Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப் புலிகளை நினைவுகூரும் தூபிகள் வடக்கில் எங்கெல்லாம் இருக்கின்றதோ அவற்றை இடித்தழிக்க வேண்டும் - விமல் வீரவன்ச

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப் புலிகளை நினைவுகூரும் தூபிகள் வடக்கில் எங்கெல்லாம் இருக்கின்றதோ அவற்றை இடித்தழிக்க வேண்டும்

BattinewsJanuary 12, 2021
sss.jpg

யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட தூபியை மாத்திரமல்லாது விடுதலைப் புலிகளை நினைவுகூரும் தூபிகள் வடக்கில் எங்கெல்லாம் இருக்கின்றதோ அவற்றை முழுமையாக இடித்தழிக்க வேண்டுமென அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

அத்துடன், விடுதலைப் புலிகளை நினைவுத் தூபிகள் அமைத்தோ அல்லது பகிரங்க நிகழ்வுகள் நடத்தியோ நினைவுகூரல் நடத்துவது நாட்டின் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் பெரும் குற்றமாகும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ். பல்கலைக்கழத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடிக்கப்பட்டமை தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் அவ்வாறு கூறியுள்ளார்.

அவர் தெரிவிக்கையில், “ஒரு பொறுப்பு வாய்ந்த அதிகாரி என்ற வகையில் தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த தூபியைத் துணைவேந்தர் இடித்து அகற்றியுள்ளார். இது அவரின் தற்றுணிவை எடுத்துக்காட்டுகின்றது.

இறுதிப்போரில் மரணித்த பொதுமக்களை நினைவேந்தும் தூபி என்ற பெயரில் அங்கு அமைக்கப்பட்டிருந்தது புலிகளை நினைவேந்தும் தூபியே. இதைப் பல்கலைக்கழத்தில் வைத்திருப்பது சட்டவிரோதமானது. அதற்கமைய நல்லதொரு தீர்மானம் எடுத்து அந்தத் தூபியைத் துணைவேந்தர் இடித்துள்ளார்.

மூவின மாணவர்களின் நன்மை கருதி இந்தத் தீர்மானத்தை அவர் எடுத்திருப்பாரென நான் நினைக்கின்றேன். எனவே, மாணவர்கள் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடாமல் கல்வியைத் தொடர வேண்டும்” என விமல் குறிப்பிட்டுள்ளார்.
 

 

http://www.battinews.com/2021/01/blog-post_245.html

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் எல்லாம் புலிகள், புலிகள் எல்லாம் தமிழர் என்னும் தாரக மந்திரம் சொல்பவர்கள்,  மீண்டும்  ஒரு ஆயுதப் போரை தமிழர்மேல் வலிந்து திணித்து, தமிழினத்தை நாட்டில் இருந்து அழித்தொழிப்பதற்கு முயற்சிக்கப்படுகிறது. ஆனால் இவர்கள் தங்களுக்கே அழிவை ஏற்படுத்துகிறார்கள். எவ்வளவுக்கு கொடுக்கப்படுகிறதோ அவ்வளவுக்கு திருப்பி கேட்கப்படும்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட தூபியை மாத்திரமல்லாது விடுதலைப் புலிகளை நினைவுகூரும் தூபிகள் வடக்கில் எங்கெல்லாம் இருக்கின்றதோ அவற்றை முழுமையாக இடித்தழிக்க வேண்டுமென அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

எழுத்துப் பிழையின்றி தனது தாய்மொழியை எழுதமுடியாதவர் இந்த விமல் வீரவன்ச என்ற செய்தியை என்றோ படித்தது ஞாபகம் வருகிறது. இந்தாள் க.பொ.த உயர்தரக் கல்வித்தகைமைகூட இல்லாதவர் என்ற செய்தியையும் சமீபத்தில் படித்தேன். சிறீலங்கா அரசின் ஆட்சிபீடத்தில் கீழ்மட்ட அரசியல்வாதிகளும் நிறைந்திருப்பதினால் இந்த விமல் வீரவன்ச போன்ற அசிங்கமான நபர்களும் உயர் பதவியைப்  பெறுவதற்கு முடிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியே ஜே வி பியின் சிங்கள இராணுவத்தின் தூபிகள் எங்கிருந்தாலும் இடிச்சுத்தள்ள வேண்டும். 

மூவின மாணவர்களில் தமிழ் மாணவர்களுக்கு இத்தூபிகள் சாபக்கேடு. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Quote

விடுதலைப் புலிகளை நினைவுகூரும் தூபிகள் வடக்கில் எங்கெல்லாம் இருக்கின்றதோ அவற்றை இடித்தழிக்க வேண்டும்

உதுகளுக்கு வாயிலை நல்ல வார்த்தையே வராது போல கிடக்கு....
அது தமிழ் மக்கள் எண்டாலும் சரி, தமிழர்ரை நிலம் எண்டாலும் சரி,தமிழர் வீடுகள் எண்டாலும் சரி, கோயில் எண்டாலும் சரி, நினைவு இல்லங்கள் எண்டாலும் சரி,யுத்த ஆதாரங்கள் எண்டாலும் சரி ஒரே அழிப்புத்தான்....😡

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

உதுகளுக்கு வாயிலை நல்ல வார்த்தையே வராது போல கிடக்கு....
அது தமிழ் மக்கள் எண்டாலும் சரி, தமிழர்ரை நிலம் எண்டாலும் சரி,தமிழர் வீடுகள் எண்டாலும் சரி, கோயில் எண்டாலும் சரி, நினைவு இல்லங்கள் எண்டாலும் சரி,யுத்த ஆதாரங்கள் எண்டாலும் சரி ஒரே அழிப்புத்தான்....😡

ரவுடிகளை எம்பியாக்கினால் இப்படித்தான் கதைப்பினம்...

  • கருத்துக்கள உறவுகள்

 

சஹ்ரானுக்கு காசு கொடுத்த விமலும் கோத்தாவும் | வெளுத்து வாங்கிய அசாத் சாலி

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.