்த பிரதமர் நரேந்திர மோடியின் தலையீட்டை கோரியுள்ளார் தி.மு.கவின் பொருளாளரும், நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு.

இலங்கை அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை, இலங்கை தமிழர்களின் சுய மரியாதையை அழிக்கும் நடவடிக்கையென குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அறிக்கையொன்றை அவர் வெளியிட்டுள்ளார்.

இலங்கையின் இந்த நடவடிக்கை இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான உறவை பாதிக்கும் என்று பிரதமர் எச்சரிக்க வேண்டும். மாகாணசபைகளை ஒழிக்க இலங்கை அரசாங்கம் எடுக்கும் முயற்சி, தமிழர்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றும் முயற்சியின் ஒரு பகுதியாகும் என்று தெரிவித்துள்ளார்.

ராஜபக்ஷ சகோதரர்கள் ஆட்சிக்கு வந்ததிலிருந்து, தமிழர்களின் உரிமைகள், சுய மரியாதை மற்றும் கௌரவத்தை இழந்துவிட்டார்கள் என்றும், இந்திய மத்திய பாஜக அரசு ஒரு ஊமை பார்வையாளராக இருந்து வருவது கவலைக்குரியது என்றும் தெரிவித்துள்ளார்.

“மாகாண சபைகளை ஒழிப்பது என்பது இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் இயற்றப்பட்ட 13 வது திருத்தத்திற்கு எதிரானது. இந்தியாவுடன் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தம் கேள்விக்கு உட்படுத்தப்படும்போது வெளியுறவு அமைச்சகமும் தேசிய பாதுகாப்பு ஆலோசகரும் அமைதியாக இருப்பது அதிர்ச்சியளிக்கிறது” என்று அவர் கூறினார்.

13வது திருத்தத்தை ஒழிக்க இலங்கை முயன்றால், இந்தியவுடனான உறவு சீர்கெடும் என்பதை இலங்கைக்கு தெளிவாக கூற வேண்டுமென்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்

https://www.pagetamil.com/165464/

  • கருத்துக்கள உறவுகள்

Pawan Khera on Twitter: "Year 2010. Kanimozhi and Baalu honouring Mahinda  Rajapaksa. Wasn't he a war criminal in 2010? http://t.co/SE8dvKQPar"

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.