Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

#P2P சிங்கள அரசை அசர வைத்த காரணம் என்ன?

Featured Replies

1 minute ago, Nathamuni said:

போராட்டத்துக்கு தேவையான, உந்துதலை கொடுத்தது, சுமந்திரனும், சாணக்கியனும் என்று குழந்தைத்தனமாக நம்புகிறீர்களா?

இப் போராட்டம் இந்தளவுக்கு வெற்றி பெறுவதற்கு காரணங்களில் ஒன்றாக இவர்கள் இருவரும் உள்ளனர். முக்கியமாக சாணக்கியனின் பங்கு சுமந்திரனின் பங்கை விட அதிகமானது. இவர்கள் இருவரையும் தவிர
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநேசன், மட்டக்களப்பு தமிழ் உணர்வாளர்கள் அமைப்பின் தலைவர் மோகன் அவரது மகன், யோகேஸ் நடா, அரியனேந்திரன் போன்றோர்களுக்கும் இதில் பங்குண்டு.

இவற்றை விட கிழக்கு முஸ்லிம்கள் கொடுத்த ஆதரவும் முக்கியமானது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, கிருபன் said:

தொகுத்து எழுதியதற்கு பச்சை. துருத்திய வரிக்கு கருத்து😎

மேற்குக்கும் அதன் தரகராக இருக்கும் இந்தியாவுக்கும், சீனாவுக்கும் நடக்கும் போட்டிகள் பற்றியும் பல அலசல்கள் வந்துதான் உள்ளன.  சிறிலங்காவில் என்ன நடக்கின்றது, ஜெனீவாவில் என்ன நடக்கக்கூடும் என்பது எல்லாம் wargame ஆக மேசைகளில் அலசப்படுகின்றன.

ஆனால் P2P பேரணியை பின்னிருந்து நடத்தியது புலனாய்வு அமைப்புக்கள் என்பது ஆதாரமில்லாத வெறும் ஊகங்கள். இதையும் ஒருவர் சும்மா எங்காவது எழுதியிருப்பார். ஊகத்தில் தர்கிக்க என்ன இருக்கின்றது?

நன்றி அய்யா, மக்கள் தாமாகவே வெகுண்டு எழுந்திருந்தால், பொடி நடையாக, இன்று முல்லைத்தீவினைக் கடந்து கொண்டு இருப்பார்கள்.

அதற்க்குள் சிங்கள படையினர், இலகுவாக மடக்கி இருப்பார்கள்.

Edited by Nathamuni

6 minutes ago, Nathamuni said:

என்ன சொல்ல வருகிறீர்கள் நிழலி?

முள்ளிவாய்க்காலில் எதுவுமே நடக்கவில்லை, எல்லாமே பொய் என்று சிங்களம் சொல்லிக்கொண்டிருக்கும் போதே, அதுக்கு ஆப்பு வைக்கும் வகையில், சட்ட ரீதியாக விசாரணை செய்த அதிகாரி, விசாரணை கோப்புகளுடன் வெளியே எடுக்கப்பட்டுள்ளார். அதன் வீச்சு புரிகிறதா, இல்லையா?

மறுபுறத்தே, ராஜபக்சேக்களின் கோபத்தால், அந்த அதிகாரியின் உயர் அதிகாரியான சாணி அபேயசேகரா உள்ளே கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார்.

அதாவது முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இனப்படுகொலையை நிரூபிக்க ஒரு சட்ட அதிகாரி இலங்கையில் போராடினார். அவரை அப்படியே அலேக்கா அவரது கோப்புகளுடன் தூக்கிக் கொண்டு போய் விட்டனர். அப்படி அவரை தூக்கியிருக்கா விட்டால் முள்ளிவாய்க்கால் தொடர்பான உண்மைகளை நிரூபிக்க மேற்குலகு கஷடப்படும்.😀

ஷானி அபேசேகரா நேர்மையானவர். ஆனால் அவர் ஒன்றும் முள்ளிவாய்க்கால் இனவழிப்பை வெளிக்கொண்டு வர பாடுபட்டவர் அல்ல. ஷானி செய்தெல்லாம் மகிந்த சகோதரர்கள் செய்த கொள்ளைகளை விசாரிக்க தொடங்கியது தான்.

இதில் ஊடகவியலாளார் பிரகீத் மட்டுமே இறுதி யுத்தத்தில் இராசாயன ஆயுதங்கள் பயன்படுத்தியமை தொடர்பாக புல நாய்வு தொடர் ஒன்றை ஆரம்பித்து அதற்கான தரவுகளை சேகரிப்பதில் ஈடுபட்டு இருந்தார். அவரை மகிந்தவின் முதல் ஆட்சியிலேயே காணாமல் ஆக்கிவிட்டனர்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, நிழலி said:

அதாவது முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இனப்படுகொலையை நிரூபிக்க ஒரு சட்ட அதிகாரி இலங்கையில் போராடினார். அவரை அப்படியே அலேக்கா அவரது கோப்புகளுடன் தூக்கிக் கொண்டு போய் விட்டனர். அப்படி அவரை தூக்கியிருக்கா விட்டால் முள்ளிவாய்க்கால் தொடர்பான உண்மைகளை நிரூபிக்க மேற்குலகு கஷடப்படும்.😀

ஷானி அபேசேகரா நேர்மையானவர். ஆனால் அவர் ஒன்றும் முள்ளிவாய்க்கால் இனவழிப்பை வெளிக்கொண்டு வர பாடுபட்டவர் அல்ல. ஷானி செய்தெல்லாம் மகிந்த சகோதரர்கள் செய்த கொள்ளைகளை விசாரிக்க தொடங்கியது தான்.

நிழலி, என்னது?

குழப்புகிறீர்களா அல்லது குழம்புகிறீர்களா?

நான் எங்கே சொன்னேன், டீ சில்வா முள்ளிவாய்க்கால் குறித்து விசாரணை செய்தார் என்று?

அவர் விசாரணை செய்தது, மைத்திரி-ரணில் காலத்தில். விசாரித்தது, ராஜபக்சேக்களின், சிங்கள பகுதி மனித உரிமை மீறல்கள் குறித்து. 

Edited by Nathamuni

 

17 minutes ago, Nathamuni said:

என்ன சொல்ல வருகிறீர்கள் நிழலி?

முள்ளிவாய்க்காலில் எதுவுமே நடக்கவில்லை, எல்லாமே பொய் என்று சிங்களம் சொல்லிக்கொண்டிருக்கும் போதே, அதுக்கு ஆப்பு வைக்கும் வகையில், சட்ட ரீதியாக விசாரணை செய்த அதிகாரி, விசாரணை கோப்புகளுடன் வெளியே எடுக்கப்பட்டுள்ளார். அதன் வீச்சு புரிகிறதா, இல்லையா?

மறுபுறத்தே, ராஜபக்சேக்களின் கோபத்தால், அந்த அதிகாரியின் உயர் அதிகாரியான சாணி அபேயசேகரா உள்ளே கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார்.

இதை சொன்னவர் நீங்கள் தானே

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, நிழலி said:

இதை சொன்னவர் நீங்கள் தானே

கடவுளே... 🤦‍♂️

2+1 = 4 புரிந்தால் சரி.

இதையும் சொன்னேனே...

நீங்கள் சாதாரணமாக நினைப்பது போல, ஜெனீவாவில் ராஜபக்சேக்களுக்கு பெரும் தலையிடி தரப்போவது எங்கள் பிரச்சனை அல்ல. தாஜூடீன், பிரகதீப், லசந்த கொலைகளை விசாரித்த சிங்கள போலீஸ் அதிகாரியினை கொழும்பில் இருந்து கடத்தியதுடன் புலனாய்வு அமைப்புகளின் வேலைகள் எப்போதோ ஆரம்பமாகி விட்டன.

Edited by Nathamuni

இவற்றை விடுவோம்

நான் இந்த திரியில் எழுத முற்பட்ட விடயங்கள்

1. P2P சிவில் அமைப்புகளின் முயற்சியால், மக்களின் பங்களிப்பால் இடம்பெற்ற மக்கள் எழுச்சிப் போராட்டம்

2. ஒப் போராட்டம் இந்திய மற்றும் எந்த உளவு அமைப்புகளாலும் திட்டமிடப்பட்டோ அல்லது அவர்களது மேற்பார்வையிலோ இடம்பெற்றது அல்ல. 

3. P2P யின் வெற்றி தனி நபர்களை சார்ந்த ஒன்றல்ல. இது ஒன்றுபட்ட மக்களின் முயற்சியால் வெற்றிகரமாக நடாத்தப்பட்ட ஒரு போராட்டம்

4. வழக்கம் போல இந்தியாவும் மேற்குலகும் இந்த போராட்டத்தினை தமக்கு சாதகமாக்கி இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க முனையலாம். 

டொட்.

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, Nathamuni said:

நன்றி அய்யா, மக்கள் தாமாகவே வெகுண்டு எழுந்திருந்தால், பொடி நடையாக, இன்று முல்லைத்தீவினைக் கடந்து கொண்டு இருப்பார்கள்.

அதற்க்குள் சிங்கள படையினர், இலகுவாக மடக்கி இருப்பார்கள்.

டிபிஎஸ் ஜெயராஜ் Daily Mirror இல் எழுதியதை வாசித்திருப்பியள் (இங்கிலீஷ் என்றால் வாசிக்க இலகுதானே). அவர் எப்படி பொடிநடையாக வராமல் பேரணி வந்தது என்று சொல்லியிருக்கின்றார். மக்கள் எப்படி தன்னெழுச்சியாக சேர்ந்தார்கள் என்றும் சொலியிருக்கின்றார்.

கதைவிடுகின்ற அவரே புலனாய்வு அமைப்புக்களின் தூண்டுதலால் அல்லது புலம்பெயர் புலிசார் அமைப்புக்களின் தூண்டுதலால் பேரணி ஒழுங்கு செய்யப்பட்டது என்று அடிச்சுவிடவில்லை. 😁

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
Just now, நிழலி said:

இவற்றை விடுவோம்

நான் இந்த திரியில் எழுத முற்பட்ட விடயங்கள்

1. P2P சிவில் அமைப்புகளின் முயற்சியால், மக்களின் பங்களிப்பால் இடம்பெற்ற மக்கள் எழுச்சிப் போராட்டம்

2. ஒப் போராட்டம் இந்திய மற்றும் எந்த உளவு அமைப்புகளாலும் திட்டமிடப்பட்டோ அல்லது அவர்களது மேற்பார்வையிலோ இடம்பெற்றது அல்ல. 

3. P2P யின் வெற்றி தனி நபர்களை சார்ந்த ஒன்றல்ல. இது ஒன்றுபட்ட மக்களின் முயற்சியால் வெற்றிகரமாக நடாத்தப்பட்ட ஒரு போராட்டம்

4. வழக்கம் போல இந்தியாவும் மேற்குலகும் இந்த போராட்டத்தினை தமக்கு சாதகமாக்கி இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க முனையலாம். 

டொட்.

1. பயத்தில் முடங்கி இருக்கும் மக்கள் வீதிக்கு வருவார்கள் என்ற எதிர்பார்ப்பின் மீது, திட்டம் இடப்பட்டதே இந்த போராட்டம்.

2. நீங்கள் நினைக்கும் அளவுக்கு, பெரிய புலனாய்வு தேவைகளோ, வேலைகளோ இருக்கவில்லை. ஒருங்கிணைப்பும், ஊக்குவிப்பும் தான் தேவையானதாக இருந்தது.

3. P2P யின் வெற்றியின் முக்கிய அடித்தளமே பின்னால் இருந்த திட்டமிடல். சிங்கள படைகள் எதிர்பார்க்க முடியாதவாறு பாதைகளை தீடீர் திடீர் என மாத்தி கொண்டு போனது, மக்கள் அல்ல.

4. அதனை தானே சொல்லிக் கொண்டு இருக்கிறேன். 

2 minutes ago, கிருபன் said:

டிபிஎஸ் ஜெயராஜ் Daily Mirror இல் எழுதியதை வாசித்திருப்பியள் (இங்கிலீஷ் என்றால் வாசிக்க இலகுதானே). அவர் எப்படி பொடிநடையாக வராமல் பேரணி வந்தது என்று சொல்லியிருக்கின்றார். மக்கள் எப்படி தன்னெழுச்சியாக சேர்ந்தார்கள் என்றும் சொலியிருக்கின்றார்.

கதைவிடுகின்ற அவரே புலனாய்வு அமைப்புக்களின் தூண்டுதலால் அல்லது புலம்பெயர் புலிசார் அமைப்புக்களின் தூண்டுதலால் பேரணி ஒழுங்கு செய்யப்பட்டது என்று அடிச்சுவிடவில்லை. 😁

 

புலனாய்வு அமைப்புக்களின் தூண்டுதலால்  ஒருங்கிணைப்பால் என்று, முகம் தெரியாத நான் எழுதலாம், அவர் எழுத முடியும் என்று நீங்கள் நினைத்தால், என்னத்தை சொல்ல?

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Nathamuni said:

புலனாய்வு அமைப்புக்களின் தூண்டுதலால்  ஒருங்கிணைப்பால் என்று, முகம் தெரியாத நான் எழுதலாம், அவர் எழுத முடியும் என்று நீங்கள் நினைத்தால், என்னத்தை சொல்ல?

அவருக்கு கிறெடிபிளிற்றி பற்றி கவனம் இருப்பதால் ஒண்டும் சொல்லவில்லையாக்கும். முகம் தெரியாத, ஆனால் புலனாய்வு ஒருங்கிணைத்தது என்பதை உறுதியாக நம்பும், உங்களுக்கு கிறெடிபிளிற்றி பற்றி ஒன்றில் அக்கறை இல்லை அல்லது இல்லை!

வாட்ஸப் இருக்கும்போது ஒருங்கிணைக்க, வழியை மாற்ற முடியாதா என்ன?

சிவயோகநாதனுக்கும், வேலன் சுவாமிகளுக்கும் ஹாண்ட்லர்ஸ் யார் என்று அடுத்த பாகத்தில் அவிட்டு விடுங்கள்.😃

Edited by கிருபன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, கிருபன் said:

சிவயோகநாதனுக்கும், வேலன் சுவாமிகளுக்கும் ஹாண்ட்லர்ஸ் யார் என்று அடுத்த பாகத்தில் அவிட்டு விடுங்கள்.😃

சாணக்கியனும், சுமேந்திரனும் தான்.... 

உங்கள் வியாக்கியானதுக்கு நேரமில்லை.

நிழலியுடன் தரமான விவாதம் செய்யக்கூடியதாக இருந்தது. நன்றி, நிழலி.

அனைவருக்கும் இரவு வணக்கம்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Nathamuni said:

சாணக்கியனும், சுமேந்திரனும் தான்.... 

இதுக்கு பதிலாக இன்னொரு கட்டுரை இருக்கு. ஆனால் இணைக்க விருப்பமில்லாததால் இணைக்கவில்லை! “எழுவான் வேலன்” என்று தேடிப் பாருங்கள்! ஆனால் தமிழில்தான் இருக்கு!

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.