Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குர் - ஆனில் எங்கேயும் இறந்தவர்களின் உடலை புதைப்பது கட்டாயமென சுட்டிக்காட்டப்படவில்லை - கம்மன்பில

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

 

இலங்கையில் எவரும் கொவிட் -19 வைரஸ் பரவலால் உயிரிழக்கக்கூடாது என நாம் முயற்சித்துக்கொண்டுள்ளோம், ஆனால் எதிர்க்கட்சியினர் மாறாக ஒருவர் இறந்தால் அவரை புதைப்பதா அல்லது எரிப்பதா என விவாதித்துக்கொண்டுள்ளனர் என அமைச்சர் உதய கம்மன்பில சபையில் தெரிவித்தார். 

 

 

 

மரணிப்பவர்களை புதைப்பது குறித்து குர்ஆனில் கூறப்பட்டுள்ள போதிலும் அது கட்டாயமானது என எந்தவொரு இடத்திலும் கூறவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை, நாட்டின் தற்போதைய கொவிட் -19 வைரஸ் பரவல் நிலைமைகள் மற்றும் அரசாங்கத்தின் பலவீனமான செயற்பாடுகள் குறித்தும் எதிர்க்கட்சியினர் கொண்டுவந்த சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார். 

அவர் மேலும் கூறுகையில்,

நாட்டில் தொற்றுநோய் பரவல் இருப்பதாக சுகாதார பணிப்பாளர் மூலமாக வர்த்தமானி அறிவித்தல் மூலம் அறிவிக்கப்பட்டதன் பின்னர் அவரே சகல விடயங்களில் தீர்மானம் எடுத்தாக வேண்டும்.

இதில் இனம், மத பேதங்கள் இன்றி தீர்மானம் எடுக்க வேண்டும். இறப்பவர் ஒருவரை புதைக்க வேண்டாம் என்றோ அல்லது எரிக்க வேண்டாம் என்றோ கூறவில்லை. ஆனால் நாம் மக்களை பாதுகாக்கும் நடவடிக்கையை எடுத்தாக வேண்டும் எனவும் நாட்டின் சட்டத்திற்கு மதிப்பளிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலும் இருந்தோம். 

ஆனால் இந்த விடயத்தில் தமது மத சம்ரதாயங்களுக்கு அமைய எரிப்பது இறை விருப்பத்திற்கு முரணானது, குர்ஆனில் குறிப்பிடப்படுவது புதைப்பது மட்டுமே என முஸ்லிம் அரசியல் வாதிகள் உறுதியான நிலைப்பாட்டில் இருந்து கருத்துக்களை கூறுகின்றனர்.

நான் இது குறித்து அறிந்துகொள்ள குர்ஆனை ஆரம்பம் தொடக்கம் முடிவு வரை இரண்டு தடவைகள் வாசித்தேன். இதில் ஐந்தாவது அத்தியாயத்தில் நல்லதொரு விடயம் குறிப்பிடப்படுகின்றது,

ஆதமின் புதல்வர்கள் இருவருக்கு இடையில் இடம்பெறும் மோதலில் ஒரு மகன் இறக்கின்றார். குர்ஆனுக்கு அமைய உலகின் முதலாவது மரணம் இதுவாகும், எனவே இந்த உடலை என்ன செய்வது என்ற கேள்வி எழுகின்றது.

இதில் 31 ஆம் அத்தியாயத்தில் கூறப்படுகின்றது என்னவென்றால், இறைவன் பறவை ஒன்றை அனுப்புகின்றார்,  அந்த பறவை நிலத்தை கொத்தி குழி பறிக்கின்றது, ஏனென்றால் இந்த உடலை மண்ணினால் புதைக்க வேண்டும் என்பதற்காக என கூறப்படுகின்றது. இந்த இடத்தில் தான் உடல் நல்லடக்கம் குறித்து சுட்டிக்காட்டப்படுகின்றது. 

ஆனால் குர்ஆனை நான் படித்துப்பார்த்ததில் கவனித்த ஒன்று என்னவென்றால், கண்டிப்பாக உடலை நல்லடக்கம் செய்ய வேண்டும் என்றோ அல்லது உடலை எரிப்பது மார்க்கத்திற்கு முரணானது என்றோ  குர்ஆனில் எங்கேயும் சுட்டிக்காட்டப்படவில்லை.

முஸ்லிம்களின் ஏனைய நடவடிக்கைகளில் நன்மை தீமைகள் குறித்து குறிப்பிடப்பட்டுள்ள போதிலும் உடலை அடக்கம் செய்வது விடயத்தில் அவ்வாறு எதுவுமே செய்யப்படவில்லை. 

எனவே மத வழிபாடுகள் சம்ரதாயங்கள் என்று எடுத்துக்கொண்டால் அணைத்து மதங்களிலும் அவ்வாறான சம்ரதாயங்கள் உள்ளன, ஆனால் அவை அனைத்தையும் ஓரமாக வைத்துவிட்டு சுகாதார வழிமுறைகளுக்கு  கட்டுப்பட்டாக வேண்டும். 

குர் - ஆனில் எங்கேயும் இறந்தவர்களின் உடலை புதைப்பது கட்டாயமென சுட்டிக்காட்டப்படவில்லை - கம்மன்பில  | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பிழம்பு said:

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

 

இலங்கையில் எவரும் கொவிட் -19 வைரஸ் பரவலால் உயிரிழக்கக்கூடாது என நாம் முயற்சித்துக்கொண்டுள்ளோம், ஆனால் எதிர்க்கட்சியினர் மாறாக ஒருவர் இறந்தால் அவரை புதைப்பதா அல்லது எரிப்பதா என விவாதித்துக்கொண்டுள்ளனர் என அமைச்சர் உதய கம்மன்பில சபையில் தெரிவித்தார். 

 

 

 

மரணிப்பவர்களை புதைப்பது குறித்து குர்ஆனில் கூறப்பட்டுள்ள போதிலும் அது கட்டாயமானது என எந்தவொரு இடத்திலும் கூறவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை, நாட்டின் தற்போதைய கொவிட் -19 வைரஸ் பரவல் நிலைமைகள் மற்றும் அரசாங்கத்தின் பலவீனமான செயற்பாடுகள் குறித்தும் எதிர்க்கட்சியினர் கொண்டுவந்த சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார். 

அவர் மேலும் கூறுகையில்,

நாட்டில் தொற்றுநோய் பரவல் இருப்பதாக சுகாதார பணிப்பாளர் மூலமாக வர்த்தமானி அறிவித்தல் மூலம் அறிவிக்கப்பட்டதன் பின்னர் அவரே சகல விடயங்களில் தீர்மானம் எடுத்தாக வேண்டும்.

இதில் இனம், மத பேதங்கள் இன்றி தீர்மானம் எடுக்க வேண்டும். இறப்பவர் ஒருவரை புதைக்க வேண்டாம் என்றோ அல்லது எரிக்க வேண்டாம் என்றோ கூறவில்லை. ஆனால் நாம் மக்களை பாதுகாக்கும் நடவடிக்கையை எடுத்தாக வேண்டும் எனவும் நாட்டின் சட்டத்திற்கு மதிப்பளிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலும் இருந்தோம். 

ஆனால் இந்த விடயத்தில் தமது மத சம்ரதாயங்களுக்கு அமைய எரிப்பது இறை விருப்பத்திற்கு முரணானது, குர்ஆனில் குறிப்பிடப்படுவது புதைப்பது மட்டுமே என முஸ்லிம் அரசியல் வாதிகள் உறுதியான நிலைப்பாட்டில் இருந்து கருத்துக்களை கூறுகின்றனர்.

நான் இது குறித்து அறிந்துகொள்ள குர்ஆனை ஆரம்பம் தொடக்கம் முடிவு வரை இரண்டு தடவைகள் வாசித்தேன். இதில் ஐந்தாவது அத்தியாயத்தில் நல்லதொரு விடயம் குறிப்பிடப்படுகின்றது,

ஆதமின் புதல்வர்கள் இருவருக்கு இடையில் இடம்பெறும் மோதலில் ஒரு மகன் இறக்கின்றார். குர்ஆனுக்கு அமைய உலகின் முதலாவது மரணம் இதுவாகும், எனவே இந்த உடலை என்ன செய்வது என்ற கேள்வி எழுகின்றது.

இதில் 31 ஆம் அத்தியாயத்தில் கூறப்படுகின்றது என்னவென்றால், இறைவன் பறவை ஒன்றை அனுப்புகின்றார்,  அந்த பறவை நிலத்தை கொத்தி குழி பறிக்கின்றது, ஏனென்றால் இந்த உடலை மண்ணினால் புதைக்க வேண்டும் என்பதற்காக என கூறப்படுகின்றது. இந்த இடத்தில் தான் உடல் நல்லடக்கம் குறித்து சுட்டிக்காட்டப்படுகின்றது. 

ஆனால் குர்ஆனை நான் படித்துப்பார்த்ததில் கவனித்த ஒன்று என்னவென்றால், கண்டிப்பாக உடலை நல்லடக்கம் செய்ய வேண்டும் என்றோ அல்லது உடலை எரிப்பது மார்க்கத்திற்கு முரணானது என்றோ  குர்ஆனில் எங்கேயும் சுட்டிக்காட்டப்படவில்லை.

முஸ்லிம்களின் ஏனைய நடவடிக்கைகளில் நன்மை தீமைகள் குறித்து குறிப்பிடப்பட்டுள்ள போதிலும் உடலை அடக்கம் செய்வது விடயத்தில் அவ்வாறு எதுவுமே செய்யப்படவில்லை. 

எனவே மத வழிபாடுகள் சம்ரதாயங்கள் என்று எடுத்துக்கொண்டால் அணைத்து மதங்களிலும் அவ்வாறான சம்ரதாயங்கள் உள்ளன, ஆனால் அவை அனைத்தையும் ஓரமாக வைத்துவிட்டு சுகாதார வழிமுறைகளுக்கு  கட்டுப்பட்டாக வேண்டும். 

குர் - ஆனில் எங்கேயும் இறந்தவர்களின் உடலை புதைப்பது கட்டாயமென சுட்டிக்காட்டப்படவில்லை - கம்மன்பில  | Virakesari.lk

இவங்கள் தான் இப்ப குர்-ஆனை கூட வாசிக்கிறாங்கள் போலை

  • கருத்துக்கள உறவுகள்

இவர் எப்ப சுன்னத்துச் செய்து கொண்டவர்..??!

இப்ப சிங்களம் சுன்னத்தை ஒரு கை பார்க்க.. தமிழர்களை தமிழ் கூலிகளை வைச்சே ஒரு கை பார்க்கிறது சிங்களம்.

இதனால் தான் சொல்வது எட்ட இருக்கும் எதிரியை விட கிட்ட இருக்கும் துரோகி அழிக்கப்பட வேண்டிய களை என்று. 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, வாதவூரான் said:

இவங்கள் தான் இப்ப குர்-ஆனை கூட வாசிக்கிறாங்கள் போலை

குர்-ஆன்  புத்தகத்தை, இடுப்புக்கு கீழ் கூட... வைத்துக் கொண்டு போகக்  கூடாதாம்,
நெஞ்சுக்கு மேல் தான்... வைத்திருக்க வேண்டும் என்று,
என்னுடன் வேலை செய்யும்... துருக்கி நண்பர் சொன்னார்.

அப்படி... இருக்க,  ஸ்ரீலங்கா சிங்கள அமைச்சர், 
குர் - ஆனை,  வாசித்து... இருக்க,  சந்தர்ப்பமே... இல்லை ராஜா. 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, பிழம்பு said:

இதில் இனம், மத பேதங்கள் இன்றி தீர்மானம் எடுக்க வேண்டும். இறப்பவர் ஒருவரை புதைக்க வேண்டாம் என்றோ அல்லது எரிக்க வேண்டாம் என்றோ கூறவில்லை.

அப்போ எதற்காக எரிக்க வேண்டும் என்று அடம்பிடிக்கிறீர்கள்?

ஏனைய இனத்தாரை கொலை செய்து, அடிமைப்படுத்தி, அவர்கள் உரிமைகளை பறிக்கச்ச்சொல்லி மஹா வம்சத்தில் கூறியுள்ளதோ?  

8 hours ago, பிழம்பு said:

நாட்டின் சட்டத்திற்கு மதிப்பளிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலும் இருந்தோம். 

உங்களின் ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம் நடைமுறைக்கு இல்லாத ஒன்றை பிடித்துக்கொண்டு அடம்பிடிக்கிறீர்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.