Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விமலுடன் வெளிநாட்டு உளவாளிகள் – பெரமுனவினர் திடீர் தாக்குதல்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விமல் வீரவன்சவின் தேசிய சுந்திர முன்னணி கட்சியில் வெளிநாட்டு உளவாளிகள் இருவர் பணியாற்றுகின்றனர் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிர்வாக செயலாளர் ரேனுக பெரோ குற்றஞ்சாட்டியுள்ளார்.

பெரமுனவின் தலைவராக மஹிந்த ராஜபக்சவை நீக்கிவிட்டு கோத்தாபய ராஜபக்சவை தலைவராக நியமிக்க வேண்டும் என அமைச்சர் விமல் வீரவன்ச கருத்து வெளியிட்டதை தொடர்ந்து ஆளும் தரப்பினரிடையே சர்ச்சை எழுந்துள்ளது.

விமல் வீரவன்ச மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் – பெரமுன!

இந்நிலையிலேயே வெளிநாட்டு உளவாளிகளிடம் பணம் பெற்று பணியாற்றும் இருவர் விமலுடன் இருப்பதாக பெரமுன குற்றஞ்சாட்டியுள்ளது.

விமலுடன் வெளிநாட்டு உளவாளிகள் – பெரமுனவினர் திடீர் தாக்குதல்! – உதயன் | UTHAYAN (newuthayan.com)

சீனாவிடம் பணம் வாங்கிக்கொண்டு வீரவன்ச துள்ளுகிறார் என்பது ஊரறிந்த  விடயம். இங்குள்ள தொழில்சங்கங்கள் எல்லாவற்றிட்கும் வீரவன்ச ஊடாகவே சீன பணம் வழங்கி அர்ப்பட்ட்ங்கள் செய்து கிழக்கு துறைமுகந்தாய் இந்தியாவுக்கு கொடுப்பதை நிறுத்தியது. இவர் சீனாவின் கையாள் என்பது எல்லோருக்கும் தெரியும்.

  • கருத்துக்கள உறவுகள்

விமல் வீரவன்ச வீட்டில் நடந்த கலந்துரையாடலில் வெளிநாட்டு புலனாய்வு முகவர்கள்?

 
Wimal-Weerawansa-500.png
 3 Views

 

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையம் தொடர்பில் அமைச்சர் விமல்வீரவன்சவின் வீட்டில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது வெளிநாட்டு புலனாய்வு பிரிவினரிடம் சம்பளம் பெறும் இரு புலனாய்வுபிரிவினரும் காணப்பட்டனர் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிர்வாகச் செயலாளர் ரேணுகா பெரேரா தெரிவித்துள்ளார்.

அமைச்சரின் தலைமையில் அவரது வீட்டில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றது நாங்கள் அதனை அவதானித்துக்கொண்டிருந்தோம் அந்த கலந்துரையாடலின் பின்னணியில் இரு மருத்துவர்கள் காணப்பட்டனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர்கள் இருவருக்கும் வெளிநாட்டு புலனாய்வு அமைப்புகள் பணம் வழங்குகின்றன என குறிப்பிட்டுள்ள ரேணுகாபெரேரா இதனைநான் மிகுந்த பொறுப்புணர்வுடன் தெரிவிக்கின்றேன் தேவைப்பட்டால் எங்களால் அவர்களின் பெயர்கைள வெளியிடமுடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அவரது அரசியல் செயற்பாடுகள் நடத்தைகள் குறித்து நீண்டகாலமாக ஆராய்ந்த பின்னரே நாங்கள் இந்த செய்தியாளர் மாநாட்டினை ஏற்பாடு செய்துள்ளோம், எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

https://www.ilakku.org/?p=41837

  • கருத்துக்கள உறவுகள்

இவரைப்பற்றி இந்த “ கோட்டாபாய தூக்கப்போகும் சிவப்பு ஆயுதம்” கூறப்படுகிறது.. நடப்பதை பார்க்கும் பொழுது நன்கு திட்டமிட்ட நாடகம் ஆரம்பிக்கப்பட்டுவிட்டதா என்றும் எங்களது தமிழ் தலைமைகள் என்ன செய்யப்போகிறார்கள் என்றும் கேள்வி எழுகிறது

 

 

  • கருத்துக்கள உறவுகள்
On 8/2/2021 at 22:50, Robinson cruso said:

சீனாவிடம் பணம் வாங்கிக்கொண்டு வீரவன்ச துள்ளுகிறார் என்பது ஊரறிந்த  விடயம். இங்குள்ள தொழில்சங்கங்கள் எல்லாவற்றிட்கும் வீரவன்ச ஊடாகவே சீன பணம் வழங்கி அர்ப்பட்ட்ங்கள் செய்து கிழக்கு துறைமுகந்தாய் இந்தியாவுக்கு கொடுப்பதை நிறுத்தியது. இவர் சீனாவின் கையாள் என்பது எல்லோருக்கும் தெரியும்.

இந்தியாவுக்கு எதிராக எது செய்தாலும் வரவேற்கலாம். 

😉

14 hours ago, Kapithan said:

இந்தியாவுக்கு எதிராக எது செய்தாலும் வரவேற்கலாம். 

😉

தனி மனித சுதந்திரம்.😜

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.