Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொவிட்-19 காரணமாக இறப்பவர்களை அடக்கம் செய்ய அனுமதிக்கப்படும் : பிரதமர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பாராளுமன்றில் இன்று உரையாற்றிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கொவிட்-19 காரணமாக இறப்பவர்களை அடக்கம் செய்ய அரசாங்கம் அனுமதியளிப்பதாக அறிவித்தார்.

கொவிட் -19  கழிவு நீரில் பரவ முடியாது என்று அமைச்சர் சுதர்ஷினி பெர்னாடோபுள்ளேயின் கூற்றைத்  தொடர்ந்து கொவிட்-19 நோயாளிகளின் தகனம் குறித்து அறிக்கை வெளியிடுமாறு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய போதே பிரதமர் மேற்கண்டவாறு பதில்  கூறினார்.

Thinakkural.lk

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா முஸ்லிம் சடல அடக்கத்துக்கு அனுமதி தந்த இலங்கை பிரதமர்

இலங்கையில் சுமார் 11 மாத கால போராட்டத்துக்குப் பிறகு, கோவிட்-19 தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் சடலங்களை அடக்கம் செய்ய அனுமதி வழங்குவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார், நாடாளுமன்றத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை நோக்கி புதன்கிழமை (பிப்ரவரி 10) இந்த விடயம் தொடர்பில் கேள்வி எழுப்பியினார்.

இதற்கு பதிலளித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, முஸ்லிம் அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்கப்படும் என தெரிவித்திருந்தார்.

முன்னதாக, நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹண பண்டார எழுப்பிய கேள்விக்கு, நீரின் ஊடாக கோவிட் வைரஸ் பரவாது என ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்று நோய்கள் மற்றும் கொவிட் நோய்க் கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்ணான்டோபுள்ளே பதிலளித்திருந்தார்.

அவரது பதிலை புதன்கிழமை மேற்கோள்காட்டியே ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார், முஸ்லிம் சடலஙகள் இறுதி மரியாதை தொடர்பான கேள்வியை எழுப்பினார்.

அப்போது அவர், ''நேற்றைய தினம் இந்த சபையில் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹண பண்டார எழுப்பிய கேள்விக்கு, அமைச்சர் சுதர்ஷினி பெர்ணான்டோபுள்ளே பதிலொன்றை வழங்கியிருந்தார். நீரில் கோவிட் பரவாது என அவர் பதில் வழங்கியிருந்தார். அப்படியென்றால், தற்போது பிரதமரிடம் நாம் ஒரு விடயத்தை கேட்க விரும்புகிறோம். கோவிட்-19 தொற்றால் உயிரிழப்போரின் உடல்களை அடக்கம் செய்ய இப்போதாவது அனுமதி தாருங்கள் என கேட்க விரும்புகிறேன்" என கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த பிரதமர், ''நாடாளுமன்ற உறுப்பினர் மரிக்காரினால் கேட்கப்பட்ட கேள்விக்கான பதில், அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்கப்படும்" என்று கூறினார்.

இலங்கையில் கோவிட் - 19 தொற்று 2020ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பரவத்தொடங்கியது.

அதன் பின்னர், இலங்கையில் கொரோனா முதலாவது உயிரிழப்பு, 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் 28ம் தேதி பதிவானது. சிலாபம் - மாரவில பகுதியைச் சேர்ந்த 60 வயதான நபர், கொரோனா தொற்றினால் முதலாவதாக இலங்கையில் உயிரிழந்தார்.

இவ்வாறான நிலையில், இலங்கையில் கொரோனா தொற்றினால் முதலாவது முஸ்லிம் பிரஜையொருவர் நீர்கொழும்பு பகுதியில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் உயிரிழந்ததாக பதிவானது.

அன்றைய தினம் எந்தவித அறிவித்தலுமின்றி, குறித்த முஸ்லிம் பிரஜையின் ஜனாஸா தகனம் செய்யப்பட்ட நிலையில், முஸ்லிம்களின் ஜனாஸாக்களை தகனம் செய்வதற்கு எதிரான போராட்டங்கள் தீவிரமாகின.

கொரோனா உயிரிழப்பு

பட மூலாதாரம்,TWITTER

சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் பதில்

இதற்கிடையே, கோவிட் - 19 தொற்றினால் உயிரிழப்போரின் உடல்களை அடக்கம் செய்வதற்கு அனுமதிக்கப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாடாளுமன்றத்தில் வெளியிட்ட கருத்தை வைத்து, அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் துணைத் தலைவர் ரஸ்மின், "பிரதமர் இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் வெளியிட்ட கருத்தை வர்த்தமானி ஊடாக அறிவிக்கும் வரை, அதை நம்பப் போவதில்லை என கூறினார்.

இதேவேளை, கோவிட் தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்யும் பொறுப்பை தாம் ஏற்றுக்கொள்வதாகவும் சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் துணைத் தலைவர் கூறினார்.

ஜனாஸாக்களை அடக்கம் செய்து, தம்மை தாமே சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்திக்கொள்ள தமது அமைப்பிலுள்ள தொண்டர்கள் தயாராகவுள்ளார்கள் எனவும் சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் துணைத் தலைவர் ரஸ்மின் தெரிவிக்கின்றார்.

கோவிட் தொற்றில் உயிரிழந்த முஸ்லிம்கள்

கொரோனா உயிரிழப்பு

பட மூலாதாரம்,GETTY IMAGES

இலங்கையில் கோவிட் தொற்று காரணமாக இதுவரை 370 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் ஆய்வுப் பிரிவு கூறுகிறது.

இதில் கோவிட் தொற்று காரணமாக சுமார் 160க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் உயிரிழந்துள்ளதாக சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு தெரிவித்துள்ளது.

கொரோனா முஸ்லிம் சடல அடக்கத்துக்கு அனுமதி தந்த இலங்கை பிரதமர் - BBC News தமிழ்

  • கருத்துக்கள உறவுகள்

 பொத்துவில் தொடங்கி பொலிகண்டிக்கான பேரணி; ஜனாஸா எரிப்பதற்கு எதிராகவும், அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரியுமே  புலி ஆதரவாளர்களாலும், சில அரசியல் வாதிகளின் அரசியல் நோக்கத்திற்காகவும், வெளிநாட்டு புலிகளின் வழிநடத்தலில், பணத்தில் நடத்தப்பட்டது. நாம் ஜனாஸாக்களை அடக்கம் செய்ய உத்தரவிட்டுள்ளோம், அரசியல் கைதிகள் யாரும் சிறைகளில் இல்லை, புலிகளுக்கு ஆதரவாக நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டமையினால் சுமந்திரனின் பாதுகாப்பு பறிக்கப்பட்டது, நாங்கள் ஜனநாயகத்தை மதித்து பேரணியைக் குழப்பவில்லை என்று சிங்களவர்ளுக்கும், சர்வதேசத்துக்கும், ஜெனீவாவுக்கும்  பிரச்சாரம் செய்யாமல் இருந்தால் சரி. 

  • கருத்துக்கள உறவுகள்

இனி  முசிலிம்கள் பழையபடி அரசாங்கத்துடன் சேர்ந்து தமிழருக் கெதிராக பழையபடி இயங்குவார்கள்.  சிங்களத்திற்கு ஒரு கல்லில் இரண்டு மான்காய்கள்..

1) முசிலிம்களை தன் பக்கம் கொண்டுவந்தாயிற்று

2) தமிழர்களை முசிலிம்களை ப் பிர்த்தாயிற்று.

🤥

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனாவினால் உயிரிழப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்ய அனுமதிப்பதாக பிரதமர் கூறவில்லை?

கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்ய அனுமதிப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கூறவில்லை தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் அலுவலகத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவரினை மேற்கோள்காட்டி த லீடர் இதுகுறித்த செய்தியினை வெளியிட்டுள்ளது.

கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் ஒருவரின் சடலத்தினை அடக்கம் செய்வது தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடுவது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே, பிரதமர் அலுவலகத்திலுள்ள சிரேஷ்ட அதிகாரி இவ்வாறு பதிலளித்துள்ளதாக குறித்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார், நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு, ”அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்கப்படும்” என்றே பிரதமர் பதிலளித்ததாக அவர் கூறியுள்ளார்.

அதைவிடுத்து, கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு இடமளிப்பதாக பிரதமர் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கருத்து வெளியிடவில்லை என பிரதமர் அலுவலகத்திலுள்ள சிரேஷ்ட அதிகாரி பதிலளித்ததாக த லீடர் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது.

பிரதமர் வெளியிட்ட கருத்தை அடுத்து, அரசத் தலைவர்கள், வெளிநாட்டு இராஜதந்திரிகள், முஸ்லிம் அரசியல்வாதிகள், சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் தமது வரவேற்பை வெளியிட்டு வருகின்றனர்.

இந்த பின்னணியிலேயே, பிரதமர் அலுவலகத்தின் சிரேஷ்ட அதிகாரி இந்த கருத்தை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/கொரோனாவினால்-உயிரிழப்பவ/

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு இடமளிப்பதாக பிரதமர் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கருத்து வெளியிடவில்லை என பிரதமர் அலுவலகத்திலுள்ள சிரேஷ்ட அதிகாரி பதிலளித்ததாக த லீடர் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது.

 

3 hours ago, தமிழ் சிறி said:

பிரதமர் வெளியிட்ட கருத்தை அடுத்து, அரசத் தலைவர்கள், வெளிநாட்டு இராஜதந்திரிகள், முஸ்லிம் அரசியல்வாதிகள், சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் தமது வரவேற்பை வெளியிட்டு வருகின்றனர்

வடக்கிற்கு ஒன்று, தெற்கிற்கு மற்றொன்று,  சர்வதேசத்துக்கு வேறொன்று என்று வால் காட்டும் சிங்களவன் முறையாய் எங்கேயோ மாட்டுப்படாமலே போகப்போறான். அண்டைக்கு  இருக்கு ஆப்பு. மவனே இருடி.

3 hours ago, தமிழ் சிறி said:

கொரோனாவினால் உயிரிழப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்ய அனுமதிப்பதாக பிரதமர் கூறவில்லை?

கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்ய அனுமதிப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கூறவில்லை தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் அலுவலகத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவரினை மேற்கோள்காட்டி த லீடர் இதுகுறித்த செய்தியினை வெளியிட்டுள்ளது.

கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் ஒருவரின் சடலத்தினை அடக்கம் செய்வது தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடுவது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே, பிரதமர் அலுவலகத்திலுள்ள சிரேஷ்ட அதிகாரி இவ்வாறு பதிலளித்துள்ளதாக குறித்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார், நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு, ”அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்கப்படும்” என்றே பிரதமர் பதிலளித்ததாக அவர் கூறியுள்ளார்.

அதைவிடுத்து, கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு இடமளிப்பதாக பிரதமர் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கருத்து வெளியிடவில்லை என பிரதமர் அலுவலகத்திலுள்ள சிரேஷ்ட அதிகாரி பதிலளித்ததாக த லீடர் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது.

பிரதமர் வெளியிட்ட கருத்தை அடுத்து, அரசத் தலைவர்கள், வெளிநாட்டு இராஜதந்திரிகள், முஸ்லிம் அரசியல்வாதிகள், சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் தமது வரவேற்பை வெளியிட்டு வருகின்றனர்.

இந்த பின்னணியிலேயே, பிரதமர் அலுவலகத்தின் சிரேஷ்ட அதிகாரி இந்த கருத்தை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/கொரோனாவினால்-உயிரிழப்பவ/

அதானே பார்த்தேன். பிரதமர் அப்படி ஒரு நாளும் சொல்லி இருக்கமாடடார். அப்படி என்றால் நேற்றே அவர் வர்த்தமானியையும் வெளியிட்டிருப்பார். அவர் ஒரு நல்ல மனிதர். வேறு யாரோதான் இந்த தேவை இல்லாத கதையை கட்டிவிட்டிருக்கிறார்கள். நாட்டு நிலைமை அப்படி இருக்கிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, satan said:

 

வடக்கிற்கு ஒன்று, தெற்கிற்கு மற்றொன்று,  சர்வதேசத்துக்கு வேறொன்று என்று வால் காட்டும் சிங்களவன் முறையாய் எங்கேயோ மாட்டுப்படாமலே போகப்போறான். அண்டைக்கு  இருக்கு ஆப்பு. மவனே இருடி.

விலாங்குமீனை விட கெட்டிக்காரர் 😎

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.